search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    தீபாவளியையொட்டி 3 ஆயிரம் அடி மலை உச்சியில் உள்ள தேவிரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி தாலுகா பிண்டுகா கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே பெரிய மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் தேவிரம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி, மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் மலையில் உள்ள தேவிரம்மன் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேவிரம்மனை தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் அந்த மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படு கிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் மலையின் உச்சியில் உள்ள தேவிரம்மனை தரிசிக்க மலையேறினர். கூட்டம், கூட்டமாக பக்தர்கள் மலையேறி 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தேவிரம்மன் சிலை பகுதிக்கு வந்தடைந்தனர்.

    அங்கு தேவிரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மன் சிலை திரையால் மூடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அம்மனுக்கு அலங்காரம் முடிவடைந்ததும் காற்றின் அசைவால் மூடப்பட்டிருந்த திரை தானாக திறந்தது.

    தேவிரம்மன் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.

    இந்த நிகழ்வு அங்கிருந்த பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை பார்த்து பக்தர்கள் அனைவரும் உணர்ச்சி பொங்க சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    விழாவையொட்டி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அம்மன் பல்லக்கில் ஊர்வலமும் நடக்கிறது. இந்த பல்லக்கு ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.

    மேலும் தேவிரம்மனை தரிசனம் செய்ய வரும் வெளிமாநில பக்தர்களுக்கு ஏதுவாக கர்நாடக அரசு சார்பில் சிக்கமகளூருவில் இருந்து பிண்டுகாவுக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிண்டுகா மலை அடிவாரம் மற்றும் மலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது.
    பாண்டவர்களுக்கு குண்டூசி அளவு நிலம் கூட தர முடியாது என்று கூறியதன் விளைவாக, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூண்டது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரை ‘குருசேத்திரப் போர்’ என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது.

    இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பாக, போர்க்களத்தில் தனது உறவினர்களை எதிர்த்து போரிட அர்ச்சுனன் விரும்பவில்லை. அப்பொழுது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பகவான், கர்ம வினைகளை பற்றி எடுத்துரைத்து அர்ச்சுனனை போருக்கு தயாராக்கினார்.

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது. இது 18 பகுதிகளையும், 650 செய்யுள்களையும் கொண்டது.
    பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக மேற்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும்.
    * அண்டங்கள் அனைத்தும். அன்னை கோமதியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ‘லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர’த்தை, யார் பிறருக்கு ‘எப்படி ஜெபிக்க வேண்டும்?’ என்று சொல்லித் தருகின்றார்களோ, அவர்களுக்கு அன்னை கோமதியின் அருள் கிட்டும்.

    * மனதில் பணிவு வரவேண்டும் என்று விரும்பினால், கோவில் திருப்பணிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    * யாரிடமும், எப்போதும், எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. அப்படி வாங்கினாலே பெருமளவு புண்ணியத்தை நாம் இழக்கின்றோம் என்று அர்த்தம்.

    * கோவில் உழவாரப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது மனதில் இருக்கும் வக்ர எண்ணங்கள் விலகும். தேவையற்ற தீய எண்ணங்கள் கரைந்து மனம் சுத்தமாகும்.

    * ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கோர்க்கப்பட்ட மாலையை, சிவநாமம் ஜபிக்கும் போது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலமாக 90 நாட்கள் தினமும் ஜெபித்த புண்ணிய பலன் ஒரே நாளில் கிட்டிவிடும். இதே மாலையை கிரிவலம் செல்லும் போதும், பிரதோஷ நாட்களில் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

    * மிகுந்த சுயகட்டுப்பாடும், ஆன்மிகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியப் பின்னரும் தான், 1008 ஐந்து முக ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணிய வேண்டும். அதுவரை இல்லறவாசிகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை;

    * கடந்த 16 முற்பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சிவத் தொண்டு ஆற்றியிருந்தால் மட்டுமே, இப்பிறவியில் 108 ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணியும் புண்ணிய சந்தர்ப்பம் ஒருவருக்கு கிட்டும். மற்றவர்களுக்கு இது ஒரு விளையாட்டாகத் தான் இருக்கும்.

    * கூடாத நாட்களில் பிறந்தவர்கள் சுயம்பு லிங்க ஆலயத்தில் தமது வாழ்நாள் முழுவதும் சிவத் தொண்டு புரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான மாற்றுப் பரிகாரமும் இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும், திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும், செவ்வாய்க் கிழமையும் உத்ராடம் நட்சத்திரமும், புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும், வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும், சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் இணைந்து வருவதை கூடாத நாட்கள் என்று சிலாதர் மகரிஷி தெரிவிக்கின்றார்.

