search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95509"

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் தொடங்கியது.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    சோமநாதர் சன்னதி கால பைரவர், சதாசிவப் மேந்திராள் போன்ற சன்னதிகள் புதிதாக கருங்கல்லில் அமைக்கப்பட்டு உள்ளது. ராஜகோபுரம், விமான கோபுரம், பரிவார சுவாமி சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டும் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் மர கதவுகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 4-ந் தேதி எல்லை தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று மாலை யாகசாலைக்கு புனித நீர் கலசங்களில் கொண்டு வரப்பட்டு முதல் கால யாக பூஜை தொடங்கியது.

    திருப்பரங்குன்றம் கந்த குருவேத பாடசாலை முதல்வர் ராஜா பட்டர் தலைமையில் வேத விற்பன்னர்கள் யாக சாலையில் விசே‌ஷ சாந்தி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம் மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 2-ம் கால யாகசாலை பூஜை, நாளை 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

    11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு ஆனந்தவல்லி சோமநாதர் மூலவர் விமான கோபுரம், ராஜ கோபுரம், பரிவார விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

    காலை 9.40 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சோமநாத சுவாமிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம்- தீபாராதனை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் திரளான பக்தர்களுக்கு வைகை ஆற்றில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணி முதல் 7 வரை திருக்கல்யாணமும், 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, அதனைத் தொடர்ந்து இரவு பக்தி இசை, வள்ளி திருமணம் புராண நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைகை ஆறு சீரமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. கோவில் முன்பு பக்தர்கள் பாதுகாப்பாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆனந்தவல்லி- சோமநாத சுவாமி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வரும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி 8 கால யாகசாலை பூஜைகள் நடத்தும் வகையில் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5-ந் தேதி வாஸ்து சாந்தி பூஜையும், 6-ந் தேதி தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஆச்சார்ய ரஷாபந்தனம், அக்னி சங்ரகணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாகசாலை மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5-ம் கால யாகசாலை பூஜை, 10-ந் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மாலை 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜையும், காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகமும் நடக்கிறது.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 11-ந் தேதி காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த் ராஜா செய்து வருகிறார்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், நேற்று தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா நேற்று கும்பாபிஷேகத்திற்கு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது.

    இதனால் இன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ந் தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    காலை 6 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம், தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகளும், 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 9-ந் தேதி 3-ம் கால யாக சாலை பூஜையும், 10-ந் தேதி காலையில் 4-ம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    11-ந் தேதி காலையில் யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 12 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் டாக்டர் இசக்கியாபிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.
    முக்கடலும் சங்கமிக்கும் தென்முனையில், அன்னை உமையவள் கன்னியாக, குமரியாக எழுந்தருளி நித்திய தவம் இருக்கும் திருத்தலமே கன்னியாகுமரி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. அதுபோல இங்கு பெண் சித்தர் மாயம்மா திருமடம், குகநாதேஸ்வரர் திருக்கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், குமரி பகவதி அம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. சுவாமி விவேகானந்தர் குமரிக்கு விஜயம் செய்த போது குமரி அன்னையை தரிசித்து கடலுக்குள் சிறிது தூரம் நீந்திச் சென்று, அங்குள்ள பாறையில் தியானம் செய்தார்.

    இத்தகைய அருள் வழங்கும் ஆன்மிக பூமியில், திருவேங்கடம் வெங்கடாஜலபதியும் எழுந்தருளியிருக்கிறார் என்பது தனிச் சிறப்பாகும். திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு நடைபெறும் அன்றாட வைபவங்களும், திருவிழாக்களும் அதே நாளில் அதே நேரத்தில் இத்தலத்திலும் நடைபெறுகிறது.

    திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் இங்கும் சிறப்பாக நடக்கும். திருப்பதி பிரசாதமான லட்டு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமைகளில் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தேர் ஓடும் வகையில், மாடவீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை ஒட்டி மடப்பள்ளி, வேதபாடசாலை, கோமடமும் அமைந்துள்ளன. திருமலையில் உள்ளது போன்றே ‘சுவாமி புஷ்கரணி' எனும் தீர்த்தக்குளமும் இங்குள்ளது.

    வெங்கடாஜலபதி திருக்கோவில் மேல் தளம், கீழ் தளம் என இருதளங்களுடன் கொடிமரம், மகாமண்டபம், ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் உள்ளன. மேல்தளத்தில் மூலவர் திருப்பதி ஏழுமலையான் எனும் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருட பகவான் சன்னிதிகள் இருக்கின்றன.

    கருவறையில் மூலவர் வெங்கடாஜலபதியின் திருப்பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி `சித்திரை விஷூ' நன்னாளில் சூரிய ஒளி விழும் வகையில் சிறப்பாக ஆலயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆறரை அடி உயரத்தில் ஏழுமலையான் அருள்தருவது ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. உடல்நோய்கள், மன நோய்கள், வறுமை, தரித்திரம், தோஷங்கள், துயரங்கள் அகலவும் இத்தல வெங்கடாஜலபதியை தரிசித்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும். முடிக் காணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து, திருமலையில் ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி), மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச் செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. ஏனெனில் மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?.

