search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    திட்டமிட்டபடி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #trumpkimsummit
    சிங்கப்பூர் வெளியுறவு துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக நாளை வடகொரியா செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. #TrumpKimSummit
    சிங்கப்பூர் :

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் இருக்கும் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் - கிம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை நேற்று உறுதி செய்தது.

    இந்நிலையில், கிம் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் நாளை இரண்டு நாள் பயணமாக வட கொரியா தலைநகர் பியோன்ங்யாங் செல்ல உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுடன் விவியன் பாலகிருஷ்ணன் கலந்தாலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    முறைகேடுகளை தடுப்பதற்காக ஓட்டு சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

    அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி சில மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாகாணங்களில் கம்ப்யூட்டர் மூலம் இணையதளம் வழியாக ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு 30 மாகாணங்களில் கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஓட்டு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ஏற்கனவே எலக்ட்ரானிக் ஓட்டு முறைக்கு மாறி இருந்த விர்ஜினியா மாகாணம் இனி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக விளங்கிய கேத் ஸ்பேட், பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். #FashionDesigner #KateSpade
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது பார்க் அவென்யு அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வந்தவர் கேத் ஸ்பேட் (55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர்.

    இந்நிலையில், நேற்று கேத் ஸ்பேட் அவரது வீட்டில் இறந்த கிடந்தார். அவரது வீட்டு வேலைக்காரி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
     
    கேத் ஸ்பேட் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். விசாரணையில், கேத் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் இறப்புக்கு அமெரிக்க பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #FashionDesigner #KateSpade 
    இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, அமெரிக்காவில் நடைபெற்ற பேஸ்பால் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு பந்து வீசி போட்டியை தொடங்கி வைத்தார். #RohitSharma #SeattleMariners

    வாஷிங்டன்:

    ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ர சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 264 ரன்களே ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

    முன்னணி கிரிக்கெட் வீரரான இவர் தனது மனைவியுடன், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று சியாட்டில் நகரில் நடைபெற்ற சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொண்டார்.



    பேஸ்பால் வீரராக புதிய அவதாரம் எடுத்த அவர், இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொண்டு பந்தை முதலாவதாக (பர்ஸ்ட் பிட்ச்) வீசி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த கவுரவத்தை பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். 

    ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகா உடன் இந்த போட்டியை கண்டு களித்தார். ரோகித், பந்துவீசிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #RohitSharma #SeattleMariners




    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிதித்தால் வர்த்தக பலன்களை பெற முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. #China #Warns
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

    விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.

    சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.

    இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

    முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார்.  #China #Warns #Tamilnews
    இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, அமெரிக்காவில் இன்று நடைபெற இருக்கும் பேஸ்பால் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார். #RohitSharma #SeattleMariners

    வாஷிங்டன்:

    ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ர சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 264 ரன்களே ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

    முன்னணி கிரிக்கெட் வீரரான இவர், தற்போது பேஸ்பால் வீரராக புதிய அவதாரம் எடுக்க உள்ளார். இன்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற இருக்கும் சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.



    இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொள்ளும் அவர் பந்தை முதலாவதாக (பர்ஸ்ட் பிட்ச்) வீசி போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த கவுரவத்தை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். #RohitSharma #SeattleMariners
    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வைத்து, சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.
    சிங்கப்பூர்:

    சீனாவின் தென்பகுதியில் அமைந்து இருப்பது தென்சீனக்கடல். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது. உலகின் 3-ல் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. அது மாத்திரம் அல்லாமல், இந்தக் கடலின் அடியில் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் உள்ளது.

    இதன் காரணமாக இந்த கடல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இருப்பினும் இந்த கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் மீது சீனாவுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

    ஆனால் சீனா அதில் செயற்கை தீவுகளை அமைத்து, அதை ராணுவமயமாக்கி வருவதாக பரவலாக ஒரு சர்ச்சை உள்ளது. சமீபத்தில் அங்கு உள்ள பராசல் தீவின் அங்கமான ஊடி தீவில் சீனா கனரக போர் விமானங்களை நிறுத்தியது. இதை சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் சீனா அந்தப் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஒரு மாநாட்டில் பேசினார். அதில் அவர் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    தென் சீனக்கடல் பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணைகள், மின்கருவிகளை செயலிழக்க செய்கிற ஜாமர் கருவிகளை சீனா ஏராளமாக நிறுத்தி வைத்து உள்ளது.

    இவற்றை சீனா நிறுத்தி வைத்து இருப்பதின் நோக்கம், அண்டை நாடுகளை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும்தான்.

