search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள்"

    இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல்களில் உயிரிழப்புகளும்  ஏற்படுகின்றன. எதிரிகளின் தலையை துண்டித்தும், உடல் உறுப்புகளை சிதைத்தும் கொடூரமாக கொல்லும் வன்முறைக் கும்பல், அந்த உடல்களை நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் கட்டி தொங்கவிடுகின்றனர். இதனால் நெடுஞ்சாலை பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் ஜாகெட்கஸ் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். 9 பேரின் உடல்கள் மேம்பாலத்தில் தொங்கிய நிலையிலும், ஒருவர் உடல்  சியுதத் கவுதமாக் நகரிலும் மீட்கப்பட்டன. 

    இந்நிலையில் ஜாகெட்கஸ் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை மேம்பாலத்தில் தொங்கிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. சான் ஜோஸ் தி லால்டஸ் நகரில் இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைப்பு கூறி உள்ளது.

    இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 3.4 சதவீதம் குறைவு  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தினந்தோறும் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு மலிண்டோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் மலேசியாவிற்கு கடத்த இருந்த இருமல் மருந்து போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மர்ம பொருளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை சோதித்தபோது போதைப்பொருள் என்பது தெரியவந்தது.

    அவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கடத்த இருந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.10 லட்சம் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் அந்த பயணியை கைது செய்து தமிழகத்தில் இந்த போதைப்பொருள் எங்கிருந்து, யாரிடம் வாங்கப்பட்டது என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மும்பையில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் ரூ.39 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் போலீசார் கைது செய்தனர். #Mumbai #DrugSmuggling
    மும்பை:

    மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது 35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர்.
    ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் என்னும் போதைப்பொருளை கடத்திவந்து இந்தியாவில் விற்க முயன்ற 3 வெளிநாட்டினரை டெல்லி போலீசார் கைது செய்தனர். #3heldinDelhi #Rs25croreheroin
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கள்ளத்தனமாக ஹெராயின் கடத்தப்படுவதாக டெல்லி சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சாக்கெட் பகுதியில் உள்ள நகர நுழைவு வாயில்களில் தீவிரமான வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்,

    இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த ஓசோன்டூ என்பவரிடம் ஒப்படைப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து 5 கிலோ ஹெராயினை விமானம் மூலம் கடத்திவந்த எஸ்மத்துல்லா, கலிலுல்லா ஆகியோரையும், ஓசோன்டூ என்பவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீசார் கைது செய்தனர். 

    அவர்களிடம் இருந்து 4,200 அமெரிக்க டாலர்களும், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    கைதான எஸ்மத்துல்லா, கலிலுல்லா ஆகியோர் மருத்துவ விசா மூலம் அடிக்கடி டெல்லி வந்து சென்றுள்ளனர். விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக கேப்சூல்களுக்குள் ஹெராயினை அடைத்து, அவற்றை விழுங்கி அவர்கள் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த இரண்டாண்டுகளில் இவர்கள் டெல்லிக்கு 100 கிலோவுக்கும் அதிகமான ஹெராயினை கடத்தி வந்ததாகவும், கடந்த முறை மட்டும் 15 கிலோ கொண்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இவர்கள் கடத்திவந்த போதைப்பொருளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நைஜீரியாவை சேர்ந்த ஓசோன்டூ என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆறுமாத விசாவில் இந்தியா வந்துள்ளார். விசா காலம் முடிந்த பிறகு நைஜீரியாவுக்கு போகாமல் இங்கேயே கள்ளத்தனமாக தங்கி இருந்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் கடத்தல் ஹெராயினை,டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு கைமாற்றி விடுவதுடன், கனடா, இங்கிலாந்து. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரியர் மூலம் அனுப்பிவைத்து பணம் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது. #3heldinDelhi #Rs25croreheroin 
    மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #MumabiAirport #Cocaine
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த பெரியா நசிமென் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் மாத்திரை வடிவில் 457 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.

    மும்பையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானத்தில் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்தவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  #MumabiAirport #Cocaine  #tamilnews 
    பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் வகையில் இலங்கையில், 19 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
    கொழும்பு:

    குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இதற்காக வெளிக்கடை சிறையிலும், கண்டி போகம்பறை சிறையிலும் தூக்கு மேடைகள் அமைக்கப்பட்டன. கடந்த 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி பப்புவா என்பவருக்கு இலங்கையில் கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இலங்கை சிறைகளில் 500-க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால் மீண்டும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கை குறித்து இலங்கை பாரளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விவாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    மந்திரிசபையின் ஒப்புதலைத் தொடர்ந்து தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்ட ரீதியான பணிகள் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கியுள்ளது.

    இதில் முதற்கட்டமாக, தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இது தொடர்பாக பவுத்த சாசன மந்திரி காமினி ஜெயவிக்ரம பெரேரா, நிருபர்களிடம் கூறும்போது, போதைப்பொருள் குற்றத்துக்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரின் தண்டனையை நிறைவேற்ற மந்திரி சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். 
    பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்ற மேயர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். #Philippinemayordead
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இதற்கு முன்னதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி என்பது குறிப்பிடத்தக்கது. #Philippinemayordead #tamilnews
    டெல்லியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த கைக்கூலியை கைது செய்த போலீசார், அவனுக்கு சப்ளை செய்த நபரை தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லி கஷ்மேரே கேட் பகுதியில் கைப்பையில் 3 கிலோ ஹெராயின் வைத்திருந்த நைஜீரியா நாட்டினரான எக்கேனே கென்னத் ஓன்யெட்டோபே(33) என்பவனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவனிடம் இருந்த 15 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில். ஆப்கானிஸ்தானில் இருந்து நைஜீரியாவை சேர்ந்த வேறொருவர் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் வழியாக அனுப்பிவைக்கும் போதைப்பொருட்களை டெல்லி, பஞ்சாப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் கைக்கூலியாக அவர் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கும் இடைத்தரகர்கள் மூலமாக போதைப்பொருட்களை அனுப்பி வந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒரு நைஜீரியா நாட்டவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.  #NigerianArrest #heroin
    சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.

    அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.

    விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×