search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    திரவுபதி விரும்பிய சவுகந்திகா என்னும் மலர்களை பறிப்பதற்காக சென்ற பீமனுக்கு உதவி புரிய அனுமன் செய்த விளையாட்டை அறிந்து கொள்ளலாம்.
    வனவாசத்தை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பினர். அப்போது சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று திரவுபதியின் மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனை திரவுபதிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள்.

    அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து, அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த மாருதியை தள்ளிப்படுக்குமாறு கூறினான்.

    அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. முடிவில் மாருதி பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்ச நேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    பீமன் பிரமித்தான். “பீமா! நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்” என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பீமன் அவரை பணிந்து, சவுகந்தியா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்.
    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு.
    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு. இது தேவலோகத்தில் உள்ள பசுவாகும். கற்பக விருட்சத்தைப் போல, கேட்டதைக் கொடுக்கும் சக்தி படைத்தது இந்த காமதேனு.

    இதனை ‘சுரபி’ என்று அழைப்பார்கள். பசுக்கள் அனைத்துக்கும் முன்னோடியாக இந்த காம தேனுவே விளங்குகிறது. இந்த பசுவானது, சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவருக்கு உதவிகரமாக இருந்தது. கவுசிகன் என்ற மன்னன், தன் நாட்டினை வளப்படுத்துவதற்காக காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டான். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக காமதேனுவை இழுத்துச் செல்ல முயன்றான்.

    ஆனால் காமதேனுவிடம் இருந்து வெளிப்பட்ட போர்வீரர்கள், கவுசிகனையும் அவனது படைகளையும் விரட்டியடித்தனர். இதையடுத்து கவுசிகன், தானும் தவம் செய்து மிகப்பெரிய ரிஷியாவதாக சபதம் செய்தார். அவரே பின்னாளில் விஸ்வாமித்திரர் என்ற மாபெரும் முனிவராக மாறினார்.
    ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், இன்று அதிகாலை, 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது, தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.



    இரவு, 7.30 மணிக்கு வெள்ளிநாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் 6 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
    மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும்.
    இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும். இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக பல விஷயங்கள் அதில் இருப்பதை படிப்பவர்கள் உணரலாம்.

    பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாச காலம் முடிவடைந்து, ஓராண்டு காலம் அஞ்சாத வாசம் செய்ய வேண்டியதிருந்தது. அடர்ந்த வனத்தில் வசித்த அவர்களுக்கு ஒரு முறை தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அதனால் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் கொண்டு வரும்படி தருமர், நகுலனை அனுப்பினார்.

    அண்ணனது வார்த்தையை சிரமேற்கொண்டு சென்ற நகுலன், சற்று தொலைவில் தண்ணீர் நிறைந்த குளம் இருப்பதை பார்க்கிறான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு, சகோதரர்களுக்கு நீர் எடுக்கலாம் என்று குளத்தில் இறங்கச் சென்றான்.

    அப்போது, “எனது கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் தண்ணீரை அருந்து..” என்று ஒரு அசரீரி கேட்டது. அதை பெரிதாக எண்ணாமல் தண்ணீரை அருந்திய நகுலன் நினைவு இழந்து கரையில் விழுகிறான்.

    வெகு நேரமாகியும் நகுலன் வராததால் சகாதேவனை தருமர் அனுப்புகிறார். அவனுக்கும் அதே நிலை ஏற்படுகிறது. பின்னர், அர்ச்சுனன் மற்றும் பீமன் ஆகியோரும் குளத்திற்கு வந்து நீர் பருக முயன்று மயக்கம் அடைகின்றனர்.

    என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குழப்பமடைந்த தருமர், தானே குளத்தை நோக்கி வந்தார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. அதை கவனமாக கேட்டு, அதன் கேள்விகளுக்கு தருமர் பதிலளித்தார். அந்த அசரீரியை கவனமாக கேட்டு, யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார். அவற்றில் சில கேள்விகளுக்கான பதிலின் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.

    யட்சன்: மனிதனுக்கு சரியான துணை எது?

    தருமர்: துணிச்சல்.

    யட்சன்: ஒருவன் எப்போது புத்திமான் ஆகிறான்?

    தருமர்: பெரியோர்கள் அறிவுரைப்படி செயல்படும்போது.

    யட்சன்: பயிர் செய்பவருக்கு எது சிறந்தது?

    பதில்: மழைதான் சிறந்தது.

    யட்சன்: செல்வம், அறிவு இருந்தும் ஒருவன் இறந்தவன் ஆவது எப்போது?

    தருமர்: விருந்தினர், முன்னோர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதபோது.

    யட்சன்: பூமியை விட தாங்கும் சக்தி பெற்றது எது?

    தருமர்: ஒரு தாயின் மனம்.

    யட்சன்: ஒருவனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

    தருமர்: அவனது தந்தை.

    யட்சன்: காற்றை விட வேகமானது எது?

    தருமர்: மனிதனின் மனம்.

    யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கவனிக்கத்தக்கது எது?

    தருமர்: கவலை.

    யட்சன்: தனது வேகம் காரணமாக வளரு வது எது?

    தருமர்: நதி.

    யட்சன்: தனது ஊரை விட்டு செல்ப வனுக்கு நண்பன் யார்?

    தருமர்: அவன் பெற்ற கல்வி.

    யட்சன்: திருமணம் ஆனவனுக்கு நல்ல தோழமை தருவது யார்?

    தருமர்: அவன் மனைவி

    யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?

    தருமர்: நல்ல வைத்தியன்.

    யட்சன்: சாகப்போகிற நிலையில் உள்ளவ னுக்கு உற்ற தோழன் யார்?

    தருமர்: அவன் செய்த தர்மங்கள்.

    யட்சன்: புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?

    தருமர்: ஒருவன் செய்யும் தானம் மூலமாக.

    யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலை பெறுகிறது?

    பதில்: நல்லொழுக்கத்தின் மூலம்.

    யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங் களில் உயர்ந்தது எது?

    தருமர்: மன திருப்தி.

    யட்சன்: சிறந்த தருமம் எது?

    தருமர்: ஜீவ காருண்யம்.

    யட்சன்: மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறவன் யார்?