    எனவே திருமணச் செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை வாங்கினார். அந்த கடனை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மஹாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்னும் இடத்தில் அலர்மேல் மங்கை எனும் பத்மாவதி தாயாரை இருத்தினார். பின்னர் தான் மட்டும் நின்ற திருக்கோலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் வெங்கடாஜலபதியாய், ஏழுமலையின் சிகரத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினார்.

    வெள்ளிக் கிழமைகளில் திருமலை வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின் போது பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி திருஉலா நடைபெறுகிறது. இந்த அத்தனை விழாக்களும் திருமலை திருப்பதியில் நடைபெறும் அதேநாளில் அதே நேரத்தில், குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலிலும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் குமரி திருமலைதிருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் விவேகானந்தபுரம் இருக்கிறது.

    திருப்பதி வரலாறு

    கிருஷ்ண அவதாரத்தில் பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை தனது கரங்களால் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அம்மலையே கலியுகத்தில் திருவேங்கடமலையாய் வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறதாம்.

    ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டிப் பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் எனும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும்பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக்கொன்று பூமாதேவியை மீட்டார். பின்பு பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார். அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள் கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

    அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு, தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் (வேம்-பாவங்கள், கடம்-எரித்தல்) எனவும், தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்- அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்) எனவும் இருவகை பொருளுண்டு. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி, ஆதலால் ‘திருப்பதி’ ஆயிற்று.
    கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று முன்தினம், யாகசாலை பூஜையும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 3-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தன. கேசிராதிவசம் என்ற சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கொடிமரத்துக்கு செம்பு தகடு பொருத்தும் பணியும், மாலையில் ஹோமம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்டவையும் நடந்தன.

    இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் மூலஸ்தான கருவறையில் 7½ அடி உயர திருப்பதி வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருடபகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் நேற்று மும்முரமாக நடந்தது. இந்த பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னையில் உள்ள உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலை சுற்றிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவில் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

    27-ந் தேதி கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கடற்கரையையொட்டி கோவில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் கோவிலை பார்வையிட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 2-வது நாளாக யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டது.

    நேற்று 2-வது நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்ச கவ்ய திவ்சமும், தொடர்ந்து பசுவும், கன்றும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்துக்கு சென்று கருவறையில் தானியத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி சிலைக்கு பூஜைகள் நடத்தினர். பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்பாள், கருட பகவான் ஆகிய சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடந்தது.

    மேலும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி காப்பு அணிவித்தார். கன்னியாகுமரி திருப்பதி கோவில் உதவி செயல் அலுவலர் ரவி, விவேகானந்த கேந்திரா செயலாளர் அனுமந்தராவ், சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, சீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணபிள்ளை, திருப்பதி தேவஸ்தான துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் சவுடு உள்பட பலருக்கும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து ஹோமம் நடைபெற்றது.

    யாகசாலை பூஜையில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் திருவம்பலம் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கோவிலை பார்வையிட்டனர். 
    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகும். நாடு முழுவதும் இருந்து திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். முக்கிய நாட்களில் அங்கு 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க கோவிலை போல் நாடு முழுவதும் பல இடங்களில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி டெல்லி குருசேத்திரத்தில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    2-வதாக இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த கோவில் 5½ ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியின் வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் ஆண்டாள் அம்மாள் சன்னதியும், வெங்கடாசலபதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன. வெங்கடாசலபதி 7½ அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளார்.

    கோவிலின் கீழ் பகுதியில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் மற்றும் அன்னதான கூடம், தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டு உள்ளன. திருப்பதியை போன்று, கன்னியாகுமரியில் எழுந்தருளியுள்ள இந்த கோவிலிலும் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் நேற்று காலையில் செம்பு தகடுகள் பதிக்கும் பணி நடந்தது.


    கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலை படத்தில் காணலாம்.

    கும்பாபிஷேக விழா நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர். யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழை தோரணங்கள், பூக்களால் அலங்காரமிட்டு காட்சி அளித்தது.

    இங்கு உற்சவர் வெங்கடாசலபதி, பூதேவி, ஸ்ரீதேவியுடன் ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவர் திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. உற்சவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைக்கு முன்னதாக பல்வேறு பூஜைகள் நடந்தன. அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டது. மேலும் யாகசாலை பூஜையின் தொடக்கமாக வெங்கடாசலபதி கோவில் முழுவதும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.

