search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95567"

    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.
    • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.

    அதன்படி அனைத்து தபால் பட்டுவாடா ஊழியர்களும், மூத்த குடி மக்களுக்கு உதவி செய்யும் விதமாக குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பாக செயல்படும் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த தபால் பட்டுவாடா ஊழியர்களின் பணி திறனை பாராட்டும் வகையில் துணைக்கோட்டம் கோட்டம் மண்டல வாரியாக பரிசுகள் வழங்கப்படும்.

    இந்த சேமிப்பு கணக்கினை 60 வயது பூர்த்தி அடைந்த முதியவர்கள் மற்றும் 50 வயது பூர்த்தி அடைந்த பாதுகாப்பு பணியாளர்கள், மேலும் 55 வயது பூர்த்தி அடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிட் பண்ட் நிறுவனம் பெரும்பாலும் பிரைவேட் லிமிடெட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ்.

    இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ். இந்த அமைப்பு பண்டமாற்றுக் காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பது வியப்புக்குரியது. இத்தகைய சேமிப்பு திட்டத்தை பற்றி சிட் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிற்றரசு கூறியதாவது.

    பண்டமாற்று காலத்திலேயே சேமிப்புக்காகவும் சிலரின் அவசர தேவைக்கு உதவுவதற்காகவும் இந்த அமைப்பு வழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. நாணயம் பணம் புழக்கத்திற்கு வந்த பின்பு சிட் பண்ட் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பே செயலுக்கு வந்திருப்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. 1894-ம் ஆண்டு ஆவணங்கள் மற்றும் 1934-ம் ஆண்டு திருவாங்கூர் சிட்ஃபண்ட்ஸ் சட்டம் மூலம் இத்தகைய நிதி அமைப்பு சட்டத்தால் முறைமை படுத்தப்பட்டு வந்துள்ளது.

    சுதந்திரம் அடைந்து மாகாணங்கள் தனித்தனியாக உருப்பெற்ற உடன் 1961-ம் ஆண்டு சிட் பண்ட் சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டது. மேலும் செம்மைப்படுத்தி சீர்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு சிட்ஃபண்ட் சட்டத்தை கொண்டு வந்தனர். இது இந்தியா முழுமைக்கான சட்டமாக இருந்தது. இதை அமல்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தது. மாநில அரசின் பதிவு துறையே இதையும் கவனித்துக் கொள்கிறது, இவ்வேளையை செய்பவரை ரிஜிஸ்டார் ஆப் சீட்ஸ் என அழைக்கப்படுகிறார்.

    சிட் பண்ட் நிறுவனம் பெரும்பாலும் பிரைவேட் லிமிடெட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிட்டு நிறுவனம் புதிதாக ஒரு சீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தொகைக்கு சீட் ஆரம்பிக்க உள்ளார்களோ அந்த குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக ஆர்பிஐ வங்கியில் செலுத்தி சீட்டு நடத்த அனுமதி பெற வேண்டும் அதற்கு பின்னர் எவ்வளவு நபர்கள் அந்த சீட்டிற்கு தேவையோ அத்தனை நபர்களை சேர்த்த பின்னால் அந்த சீட்டை ஆரம்பிப்பதற்கு அனுமதி பெற்றே சீட்டை ஆரம்பிப்பார்கள். இதனால் நிறுவனங்கள் நடத்துகின்ற சீட்டுகளில் சேர்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    சீட்டு நிறுவனங்கள் சட்டப்படி வட்டிக்கு பணம் கொடுப்பதோ வைப்புத் தொகையாக பணத்தைப் பெற்றுக் கொண்டு வட்டிக் கொடுப்பதோ கூடாது என சட்டம் உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் வட்டிக்கு பணம் கொடுக்கின்ற நிறுவனங்கள் இழப்புக்கு உள்ளாகும் போது அதை சீட்டு நிறுவனங்கள் என்ற தவறான புரிதலில் இருந்து மக்கள் இப்பொழுது பெருமளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஏழை எளிய மக்கள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைவருக்கும் உதவும் வகையில் இருப்பதே இதன் சிறப்பு.