    தருமர்: கர்வம் இல்லாதவன்.

    யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?

    தருமர்: கோபத்தை.

    யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

    தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுபவன்.

    யட்சன்: செல்வம் மிகுந்தவன் யார்?

    தருமர்: அமைதி மற்றும் தெளிவுடன் பொருள்களை சமமாக நோக்குப வன்.

    யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகை வன் யார்?

    தருமர்: கோபம்

    யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?

    தருமர்: பேராசை.

    யட்சன்: யார் சாது?

    தருமர்: எல்லா உயிர்களிடத்திலும் அன்போடு இருப்பவன்.

    யட்சன்: எது தைரியம்?

    தருமர்: ஐம்புலன்களை அடக்குவது.

    யட்சன்: எந்த மனிதன் பண்டிதன் ஆகிறான்?

    தருமர்: தர்மத்தை கடைப்பிடிப்பவன்.

    யட்சன்: அறம், பொருள், இன்பம் ஆகி யவை ஒன்றாக சேருவது எப்படி?

    தருமர்: கணவனும், மனைவியும் இணைந்து செயல்படும்போது.

    யட்சன்: யார் அழிவற்ற நரகத்தை அடை வார்?

    தருமர்: தானம் கொடுப்பதாக கூறிவிட்டு இல்லை என்று சொல்பவன், தர்ம வழி செயல்கள், முன்னோர் சடங்குகளில் பொய் கூறுபவன், செல்வம் இருந்தும் பிறருக்கு தராத வன்.

    யட்சன்: இனிமையாக பேசுகிறவன் எதை பெறுகிறான்?

    தருமர்: மற்றவர்களின் அன்பை.

    யட்சன்: ஆலோசனை செய்து காரியம் செய்பவன் எதை அடைகிறான்?

    தருமர்: வெற்றி.

    யட்சன்: தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி எது?

    தருமர்: உயிரினங்கள் மரணமடைவது.

    யட்சன்: எது ஆச்சரியம்?

    தருமர்: இறந்தவர்களை பார்த்தும்கூட, மனி தர்கள் தங்களுக்கு மரணமில்லா தது போல் நினைத்து வாழ்நாளை கழிப்பது.

    தன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் தருமர் பதலளித்ததைக் கேட்டு, யட்சன் மகிழ்ந்தான். இதையடுத்து மயங்கி கிடந்த தருமரின் தம்பிகள் அனைவரும் எழுந்து அண்ணனுடன் சென்றனர்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியும் வரை யட்சனாக இருக்கும்படி சாபம் பெற்றிருந்த யட்சன், தேவனாக மாறி தனது உலகத்திற்குச் சென்றான்.
    2019-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடியும் ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். #2019NewYear #NewYearCelebration
    சென்னை:

    உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக ஆங்கில புத்தாண்டு விளங்கி வருகிறது. பரந்து, விரிந்த இந்த பூமிப்பந்தில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

    அவ்வகையில், பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலிசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
     
    இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

    நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    சரியாக 12 மணி அடித்ததும் நாட்டின் பல முக்கிய பெருநகரங்களில் புத்தாண்டு விழா களைகட்டியது. கடற்கரைகள், பூங்காக்கள், முக்கிய சாலைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மகிழ்ச்சி கேளிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    குறிப்பாக, சென்னையில் அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எட்வர்ட் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    அதைதொடர்ந்து, இன்று அதிகாலையில் இருந்தே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகளை செய்து இந்த புத்தாண்டு இனிதாக, வளமாக அமைய தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.



    உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்து மக்கள் கங்கை நதியில் புனித நீராடி, பூஜை புனஸ்காரங்கள் செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் தடாகத்தில் சீக்கிய மக்களும் புனித நீராடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், ஜைன மதத்தை சேர்ந்தவர்களும் இனிப்புகளை பரிமாறி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு இனிதாகவும், சிறப்பாகவும் அமைய ‘மாலைமலர் டாட்காம்’ வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #2019NewYear #NewYearCelebration
     
    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
    தலக்குறிப்பு :

    கோவிலின் பெயர்:    அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
    கட்டியவர்:    ஆதித்திய சோழன் என்னும் சோழ மன்னன்
    காலம்:    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
    இறைவனின் திருநாமம்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்
    தேவாரத் திருப்பெயர்:    அருள்மிகு சந்திரசேகர பிறையணி கொன்றயினான்
    இறைவியின் திருநாமம்: அருள்மிகு அமிர்தாம்பிகையம்மன்
    தேவாரத் திருப்பெயர்:    அருள்மிகு வடிவாம்பிகையம்மன்
    தல விருட்சம்: வில்வம்
    தீர்த்தம்: சூரிய புட்கரணி. சந்திர புட்கரணி
    ஆறு: வராக நதி (எ) சங்கராபரணி
    பூஜை: மூன்று காலம்
    நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

    இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

    பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி என எந்த நகரத்திலிருந்து வந்தாலும் சுமார் 27 கி.மீ. தொலைவில் திருவக்கரை அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 10 கி.மீ. தூரம் சென்றால் திருவக்கரையை அடையலாம்.

    அதே போல் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் திருக்கனூர் என்னும் இடத்தில் இறங்கி வடக்கு நோக்கி சுமார் 5 கி.மீ. சென்றாலும் இக்கோவிலை அடையலாம். ‘வராக நதி’ என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இத்தல இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் எங்கும் காண முடியாத அரியவகையான மூன்று முகலிங்கமாக அருள்பாலிக்கின்றார்.

    ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

    திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
    கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.

    இத்திருக்கோவில் ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் ஏறக்குறைய 2000-ம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. பின்னர் கி.பி.907 முதல் கி.பி.953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த, சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தகச் சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி.950 முதல் கி.பி.957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவன் பெயரிலேயே கண்டராதித்தன் ‘‘திருக்கோபுரம்’’ எனவும் ‘‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’’ எனவும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.

    கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்றகோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறைபோன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்ததொரு திருப்பணி செய்துள்ளார். கோவில்களுக்கு தானங்கள்பலவும் செய்துள்ளதை வரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிகிறது. மாதேவியாரின் அரிய திருப்பணியால் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் திருக்கோவிலோடு சேர்ந்து அவரது பெயரும் புகழோடு நிலைத்து நிற்கின்றது.

