search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95381"

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    வாரிசு

    வாரிசு

     

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வாரிசு படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இப்படம் ஆந்திராவில் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    விஜய் - வாரிசு

    விஜய் - வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் படங்கள் ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

     

    விஜய்

    விஜய்

     

    இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னை திருவொற்றியூரில் பேட்டியளித்தார். அதில், "ஆந்திராவில் 'வாரிசு' வெளியாகாவிட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்" என்று பேசினார்.

    • தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களை இன்று சந்திக்கிறார்.
    • பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்தார்.

    நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தை வம்சி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப்படம் ஆந்திராவிலும் வெளியாக இருக்கிறது. இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டு, வியாபாரம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

     

    ரசிகர்களுடன் விஜய்
    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த 5 ஆண்டுகளாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா பரவலால் தள்ளிப்போய் கொண்டிருந்தது. வாரிசு படத்துக்காக தொடர்ந்து படப்பிடிப்பு இருந்த நிலையில் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சந்திப்பு கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் சந்திக்கலாம் என்று விஜய் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது.

     

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

    இந்த நிலையில்தான் ரசிகர்களை இன்று சந்திப்பதாக விஜய் தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை முதலே விஜய்க்கு சொந்தமான பனையூர் அலுவலக வளாகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் குவியத்தொடங்கினர். அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

     

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் ரசிகர்களை சந்திக்க விஜய் பனையூர் அலுவலகம் வந்தார். அவரை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், மன்ற நிர்வாகிகள் சிலரோடு முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட இருப்பதாகவும் தெரிகிறது. இது வாரிசு பட வெளியீட்டின் போது ரசிகர்கள் எப்படி யெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களாகவும் இருக்கும் என்கிறார்கள்.

    தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைபடி நேரடி தெலுங்கு படங்களுக்குத் தான் விழா நாட்களில் அதிக முன்னுரிமை தர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதால் படத்தை வெளியிடுவதில் வாரிசுக்கு சிக்கல் எழுதிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் இந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    • தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களை சந்திக்கிறார்.
    • பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக, புகைப்படம் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தார். எனினும், அண்மையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்ளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

     

    ரசிகர்களுடன் விஜய்
    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

     

    அடுத்தடுத்த வாரங்களில், பிற மாவட்ட ரசிகர்களுடனும் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்கள் விஜய்யை காண குவிந்து வருகின்றனர்.

    • விழாக்காலங்களில் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
    • ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என்று சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.


    சீமான்

    தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேரடித்தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது. தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.


    சீமான்

    'கலைக்கு மொழி இல்லை' என்றுகூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, 'தென்னிந்திய நடிகர் சங்கம்' எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும். திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்தி கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல!


    சீமான்

    தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது. இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும்.


    சீமான் அறிக்கை

    இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு - ரஞ்சிதமே

    வாரிசு - ரஞ்சிதமே

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

     

    வாரிசு - ரஞ்சிதமே

    வாரிசு - ரஞ்சிதமே

    இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • அடுத்தடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்து வருகிறது.

    விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பு புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம்பிடித்து வலைத்தளத்தில் பரவ விட்டனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளிவிட்டு சண்டையிடும் புகைப்படம் வெளியானது. தொடர்ந்து விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படமும் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோவும் வலைதளங்களில் கசிந்து வைரல் ஆனது.

     

    வாரிசு

    வாரிசு

    இந்நிலையில் 'வாரிசு' படத்தின் இன்னொரு படப்பிடிப்பு வீடியோவும் தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் ஒரு சுரங்கத்தின் அருகில் ஹெலிகாப்டர் ஒன்று இருக்கும் காட்சியும் உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.

    • விஜய் வாரிசு படத்திலும், அஜித் துணிவு படத்தில் நடித்து வருகின்றனர்.
    • இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது.

    விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

     

    வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    துணிவு - வாரிசு

    துணிவு - வாரிசு

     

    இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    பொங்கலுக்கு சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி, அகில் நடித்துள்ள ஏஜெண்ட் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த 3 படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்கும்படி தியேட்டர் அதிபர்களை அறிவுறுத்தி உள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு, துணிவு படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது.


    வாரிசு

    விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் யூட்டியூப்பில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    வாரிசு

    இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் ௨௬ மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடல் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, 1994-ஆம் ஆண்டு வெளியான 'உளவாளி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் மெட்டுக்களை கொண்டு 'ரஞ்சிதமே' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமனின் சில பாடல்கள் இவ்வாறு வேறு படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த படத்தின் முதல் பாடல் ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியானது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    வாரிசு

    இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ். தமன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ரஞ்சிதமே முழு வீடியோ இப்பதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்காரமாட்டீங்க. உங்களோட நானும் ஒரு ரசிகனா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வாரிசு'.
    • இந்த படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    வாரிசு 

    வாரிசு 

     

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    வாரிசு

    வாரிசு

     

    இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலைகடந்த 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

    வாரிசு

    வாரிசு

     

    இந்நிலையில் இந்த பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×