search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95359"

    தமிழில் வனமகளாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
    தமிழில் வனமகளாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த படங்கள் எல்லாம் வெற்றி பெறவே, நடிகைக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கிறதாம். நடிகையும் தற்போது முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

    இருந்தாலும், தன்னுடைய முதல் பட இயக்குனரால்தான் எனக்கு இந்த பெரிய நடிகர்கள் பட வாய்ப்பு என அவரை மறக்காமல் அவருடன் பழகி வருகிறாராம். மேலும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறாராம். 

    இதை பார்த்த பலர் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தையே வெளியிடுகிறாரா? இயக்குனரின் அடுத்த படத்திற்கு அடித்தளம் போடுகிறாரா? இல்லை வேறு எதாவதா? என்று பேசி வருகிறார்களாம்.
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு...
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

    சண்டை போடும் கோழி நடிகருடன் அவர் நடித்த புதிய படம் திரைக்கு வரட்டும். அதுவரை பொறுத்திருக்கலாம். படம் திரைக்கு வந்ததும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம்.

    ஏறக்குறைய அவர் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். வீரமான நடிகருடன்தான் இன்னும் இணையவில்லையாம். அதனால் அந்த வாரிசு நடிகையின் கவனம், நடிகரின் பக்கம் திரும்பியிருக்கிறதாம்!
    வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.
    வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம். மேலும், தமிழில் இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கிறாராம். இந்நிலையில், தெலுங்கில் பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

    ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம். கால்ஷீட் காரணமாக தயங்குகிறாரா? இல்லை அவரது கதாபாத்திரம் பற்றிய சந்தேகமா? என்று பரபரப்பாக செய்தி பரவுகிறதாம். மேலும் நடிகை வேண்டும் என்றே இப்படி செய்கிறார் என்றும் பேசி வருகிறார்களாம்.
    அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்த சீன நடிகையை போலீசார் கைது செய்து வருமான விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PaneBingang
    பெய்ஜிங்:

    பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார்.

    இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது.

    இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மவுனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

    அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர்.

    இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அதாவது ரூ.950 கோடி அபராதம் விதித்தது. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

    சீனாவில் வருமான வரி செலுத்தாதவர்கள் இது போன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நடிகை பேன் பிங்பிங் தற்போது தான் இத்தகைய பிரச்சினையில் சிக்கியுள்ளார். #PaneBingang
    தங்கையாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான மான் பட நடிகை, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.
    தங்கையாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான மான் பட நடிகை, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம். நடிகை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறாராம். ஆனால், நடிகையை பற்றி பல கிசுகிசுக்கள் வருகிறதாம். 

    இதையறிந்த நடிகை, நான் எங்கேயும் செல்வது இல்லை, யாரைப் பற்றியும் சொல்வதும் இல்லை. ஆனால், என்னைப் பற்றி கிசுகிசுக்கள் மற்றும் பொய்யான செய்திகள் வருகிறது என்று கவலைப் படுகிறாராம். 
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தினாராம். சில தெலுங்கு படங்களில், கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறாராம்.

    சமீபத்தில் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலரிடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறாராம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.!
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, சரித்திரமான படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, சரித்திரமான படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானாராம். இவர் ஒரு பாடலுக்கும் ஆடுவதை தவிர்த்து கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று குறிக்கோளாக இருந்து வந்தாராம்.

    தற்போது அந்த கொள்கையை மாற்றி இருக்கிறாராம். தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்திருக்கிறாராம். நடிகைக்கு பட வாய்ப்பு குறைப்பதால் கொள்கையை மாற்றி இருப்பதாக பலரும் கூறி வருகிறார்களாம்.
    பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம்.
    பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம். அங்கு போராட்டத்தில் கலந்துக் கொண்டு பெற்ற நல்ல பெயரை கெடுத்துக் கொண்டாராம். அப்போது அவரை கிண்டல் செய்து பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்களாம்.

    வெளிவந்த அவர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடிகையாக மாறியிருக்கிறாராம். இந்த நிலையில், அவரை மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்களாம். ஆனால், அவரோ மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றால், மீண்டும் அவரை கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமாம்.
    இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம்.
    இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம். அவர் நடித்த ஒரு படம் மட்டும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறதாம்.

    சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம். சமீபத்தில் நடந்த விழாவில் ஒன்றில் நடிகை கவர்ச்சி உடையில் வந்தாராம்.

    இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. வயதான காலத்தில் இப்படி கவர்ச்சியில் உடையிலா வருவது என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
    சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.
    சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம். தன்னை வைத்து ஏற்கனவே வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களின் படங்களில் மட்டும் நடிப்பது என்று முதல் கட்டமாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம். இதனால் அறிமுக இயக்குனர்கள் பலரும் வருத்தமடைந்திருக்கிறார்களாம்.

    அதுபோக, ஏற்கனவே அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் விரைவாக நடித்துக் கொடுப்பது என்றும் புதிய கொள்கை முடிவுக்கு வந்து இருக்கிறாராம் நடிகர்!
    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இதனால், பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். அந்த தூதுக்கு பலனாக கலகலப்பான இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டதாம்.

    அந்த இயக்குனர் ஒரு சரித்திர படம் எடுக்க திட்டமிட்டாராம். அதில் நடிக்க நடிகை அப்போவே தூது அனுப்பினாராம். ஆனால், பலனளிக்க வில்லையாம். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறதாம். 

    இயக்குனரும் நிறைய தடவை வாய்ப்பு கேட்டுவிட்டாரார். இந்த முறை கொடுத்து விடலாம் என்று நடிகையின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம்.
    தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம்.
    தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம். பல முன்னணி நடிகர்கள் நடிகைக்கு வலியவந்து தங்கள் படங்களில் சான்ஸ் கொடுத்தார்களாம். 

    இப்படி உச்சத்தில் இருந்த நடிகையின் மார்க்கெட் புதுவரவுகளால் டல்லடிக்க தொடங்கியதாம். இதையடுத்து, தெலுங்கு, கன்னடம் என வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகைக்கு தமிழில் ரீஎண்ட்ரியாகும் வாய்ப்பே இல்லாம் போனதாம். அங்கும் போதிய சான்ஸ் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலாகலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.

    தனது காதலரான வெளிநாட்டுக்காரரை கரமும் பிடித்தாராம். ஆனால் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், பழையபடி கவர்ச்சி மழை பொழிய தயார் என இயக்குனர்களுக்கு தூதுவிட ஆரம்பித்திருக்கிறாராம். தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் அனுப்பி இதை வெளிப்படையாக தெரிவித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்களாம்.
    ×