    திருவக்கரை கோவிலின் சிறப்புகள்

    * இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், நந்தி, கொடிமரம், மூலஸ்தானம் முதலியன நேர்கோட்டில் அமையவில்லை.
    * இத்திருக்கோவிலில் இறைவன் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார்.
    * பிரதான சிவத்தலமான இத்திருத்தலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
    * குண்டலினி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள பெருமையுடையது இத்திருக்கோவில்.
    * இத்திருக்கோவிலில் எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகின்றார்.
    * சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது இத்திருக்கோவில்.
    * பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது இத்திருக்கோவில்.
    * சனிபகவான் வாகனமான காகம் எல்லாத் தலங்களிலும் அவருக்கு வலப்புறமாக இருக்கும். ஆனால் இங்கு அவருக்கு இடப்புறமாக அமைந்து வக்கிரமாக காட்சியளிக்கிறது.
    * உலகத்தை ரட்சிக்கும் ஜகன்மாதா இங்கு வக்கிரகாளியாக நமக்கெல்லாம் சரணாகதித் தத்துவத்தை உணர்த்தி அருள்புரியும் திருக்கோலம் ஒரு தனிச்சிறப்பாகும்.

    பிரார்த்தனை பலன்கள்


    வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்க்கையில் பயனடைவர். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.

    திருமணமாகாதவர், பிள்ளைப்பேறு அற்றவர் இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்து வந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்போர் பவுர்ணமி தினத்தன்று வக்கிரகாளி அம்மனை தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி அன்று தரிசித்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பலன் பெற்று வருகின்றார்கள். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பயனடைகிறார்கள்.

    இத்திருக்கோவில் தனியாக அமைந்துள்ள தீப லட்சுமியின் திருக்கோவிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி இந்த அம்மனை கும்பிட்டு மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

    ஆலய தலவரலாறு

    முன் காலத்தில் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர் இருந்தது. குண்டல மகரிஷி என்ற முனிவர் வாழ்ந்து இங்கே சமாதி யாகிஇருக்கிறார். அவருடைய பேரனான வக்கிரா சூரனும் அவனுடைய சகோதரி துர்முகியும் சிவ பக்தர்கள். அரியவரம் பெறுவதற்காக நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான்.

    அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்காகாதே என்றார். காலையில் பூஜை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

    உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி,கவுமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றி எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள். அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை.

    அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.
    அதன்படி ஈஸ்வரியை அழைத்து மகாவிஷ்ணு கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்து, பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்தால் அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப்பெயர் பெற்றது. மூலலிங்கம் முகலிங்கமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
    திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 10 கி.மீ செல்ல வேண்டும்.

    வடிவாம்பிகையின் பேசும் தோற்றம்

    புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. காலத்தின் கோலத்தினால் மங்கிய வெளிச்சத்திலும் அன்னையின் அருள் திருமுகத்தைப்பார்த்தால் கருணையும் பரிவும் தாண்டவமாடுவதைக் காண்கிறோம்.

    சற்று உற்றுப்பார்த்தால் அன்னை பேசுவது போலவும் மூக்குப்புல்லாக்கு ஆடுவது போலவும் தோன்றி மெய்சிலிர்க்கிறது. சுமார் நான்கு அடி உயரத்தில் விளங்கும் அன்னையின் எழிலையும் அருளையும் கண்டு உய்யவாவது இந்த தலத்தைப்போய்ப்பார்க்க வேண்டும். அன்னையின் சன்னதி தெற்குப் பார்த்தது. பெரும்பாலான திருக்கோயில்களில் கிழக்கு நோக்கி காட்சி தரும் தேவி, இங்கு திருவெற்றியூர் வடிவுடையம்மைப் போல தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். இச்சன்னதியின் முன்மண்டபம் அழகிய எட்டு தூண்களால் ஆனது. இச்சன்னதியில் இடப்புறம் பள்ளியறை உள்ளது. சந்திரசேகரர் கிழக்குப்பார்த்து எழுந்தருளியிருக்கிறார்.
     
    அன்னை துர்க்கையின் உருவம் கருத்தைக் கவருகிறது. ஐந்து அடிக்கு மேல் உயரமுள்ள சிற்பத்தில் உள்ள அஷ்ட புஜங்கள் மகிஷனின் தலைமேல் லாவகமாக நிற்கிற கோலம் மிக அழகியது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள் என்று கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் அருளைப் பற்றிப் பலமாகப் பேசுகிறார்கள். சந்திரசேகரரின் சன்னதிக்கும் தெற்குப் பக்கத்தில் வக்கிராசுரனுடைய தாத்தா குண்டல மகரிஷியின் சமாதி இருக்கிறது.

    அதன் மேல் வக்கிரன் பூஜித்த கண்டலிங்கத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். வடக்குபக்கத்தில் ஸஹஸ் ரலிங்கத்துக்குச்சிறிய கோவில் ஒன்று உள்ளது. அதன் பக்கத்தில் வக்கிரனை அழித்த வரதராஜப்பெருமானின் திருக்கோவிலைக்காணலாம். எங்கும் உள்ளது போல் இல்லாமல் திருமாலின் கரத்தில் சக்கரம் பிரயோகப்பாணியில் அமைந்திருக்கிறது. தாயாரின் சந்நிதி தனியாகக் கிடையாது.

    ஆலய அமைப்பு

    பொதுவாக வேறு எங்கும் அதிகமாகக் காணப் படாத வகையில் கோவிலின் அமைப்பு இருக்கிறது. மிகப் பரந்த நிலப்பரப்பில் கோவில் அமைந்துள்ளது. கருவறைக் கோவிலும் அதைச் சார்ந்த கோவில்களும், மண்டபங்களும், சுற்றுச் சுவர்களும், கோபுரமும் தனியாக அமைந்துள்ளன. தற்போதுள்ள வக்கிரகாளி கோவிலும், வக்கி ரலிங்கம் கோவிலும், சந்திரசேகர் கோவிலுக்கும், கோபுரத்திற்கும் வெளியில் முன்புறத்தில் தனியாக இருந்திருத்தல் வேண்டும். பிற்காலத்தில் இவை இரண்டாவது ராஜாதிராஜன் காலத்தில், புதிய ராஜகோபுரமும், மதிற்சுவரும் எழுதப்பட்டுக் கோவில் முன்புறத்தை விரிவாக்கப்பட்ட போது மூலக் கோவிலுடன் அவைகள் இணைந்துள்ளன.

