search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருந்திரக்கோட்டையை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கு ஊட்டி குன்னூரை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கங்காதரன் உயிரிழந்து விட்டார். இதனால் ஜோதிலட்சுமி குழந்தைகளுடன் குருந்திரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அவரின் 15 வயது மகள் ராஜேந்திரபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, தனது சைக்கிளில் சென்றுள்ளார். மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களும் வீடு திரும்பிய நிலையில் ஜோதிலட்சுமியின் மகள் வீடு திரும்பவில்லை. இதனால் உடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரித்தபோது மகள் குறித்தஎந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே ஊட்டி குன்னூரில் உள்ள உறவினர்கள் வீட்டில் மாணவி இருப்பதாக ஜோதிலட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் உறவினரான ரமணிதரன் (39) என்பவர் மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-

    ஊட்டி குன்னூரை சேர்ந்த ரமணிதரன், ஜோதிலட்சுமியின் கணவரான கங்காதரனின் தம்பி என்பதும், தனது அண்ணனின் மகள் தனக்கும் மகள் என்ற உறவு பாராமல் ரமணிதரன் 15 வயதான பள்ளி மாணவி மீது காதல் வயப்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை எப்படி யாவது அடைந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளார். அவரை கடத்தி கட்டாய திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 3-ந் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து நலம் விசாரித்துள்ளார். மாணவியும் தனது சித்தப்பா என்பதால் சூழ்ச்சியை உணராமல் சாதாரணமாக பேசியுள்ளார். பின்னர் தன்னுடன் ஊட்டிக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து தான் தாயுடன் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவரை மிரட்டி குன்னூருக்கு கடத்தி சென்றார்.

    பின்னர் தனது பேச்சுக்கு உடன்படவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் மாணவியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, குன்னூரில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்ட போலீசார், ரமணிதரன் மீது ஆள்கடத்தல், சிறுமியை மிரட்டி திருமணம் செய்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    பாலக்கோடு அருகே பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
    காரிமங்கலம்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காவப்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவன் என்பவரது மகன் வாசுதேவன் (வயது24). லாரி டிரைவர்.

    அதே பகுதியை சேர்ந்த மகாதேவன் மகள் ஜெயப்பிரியா (வயது21) பட்டதாரி. இருவரும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த 21-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தருமபுரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் மனு அளித்தனர்.

    அவருடைய உத்தரவின் பேரில், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் இரண்டு பேரின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். இருவரின் பெற்றோர்களும் ஒப்புக் கொண்ட நிலையில் வாசுதேவனுடன் ஜெயப்பிரியாவை அனுப்பி வைத்தனர்.
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள காரணி பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 20). இவர் தனது காதல் கணவருடன் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இன்று மதியம் மனு கொடுக்க வந்தார்.

    போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்க வைத்திருந்த  மனுவில் ரம்யா கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்தேன். அதே கம்பெனியில் கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் (21) என்பவரும் வேலைபார்த்து வந்தார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். 

    இதைத்தொடர்ந்து நானும் எனது காதலர் ராமச்சந்திரனும் பரங்கிப்பேட்டையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    10 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய்னா நேவால் தற்போது 32 வயதான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் டிசம்பர் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. #SainaNehwal #ParupalliKashyap #Badminton
    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் என சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளை பதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால் சக பேட்மின்டன் வீரரான காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

    10 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய்னா நேவால் தற்போது 32 வயதான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் டிசம்பர் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்து இதை அறிவித்து உள்ளனர்.



    சாய்னா-காஷ்யப் திருமணத்துக்கு 100 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படும்.

    திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 21-ந்தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. சாய்னா திருமணம் செய்ய இருக்கும் காஷ்யப்பும் முன்னணி பேட்மின்டன் வீரர் ஆவார். 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றவர்.

    தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிகல், இஷாந்த்சர்மா- பிரதீமா சிங், கீதா போகட்- பவன் குமார், ஷாக்சி மாலிக்- சத்யவர்த் காடியன் ஆகியோர் வரிசையில் சாய்னா நேவால்- காஷ்யப் இணைகிறார்கள். #SainaNehwal #ParupalliKashyap #Badminton
    இத்தாலியை சேர்ந்த காதல் இளம்ஜோடி இயற்கையை விரும்புவதால் தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
    ரோம்:

    இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

    அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். எனவே இவர்கள் இவ்வாறு திருமணம் செய்தனர்.