    * சிவாலயங்களில் நாகலிங்க மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம் தரும்; எங்கெல்லாம் நாகலிங்க மரம் இருக்கின்றதோ, அங்கே ஈசனின் உடுக்கை ஒலி பரவிக்கொண்டே இருக்கின்றது.

    * சென்னையில் மாடம்பாக்கம் கேம்ப்ரோடு பகுதியில் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு காமதேனுவின் குளம்பு பதிந்த தெய்வீக கொம்பினால் ஆன லிங்கம் உள்ளது. இது ஒரு கோடி லிங்கங்களுள் ஒன்றாக அமைந்திருக்கும், அரிதிலும் அரிதான சிவலிங்கம் ஆகும். கோடிக்கணக்கான கோமாதாக்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம், இந்த தேனுபுரீஸ்வரரை தரிசித்தால் கிடைக்கும்.

    * மாசி மகம் வரும் நாளன்று சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரரை காராம்பசுவின் பாலை கறந்து, அதன் சூடு ஆறும் முன்பே அபிஷேகம் செய்துவிடவேண்டும். இப்படிச் செய்தால் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 60 ஆண்டுகள் வறுமையில் உழல்வோர், அதில் இருந்து மீண்டு விடுவர். கடன் தொல்லையாலேயே வாழ்ந்து வருபவர்கள் அதிலிருந்து மீள்வார்கள்.

    * எல்லாப் பிரச்சினைகளுக்கும், சாபங்களுக்கும் ஒரே தீர்வு என்று எதுவும் கிடையாது. ஆனால், அனைத்து பிரச்சினைகளும், சாபங்களும் விலகிட, குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ‘ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்று ஜபிக்க வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் மஹாகால பைரவப் பெருமானின் சன்னிதியில், இந்த மந்திரத்தை ஜெபிப்பது அதிகபட்சமான பலனைத் தரும்.

    * நாகலிங்கப் பூவை வீட்டில் சிவலிங்கமாக வைத்து பூஜிக்கலாம். ஆனால், நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி, நமது பெயர் சொல்லி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். அதன் பிறகு, வீட்டின் பூஜை அறையில் நாகலிங்கப் பூவை சிவலிங்கமாக எண்ணி தினமும் பூஜை செய்யலாம். நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ளலாம். அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்பட்ட நாகலிங்கப் பூவை வீட்டில் வைத்து சிவனுக்கு இணையாக மரியாதை கொடுத்து தினமும் பூஜை செய்ய வேண்டும். வீட்டில் யாராவது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருந்தால், அவரது தலையணைக்கு அடியில் இந்த நாகலிங்கப் பூவை வைக்க வேண்டும். இதனால், அந்த ஆத்மா தமது வாழ்நாள் நிறைவடைந்ததும் திருக்கயிலாயம் சென்றடையும்.

    * பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக மேற்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும். இங்கே செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் பலன் தரக் கூடியவை.

    * சித்தர் பெருமக்கள் மட்டும் தான் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள் என்று எண்ணுகின்றோம். இந்திரன், பிரம்மா, மகாவிஷ்ணு, அனுமன், சப்த கன்னியர்கள், எட்சிணிதேவிகள், கந்தர்வர்கள் போன்றவர்களும் தினமும் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள்.
    மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான நாளை காலை யாகசாலை பூஜையு டன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் சிறப்பு அலங்காரங்களில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 13-ந் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம் ஹாரமும், மறுநாள் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல் யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நாளை கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நடை பெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும்.

    13-ந் தேதி சூரசம்ஹார நாளில் கந்த வேள்வியும், அன்று மாலை பூச்சப்பரத் தில் வீதி உலாவும் நடக்கிறது.

    14-ந் தேதி காலையில் சுவாமி தங்க கவசத்துடன் பாவாடை தரிசனத்தில் அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலையில் லட்சார்ச் சனை நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

    நாளை 8-ந் தேதி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழா 9-ந் தேதி முதல் 5-ம் திருவிழாவான 12-ந் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

    6-ம் திருவிழாவான 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற காலங்கள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார்.

