என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95580"
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் என சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளை பதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால் சக பேட்மின்டன் வீரரான காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.
சாய்னா-காஷ்யப் திருமணத்துக்கு 100 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படும்.
திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 21-ந்தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. சாய்னா திருமணம் செய்ய இருக்கும் காஷ்யப்பும் முன்னணி பேட்மின்டன் வீரர் ஆவார். 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றவர்.
தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிகல், இஷாந்த்சர்மா- பிரதீமா சிங், கீதா போகட்- பவன் குமார், ஷாக்சி மாலிக்- சத்யவர்த் காடியன் ஆகியோர் வரிசையில் சாய்னா நேவால்- காஷ்யப் இணைகிறார்கள். #SainaNehwal #ParupalliKashyap #Badminton
இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். எனவே இவர்கள் இவ்வாறு திருமணம் செய்தனர்.
எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற மொடல் அணிந்திருந்தார். மணமகனோ ‘போ’ என்றழைக்கப்படும் டையை மட்டும் அணிந்திருந்தார். இந்த ஜோடியின் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நெல்லை:
பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.
இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென விஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25)க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை மணிமேகலை வற்புறுத்தினார். அதற்கு மணிகண்டன் மறுத்தார். இதையடுத்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சென்னிமலை அருகே முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 26). ஐ.டி.ஐ. படிப்பு முடித்து விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.
ஈங்கூர் அருகே புலவனூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் பவித்ரா (23). ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார்.
பவித்ராவும், விஸ்வநாதனும் தூரத்து உறவினர்கள் ஆவர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ராவின் பெற்றோரை சந்தித்து விஸ்வநாதன் பெண் கேட்டார்.
அப்போது அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுப்பேன் என கூறி பவித்ராவின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை விஸ்வநாதனும், பவித்ராவும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிறகு பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்களை விஸ்வநாதனின் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். #tamilnews
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அருகே உள்ள இருளாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரிக்கொழுந்து (வயது 27).சென்னையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.
ஏலகிரியை சேர்ந்தவர் விஜய் ஏ.சி, மெக்கானிக் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிரிப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று கல்லூரி மாணவி ஒருவரும், வாலிபரும் அங்கு வந்தனர். அவர்கள் விநாயகரை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் கொண்டு வந்த தாலி கயிற்றை மாணவி கழுத்தில் கட்டினார்.
இதனால் பரபரப்பு உருவானது. பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கல்லூரி மாணவி மற்றும் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெற்றோரும் அழைத்து வரப்பட்டனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ராஜூ (24) மாணவி பெயர் ஜோதி (18) என்பதும் தெரிவந்தது. ஜோதி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர் ஏற்காததால் விநாயகர் சிலை முன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்