    சீனாவின் நடவடிக்கைகள் அதன் பரந்த நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

    சீனாவுடன் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான உறவைப் பராமரிக்கத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேவைப்பட்டால் அந்த நாட்டுடன் தீவிரமாக போட்டியிடுவோம். இந்த பிராந்தியத்தில் சீனா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளை ராணுவ மயமாக்க மாட்டோம் என்று 2015-ம் ஆண்டு, சீன அதிபர் ஜின்பிங் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அளித்த வாக்குறுதியை காப்பாற்றத்தவறி விட்டது என்றும் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சாடினார்.

    இந்த மாநாட்டில் ஜேம்ஸ் மேட்டிஸ் பேசும்போது, டிரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை.

    இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூரில் 12-ந் தேதி சந்தித்து நடத்த உள்ள பேச்சு வார்த்தையில் தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்தி உள்ள விவகாரம் இடம் பெறாது. (தென் கொரியாவில் அமெரிக்கா 28 ஆயிரத்து 500 துருப்புகளை நிறுத்தி வைத்து இருக்கிறது). கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்” என்று குறிப்பிட்டார். 
    அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசினார். #modiinsingapore
    சிங்கப்பூர்:

    அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் உள்ளார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங் உடன் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது. #modiinsingapore
    அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் சஞ்சய் திரிபாதி (வயது 48). இந்தியரான இவர் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிர்வாகியாக இருந்து பின்னர் தொழில் அதிபர் ஆனவர் ஆவார்.

    இவர் அங்கு இளம்பெண்களை நாடுகிற பெரியவர்களுக்கான ‘டேட்டிங்’ இணையதளம் மூலம் 38 வயதான ஒரு பெண்ணுடன் பழகினார். தன்னை பெரும்பணக்காரர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், குறித்த நாள் அன்று அந்தப் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்தார். ஓட்டலுக்கு வந்தால் நிச்சயம் பரிசு தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அதன் பேரிலேயே அந்தப் பெண் அந்த ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தினர்.

    அதன்பின்னர் அவர்கள் இருவரும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டனர். அப்போது அவர், அந்தப் பெண்ணுடன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதுடன், மிருகவெறியுடன் தாக்கியதாகவும், அதில் அந்தப் பெண் அடையாளம் காண முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    சஞ்சய் திரிபாதி மீது மேன்ஹட்டன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அந்தப் பெண் ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்து உருக்கமுடன் விவரித்தார்.

    விசாரணை முடிவில், சஞ்சய் திரிபாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.  #Tamilnews 
    அமெரிக்காவில் நடைபெற்ற சிக்கலான ஆங்கில எழுத்துகளை வாசிக்கும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி தேசிய விருது வென்றுள்ளார். #SpellingBee
    நியூயார்க்:

    அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, 'ஸ்பெல்லிங்' சொல்லும், 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

    இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 11 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த அனன்யா வினய் என்ற மாணவி இந்த பட்டத்தை வென்றிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான 91-வது 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 516 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் 41 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 பேர் மட்டும் இறுதிச்சுற்று போட்டிக்கு நுழைந்தனர்.  9 சிறுமிகள் மற்றும் 7 சிறுவர்கள் என இறுதிப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்.  

    இதில் கடைசியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி மற்றும் நயாசா மோடி இடையே கடும் போட்டி நிலவியது. இருவருக்கும் இடையில் 20 வார்த்தைகள் தொடர்பான ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்தது.

    இறுதியாக, "koinonia" என்ற சொல்லுக்கான எழுத்துகளை மிகச்சரியாக உச்சரித்து, டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் நெம்மானி 'தேசிய ஸ்பெல்லிங் பீ' பட்டத்தை தட்டிச் சென்றார்.

    இதையடுத்து, 14 வயது சிறுவனான கார்த்திக் நெம்மானிக்கு பரிசுக்கான சுழல்கேடயத்துடன் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்பட்டது. மேலும், மெர்ரியம் - வெப்ஸ்ட்டர் சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக நியூயார்க், ஹாலிவுட் நகரங்களுக்கான சுற்றுலா பேக்கேஜ் மற்றும் 2500 அமெரிக்க டாலர்களும், கார்த்திக் பயிலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு பிட்ஸா விருந்தும் அளிக்கப்பட்டது. #SpellingBee
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியா அதிபர் அமெரிக்கா சென்றுள்ளார்.#Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளனர்.

    இது சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றுள்ளார்.

    அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பேயை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி விருந்து அளித்தார்.

    அமெரிக்கா- வட கொரியா மோதல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக வடகொரிய அதிகாரி யாரும் அமெரிக்கா சென்றதில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.#Trump #KimJongUn
    ×