    7-ம் திருவிழாவான 14-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

    திருவிழா காலங்களில் கோவில் கலையரங்கில் காலை மாலை சிறப்பு சமய சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
    காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் குளிர காட்சிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    மகாலட்சுமியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது “அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்” மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதை காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும்.

    இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மனுக்கு வஸ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.
    திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகார தலமாக விளங்குகிறது.

    பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தாங்கியுள்ள ஆயுதங்களும் ஜய விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் பண்ண பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் ஆகியவற்றையும் இந்த நரசிம்மனே தாங்கியிருப்பது விசேஷ அம்சம்.

    மேலும் விவரங்கள் அறிய செல் : 9444225091, 94437 74775, 94447 11031.
    ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    தீபாவளிக்கு முதல் நாள் இரவே சுவாமி அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மணைப்பலகையில் சிறிது மஞ்சள் தூள், குங்குமம், மறுநாள் தேய்த்துக் குளிப்பதற்கான எண்ணெய், சிகைக்காய்ப்பொடி ஆகியவற்றை எடுத்து வைத்து விட வேண்டும். வெந்நீர் போட்டுக்குளிப்பதற்கான பாத்திரத்தினையும் நன்கு கழுவி, விபூதி பூசி, குங்குமம் இட்டு வைத்துக்கொள்ளலாம்.

    தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும். சுவாமி முன் வைத்துள்ள எண்ணெயை வீட்டிலுள்ள பெரியவர்கள் எடுத்து, சிறியவர்களுக்கு தலையில் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரை பொறுக்கும் சூட்டில் எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு, கொஞ்சம் நீரைக்கையில் எடுத்துக்கொண்டு

    கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
    நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு!
    என்ற சுலோகத்தை சொல்லிவிட்டு பின் நீராட வேண்டும்.

    தீபாவளி நாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். புண்ணிய நதிகளான கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய சப்த தீர்த்தங்களும் நான் குளிக்கும் இந்த நீரில் வாசம் செய்யட்டும் என்ற பொருள் உள்ள இந்த சுலோகத்தினை சொல்லிவிட்டு நீராடுவதால், சாதாரணக் குளியலும் புனித நீராடலாக மாறி விடும். இந்த நீராடல் நற்பலன் தரும்.

    நீராடியபின் புத்தாடை அணிந்து சுவாமி முன் கோலமிட்டு மஞ்சள் தூள், வெற்றிலை,பாக்கு,பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு, பல காரங்கள் போன்றவற்றை வைத்து, தெரிந்த சுலோகங்களைச் சொல்லி( விஷ்ணு லட்சுமி, சிவ பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்வது சிறப்பு) தூப தீபம் காட்டி வணங்குதல் வேண்டும். அதன் பின்னர் பெற்றோர், பெரியோரை வணங்கி ஆசிபெற வேண்டும். பிறகு அவரவர் வழக்கப்படி முதலில் இனிப்பையோ அல்லது சிறிதளவு தீபாவளி லேகியத்தினையோ உண்ண வேண்டும்.

    இவை அனைத்தையும் விட முக்கியமானது எது தெரியுமா? ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு. ஒருவனுடைய பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். அந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு இறந்த நாளை பண்டிகையாகக் கொண்டாடுகிறோமென்றால் அது தீபாவளி மட்டமே.

    மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். பூமாதேவி அவனைச் சிறந்த முறையில் வளர்த்து வந்தாள். தீயவர்களோடு பழகாமல் இருக்கும் பொருட்டு, வீட்டிலேயே வைத்து பாதுகாத்தாள். நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொடுத்து, அதை தினமும் ஜபம் செய்யவும் பயிற்சி அளித்தாள். ஆனால் அவளின் எண்ணம் ஈடேறவில்லை. இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைதூக்கியது. தாயின் கட்டுப்பாட்டில் இருந்து வெளி உலகிற்கு வந்து அசுரர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான். நாளடைவில் அசுரர்களுக்கு தலைவனானதோடு, தவங்கள் பல செய்து அளவில்லா வரங்களை பெற்றான்.

    தன் தாயைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரத்தைப் பிரம்மாவிடம் இருந்து பெற்ற நரகாசுரன், ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகமானதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது.

    தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசூரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தாள். போர் கடுமையாக நடந்தது. இருவரும் பலவித அஸ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்த சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு, மயக்கம் அடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார்.

    இதைக் கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினாள். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான். பிரம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகையின் விசேஷம். அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனேயானாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக்கொன்றாள்.

    தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு, தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுபட்ட நாளை, அவன் விருப்பப்படியே “தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்.இது தென்மாநில மக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம்.

    இதே தீபாவளிப் பணிடிகையை, வடமாநில மக்கள் வீடு முழுவதும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, தீபத் திருநாளாக கொண்டாடுகின்றனர். தன் தந்தை கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதற்காக வனவாசம் செய்ய ஸ்ரீராமர் காட்டிற்குச் சென்று விடுகிறார். அதன் பின்னர் ராவணனைக் கொன்று வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் வனவாசத்தையும் முடித்துக் கொண்டு காட்டை விட்டு அயோத்தி நகருக்கு வருகிறார்.

    ஆண்டுகள் பல பார்க்காமலிருந்த ஸ்ரீராமபிரானைக் காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ராமர் காட்டில் இருந்து நாட்டிற்கு வரும் நாளை வீடுகள் தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுகின்றனர். அந்த நாளையே “தீபாவளி” என்று வடமாநில மக்கள் அழைக்கின்றனர். தென்னகத்தில் நரகாசுரன் என்ற அசுரனின் அழிவும், வடமாநிலத்தில் ஸ்ரீராமபிரான் என்ற அவதாரப் புருஷனின் வருகையும் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து மூலிகை போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை தலையில் வைத்து, கதகதப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீரானாலும், கிணற்று நீரானாலும், அதில் தீபாவளியன்று கங்கை பிரசன்னமாவதாக ஐதீகம். பின்னர், வீட்டிலுள்ள பூஜை அறையில் திருமால், மகாலட்சுமி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நைவேத்தியமாக படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலட்சுமியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று புத்தாடைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து மகிழ, பெரியவர்களோ, சுற்றத்தார்களையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து வருதல், தன்னிடம் வேலை செய்யும் வேலையாட்களுக்குப் புத்தாடைகள், பட்டாசுகள், பரிசுகள் தருதல் என மற்றவர்களை மகிழ்வித்து கொண்டிருப்பார்கள். அன்று மாலை குடும்பத்தினரோடு ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.
    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும்.
    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும். ‘ஆவளி’ என்பதற்கு வரிசை என்பது பொருள். தீப+ஆவளி= தீபாவளி. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து, புலரும் காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் தீபாவளியாகும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த தினம் என்பதால், இதனை ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைப்பார்கள்.

    பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஞான பிரகாசத்தை, ஞான ஒளியை அடைய வேண்டும் என்பது தான் தீபாவளியின் உண்மையான தத்துவம். நல்லெண்ணம் ஆகிய எண்ணெய்யை நமது உடலில் பூச வேண்டும். சித்தமாகிய அரப்பினால் தேய்த்து, சஞ்சலம், கெட்ட எண்ணம் போன்ற மனதில் படிந்திருக்கும் அழுக்காற்றை போக்குதல் வேண்டும். ஞானமாகிய வெண்ணிற புத்தாடைகளை உடுத்தி புனிதமாக இருத்தல் வேண்டும்.

    காமம், தேவையற்ற கெட்ட சிந்தனைகள் போன்ற அரக்கர்களை பட்டாசு என்னும் திட உறுதிகளால் சுட்டுப் பொசுக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் போது நம்மையும் அறியாமல் நம் அகத்தில் ஒருவித ஒளிப் பிரகாசம் தோன்றும். அதன் மூலம் ஆனந்தம் உண்டாகும். அந்த நிலையை உருவாக்குவதே தீபாவளி போன்ற பண்டிகையின் உள்நோக்கம்.

    கண்ணபிரான் நரகாசுரனை அழிக்க சென்ற போது, அவனது கோட்டைகளான கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்ற நான்கையும் தாண்டி உட்புகுந்தார். பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி இறைவன் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்தும் தத்துவம் இதுவாகும். கிரி துர்க்கம் - மண், அக்னி துர்க்கம் - நெருப்பு, ஜல துர்க்கம் - நீர், வாயு துர்க்கம் - காற்று (நான்கு பூதங்கள் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதமும் இருக்கும்).

    பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொள்ள வேண்டும். இறைவன் நம் உள்ளத்தில் இருக்க இடம் அளித்தால், அவன் நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமையை அகற்றி உள்ளத்தில் ஒளியேற்றுவான். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில் ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.