    வங்கிகள் அரசு நிதி நிறுவனத்திலிருந்து பணத்தைப் பெற்று பொதுமக்களுக்கு கடன் கொடுத்து உதவுகிறது. ஒரு வகையில் பார்த்தால் சீட்டு கம்பெனிகள் அரசு நிதி நிறுவனத்தில் இருந்து பணம் கடனாக பெறாமல் தாங்கள் வைப்பு நிதியாக அரசு நிதி நிறுவனத்திற்கு செலுத்தி விட்டு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயனடையும்படி நிதி உதவி கிடைக்க செய்வதை பாராட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு எனும் சிற்றரசு அவர்கள், மத்திய அரசு இந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சட்டங்களை மாற்றி அமைத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய நிதி ஆதார அமைப்பு பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • சேமிப்பில் செய்யும் சில தவறுகள், உங்களது சேமிப்பு கணக்கை மாற்றியமைத்துவிடும்.
    • சேமிக்க நினைத்தால், முதலில் கடன் பெறுவதை நிறுத்த வேண்டும்.

    சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நினைத்தபடி எல்லோருக்கும் சேமிப்பு அமைந்துவிடுவதில்லை. சிலர் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே சேமிக்கிறார்கள். சிலரது சேமிப்பு கரைந்தே போய்விடும். காரணம், சேமிப்பில் செய்யும் சில தவறுகள், உங்களது சேமிப்பு கணக்கை மாற்றியமைத்துவிடும். அந்த வகையில் சேமிப்பு நுணுக்கங்களை சென்னையை சேர்ந்த மேக்ஸிடோம் சுப்பிரமணி, விளக்குகிறார். அத்துடன் உங்களது சேமிப்பு எவ்வளவு வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதையும் விளக்குகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

    * எது சேமிப்பாக கருதப்படும்?

    உங்களது அன்றாட வாழ்க்கைக்கு போக மீதமிருக்கும் சிறுபணமும், பெரிய சேமிப்புதான். மாத சம்பளக்காரர்கள் என்றால், அடுத்த சம்பளம் வரும்வரை தனது குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு போக மீதமிருக்கும் பணம்தான் சேமிப்பு. ஆனால் அத்தியாவசிய தேவைகளை சுருக்கிக்கொண்டு சேமிப்பவர்களும் இருக்கிறார்கள். அதேபோல அனாவசியமாக செலவழிப்பவர்களும் இருக்கிறார்கள்.

    * எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம்?

    கடுகு டப்பாவில் பணத்தை வைப்பதுகூட சேமிப்புதான். ஆனால் நீங்கள் சேமிக்கும் பணம், சேமிக்கும் அளவை விட கூடுதலாக கிடைத்தால்தான் லாபகரமான சேமிப்பாக அமையும். அந்தவகையில் இன்சூரன்ஸ், பிக்ஸட் டெப்பாசிட், ஆர்.டி., வங்கி கணக்கு, தபால் நிலையம், தங்கம்-வெள்ளி, பங்கு சந்தை, மியூட்சுவல் பண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி சேமிக்க நிறைய வழிகள் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும், குறிப்பிட்ட வட்டி விகிதம்/முதலீட்டு காலத்தை அடிப்படையாக கொண்டு, சேமிப்பை இரட்டிப்பாக்குகிறது. இதில் உங்களுக்கு தேவையான, பழக்கமான வழிகளில் சேமிக்க பழகுங்கள்.

    * பணத்தை விரைவாக இரட்டிப்பாக்கும் சேமிப்பு தளம் எது?

    பங்கு சந்தை போன்ற ரிஸ்க் அதிகமாக இருக்கும் எல்லா சேமிப்பு தளங்களும் சேமிப்பை வெகுவிரைவாக இரட்டிப்பாக்கும். அதேசமயம் சிறுதவறு செய்தாலும் உங்களது சேமிப்பை வெகுவிரைவாகவே கரைக்கக்கூடும்.

    * சேமிக்கும் விஷயத்தில் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

    சேமிக்கும் விஷயத்தில் 'ரூல் ஆப் 72' ரொம்ப முக்கியம். 'ரூல் ஆப் 72' என்பது, நீங்கள் சேமிக்கும் தொகை, எவ்வளவு காலத்தில் இரட்டிப்பாகும் என்பதை விளக்கும் பார்முலா. உதாரணத்திற்கு, உங்கள் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் பணத்தை சேமித்திருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். வங்கி வட்டிவிகிதம் 7 சதவீதமாக இருந்தால், அது ரூ.2 லட்சமாக இரட்டிப்பாக 10 வருடம் 3 மாதங்களாகும். (72/7) 72/காலம் அல்லது வட்டிவிகிதம் என்பதுதான், இந்த பார்முலா.

