search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய ஐ.டி. நிறுவன அதிகாரி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் பிரபு ராமமூர்த்தி (வயது 35). இந்தியர். இவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், தனது மனைவியுடன் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் பயணம் செய்தார்.

    3 பேர் அமரக்கூடிய இருக்கையில் நடுவில் பிரபு ராமமூர்த்தியும், அவரது இடதுபுறம் மனைவியும், வலதுபுறம் ஜன்னலோரம் 22 வயதான மற்றொரு பெண்ணும் அமர்ந்து இருந்தனர். அந்தப் பெண் ஆழ்ந்து தூங்கிய நேரத்தில், பிரபு ராமமூர்த்தி பாலியல் ரீதியில் தொல்லைகள் செய்தார். ஒரு கட்டத்தில் அவரது கைகள் தன் உடல் மீது படர்வதை உணர்ந்து, அந்தப் பெண் விழித்து விட்டார். அவர் தனது உடைகள் கலைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் பிரபு ராமமூர்த்தி மீது டெர்ரன்ஸ் பெர்க் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் டிசம்பர் மாதம் 12-ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் மீண்டும் ஒரு சீக்கியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடப்பது கவலையளிக்கிறது. #USSikhStabbed
    வாஷிங்டன்:

    அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர் டெரியோக் சிங். இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். 

    இந்நிலையில், நேற்று டெரியோக் சிங் தனது கடையில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.

    தகவலறிந்த எசக்ஸ் கவுண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. 

    கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவரான சீக்கியர்களை குறிவைத்து தாக்கப்படும் மூன்றாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு அங்குள்ள பல்வேறு இந்திய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #USSikhStabbed
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee
    இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.
    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, 



    வாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, நானும், அமெரிக்க மக்களும் உறுதுணையாக இருப்போம் என்றும், அவரது மறைவு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவில் வாடும் இந்தியாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவரது ஆட்சிகாலம் முதல் தற்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது நோக்கமே, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது. 

    இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்கு, அவரது ஜனநாயக பங்குகள் மூலம் அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பாதுகாப்பே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. #USWarn #China #Russia
    வாஷிங்டன்:

    வடகொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைக்கு மாறாகவும் அணுக்குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வந்தது.

    இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஷிய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டு இருந்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து ரஷியாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இதேபோன்று சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்கல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனம் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

    சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர சம்மதித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வடகொரியா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது.

    இந்த நிலையில் இப்போது வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த ரஷிய, சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து இருப்பது, அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதையே காட்டுகிறது.  #USWarn #China #Russia  #Tamilnews 
    அமெரிக்காவில் குறிப்பிட்ட வழக்கில் 5 பேருக்கு சர்ச்சைக்குரிய வகையில் ஜாமீன் வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WomenJudge #Threats #Bail
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நியூமிக்சிகோ மாகாணத்தில் டாவோஸ் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்துக்கொண்டு, பட்டினி போடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 11 குழந்தைகள் இப்படி பட்டினி போடப்பட்டிருந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பின்னர் அங்கு ஒரு குழந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 5 பேர் மீது சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பயிற்சி அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள், 3 பெண்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் சர்ச்சைக்கு உரிய அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கேட்டு டாவோஸ் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் சிறுவர்களை தவறாக பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரத்தை போலீசார் தாக்கல் செய்வதற்கு தவறி விட்டதாக கருதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சாரா பாக்கஸ் என்ற பெண் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

    இதையடுத்து அந்த பெண் நீதிபதியை ஒருவர் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து, “உங்களை கழுத்தை அறுத்து கொலை செய்வோம்” என மிரட்டல் விடுத்து உள்ளார். இன்னொருவர், “ உங்கள் தலையை நசுக்கி விடுவோம்” என மிரட்டி இருக்கிறார். அவருக்கு இப்படி எண்ணற்ற மிரட்டல்கள் தொலைபேசி, இ மெயில் வழியாக வந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கோர்ட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   #WomenJudge #Threats #Bail 
    அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், மதுபானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #Turkey #Import
    அங்காரா:

    துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில் அடைத்து உள்ளது.

    அவரை நாடு கடத்துமாறு அமெரிக்கா விடுத்து உள்ள கோரிக்கையை துருக்கி நிராகரித்து விட்டது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதன்காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியம் மீது 2 மடங்கு வரி விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

    துருக்கி பொருளாதாரத்தின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் புவாட் ஒக்டாய் கூறினார்.

    அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின்மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்து உத்தரவு போட்டு உள்ளது. 
    அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு தளர்த்தப்பட்ட நிலையில், வெர்மோண்ட் மாகாண கவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறான்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் எதான் சோனே பார்ன். இவன் பள்ளியில் படித்து வருகிறான். கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவன்.

    வெர்மோண்ட் மாகாண கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறான். கவர்னர் தேர்தலில் சிறுவன் போட்டியிடுவது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கலாம்.

    ஆனால் வெர்மோண்ட் மாகாண மக்கள் இதை சகஜமாக எடுத்துக் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டன. அதன்படி இங்கு போட்டியிட வயது வரம்பு தேவையில்லை. வெர்மோண்ட் மாகாணத்தில் 4 ஆண்டுகள் குடியிருந்தால் மட்டும் போதும்.

    தேர்தலில் போட்டியிடும் எதான் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இணையதளம் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறான்.

    சுகாதார மேம்பாட்டு சீரமைப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்து இருக்கிறான்.