    அதனால் தான் தீபாவளியைப் பற்றி ரமண மகரிஷி இப்படிச் சொல்கிறார். ‘தீய எண்ணங்கள் தான் நரக(ம்)ன். அவன் குடியிருக்கும் வீடு, நம் உடம்பு. நமது உடலில் இருந்து அந்த மாயாவியை அழித்து நாம் அனைவரும் ஆத்மஜோதியாக திகழ்வதே தீபாவளி’
    தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.
    சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், 'தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.

    அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், 'தீபாவளி திருநாளில் மட்டும்...எண்ணையில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய், பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

    எனவே தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.

    அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நீராடுவது மிகவும் நல்லது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நரக சதுர்த்தி தினத்தன்று சிலர் கன்னியா லக்ன காலத்தில் நீராட விரும்புவார்கள். அத்தகைய விருப்பம் உள்ளவர்கள் அதற்குரிய எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.



    கங்கா குளியல்

    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாட வேண்டிய பண்டிகையே தீபாவளித்திருநாள். அன்று அதிகாலையில் (சுமார் 5.30 மணிக்கு முன்பாக) அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புதிய ஆடைகள் உடுத்திக் கொண்டு பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் பூஜை முதலியவற்றைச் செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    நரகாசூரனின் தாயார் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று நரகாசூரனை அழித்த ஸ்ரீ மகாவிஷ்ணு தீபாவளி அன்று இவ்விதம் செய்பவர்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கூறினார். மேலும் தீபாவளி அன்று அதிகாலையில் சந்திரன் இருக்கும் போதே முறையாக நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் ஏற்படாது.

    இன்று மட்டும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், தண்ணீரில் கங்காதேவியும் வாசம் செய்வதால் அனைவரும் அன்று வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். குளிக்கும்போது அபாமார்கம் என்னும் நாயுருவிச் செடியை மூன்று முறை தலையைச் சுற்றி தூர எறிந்து விட வேண்டும்.

    எண்ணெயை காய்ச்சி தேய்த்து குளியுங்கள்

    தீபாவளியன்று தேய்த்துக் குளிக்க வேண்டிய எண்ணெயை, முதல் நாளே சிறிது அரிசியும் கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். (ஓமத்திற்குப் பதில் மிளகு சேர்ப்பவர்களும் உண்டு). புராண காரணம் எதுவும் இல்லை என்றாலும் அதிகாலையில் அதுவும் குளிர் காலத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் ஜுரம் போன்ற எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணெயை காய்ச்சியும், நீரை சூடுபடுத்தியும் குளிக்க வேண்டும் எனச் சொல்லி வைத்துள்ளனர்.

    அதே சமயம் அரிசி மகாலட்சுமியின் அம்சம். எனவே அதனை எண்ணெயில் இட்டு காய்ச்சும் வழக்கம் வந்தது என்று சொல்வார்கள். ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இரண்டுமே முக்கியம் என்பதால் அதுவே கங்காஸ்நானத்தின் தத்துவமாக மாறிவிட்டது.
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.

    பொதுவாக செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாலையில் கோவிலில் விளக்கு ஏற்றி வருவது நல்லது. நெய்தீபம் ஏற்றினால் கிரகதோஷம் நீங்கும்.
    வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் நடைபெறும் மற்றும் வியாபாரம் நன்கு நடைபெறும், கிரகதோஷங்கள் நீங்கும்.

    எண்ணெய் தீபம் ஏற்றினால் அஷ்டமத்து, ஏழரைச்சனி, செவ்வாய் தோஷம், ராகு, கேது பீடை அகலும். மனசஞ்சலம் இருக்காது. குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்றி விளக்கின் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சொத்து வாங்கலாம். கடன் தீரும்.

    நெய்தீபம் ஏற்றினால் பாவம் நீங்கும், வேலை கிடைக்கும். விநாயகருக்கு விளக்கேற்றினால் கேது தோஷமும் காரியத் தடைகளும் நீங்கும். சிவாலய தீபம் கண் நோயைத் தீர்க்கும். சவுபாக்கியம் கூடும்.

    தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றினால் படிப்பு நன்றாக வரும். பிரயாணத்தில் இடைஞ்சல் வராது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் ஒவ்வொரு திருவாதிரை அன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, அதனால் ஏற்படும் பலனை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு நல்ல எண்ணெய் நம்மால் முடிந்த அளவு வாங்கிக் கொடுக்கலாம். நிறைய கோவில்களில் தீபம் ஏற்ற இயலாத நிலைமையில் உள்ளது. அதுபோன்ற கோவில்களுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுப்பது நம்முடைய குடும்பத்திற்கே நல்லது.