    தங்கள் திருமணத்துக்கு 2 பேரை மட்டுமே அழைத்து இருந்தனர். அவர்களும் நிர்வாணமாகவே கலந்து கொண்டனர். அது குறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறியதாவது:-


    எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.

    இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.

    இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற மொடல் அணிந்திருந்தார். மணமகனோ ‘போ’ என்றழைக்கப்படும் டையை மட்டும் அணிந்திருந்தார். இந்த ஜோடியின் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

    சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தது குறித்து மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25)க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை மணிமேகலை வற்புறுத்தினார். அதற்கு மணிகண்டன் மறுத்தார். இதையடுத்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்குதான் பெண் கொடுப்பாதாக காதலியின் பெற்றோர் கூறியதால் கோவிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி போலீசில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 26). ஐ.டி.ஐ. படிப்பு முடித்து விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.

    ஈங்கூர் அருகே புலவனூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் பவித்ரா (23). ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார்.

    பவித்ராவும், விஸ்வநாதனும் தூரத்து உறவினர்கள் ஆவர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ராவின் பெற்றோரை சந்தித்து விஸ்வநாதன் பெண் கேட்டார்.

    அப்போது அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுப்பேன் என கூறி பவித்ராவின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை விஸ்வநாதனும், பவித்ராவும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிறகு பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்களை விஸ்வநாதனின் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். #tamilnews
    கரூரில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை காதலனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் அருகே வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கிடந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வாய்க்காலில் வீசியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கொலை செய்தது யார்? அவரது பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் சங்கரன்பாளையம் மீனாம் பள்ளி பகுதியை சேர்ந்த பிரேமானந்தம் மகள் பேபி (வயது 21) என்பதும், அவரை கொலை செய்தது அவரது காதலன் நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அன்பரசு (22) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அன்பரசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேபியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.

    பேபி நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் அன்பரசுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். 

    சம்பவத்தன்று இருவரும் கரூர் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பகுதிக்கு வந்து அங்கு கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது பேபி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்பரசுவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு , பேபியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். 

    இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அன்பரசு, பேபியின் கழுத்தை சேலையில் இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை வாய்க்காலில் தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் போலீசார் விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார். 

    கைதான அன்பரசுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் தனது காதலியை நேற்று திருமணம் செய்துள்ளார். #SteveSmith #DaniWillis
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார். தடைக்காலம் முடிந்து மீண்டும் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும்.

    இந்நிலையில் 29 வயதான ஸ்டீவ் ஸ்மித், தனது நீண்ட கால காதலி டேனி வில்லிசை நேற்று திருமணம் செய்தார்.

    சட்டப் படிப்பு படித்துள்ள டேனி வில்லிசை 2011-ம் ஆண்டு சிட்னியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் முதல்முறையாக சந்தித்தார் சுமித். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. அந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது.

    இதுதொடர்பாக, ஸ்டீவ் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், எனது சிறந்த தோழியை திருமணம் செய்துள்ளேன். இது எனக்கு நம்ப முடியாத, மறக்க முடியாத நாள் என பதிவிட்டுள்ளார்.

    ஸ்டீவ் ஸ்மித்தின் திருமணத்துக்கு நேரில் சென்ற ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். #SteveSmith #DaniWillis
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள இருளாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரிக்கொழுந்து (வயது 27).சென்னையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.

    ஏலகிரியை சேர்ந்தவர் விஜய் ஏ.சி, மெக்கானிக் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிரிப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    விநாயகர் சிலை முன் கல்லூரி மாணவிக்கு காதலன் தாலி கட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று கல்லூரி மாணவி ஒருவரும், வாலிபரும் அங்கு வந்தனர். அவர்கள் விநாயகரை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் கொண்டு வந்த தாலி கயிற்றை மாணவி கழுத்தில் கட்டினார்.

    இதனால் பரபரப்பு உருவானது. பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கல்லூரி மாணவி மற்றும் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெற்றோரும் அழைத்து வரப்பட்டனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ராஜூ (24) மாணவி பெயர் ஜோதி (18) என்பதும் தெரிவந்தது. ஜோதி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர் ஏற்காததால் விநாயகர் சிலை முன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். #tamilnews
    ×