search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் இன்கிராமிற்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 32 வயதான பேட்ஸ்மேன் கொலின் இன்கிராம் பெயர் ஏலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் எந்த அணியும் அவரை எடுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் டெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் அவரது மதிப்ப ஐந்து கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் 6.4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம் எதிர்பாராத வகையில் 6.4 கோடி ரூபாயை தட்டிச் சென்றுள்ளார்.
    இந்திய அணியில் இதுவரை இடம்பிடிக்காத வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கும், ஷிவம் டுபே 5 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனார்கள். #IPLAuction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அவர்களது அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    ரஞ்சி டிராபியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்கர்கள் விளாசிய மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இதனால் அவருக்கான தொகை கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    மற்றொரு ஆல்ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் போட்டி போட்டு விலையை உயர்த்தினார்கள். இதனால் வருணின் தொகை ரூ. 8 கோடியை தாண்டியது.

    இதனால் உனத்கட்டின் 8.4 கோடி ரூபாயைத் தாண்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 8.40 கோடி ரூபாய்க்கே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. இந்திய அணியில் இடம்பிடிக்காத இளம் வீரர்கள் கோடிகளை அள்ளிச் சென்றனர்.
    ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டியின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எடுத்தது.

    ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க கோரி அவர் பி.சி.சி.ஐ.யிடம் முறையிட்டார். ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீதான தடையை நீக்கி தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் மீதான ஆயுட் கால தடை நீடித்து வந்தது.

    கேரளா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், இங்கிலாந்து அணியில் தன்னை விளையாட அனுமதிக்க கோரியும் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸ்ரீசாந்தின் வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜராகி கூறியதாவது:-

    இங்கிலாந்தில் உள்ள கிளப் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்த்துக்கு அழைப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. ஆயுள் கால தடையை நீக்காவிட்டால் அவரால் விளையாட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது. சூதாட்ட வழக்கில் இருந்து அவரை டெல்லி ஐகோர்ட்டு விடுவித்து இருந்தது. இதனால் அவரை இங்கிலாந்து கிளப்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    கிரிக்கெட் வாரிய வக்கீல் கூறும் போது ஸ்ரீசாந்துக்கு எதிராக குற்றத்தை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருந்ததால் அவருக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுள்கால தடை விதித்தது. என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது. #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருந்த டெல்லி டேர்டெவில்ஸ் ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’ ஆக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #DelhiCapitals #DelhiDaredevils
    ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருந்த 8 அணிகளில் ஒன்று டெல்லி டேர்டெவில்ஸ். ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008-ல் இருந்து இந்த அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை 11 தொடரில் விளையாடி டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

    என்றாலும் உரிமையாளர்கள் அணியை சிறப்பாக கொண்டு சென்றார்கள். ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணியின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஜிஎம்ஆர். குரூப் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்போட்ர்டஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லி அணியின் உரிமையாளராக இருக்கிறது. வருகிற 18-ந்தேதி ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்போது, டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயருக்குப் பதிலாக டெல்லி கேபிடல் அல்லது டெல்லி கேபிடல்ஸ் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்க ஆலோசிக்கப்பட்டது. முடிவில் டெல்லி கேபிடல்ஸ் என புதிய பெயர் வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்துள்ளது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் அணியில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது. #IPL #QuintondeKock
    2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை மற்ற அணிக்கு விற்கலாம். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் அணியில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது.

    2018-ம் ஆண்டு ஏலத்தில் டி காக்கை ரூ.2.8 கோடிக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்து இருந்தது. அந்த தொகைக்கே அவர் மும்பை அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #IPL #QuintondeKock
    ஐபிஎல் டி20 லீக்கில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். #IPL #KXIP
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்ற ஐபிஎல் சூதாட்டம் என்ற வார்த்தையால் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

    ஐபிஎல் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஸ்ரீசந்த் உள்பட சில வீரர்கள் தங்கள் கேரியரை இழந்தனர். இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    இந்நிலையில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் ‘‘அரசு சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால், வருமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது, அப்படி செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும்.



    ஏனென்றால், உங்களால் எத்தனை மக்களை நிறுத்த முடியும்?. அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமானது.

    நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது’’ என்றார்.
    இன்னும் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #IPL #ABD
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். விரைவாக சதம், விரைவாக 150 ரன்கள் என்ற சாதனைகளைப் படைத்துள்ள ஏபி டி மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை அடிக்கும் திறமை படைத்தவர். இதனால் அவர் 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.



    இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்னும் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். மேலும், உள்ளூர் தொடரிலும் விளையாடுவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி வாணவேடிக்கையை தொடர்ந்து காணலாம்.
    உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், அதில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiaCricketFans #ICC #BCCI #IPL

    புதுடெல்லி: 

    உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அதிக ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 

    கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டது. டி20 போட்டிகள் அறிமுகமான பின் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் தான் உலகில் மிக பிரபலமான கிரிக்கெட் லீக் போட்டியாகும்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐசிசியில் இடம்பிடித்துள்ள 12 முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



    இந்த ஆய்வின் முடிவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். #IndiaCricketFans #ICC #BCCI #IPL
    ஐபிஎல் கிரிக்கெட்டின் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நான்கு தடவை தோற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #CSKvSRH
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஐதராபாத் அணி சென்னை அணியிடம் பெற்ற நான்காவது தோல்வி இதுவாகும்.

    முன்னதாக, கடந்த 22-ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இதேபோல், கடந்த 13-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வென்றது.

    ஏப்ரல் 22-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #CSKvSRH
    ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது. #IPL2018 #SpecialAwards
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன் வென்றார்.

    மேலும், இந்த தொடரில் வீரர்கள் பெற்ற விருதுகளின் விவரம் வருமாறு:

    எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.



    மொத்தம் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.

    இதேபோல், 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.

    சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.

    டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் விருது வழங்கப்பட்டது.



    இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கு வழங்கப்பட்டது.

    மேலும், இந்த தொடரின் பேர் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. #IPL2018 #SpecialAwards
    மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.



    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.

    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    டுபிளசிஸ் 10 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஐதராபாத் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.

    சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வாட்சன் 57 பந்துகளில் 8 சிக்சர், 11 பவுண்டரியுடன் 117 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் கைப்பற்றினார். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 

    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தின்  4 வது ஓவரில் டுபிளசிஸ் அவுட்டானார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    11-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.
    இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.



    12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

    14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.

    இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    ×