    இந்த 'ரூல் ஆப் 72' பார்முலாவை பயன்படுத்திதான், எந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து எவ்வளவு காலத்தில் திரும்ப பெறலாம் என்பதை வல்லுநர்கள் தீர்மானிக்கின்றனர்.

    * சேமிப்பு பழக்கத்தில் தவிர்க்க வேண்டியவை எவை?

    சேமிக்க நினைத்தால், முதலில் கடன் பெறுவதை நிறுத்த வேண்டும். கையில் இருக்கும் கடன் சுமைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில் கடன், சேமிக்க வழிவகையே தராது. 'ரூல் ஆப் 72' படி, வங்கி கடன் அட்டை உங்களது 1 லட்சம் ரூபாய் கடனை, 2 வருடங்களிலேயே ரூ.2 லட்சமாக மாற்றிவிடுவதை விளக்குகிறது.

    * எந்தெந்த வயதினர், எந்தெந்த வழிகளில், எவ்வளவு தொகை சேமிக்கலாம்?

    புதிதாக வேலைக்கு செல்ல தொடங்கியிருக்கும் இளைஞர்கள், சின்ன தொகையை சேர்த்து வைக்க பழகலாம். குறிப்பாக பங்கு சந்தைகளில், முதலீடு செய்யலாம். அது 10 வருடங்களில் பெரிய முதலீடாக வளர்ந்திருக்கும். குடும்ப தலைவர்கள், 5 வருடங்களில் பலன் தரக்கூடிய குறுகிய கால மியூட்சுவல் பண்ட்ஸில் சேமிக்கலாம். பெண்கள் வழக்கம்போல தங்கத்தில் முதலீடு செய்வது, நகையாக அணிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பையும் கொடுக்கும். நல்ல முதலீடாகவும் அமையும்.

    * பங்குசந்தை இளைய தலைமுறையினருக்கு நன்மை பயக்குமா?

    பங்கு சந்தை பற்றி குறுகிய கால படிப்புகள் நிறைய இருக்கின்றன. அதை படிப்பதும் சிறந்த முதலீடுதான். உங்கள் வருமானத்தை பெருக்க இவை கைக் கொடுக்கும். இது உங்களது 2-வது வருமானத்தை உருவாக்கிக் கொடுக்கும்.

    மேக்ஸிடோம் சுப்பிரமணி

    • தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது.
    • அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    வல்லம் :

    தஞ்சை அருகே உள்ள மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்காண நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அங்கு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே மொன்னையம்பட்டியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு மற்றும் உடுமலைப்பேட்டை சேமிப்பு கிடங்குகளில் போதிய பராமரிப்பு இல்லா ததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் இன்றுகாலை மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லின் ஈரப்பதத்தி னையும் சோதனை செய்தனர்.

    பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல் மாதிரிகள் எடுத்து ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தோம். அதில் 14 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையவில்லை.. அதே போல் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சாக்கு, சணல் கையிருப்பு உள்ளது. விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் நெல் தேக்கம் அடையாமல் கொள்முதல் செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.3லட்சம்மெட்ரிக் டன்நெல்சேமிக்கும் வகையில் செமி குடோன் கட்டவும், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன் 13இ டங்களில் அரவை ஆலைகள் திறக்கவும் அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கட்டிய நெல் சேமிப்பு குடோனுக்கு சிமெண்ட்ரோடு, மின்சார வசதி இல்லாமல் முறையாக பராமரிப்பு செய்யாமல் எடப்பாடி பழனிசாமி எங்களை குற்றம்சாட்டு வதற்கு நாங்கள்பொருப்பல்ல என்று கூறினார்.

    அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, தஞ்சை தாசில்தார் மணிகண்டன், தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது.
    • தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள்.

    திடீரென்று வரும் பணத் தேவைகளுக்காக, வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களில் தனி நபர் கடன் வாங்கி சமாளிக்க முற்படுகிறோம். சில நேரங்களில் கடன் பெறுவதிலும், திரும்ப செலுத்துவதிலும் பலர் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதனை தவிர்க்க சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை இங்கே….

    சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்: கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது. தற்போது பல நிறுவனங்கள் விரைவாகவும், வசதிக்கேற்றவாறும் தனி நபர் கடன் வழங்குகிறார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினாலும் அவர்களின் மதிப்புரைகளையும், ஏற்கனவே அவர்களிடம் கடன் பெற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு நம்பகத்தன்மையை ஆராய்ந்த பின்னர் அணுகுங்கள்.

    தவணைகளை தவறாமல் செலுத்துங்கள்: நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் முறையை வைத்தே, உங்கள் கடன் பெறும் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. தவணைகளை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் கிரெடிட் ஸ்கோர், சிபில் ஸ்கோர் போன்றவை சரியான அளவில் பராமரிக்கப்படும். குறைந்த ஸ்கோர் இருக்கும் பட்சத்தில், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம், நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க முடியும்.

    கடன் தொகையை தீர்மானியுங்கள்: நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.

    ஆவணங்களை சரிபாருங்கள்: சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உங்களால் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும். அடையாள சான்று, முகவரி ஆதாரம், வருமான ஆதாரம் போன்றவை அடிப்படை ஆவணங்கள். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் கடன் அளிக்கும் நிறுவனங்கள் உங்களிடம் தெரிவிப்பார்கள். அந்த ஆவணங்களையும் ஒப்படைத்த பின்னரே கடன் பெற முடியும்.

    வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்: பல்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம், சிறந்த வட்டி விகிதங்களை கண்டறிய முடியும். இது குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவதற்கு உதவும்.

    கட்டணங்களை மதிப்பிடுங்கள்: தனி நபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்னரே, அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களையும் கவனியுங்கள். செயலாக்க கட்டணம், தாமதமாக செலுத்தும் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் போன்ற உங்கள் செலவுகளை மதிப்பீடு செய்யுங்கள்.

    திரும்ப செலுத்தும் திட்டத்தை கவனியுங்கள்: தனி நபர் கடனுக்காக அணுகுவதற்கு முன்னர், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் அனைத்து நிதி சார்ந்த கடமைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். வருமானத்திற்கு அதிகமாக கடன் பெறுதல், உங்களால் திரும்ப செலுத்த முடியாத சூழலை உருவாக்கி விடும். தெளிவான திருப்பி செலுத்தும் திட்டத்தை வைத்திருப்பதன் மூலம் உங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

    • தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது.
    • தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம். நமது நாட்டில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிகரித்து தான் வருகிறது. திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை.

    இதனால் தான் என்னவோ... தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. முதலீடு செய்ய வேண்டும் நிலத்தில் காசை போடவேண்டும் அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது.

    இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது. தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது. இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

    • சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள்.
    • செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள். உங்களின் செல்ல மகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்கி சிறந்த பரிசினை இன்றே அளியுங்கள்‌. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் வருகிற ஆகஸ்ட் 15.8.2022- க்குள் நீங்கள் துவங்கும் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கின் விவரங்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நாமக்கல் கோட்டம் நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    குழந்தையின் பெயர், செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும் . மேலும் 6385377754 என்ற செல்போண் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும்.
    • மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள்.

    பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியுடன் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான நடைமுறை கல்வியும் பல பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. சேமிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் நேரடி வங்கி அனுபவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது, கர்நாடகாவில் இயங்கும் ஒரு அரசு பள்ளி. மாணவர்களே நடத்தும் அந்த வங்கியில் பணம் சேமித்தல், முதலீடு செய்தல், டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

    பெங்களூரு அடுத்த முள்ளூரில் இயங்கும் அரசு பள்ளியில் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 39 வயதாகும் பள்ளி ஆசிரியர் சி.எஸ். சதீஷ் இந்த வங்கியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த பள்ளியில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சதீஷ், வங்கியல் பணி பற்றிய அத்தியாவசிய நடைமுறைகளையும், பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்பினார். அதனை மாணவர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு வங்கியை நிர்வகிப்பதுதான் சரியான நடைமுறை என்று முடிவு செய்தவர் பள்ளியிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.