    விண்ணளாவி நிற்கும் பெரிய ராஜகோபுரத்தின் உள்ளே முதலில் நாம் நுழைகிறோம். ராஜகோபுரத்தின் உட்புற மேற்கூரையில் ஒன்பது கட்டங்களின் நடுவில் தாமரையும், சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலர்களும் தென்படுகின்றனர். ராஜகோபுரத்தின் அடிப்படை கருங்கல்லாலும், மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளன.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது திருவக்கரை ஆளுடையார் கோவிலில் இத்திரு கோபுரங் கண்டர் சூரியன் திரு கோபுரமென்னும் பெயரால் செய்வித்தான். அம்மை அப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்” எனும் கல் வெட்டிலிருந்து, இந்தக் கோபுரம் கண்டர் சூரியன் சம்புவராயனால் கட்டப் பெற்றதால் ‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’ என்னும் பெயரைப் பெற்றது என அறிகிறோம்.

    இவனே, கி.பி.1193-ல் மூன்றாவது குலோத்துங்கனின் 16-வது ஆட்சி ஆண்டில் இருப்பு நாராசம் உட்பட ஆயிரத்து நூற்று எண்பத்து இரண்டு பலம் தாரா எடையுள்ள ஐந்து நிலக் குத்து விளக்குகள் இரண்டினைக் கோவிலுக்குத் தானமாகவும் அளித்துள்ளனர். ராஜகோபுரத்தைக் கடந்ததும், இடப்பக்கம் வக்கிரகாளியின் திருக்கோவில் காட்சியளிக்கிறது. அக்கரையில் உள்ளதால் வக்கரைக் காளியாகவும், வக்கிர காளியாகவும் இது விளங்குகிறது.

    இந்தச் சிறு கோவிலுக்கு முன்னால் காந்தாரக் கலையழகுடன் கொண்டையிட்ட இரண்டு பாலகியர் நிற்கின்றனர். உருண்டு திரண்ட பொன்மேனி முழுவதையும் கலையழகுடன் காட்டி நிற்கும் இச்சிற்பங்களின் ஒய்யார அழகுக்கு ஒப்புவமையே கூற முடியாது. இயற்கையாக நிற்கும் இந்த எழில் நங்கையரைப் பூமியிலிருந்து வருவது போல், முழங்கால் வரையுள்ள இச்சிற்பங்கள் சிறந்த கலைஞர்களுக்கு ஆழ்ந்த தத்துவங்களைப் போதிக்கின்றன.

    நூற்றுக்கால் மண்டபம்

    ராஜ கோபுரத்தைக் கட்டிய பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயனே (கி.பி.1179-ல்) இந்த நூற்றுக்கால் மண்டபத்தையும் கட்டினான். அதனால் ‘கண்டர் சூரியன் திருமண்டபம்’ என்று இதற்கு பெயர். அமர்ந்த நிலையில் உள்ள எட்டு சிம்ம தூண்களிடையே இந்த மண்டபம், இரு பக்கமும் இரண்டு சக்கரங்களுடன் இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல் தேர் அமைப்பில் இருக்கிறது.

    மண்டபத்தின் உட்புறச் சுவரில், ஒரு குதிரையின் மீது வலக்கையில் வாள் ஏந்தி வீரன் ஒருவன் செல்வது போன்ற சிறு சுவர் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தையும் ராஜ கோபுரத்தையும் கட்டிய கண்டர் சூரிய சம்புவராயன் சிற்பமாக இது இருக்கலாம்.

    திருநந்தி

    மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தி உள்ளது. பலி பீடத்தை அடுத்து காதுகளை உயர்த்தி சற்று வலப்புறம் சாய்ந்து சிரிக்கும் பாவனையில் உள்ள இந்த நந்தி, ராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் நேராக இல்லாமல், வடப்புறமாகச் சற்று நகர்ந்து வக்கிரமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கொஞ்சம் தள்ளியுள்ள சிறு விநாயகர் கோவிலுள்ள கணபதியின் திருவுருவம் பெரியதாக இருக்கிறது.

    கிளிக் கோபுரம்

    மூலக் கோவிலின் நுழைவு வாயிலின் முதற்கோபுரம் இதுவே. பின்னர் கோவிலின் முன்புறம் விரிவாக்கப்பட்டு உள்ளது. கட்டப்பட்ட ராஜகோபுரத்தைவிடச் சிறிது. தற்போது ‘கிளிக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    குண்டலி மகரிஷி

    வெளிச்சுற்றில் கருவறைக்குத் தென்புறம் ‘குண்டலி மகரிஷி’யின் சமாதியும், சமாதியின் மேல் சிவலிங்கமும், நிறுவப் பட்டுள்ளன. இந்தத் தனிக் கோவிலின் முன்புறமுள்ள துவாரபாலகர் குறிப்பிடத்தக்கவர்.

    வக்கிரம் ஆனது ஏன் ?

    காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் இவள் கோவில் கொண்டி ருக்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் வக்கிர நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பொதுவாக எல்லாக் கோவில்களிலும் கோபுர வாசலில் இருந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் திருவக்கரைக் கோவிலில் ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, கருவறையில் குடிகொண்டிருக்கும் சந்திர மவுலீஸ்வரர் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் காணப்படுகிறது.

    இத்தல காளியின் வக்கிர நிலையினாலேயே தலமும் வக்கிர நிலையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் வடிவமைப்பு மட்டுமல்லாமல் சிலைகளும் வக்கிர நிலைகளிலேயே காணப்படுகின்றன.

    விநாயகர் தன் துதிக்கையை இடது பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கமாக சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்துக்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து காணப்படுகிறது. இங்குள்ள நந்தி கருவறைக்கும் கொடிமரத்திற்கும் நேராக இல்லாமல் வடப்புறமாகச் சற்று விலகி வக்கிரமான நிலையில் இருக்கிறது.
    செல்வது எப்படி ?

    திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுவை செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னுமிடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 7 கி.மீ. தூரம் சென்றால், திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து திருவக்கரைக்கு நேரடியாக பேருந்து உள்ளது.

    சுந்தர விநாயகர் சன்னதி

    இத்திருக்கோவிலின் நேர் எதிர் வீதியில் சுந்தர விநாயகர் சன்னதி தனிக் கோவிலாக அமைந்து காட்சி தருகிறது. இங்கு விநாயகர் சுமார் 10 அடி உயர சிலையாக கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.

    கல்வெட்டுகள்

    முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து (சாலி வாகன சக ஆண்டு 1352 (கி.பி. 1430)) செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும், குறுநில மன்னர் களும் அரசு அதிகாரிகளும் செய்வித்த திருப்பணிகளையும், கோவிலுக்கு அளித்த நிமந்தங்களையும், 43 கல்வெட்டுக்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு கல்வெட்டும் புதிய வரலாற்றுச் செய்திகளை அருமையாக விளக்குகிறது.

    கண்டலிங்கம்

    காளிக்கோவில் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் கோவில் உள்ளது. இது கண்டலிங்கம் என்றும் அழைக் கப்படுகிறது. இந்த லிங்கத்தை வக்கிராசூரன் பூஜித்ததால் இதற்கு வக்கிரலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.

    இந்த லிங்கம் கோடைக் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக் காலங்களில் லிங்கம் வெப்பமாகக் காணப்படுமாம். லிங்கத்தின் மேற்பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். இந்தக் கோவிலுக்குத் தனி நந்தியும் உண்டு. இது இராசசிம்ம பல்லவன் காலத்திய லிங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    சிவலோகமுடைய பரம சுவாமிகளின் திருக்காட்சி


    கருவறையில் போய் நின்றதும், கயிலயங்கிரிக்குள் நிற்கும் உன்னத உணர்வால் உடல் புல்லரிக்கிறது. கார்மலி கொன்றையோடும் கதிர்மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதியும் குடி, பிரம்மமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்த ஓர் உருவாய் ‘முகலிங்கர்’ காட்சி தருகிறார். வெள்ளியங்கிரி வெற்புடையானே நம் எதிரில் இருப்பது போன்ற உள்ளுணர்ச்சி எழுகிறது.

    அம்பிகையின் கோவில்

    கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அம்பிகைக்குத் தனிக் கோவில் எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் வேரூன்றியது. அதன்படி, அருள்மிகு வடிவாம்பிகையின் கோவில் தெற்கு நோக்கித் தனிக் கோவிலாகத் திகழ்கிறது. எட்டு அழகிய தூண்கள் உடைய மண்டபத்தின் கூடிய கோவில், ஒரு தூணில் ‘பின்னால் நடனம்’ ஆடும் இரண்டு பெண்கள் காட்சி அளிக்கின்றனர். அன்னை வடிவாம்பிகை தெற்கு நோக்கி நின்று அருள் புரிகின்றாள். அவளுக்கு நேர் எதிரில் சுடுகாடு இருக்கிறது.

    முப்பெரும் பயன்கள்

    வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்திருத்தலத்துக்கு வந்து வக்கிரகாளி, வக்கிர லிங்கம், வக்கிரசனி பகவான் முதலியோரைத் தரிசித்து, வக்கிரமாகக் கட்டப்பட்டுள்ள இந்த வக்கிரக் கோவிலையும் வலம் வந்தால், வக்கிர கிரகங்களின் தொல்லைகளும், துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். வேறெங்கும் எளிதில் காணப்படாத மும்முக லிங்கம், சகஸ்ரலிங்கம், பிரயோக சக்கரத்துடன் தனித்து நிற்கும் திருமால், அற்புத வேலைப்பாடுகள் நிரம்பிய பிரம்மாண்டமான வாயிற் காவலர், ராஜசிம்மன் காலத்திய பதினாறுபட்டை லிங்கம் முதலியவற்றைக் கண்டு மகிழலாம்.

    முக்கியத் திருவிழாக்கள்

    * மாதாந்திர பவுர்ணமி விழா மற்றும் பிரதி அமாவாசை விழா
    * சித்ரா பவுர்ணமி உற்சவம்
    * ஆடிக் கிருத்திகை உற்சவம்
    * கார்த்திகை தீப உற்சவம்
    * தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம்
    * தை கிருத்திகை
    * தமிழ் வருடப்பிறப்பில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம்
    * பிரதோஷ உற்சவம்

    மேற்காணும் உற்சவங்களைத் தவிர பிரதி பவுர்ணமிதோறும் அருள்மிகு வக்ரகாளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும், இரவு 12 மணிக்கு ஜோதி பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு பிரதி மாத பவுர்ணமியன்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
    இந்தக் கோவிலில் பிரதி அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீ வக்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், பகல் 12 மணியளவில் தீப தரிசனமும் நடைபெறும்.

    இவ்வாலயத்தில் ஸ்ரீ வக்ரகாளியம்மன் சித்ரா பவுர்ணமி உற்சவத்தன்று இரவு வீதியுலாக்காட்சி, வாணவேடிக்கைகளுடன் அதிவிமர்சையாய் நடைபெறும்.
    இத்திருக்கோவில் நடைமுறையில் நெய் தீப தரிசனமே நடைபெறுகிறது. பக்தர்கள் சூடம் வாங்கி வருவதனை தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    அபிஷேக விபரங்கள்

    1.பால் அபிஷேகம்:-- ரூ-.250
    பலன்கள்: எல்லா நலன்களையும் பெற்று நலமுடன் வாழலாம்.
    2.அனைத்து அபிஷேகம்:-- ரூ-.1,000
    பலன்கள்: தொழிலில் மேன்மை கிடைக்கும். கடன்கள் நீங்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம், பதவி உயர்வு கிடைக்கும்.
    3.சந்தன காப்பு அலங்காரம்:-- ரூ-.2,500
    பலன்கள்: ராகு, கேது தோஷம் நீங்கிடும், திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.