    தீபம் எப்படி கோவிலுக்கு வெளிச்சம் கொடுக்கிறதோ அதுபோல நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். கோவிலுக்கு நெய், நல்ல எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் போது நெய், எண்ணெய் மட்டும் வாங்கிக் கொடுக்க கூடாது. திரியும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

    ஆன்மீகச் சிந்தனையில் முதலில் வீட்டில் அந்த சூழ்நிலையை உருவாக்குவது முக்கியம். அதிகாலை வேளையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டால் அங்கு லட்சுமி தாண்டவமாடுவாள் என்பது ஐதீகம். கோலத்தைச் சுற்றி செம்மண் பூசினால் பகவானையும் தாயாரையும் நம் வீட்டுக்கு அழைக்கிறோம் என்பது பொருள். அரிசி மாவில் கோலமிடுவதன் மூலம் எறும்புகளுக்கு உணவு கிடைக்கிறது. இதனால் பெரும் புண்ணியம் ஏற்படும். இவ்வாறு புண்ணியம் தரும் கோலத்தை வீட்டிலுள்ள குடும்பத்தலைவிகள் அல்லது பெண் குழந்தைகளே போட வேண்டும். வீட்டு வேலையாட்களை கோலம் போடச் சொல்லக்கூடாது.

    வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜையின்போது திருவிளக்கு ஏற்றி வழிபடுவது என்றும் இறைவனின் துணையுள்ள நன்மை தரும் தூய சக்தியை வீட்டில் வரவழைக்க ஏதுவான முக்கிய வழியாகும்.

    திருவிளக்கு அசையாமல் எரியும்போது அதை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தால் சஞ்சலமுள்ள மனது நிலைப்படும். தீப ஒளியைப் பார்ப்பது ஒரு வகை ‘குட்டி தியானம்‘ என்றால்கூட மிகையாகாது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையில்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல்’ நேரம் என்பர்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

    திருவிளக்கு மும்மூர்த்தி உருவம் என்று கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பகுதி பிரம்மன் என்றும், நடுத்தண்டாகிய மத்திய பகுதி விஷ்ணு என்றும், அகல் பகுதி சிவன் என்றும், அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன் என்றும், சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டுக்கு வீடு ஐந்து திரி இரட்டைத்திரி நான்கு திரி ஒற்றைத்திரி என அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப விளக்கேற்றுகிறார்கள். திருவிளக்கை ஏற்றினால் வீட்டில் துஷ்ட சக்திகள் அணுகாது என்பது பழங்கால நம்பிக்கை. அறிவியல் ரீதியாக விளக்கெரிக்க நல்லெண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    ஏனெனில் இதிலிருந்து பரவும் மணத்தில் இரும்புச் சத்து இருக்கிறது. செம்பு, வெள்ளி, அலுமினியம் ஆகிய வகை விளக்குகளை ஏற்றும்போது மனித உடலில் எந்த உலோகத்தின் பற்றாக்குறை இருக்கிறதோ அது ஈடுகட்டப்படுகிறது என்பதும் ஒரு நம்பிக்கை.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பற்றிய 25 தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை, இது தீபாவளிப் பண்டிகை என வழங்கப்படுகிறது.

    2. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    3. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர். முதல் நாள் பண்டிகையை சோட்டா தீபாவளி (சிலு தீபாவளி) என்பர். இரண்டாம் நாள் பண்டிகையை 'படா தீபாவளி' (பெரிய தீபாவளி என்பர். மூன்றாவது நாளன்று 'கோவர்த்தன பூசை' செய்து கண்ணப்பிரானையும் பூசிப்பர். அன்று தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனைவதம் செய்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

    4. தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். மிகவும் புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும் வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால் அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப் பயன்கிட்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

    5. வடநாட்டில் தீபாவளித் தினத்தன்று செல்வத் திருமகளான லட்சுமிதேவியைப் பூஜித்து, புதுக்கணக்குத் தொடங்குவர்.

    6. தீபாவளித் தினத்தன்று வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோல மிடுவர். தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணி கள் பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய் சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.

    7. புதிதாக மணமுடித்தவருக்கு அமையும் தீபாவளி தலைத் தீபாவளி. மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குதல் வேண்டும். அடுத்து அவர்கள் பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக்கொள்ள வேண்டும்.