    ஸ்கூல் பேங்க் ஆப் முள்ளூர் (எஸ்.பி.எம்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வங்கியில் மாணவர்கள் சேமித்தல், காசோலை நிரப்புதல், பணத்தை வரவு வைத்தல், பணத்தை திரும்பப் பெறுதல், வட்டி பெறுதல் போன்ற செயல்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 37 மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.''

    குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே வேளையில் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்பிப்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த வங்கிப்பணிகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பணத்தை சிறந்த முறையில் கையாளுவார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்கிறார், ஆசிரியர் சதீஷ்.

    மாணவர்கள் தாங்கள் எவ்வளவு பணம் சேமிக்கிறோம், தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பணத்தை திரும்ப எடுத்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பாஸ்புத்தகமும் வழங்கப்படுகிறது. பணம் எடுக்க விரும்பினால் வங்கியில் நடைமுறையில் இருப்பதுபோல் செல்லானை நிரப்பி கொடுத்து பணத்தை எடுக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் இந்த வங்கிக்கு, வங்கிகளில் இருப்பது போலவே மேலாளர், கணக்காளர், காசாளர் போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் லாக்கர் வசதியும் உள்ளது.

    "பள்ளிக்கூடம் வந்ததும் அனைத்து மாணவர்களும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய பாஸ் புத்தகத்துடன் வருகிறார்கள். நாங்கள் ஒரு சீட்டை நிரப்ப கொடுப்போம். அதில் பணத்தை நிரப்பி கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் கொடுக்கும் பணம் காசாளர் வித்யாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதை டெபாசிட் செய்வார்"என்கிறார், பள்ளி வங்கியின் மேலாளராக இருக்கும் தன்வி.

    மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் 100 ரூபாய் சேமித்தால் அவருக்கு பென்சில் பரிசாக வழங்கப்படும். 200 ரூபாய் சேமித்திருந்தால், போனஸாக பேனா கிடைக்கும். 300 ரூபாய் சேமித்தால் ஒரு நோட்புக்கை பெறுவார்கள். 500 ரூபாய் சேமித்ததும் 5 சதவீத வட்டி வழங்கப்படும். அவர்களின் சேமிப்பு தொகை ஆயிரம் ரூபாயை கடந்தால் அவர்களின் உண்மையான வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

    ''இதுநாள் வரை பெற்றோர் கொடுத்தனுப்பிய பணத்தை நொறுக்குத் தீனிகளுக்கு செலவிட்டார்கள். இப்போது வங்கி அனுபவத்தை வழங்குவதோடு, சேமிப்பு மனப்பான்மையையும் எங்கள் பள்ளி வங்கி ஊக்குவித்து வருகிறது" என்கிறார் சதீஷ். மாணவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை சுற்றுலா, பள்ளி ஆண்டு விழா, எழுது பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவிடுகிறார்கள்.

    மாணவி ஸ்ரீஷ்மா கூறுகையில், ''நான் 45 ரூபாயைச் சேமித்துள்ளேன். இன்னும் கூடுதலாக சேமித்து பள்ளியின் வருடாந்திர சுற்றுலா பயணத்திற்கு அந்த பணத்தை பயன்படுத்தப் போகிறேன்'' என்கிறார். தன்வியின் தாயார் குலாபி கூறுகையில், ''குழந்தைகள்இடையே பெரிய வித்தியாசத்தை பார்க்கிறேன். வீட்டில் கொடுத்தனுப்பிய பணத்தை முன்பு சாக்லேட்கள், குளிர்பானங்கள் மற்றும் பிற நொறுக்கு தீனிகளுக்கு செல வழித்தனர். இப்போது வங்கியில் டெபாசிட் செய்ய பணம் கேட்கிறார்கள். பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். பள்ளி சுற்றுலா பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான செலவுகளுக்கு இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்.

    • தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
    • பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா்.

    உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந்தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து 3 வயது வரை அந்த குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்கின்றனா்.

    அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைளகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஓய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.

    இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

    இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

    தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறார்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமையை செய்ய வேண்டாமா?

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவார்கள்.

    பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறார்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்...

    மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
    கை மீறும் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறைதான் ‘30 நாள் விதி’. இந்த விதியை செயல்படுத்துவது எளிதானது. இதைத் தொடர்ந்து பின்பற்றும்போது, சேமிப்பை எளிதாக உயர்த்த முடியும்.