    தொடர்புக்கு

    அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
    திருவக்கரை,
    வானூர்வட்டம், விழுப்புரம் மாவட்டம், பின்கோடு-604304

    Website:www.vakarakaliammantemple.org
    E-mail:vakrakaliamman@gmail.com
    பொதுவாக காளிகோவில் ஊரின் எல்லையில் தான் இருக்கும். ஆனால் திருவக்கரை வக்கிரகாளி ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
    பொதுவாக காளிகோவில் ஊரின் எல்லையில் தான் இருக்கும். ஆனால் திருவக்கரை வக்கிரகாளி ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கத்தக்கது. உலகை காத்து ரட்சிக்கும் தாய் இங்கு தீ ஜுவாலையை பின்னணியாகக் கொண்டு, மண்டை ஒட்டு கிரீடத்துடன் தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் காணப்படுகிறது. கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள்.

    அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றிய படியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும். அன்னையின் இடது பாதத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள். அக்கிரமங்களை அழித்து தர்மத்தின் வழி நடப்பவர் களைக் காப்பவள் அன்னை என்று இதன் மூலம் புலனாகின்றது.

    காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள்.

    வக்கிரகாளியம்மனின் இடது திருக்கரத்தின் ஆட்காட்டி விரல் அவளது இடது திருவடியை சுட்டிக்காட்டுவதுப் போல அமைந்ததிருக்கோலம் நமக்கு ‘சரணாகதி’ தத்துவத்தை உணர்த்துகிறது. அவளது திருவடியே கதி என்று சரணடைந்த வர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம் என்ற தத்துவத்தையே இது உணர்த்துகிறது. ஆகவே அம்மனின் முகதரிசனம் கண்ட பிறகு இப்பாத தரிசனம் செய்வது விசேஷமாக கூறப்படுகின்றது.

    அருள்மிகு வக்கிரகாளியம்மன் இத்தனை ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், கோரைப்பற்கள் கொண்டு, உருண்டை விழிகளுடன் மண்டை ஓட்டு மாலை அணிந்து வித்தியாசமான நிலையில் வக்கிரமாக அமர்ந்திருந்தாலும், நம் கண்களுக்கு சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கின்றாள். இன்னும் சந்தன காப்பு அலங்காரத்தில் அன்னை நம் கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சி கொடுத்து அருள்பாலிக்கின்றாள்.

    தஞ்சை நிசும்பசூதனி, திருநல்லூர்காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டீஸ்வரம் துர்க்கை, தில்லைகாளி, திண்டிவனம் கிடங்கல் கோட்டை கொற்றவை போன்ற திருவக்கரை காளியும், பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் தனக்கென்று தனிசிறப்பு பெற்று விளங்குகின்றாள். இச்சன்னதியில் சப்தமார்கள் உள்ளனர். அவர்கள் வராகி, இந்திராணி, கவுமாரி, வைஷ்ணவி, பிராமணி, துன்முகி, சாமுண்டி முதலானோர் ஆவர்.

    இவர்களில் சாமுண்டிக்குப் பதிலாக அன்னை ஆதிபராசக்தியே காளியாக உருவெடுத்து பக்தர்களுக்கு இங்கு அருள்பாலிக்கின்றாள். இச்சிற்பங்கள் பல்லவர் காலக் கலைத்திறனைப் பிரதிபலிக்கின்றன. காளி சன்னதி வலதுபுறம் யோகேஸ்வர லிங்கமும், இடதுபுறம் வலம்புரி கணபதியும் இவற்றில் வலம்புரி கணபதி அபூர்வமானதாகும். ஏனென்றால் 108 சிவத்தலங்களுக்கு ஒன்று என்ற முறையில் தான் வலம்புரி கணபதியை பிரதிஷ்டை செய்வது மரபு. அதன்படி இக் கோவிலில் உள்ள வலம்புரி கணபதியை தரிசித்தால் 108 சிவத்தலங்களில் உள்ள விநாயகரையும் தரிசித்த பேறு நமக்குக் கிட்டும். காளிக்கோவில் முன்புறம் பக்கத்துக்கு இரண்டாக நான்கு துவார பாலிகைகள் சிலை உள்ளன. இவர்களின் வரலாறு நமக்கு காளியின் கருணையை எடுத்துக் காட்டுகிறது.

    இந்த துவாரபாலிகைகள் நால்வரும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது குலத்தொழிலான பால், தயிர் விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு விற்பனை செய்யும்போது பாலில் அதிக அளவு நீர் ஊற்றி மக்களை ஏமாற்றி வந்தனர். இதனை அறிந்த மன்னன் அந்த நால்வரையும் சிகை நீக்கி சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டான்.

    அதன்படி அவர்களுக்கு மொட்டை அடித்து சிரச்சேதம் செய்யும் தருவாயில், அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து காளியை நோக்கி கதறி அழுதனர். அம்பாள் அவர்கள் முன் பிரசன்னமாகி அவர்களை மன்னித்து அருள் வழங்கித் தன்னிடமே துவாரபாலிகைகளாக வைத்துக் கொண்டாள் என்பது வரலாறு. தன் தவறை மனதால் உணர்ந்து, வருந்தி அவளிடம் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அவளது அருளும், கருணையும் நிச்சயம் உண்டு என்பதற்கு இந்த துவாரபாலிகைகளின் வரலாறே ஒரு பெரிய சான்றாகும்.

    இந்த அண்டசராசரத்தில் சுழன்று கொண்டு இருக்கிற ஒன்பது கிரகங்களுக்கும், ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகு, கேது, இரண்டிற்கும் அதிதேவதை காளி. எனவே இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலது பக்கமாக ஐந்து முறையும், இடதுபக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.

    காளி முன்பு பொய் சொல்ல முடியாது

    இந்த காளியின் சன்னதியின் முன் ஊர் மக்கள் தங்களுக்குள் ஏதாவது வழக்கு மூண்டால் கூடிப்பேசி தீர்த்துக் கொள்வார்கள். காளி திருஉருவத்தின் முன் பொய் கூற யாருக்கும் தைரியம் வராது என்பது பார்த்தால் தெரியும்.
    நாளை புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் (2019) 12 ராசிகளின் படி பெண்களுக்கான சிறப்பு பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    மேஷம்

    மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடும். சனி, செவ்வாய் பார்வை காலத்தில் மனக்கவலை அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் பிரச்சினைகள் உருவாகும். சிந்தித்து செயல்பட்டால் வந்த துயர் விலகும்.