    யாகசாலை பூஜையில் தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவி பாபு, ஸ்ரீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, கன்னியாகுமரி திருப்பதி கோவிலின் உதவி செயல்அலுவலர் ரவி, உதவி பொறியாளர் அமர்நாத், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி போன்றவையும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற நாட்களில் கேசரா திவ்சம், ஹோமம், பூர்ணாகுதி, ஜலாதி வாசம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கன்னியாகுமரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22½ கோடி செலவில் பிரமாண்டமான முறையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு திருப்பதி ஏழுமலையான் சன்னதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள், கருடாழ்வார் சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சீனிவாச திருக்கல்யாண மண்டபம், தியான மண்டபம், அன்னதானக்கூடம் உள்பட பல்வேறு மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கோவிலை சுற்றி மாடவீதிகள், தோரண வாயில்கள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    இதற்காக கோவிலில் 16 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜையையொட்டி அங்குகுரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடைபெறுகிறது.

    24-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கேஸரா திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும், 25-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாதி வாஸமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடக்கிறது. 26-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கலசாஸ்னாப்னம், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மகாசாந்தி, திருமஞ்சனம் மற்றும் பூர்ணாகுதியும், தொடர்ந்து சாயனாதிவ்சமும் நடைபெறுகிறது.

    27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் வழங்கப்படுகிறது. மேலும் பிரசாதமாக திருப்பதி கோவில் லட்டும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மாலையில் சீனிவாச கல்யாணம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கோவிலில் நேற்று 40 அடி உயரத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கொடிமர பிரதிஷ்டை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மேலும், கொடி மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி, விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடிமர பீடத்திற்கும் பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடந்தது.

    நிகழ்ச்சியில், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனை மற்றும் தகவல் மைய உதவி செயல் அலுவலர் ரவி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம், ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், சந்திர சேகர், விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்தபதி முனுசாமி ரெட்டி, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ண பிள்ளை, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்தரமவுலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெங்கடாசலபதி கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோவில்களை கட்டி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடி கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாதம் நிறைவு பெற்று வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. 22-ந் தேதி நவதானியங்களை முளையிடுதல், மாலை 6 மணி முதல் 9 மணி வரை அங்குரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது.

    23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை யாகசாலை வாஸ்து, பஞ்சகவ்ய பிரசன்னம், மாலை 6 மணி முதல் 8 மணி வரை அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை போன்றவையும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஹோமம், பூர்ணாகுதி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஹோமம் ஆகியவையும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஹோமம், ஜலாதிவாசம், திருமஞ்சனம் போன்றவை நடைபெறும்.

    27-ந் தேதி காலை 4 மணி முதல் 7 மணி வரை சுப்ரபாதம், கும்பஆராதனை, நிவேதனம் ஹோமம், காலை 7 மணி முதல் 7.30 மணி வரை கும்பம் உற்சவமூர்த்திகள் வீதி உலா, 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நித்திய கைகர்யம், இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சர்வ தரிசனம், இரவு 8.45 மணிக்கு ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும்.

    கும்பாபிஷேகத்தன்று பகல் 12.30 மணி முதல் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை யாகசாலை பூஜை, பஞ்சகவ்யம், ரட்சாபந்தனம், அக்னிபிரதிஷ்டை, கும்ப பாராயணம், பூர்ணாஹூதி உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    22-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந் தேதி காலை 4 மணிமுதல் 7 மணிவரை சுப்ரபாதம் நடக்கிறது. பின்னர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வருகின்றனர்.

    இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் 7 கோபுரங்கள், மூலவர் சன்னதிகளுக்கு இன்று 2-ம் கட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் போற்றப்படுகிறது. மேலும் சைவத்திருத்தலங்களில் முக்கியமான திருத்தலம் இதுவாகும்.

    இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையடுத்து 2 கட்டமாக கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் பரிவார தெய்வங்கள் மற்றும் உபசன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பெரிய கோபுரங்கள், மூலவர், அம்பாள் சன்னதி மற்றும் விமானங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுந்தர பாண்டியன் கோபுரம் அருகே உள்ள யாகசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

    மூலவர் ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.

    பின்னர் 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் ராசாமணி, திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் தம்பிரான் சுவாமிகள், தர்மாபுரம் ஆதீனம் மாசிலாமணி சுவாமிகள், வேளாங்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகா தேசிக சுவாமிகள்,

    புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திரு வானைக்காவல் கோவில் தக்கார் ராணி, நிர்வாக அதிகாரியும், உதவி ஆணையருமான ஜெயப்பிரியா, ரெங்கவிலால் ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள்.

    அப்போது பக்தர்கள் வல்ல சிவனே போற்றி, சிவ சிவ போற்றி என பக்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    முன்னதாக நேற்றிரவு திருவானைக்காவல் கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். யாகசாலை மண்டபத்துக்கு வந்த அவருக்கு மேள, தாளம் முழங்க பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    அதன் பிறகு யாகசாலை பூஜையில் கவர்னர் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும், கவர்னருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி திருவானைக்காவல் கோவிலில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    ×