    பெரும்பாலானவர்கள் ஆன்-லைன் விற்பனை மையங்கள் வழங்கும் சலுகைகளால் ஈர்க்கப்பட்டு பொருட்கள் வாங்குவார்கள். இந்த செயல்பாடே சேமிப்பைத் தொலைப்பதற்கான முக்கிய காரணம். இவ்வாறு எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் திட்டம்’ ஏற்றதாக இருக்கும். இதைப் பின்பற்றும்போது, பணத்தை எதற்காக செலவிடுகிறோம்? என்பதில் தெளிவு ஏற்படும்.

    30 நாள் விதியை எப்படிப் பின்பற்றுவது?

    ‘தேவை’ என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை அத்தியாவசியத் தேவை, நிதானத் தேவை என இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். மாதந்தோறும் குடும்பத்துக்காக மேற்கொள்ளும் செலவுகள் அத்தியாவசியத் தேவையில் சேரும். இதிலும், அந்த மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    இதற்கு அடுத்தபடியாக, நிதானமானத் தேவை. இதில் நாம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும், தற்சமயம் நமக்கு அவசரமாகவும், அத்தியாவசியமாகவும் தேவைப்படாத, பொருட்கள் அடங்கும். அந்தப் பொருளை வாங்குவதற்கு முன்னும், பின்னும் அதற்கான பணமதிப்பைக் கூர்ந்து கவனியுங்கள். இதுதான் ‘30 நாள் விதி’யின் அடிப்படை.

    பின்பு, நீங்கள் வாங்குவதற்கு நினைக்கும் பொருளை முதலில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கும் முன், அந்தப் பொருளின் தன்மை, தயாரிப்பு நிறுவனம், விலை மற்றும் வாங்குவதில் கிடைக்கும் சலுகைகள் என அனைத்து விவரங்களையும் சேகரியுங்கள். அடுத்து அந்தப் பொருளை வாங்கும் எண்ணத்தை 30 நாட்கள் தள்ளி வையுங்கள். பொருட்களை வாங்க வேண்டும் என தீர்மானித்து முடிவு எடுத்த பின்பு அதைத் தள்ளி வைப்பதால் என்ன பயன் ஏற்படும்? இந்தக் கால இடைவெளியில், அந்தப் பொருள் மீதான ஈர்ப்பு குறைந்திருப்பதை உணர முடியும்.

    30 நாட்களில், குறிப்பிட்ட பொருளின் விற்பனை, விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், அந்த நேரத்தில், அது அவசியமானதா? என்பதை யோசிக்கும்போது, சரியான தீர்வை எளிதில் காண முடியும். இதை அனைத்து தேவைகளிலும் செயல்படுத்தினால், செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முடியும். 30-நாள் விதியின்படி, வாழ்க்கை முறையை மாற்றினால் அது சேமிப்பிற்கான சரியான பாதையில் செல்வதற்கு உதவும்.
    சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த தனது உண்டியல் பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காக வழங்கிய விழுப்புரம் சிறுமிக்கு, ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு சைக்கிள் கொடுப்போம் என ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFlood #HeroCycles

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற ஒன்பது வயது சிறுமி, சைக்கிள் வாங்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளாக உண்டியல் பணம் சேமித்து வந்துள்ளார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பை டிவியில் பார்த்ததும், தனது 9 ஆயிரம் ரூபாய் சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கினார் அனுப்பிரியா.

    இந்த செய்தி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறுமியின் இச்செயலைக் கேள்விப்பட்ட முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், அனுப்ரியாவுக்குப் புத்தம் புதிய சைக்கிளை வழங்கத் தயார் என்று ட்விட்டரில் அறிவித்தது.

    ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுப்ரியா! உன்னை வணங்குகிறேன், நீ ஒரு நல்ல உள்ளம் படைத்தவள். மேலும் நன்மையைப் பரப்புவாயாக. உனக்கு உன் வாழ்வின் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் வழங்குவதில் ஹீரோ மகிழ்ச்சியடைகிறது. முகவரியை எம்மோடு பகிர்ந்துகொள்க. உனக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கேரளாவுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். 



    மேலும், “தனது சேமிப்பு மொத்தத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கிய ஒன்பது வயது சிறுமிக்கு சைக்கிளை அளித்த ஹீரோ நிறுவனத்துக்கு நன்றி” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
    ×