    ரிஷபம்

    ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஓர் இனிய ஆண்டாக அமையப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். சென்ற ஆண்டில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கேட்ட இடத்திற்கு இடமாறுதல் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பளமும், வந்து சேரும். பிரதோஷ வழிபாடும், குலதெய்வ வழிபாடும் பெருமை சேர்க்கும்.

    மிதுனம்

    மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பேணி வைத்துக்கொள்வது இயலாத காரியமாகத் தெரியும். இருப்பினும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நினைத்தது நிறைவேறும்.பிள்ளைகளுக்கான வேலை வாய்ப்பும், மாலை சூடும் வாய்ப்பும் கைகூடும். உடன்பிறப்புகளின் பகை உருவாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு இனிய தகவல் வந்து சேரும். ஆஞ்சநேயர் வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு பிரச்சினைகளிலிருந்து விடுபடும் ஆண்டாக அமையப்போகின்றது. வருடத்தொடக்கத்தில் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு பின்னோக்கிச் சென்று முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகின்றது. மேலும் குரு பார்வையாலும், குடும்ப முன்னேற்றம் கூடுதலாகவே இருக்கும். கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இனிய பலன்கள் நடைபெற சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவது நல்லது.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டில் சுபச்செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளால் உங்களுக்கு உதிரி வருமானங்கள் கிடைக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல செய்தி இல்லம் தேடிவரும். வீடு வாங்கும் யோகமும், பழைய நகைகளைப் புதுப்பித்து புதிய ஆபரணம் வாங்கும் யோகமும் கைகூடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதால் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், சர்ப்ப சாந்தியும், குருப்பிரீதியும் செய்வது நல்லது.

    கன்னி

    கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வருடத் தொடக்கத்தில் வசந்த காலமாகவே இருக்கும். சுப காரியப் பேச்சுகள் கை கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும். ெவளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பின் எடுக்கும் முயற்சி வெற்றி தரும். வராகி வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் வருங்காலத்தை நலமாக்கிக் கொடுக்கும்.

    துலாம்

    துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் மனக்கவலை மாறும். மங்கல காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு சிறப்பாக முடிவடையும். 5-ம், 9-ம் மிஞ்சும் பலன்தரும் என்பதால், 9-ம் இடத்திற்கு ராகு வருவதற்கு முன்னதாகவே பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. குலதெய்வ வழிபாடும், வராகி வழிபாடும் குடும்ப முன்னேற்றத்தைக் கூடுதலாக்கும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையப் போகின்றது. மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். மக்கள் செல்வங்களின் கல்யாண காரியங்கள் துரிதமாக நடைபெறும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் நிலையங்களுக்குக் கூட உங்களை உரிமையாளராக்க குடும்பத்தினர் சம்மதிப்பர். தாய்வழி ஆதரவும், சகோதரவழி ஆதரவும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், குலதெய்வ வழிபாடும், ஆதியந்தப் பிரபு வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

    தனுசு


    தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பொருளாதார நிலை உயரும் ஆண்டாக அமையப் போகின்றது. ராசிநாதன் செவ்வாயைக் குரு பார்ப்பதன் மூலமும் குருமங்கள யோகத்தையும், சூரியன் புதனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்கும் விதத்தில் ஆண்டு தொடங்குவதால் மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். பிப்ரவரி மாதம் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குருபகவான் வழிபாடும் ராகு-கேது பிரீதியும் நலங்களையும், வளங்களையும் வரவழைத்துக்கொடுக்கும்.

    மகரம்

    மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் வருமானப் பெருக்கத்திற்கு வழிபிறக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும், ஆதரவும் கூடும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியப் பேச்சுகளை தீவிரமாகப் பேசி முடிப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். அதே போல அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி புரியும் இடத்தில் இருந்த சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எதிர்பார்த்த இடமாற்றங்கள் அமையும். இனிய வாழ்வமைய குலதெய்வ வழிபாட்டையும், விநாயகப் பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

    கும்பம்

    கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சீரும், சிறப்பும் தரும் ஆண்டாக அமையப் போகின்றது.செல்வ நிலை உயரும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய கல்யாணம் கைகூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன்-மனைவி உறவில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு புதிய வாழ்வை அமைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உயர்பதவியும், ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடி வந்து சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. புனித ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாடும், ஆறுமுகப்பெருமான் வழிபாடும் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கூட்டும்.

    மீனம்

    மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத்தில் தொடக்கம் வளர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குருமங்கள யோகத்தால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யமும், அன்பும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உத்தியோகத்திலும், பதவியிலும் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். பணிபுரியும் பெண்கள் திடீர் என பதவி மாற்றம் காண்பர். நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைத்து மனக்கவலை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு, குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும், ராகு-கேது பிரீதியும் இனிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.
    தமிழகத்தில் அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சில மாரியம்மன் கோவில்களை அறிந்து கொள்ளலாம்.
    மலேசியா மாரியம்மன்

    மலேசியாவில் சிரம்பான் நகரில் புத்திதிம்போ என்ற இடத்தில் 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்யும் போது, மகா சக்தியாக அருள்காட்சி தரும் மாரியம்மன், மதிய வேளையில் கலைவாணியாகவும், இரவு பூஜையின் போது திருமகள் எனப்படும் லட்சுமி தேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.