    இவனை எதிர்த்து கிறிஸ்டினே ஹாஸ்குவஸ் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். மூத்த கடற்படை வீரர் ஜேம்ஸ் ஹெலர்ஸ் மற்றும் பிரன்டா சீகல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    அமெரிக்காவில் விமான ஊழியர் ஒருவர் பயணிகள் விமானத்தை திருடி ஓட்டிச் சென்று, விபத்தில் சிக்கி பலி ஆனார். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Stolenplanecrashes #SeattleAirport
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் நகர சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பங்குதாரராக உள்ள ஹாரிஸன் பயணிகள் விமானம் (ஹாரிஸன் ஏர் கியூ-400) நின்று கொண்டு இருந்தது.

    அந்த விமானத்தின் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.

    ஆனால் திடீரென அந்த விமானத்தை அவர் திருடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓட்டிச் சென்றார். ஊழியர், விமானத்தை ஓட்டிச் சென்றது அந்த விமான நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை இரண்டு ‘எப்-15’ போர் விமானங்கள் பின்னாலே துரத்திச் சென்றன. ஆனால் அந்த விமானம், கெட்ரான் தீவில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ஊழியர் பலி ஆனார்.

    அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து சியாட்டில் விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த விமான நிலையம் வழக்கம் போல இயங்க தொடங்கி விட்டது.


    திருடிய விமானத்தை ஊழியர் வானில் ஓட்டிச் சென்றதையும், விமான நிலையத்தை மூடியதால் பயணிகள் முனைய ஓய்வறையில் காத்திருந்ததையும் படத்தில் காணலாம்


    இதுபற்றி விமான நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஒரு ஊழியர், பயணிகள் யாரும் இல்லாத விமானத்தை உரிய அங்கீகாரம் இன்றி எடுத்துச் சென்று விட்டார். அந்த விமானம், விபத்துக்கு உள்ளாகி விட்டது. தற்போது சியாட்டில் விமான நிலையத்தில் விமான சேவைகள் வழக்கம் போல நடைபெறுகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் பற்றி பியர்ஸ் கவுண்டி ஷெரீப் பால் பாஸ்டர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் பயங்கரவாத சம்பவம் அல்ல. விமானத்தை ஓட்டிச் சென்றவர் 29 வயதான உள்ளூர் நபர் ஆவார். அவர் முட்டாள்தனமாக அந்த விமானத்தை ஓட்டிச்சென்று பயங்கரமான முடிவை சந்தித்து உள்ளார். அந்த விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் முயற்சி எடுத்தனர்” என கூறினார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை அந்த நபர் ஓட்டிச் சென்றதையும், அதை போர் விமானங்கள் துரத்திச் சென்றதையும் பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அது வைரலானது.

    இந்த சம்பவம் நடந்ததின் பின்னணி என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற நபர், “என்னை கவனித்து பார்த்துக் கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் செய்த இந்த காரியம், அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்” என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விமானத்தை ஓட்டிச் சென்ற நபர் விமான ஊழியர் என்றும், விமானி என்றும் மெக்கானிக் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Stolenplanecrashes #SeattleAirport 
    கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்க குடிமக்கள் தங்கள் பயணங்களை தள்ளிவைக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. #KeralaFloods #KeralaRain
    ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Russia #USA #EconomicSanctions
    மாஸ்கோ:

    ரஷிய உளவுப்படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் என்பவரும் அவரது மகள் யூலியா ஆகியோர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். ரஷிய உளவுப்படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த மார்ச் மாதம் செர்கே மற்றும் அவரது மகள் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முழுக்க முழுக்க ரஷியா தான் காரணம் என இங்கிலாந்து குற்றம்சாட்டியது. இங்கிலாந்தின் குற்றசாட்டை ஏற்ற அமெரிக்கா ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

    ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வரும் நிலையில் இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தி அதில் தாக்குதல் நடத்தியது ரஷ்யாதான் என உறுதி செய்தது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்திருந்தது.

    இந்நிலையில், அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகுறித்து ரஷியாவின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘இந்த பொருளாதார தடையை நிச்சயம் ஏற்க முடியாது' என உறுதிபட தெரிவித்துள்ளது. #Russia #USA #EconomicSanctions
    ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது. #Russia #USA #sanctions
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கே ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினார்கள்.

    இதில், செர்கே ஸ்கிரிபால் ரஷிய உளவு படையை சேர்ந்தவர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில்தான் தாக்குதல் நடந்தது. இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். அவர்கள் மீது ரஷியாதான் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், ரஷியா நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியது.

    இது சம்பந்தமாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், ரஷியாதான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறி இருக்கிறது.

    இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.

    இது சம்பந்தமாக அமெரிக்க அரசு செய்தி தொடர்பாளர் கெதர் நவ்ரத் கூறும் போது,




    ரசாயனம் மற்றும் உயிரின ஆயுதங்களை பயன்படுத்த சர்வதேச தடை உள்ளது.

    ஆனால், அதையும் மீறி ரஷியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதை நாங்களும் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷியா மீது கூறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கு பதிலடியாக ரஷியா அமெரிக்கா மீது சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Russia #USA #sanctions
    அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவிகளில் ஒன்றான அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். #DonaldTrump #AdityaBamzai
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.

    இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய கோர்ட்டுகள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.



    இவர் ஏல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர்.

    இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

    இப்போது இவரை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார்.

    இந்தப் பதவியில் இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி வரை இருப்பார்.

    பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் உறுதிப்படுத்தும். அத்துடன் இந்த அமைப்பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #DonaldTrump #AdityaBamzai #tamilnews
    ×