    8. தீபாவளியின்போது பெரியோர்களை வணங்கி அவர் களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும். சாஸ்திரத்திற்காகப் பட்டாசு கொளுத்தவேண்டும்.

    9. தீபாவளிச் சமையலில் சாம்பார், புளிக்குழம்பு போன்றவை இடம் பெறக்கூடாது. ஏனென்றால், தீபாவளிப் பண்டிகை யின் போது மழைக்கால மாகையால் அப்போது அவை செரிமானம் ஆகாது. இப்பருவத்திற்கேற்ற, உடலுக்கு இதமான, பக்குவமான உணவு மோர்க்குழம்பு மட்டுமே. எனவே, தீபாவளிப் பண்டிகைச் சமையலில் மற்ற உணவுகளுடன் மோர்க்குழம்பு முக்கிய பங்கைப் பெறும்.

    10. இந்துக்கள் மட்டுமின்றி ஜைனர், பெளத்தர், சீக்கியர் ஆகியோரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

    11. ஞான நூல்களுள் ‘பகவத் கீதை’ சிறப்பான இடத்தை பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தை பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் ‘பகவத் கீதையின் தம்பி’ என்று சொல்லியுள்ளார்கள்.

    12. லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ‘செல்வம் வளரும்’ என்பது நம்பிக்கை.

    13. தீபாவளி தினத்தன்று, ‘என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது இன்றும் நம் நாட்டில் பழக்கத்தில் இருந்து வருகிறது.

    14. ‘தைலே லட்சுமி: ஜல கங்கா’ என்பது துலாபுராணத்தின் மணியான வாசகம். கங்கை, தீபாவளி அன்று எண்ணையிலும் வெந்நீரிலும் இருப்பதாக ஐதீகம்! சிலர் காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்வார்கள். தீபாவளி அம்மாவாசை காசியில் மிகவும் விசேஷம்.

    15. கண்ணபிரானுக்கும் நரகாசுரனுக்கு நடந்த யுத்தத்தில் கண்ணபிரான் தேர்த்தட்டில் மயக்க முற்றார். சாரதியாக வந்த சத்தியபாமா வீரத்துடன் போராடினாள். அதனால் இப்பண்டிகை வீரலட்சுமியைப் போற்றி வணங்கும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

    16. அஞ்ஞானத்தின் ஸ்தூல வடிவம் தான் நரகாசுரன். அந்த இருளைப் போக்குதவற்கு ஞான தீபங்களை ஏற்றுகிறோம் என்பதுவே தாந்தக்கருத்து.

    17. எம் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகம் சென்ற மகாபலி சக்கரவர்த்தி எம் பெருமானிடம் ஆண்டிற்கு ஒரு முறை தாம் பூலோகம் வரவேண்டும் என்றும் அந்த நாளில் பூலோக வாசிகள் புத்தாண்டை உடுத்தி, எங்கும் விளக்கேற்றி கோலாகலத்துடன் தன்னை வரவேற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அந்த நாள் தான் தீபாவளி என்று கூறப்படுகிறது.

    18. தீபாவளி பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன்.

    19. சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

    20. தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

    21. வடநாட்டின் சில பகுதிகளில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். முதல்நாள் லட்சுமி பூஜை. இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி. மூன்றாம் நாள் தீபம் ஏற்றுவது. நான்காம் நாள் முழுக்கு. ஐந்தாம் நாள் எமனை வழிபடுவது.

    22. எமனுக்கு யமுனை என்ற தங்கை உண்டு. எமன் தீபாவளியன்று அவளுக்கு பரிசுகள் வழங்குவானாம். அதனால் அன்று அண்ணன், தங்கையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும். தங்கைக்கு ஆபரணம் செய்து கொடுப்பர். வயதானவர்கள் யமுனா நதியில் ஸ்நானம் செய்வார்கள்.

    23. தீபாவளியின் போது இளம் பெண்கள் தீபங்கள் ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்துவிடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

    24. தீபாவளியின் போது வடநாட்டினர் மாடுகளையும் எருதுகளையும் கன்றுகளையும் குளிப்பாட்டி திலகமிட்டு அலங்காரம் செய்வர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் போதுதான் இப்படி செய்வார்கள்.

    25. வியாபாரிகள் தீபாவளியை விக்ரமாதித்தனின் நினைவாக கொண்டாடுகின்றார்கள்.
    ×