    கோட்டை மாரியம்மன்

    திண்டுக்கல்லில் பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள மாரியம்மன், மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக தரிசனம் தருகிறாள். மாரியம்மன் சிலையின் அடிப்பகுதி பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதையுண்டு இருக்கிறது. இங்குள்ள பழமையான கோட்டை, இந்த மாரியம்மனுக்கு வேலியாக அமைந்திருப்பதால், ‘கோட்டை மாரியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ராஜ மாரியம்மன்

    கோயம்புத்தூர் ஒள்ளிப்பாளையம் என்ற பகுதியில் ராஜ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் முகப்பில் தலை வெட்டப்பட்ட விநாயகர் தரிசனம் தருகிறார். முன்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த திருடர்களின் அட்டூழியம் குறித்து தன் தாய் மகாமாரியிடம், விநாயகர் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட திருடர்கள், அவரது தலையை வெட்டி வீழ்த்தினர். விநாயகரின் தலை வெட்டப்பட்டதால் கோபம் கொண்ட மாரியம்மன், திருடர்களை சபித்து கல்லாக மாற்றியதாக ஆலய வரலாறு சொல்கிறது.
    மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.
    மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது. இந்த குளத்தைத் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலைதான், முக்குறுணி விநாயகர் என்ற பெயரில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

    இந்த அம்மன் சிரித்த முகத்துடன், கையில்பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொடங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்திருந்துள்ளாள். தவறு செய்து விட்டு, ‘தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்து விடு’ என்று கேட்டால், இந்த அன்னை மன்னிப்பது இல்லையாம். செய்த தவறுக்கு இந்த அம்மனிடம் கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்கள்.

    இருக்கன்குடி மாரியம்மன் தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இங்குதான் பல சிறப்புகளை கொண்ட இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இத்தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம். கோவிலுக்கு தென்புறம் வைப்பாறும், வடபுறம் அர்ச்சுனன் ஆறும் ஓடுகிறது. இரு ஆறுகளும் கங்கைக்கு ஒப்பானவை என்று சொல்லப்படுகிறது.

    இரு கங்கைகள் இணையும் பகுதியில் அம்மன் குடியிருப்பதால் ‘இருகங்கைக்குடி’ என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம் காலப்போக்கில் மருகி ‘இருக்கன்குடி’ என்றானதாக சொல்லப்படுகிறது. ‘இடுக்கன்’ எனப்படும் துன்பத்தை அகற்றும் அன்னை குடியிருக்கும் இடம் என்பதால் ‘இடுக்கன்குடி’ என்று பெயர்பெற்று, அதுவே ‘இருக்கன்குடி’ என்றானதாகவும் சொல்வார்கள்.

    அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்க்க இயலாது. பவுர்ணமி நாளில் நடைபெறும் அபிஷேகத்தை மட்டும் கண்குளிர கண்டு களிக்கலாம்.
    திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது. திருவக்கரை வக்கிரகாளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும்.
    1. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.

    2. திருவக்கரை கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் செல்கின்றன.

    3. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம் பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.

    4. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று தீபம் ஏற்றி வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தம்பதி சகிதமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள்.

    5. தலப்புராணத்தில் வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன.

    6. சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் பெருமாள் கோவிலில் பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளது. இது அபூர்வ லிங்கம்.

    7. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும்.

    8. திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது.

    9. வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் கோவில் அமைந்துள்ளது.

    10. திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர் இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் உண்டு.

    11. நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும்.

    12. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.

    13. இத்திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.

    14. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின் பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி பெற்று விளங்குகிறார்.

    15. கருவறையில் பின்புறம் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் தனித்து காட்சியளிக்கிறார்.

    16. இக்கோவிலில் உள்ள வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ் வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன.

    17. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

    18. அமாவாசை, பவுர்ணமி விழாக்காலங்களில் வக்கிர காளியம்மனை சந்தன காப்பு அலங்காரத்துடன் காணும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.

    19. பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    20. மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை விழா, சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை தீப உற்சவம், தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை இத்தலத்து முக்கிய விழாக்கள்ஆகும்.

    21. வக்கிர காளியம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என பக்தர்கள் கருதுகின்றனர்.

    22. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத் திருக்கோவில்கள் முப்பத்து இரண்டினுள் முப்பதாவது திருக்கோவில் இது. இறைவன் சந்திரசேகரர், இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை.

    23. தஞ்சை நிசும்ப சூதனி, திருநல்லூர்க் காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டி சுரம் துர்க்கை, சிதம்பரம் நான் முகநாயகி, தில்லை காளி, திண்டிவனம் கிடங்கில் கொற்றவை போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே, வக்கிர காளியின் திருவுருவம் எல்லா வகையிலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    24. நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு இங்கே, ‘வக்கிர தாண்டவம்’ ஆடுவது குறிப்பிடத்தக்கது.

    25. சோழன் கோச்செங்கணான் இங்குள்ள பெருமாள் கோவிலைக் கட்டினான் என்பதிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலம் பெருமையுடன் விளங்கியது என்பதை அறியலாம்.

    26. முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ மன்னர்கள் அந்த கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும் கட்டி வந்திருக்கிறார்கள்.

    27. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் பெற்று பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.

    28. சைவ சமயக் குரவர்கள் தொண்டை மண்டலத்தில் முப்பது திருப்பதிகளைப் பாடி இருக்கிறார்கள். இதில் முப்பதாவது தலமாக விளங்குவது திருவக்கரை தலம்.

    29. திருமுறையில் சம்பந்தர் இந்த தலம் பற்றிப் பாடிய தேவாரப் பதிகங்கள் உள்ளன.

    30. புதுச்சேரியிலிருந்து பதிமூன்றாவது மைலில் புதுச்சேரி மயிலம் சாலையில் இந்த தலம் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து இந்த தலம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கில் உள்ளது.

    31. இந்த தலத்தின் பெருமையைக் குறிக்கும் பல கதைகள் வழங்குகின்றன.

    32. மேற்குப்பாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை. கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

    33. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல் அமைந்திருப்பது புதுமை.

    34. எலிபெண்டாக் குகைக் கோவில், பிரமன் ஸ்தாபித்த காளஹஸ்திக் குடைவரையிலுள்ள முகலிங்கம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு முகத்தை நோக்கியும் ஜன்னலோ, திறந்த வெளியோ இருக்கிறது. இங்கே அப்படி அமையவில்லை.

    35. அலைபுனலில் தவழ் வளை சில வைத்தருமணிதிரு வக்கரை யுறைவோனே அடியவர் இச்சையில் எவை எவை புற்றன அவை தரு வித்தருள் பெருமானே என்று அருணகிரிநாதர் இந்த தலத்திலுள்ள முருகப்பெருமானை வேண்டுகிறார்.
    ×