என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95580"
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஜீவாவுக்கும் கடந்த 13-ந் தேதி வரகூரில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண் திருவண்ணர்மலையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்துக்கு தனக்கு மேக்கப் போடுவதற்காக சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் இல்லை.
இது குறித்து, பெண்ணின் தந்தை வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை மாயமான பெண் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டிற்கு சென்றேன். எனது பெற்றோர் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்து, நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வாகைகொம்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). இவர் ஆனைமலை போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது
எனது 17 வயது மகள் திவான்ஷா புதூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள். சம்பவத்தன்று அவள் எங்களிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாள்.
ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவள் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தினரிம் விசாரித்த போது எனது மகளை சேலம் மாவட்டம் சேர்ந்த மணி என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. எனவே மைனர் பெண்ணான எனது மகளை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற மணியை தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம், செவ்வாய்ப்பேட்டை, தொழுவர் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தனது வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கால் கொழுசு செய்து, ஆர்டரின் பேரில் மொத்தமாக நகைக்கடைகளுக்கு அனுப்பி வைத்தும் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த வெள்ளிப்பட்டறையில் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சரவணன் தனது வலையில் வீழ்த்தினார்.
மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் சரவணன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கதறி அழுதார்.
இதனை தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் சரவணன் அந்த பெண்ணை அழைத்துச் சென்று நேற்று பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து தாலி கட்டினார்.
இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஏமாற்றிய வெள்ளிப்பட்டறை உரிமையாளர் சரவணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா தேவி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சரவணனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-
சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மனைவி தற்போது 3-வது முறையாக கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் தான், சரவணன் தனது வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இப்பெண் 9-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். மேற்கொண்டு கல்வி பயில வசதி இல்லாததால் குடும்ப சூழ்நிலை கருதி, வெள்ளிப்பட்றையில் வேலைக்கு சேர்ந்தார்.
இதை பயன்படுத்தி அந்த அப்பாவி பெண்ணை சரவணன் தனது காம வலையில் வீழ்த்தி இருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை சரவணன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாகவும், இந்த வீடியோவை சரவணன் காட்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி மிரட்டி பல முறை உல்லாசமாக இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் நடந்தது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது. மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன.
இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு ரூ.3 லட்சம் என்றும், ரூ.722 கோடிக்கும் மேல் திருமண செலவு என்றும் கூறப்பட்ட நிலையில் வெகு ஆடம்பரத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஐஸ்வர்யாராய், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பிரபலங்களின் அணிவகுப்பால் மும்பையே பரபரப்பாக காணப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடந்த திருமண சடங்குகளில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் திரண்டது குறிப்பிடத்தக்கது. #IshaAmbani #AnandPiramal #Wedding #MukeshAmbani
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் செய்ய கூடாது.
இதுபற்றி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 27), எலக்ட்ரீசியன். இவருக்கும் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயம் செய்திருந்தனர். அதன்படி சிலம்பரசனின் திருமணம் இன்று சேத்துப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.
இதற்காக இருவீட்டாரின் உறவினர்களும் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். பெண் அழைப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மணமகளுக்கு 18 வயது ஆகவில்லை என்று சைல்டு லைனுக்கு, வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊர்நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் திருமணம் நடக்க இருந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாகவும், சான்றிதழ் இல்லையென்றும் கூறினர்.
ஆனால் 18 வயது ஆகவில்லை என்பது உறுதியாக தெரிந்ததால் மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கி அனுப்பினர்.
இதனால் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல சாவல்பூண்டியில் 17 வயதான 12-ம் வகுப்பு மாணவிக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இது பற்றி தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினாடார்த்தி சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது மாணவிக்கு பூப்புனித நன்னிராட்டு நடத்துகிறோம் என்றனர்.
சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு நடந்தது தெரியவந்தது. திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என மாணவியின் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது மாவட்ட நீதிபதி மகிழேந்தி அங்கு வந்தார். அவர் மாணவியை காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் ஆதரவற்ற இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
செய்யாறு அருகே மாணவி ஒருவருக்கு நேற்று திருமண ஏற்பாடு செய்தனர். இதுபற்றி தகவலறிந்த செய்யாறு தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியில் குருபானிகுண்டா பகுதியை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவருக்கும் திருணம் நிச்சயம் செய்யபட்டது.
அதன்படி ஆனந்தனுக்கு இன்று நாட்டறம்பள்ளி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நடக்க இருந்தது. இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்று நட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து குமார் மற்றும் அதிகாரிகள் திருமண மண்படத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார். #Archer #DeepikaKumari #AtanuDas
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 42). இவர் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.அத்திக்கோம்பையைச் சேர்ந்த அன்னாள் ஞானசுந்தரி என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ஞானசுந்தரியை காதலிப்பதாக முத்துராஜா கூறினார். மேலும் அவரை பல இடங்களுக்கு தனியாக அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இது மட்டுமின்றி ஞானசுந்தரியிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கி முத்துராஜா தனது கடனை அடைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஞானசுந்தரி கேட்கவே தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக அவர் கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஞானசுந்தரி தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஞானசுந்தரி புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் முத்துராஜா, அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி, டிச.6-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்காக காத்திருந்தார்.
இந்தநிலையில் பார்த் தீபனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிர மாக காதலித்து வந்தனர்.
இந்தவிவரம் மாணவியின் பெற் றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாணவிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விவரம் பார்த் தீபனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு அவர் திடீரென்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பார்த்தீபன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுப் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * பார்த்தீபன்
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். செங்கல் சூளை அதிபர். இவரது மகன் ரியாத் அகமது (வயது 20).
இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரியாத் அகமது விஷம் குடித்த நிலையில் காரை ஓட்டிக் கொண்டு வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி பிரிவுக்குச் சென்றார். அங்கு 4 வழிச்சாலையில் காரை நிறுத்திய அவர் திடீரென வாந்தி எடுத்தார்.
இதனை கண்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது தான் ரியாத் அகமது விஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நேற்று இரவு ரியாத் அகமது பரிதாபமாக இறந்தார்.
திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அவர் தற்கொலை செய்திருப்பது போலீசார் தெரியவந்தது.
வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்