search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95783"

    ஒரு ஆலயத்தில் நாள் முழுக்க 6 கால பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.
    ஆலயங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பூ, பழம், அர்ச்சனைத் தட்டு எடுத்துச் செல்வதுண்டு. அர்ச்சனை முடிந்து மூலவருக்கு தீபாரதனை காட்டப்படும் போது மனம் உருக வேண்டிக் கொள்வார்கள். அதோடு அவர்களது வழிபாடு முடிந்து விடுகிறது.

    சில பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு நைவேத்தியம் செய்வார்கள். அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். எல்லாரும், எல்லா வகை வழிபாடுகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. 90 சதவீத பக்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு ஆலயத்தை எடுத்துக் கொண்டால், நாள் முழுக்க 6 கால பூஜைகளிலும் எத்தனையோ விதமான வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

    பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள், கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

    தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

    தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 வகை திரவியங்களை எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

    சாமி சிலைகளுக்கு ஏன் இப்படி விதம் - விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன தத்துவம் - என்ன அறிவியல் உண்மை அடங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.

    இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும். இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

    எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் மக்களுக்கும், இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.



    அந்த வகையில் சிவனை அபிஷேகப் பிரியர் என்றும், விஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் கூறியுள்ளனர். பொதுவாகவே கடவுளின் உள்ளம் அபிஷேகம் செய்ய, செய்ய குளிரும். அது அபிஷேகத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பக்தனையும் குளிரச் செய்யும். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும்.

    எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

    அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்களையும் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது.

    எள் எண்ணெய் - 1 லிட்டர், பஞ்ச கவ்வியம் - 5 லிட்டர், மாவு வகைகள் ஒவ்வொன்றும் 1 கிலோ, மஞ்சள் பொடி 200 கிராம், பசும்பால் 7 லிட்டர், தயிர் 15 லிட்டர், தேன் 500 கிராம், நெய் ஒரு கிலோ, நெல்லி முள்ளிப்பொடி - 300 கிராம், கரும்புச்சாறு - 4 லிட்டர், பன்னீர் - 500 கிராம், அன்னம் - 5 கிலோ, வாசனை திரவிய தீர்த்தம் - 20 லிட்டர் என்ற முறையில் தான் அபிஷேகத்துக்குரிய திரவியங்களின் அளவு இருக்க வேண்டும்.

    பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு 20 வாழைப்பழம், ஒரு பெரிய பலாபழம், 15 மாம்பழம் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிக்க வேண்டும். அதுபோல பஞ்சகவ்யம் (பசுஞ்சாணி கோமூத்திரம், பால், தயிர், நெய்) தயாரிப்பது பற்றி கோவில் குருக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

    அபிஷேகத்துக்குரிய திரவியங்களை இத்தகைய அளவுகளில் தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல, அந்த அபிஷேகப் பொருட்களை சுவாமி முன்பு, எப்படி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் கூட விதிமுறை உள்ளது. இது பற்றி சிந்தியாகமத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரிசியை பரப்ப வேண்டும். நடுவில் அபிஷேகத்துக்குரிய பால் வைக்க வேண்டும். வடக்கில் தேன், தெற்கில் நெய், மேற்கில் நாட்டுச் சர்க்கரை, கிழக்கில் தயிர் வைக்க வேண்டும்.

    வாயு மூலையில் மாம்பழம், நிருதி மூலையில் பலாப்பழம், அக்னி மூலையில் வாழைப்பழம், ஈசான மூலையில் வாசனை திரவிய தீர்த்தம் வைத்தல் வேண்டும்.

    அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆகமப்படி திரவியங்களை வரிசைப்படி எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்பட சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் மற்ற ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.

    மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகங்களையும் பார்க்க கூடாது என்று நம் முன்னோர்கள் தடை விதித்ததற்கு காரணம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

    ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

    நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர். மூலவர் சிலைகளில் இருந்து வெளிப்படும ஆற்றல் பக்தர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான ஆலயங்களில் பெயரளவுக்கு சில அபிஷேகங்களை மட்டுமே பக்தர்கள் பார்க்க செய்வார்கள்.

    நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.

    அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

    தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.

    அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
    பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

    குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
    சில தெய்வங்களுக்கு சில அபிஷேகப் பொருட்கள் மூலம் நாம் அபிஷேகம் செய்தால் உடனடியாகப் பலன் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சில தெய்வங்களுக்கு சில அபிஷேகப் பொருட்கள் மூலம் நாம் அபிஷேகம் செய்தால் உடனடியாகப் பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் திருநீலக்குடி இறைவனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் (நல்லெண்ணெய்) செய்வது நல்லது. திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு சதுர்த்தியன்று தேனாபிஷேகம் செய்வர்.

    திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமிக்கு குடம், குடமாகப் பாலாபிஷேகம் செய்வர். அபிஷேகப் பொருட்களை ஆகர்ஷிக்கும் ஸ்தலங்களாக விளங்கும் இந்த ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலமும், பிரதோஷ நேரத்தில் நந்திக்கு செய்யும் 16 வகை அபிஷேகத்தின் மூலமும், கத்திரி வெயில் காலத்தில் சிவனுக்கு மேனியில் சொட்டுச் சொட்டாக வடியும் தீர்த்த அபிஷேகத்தின் மூலமும் நாம் நற்பலன் பெற முடியும்.

    இறைவனின் மேனி குளிர்ந்தால் இதயமும் மகிழும் வரம் நமக்குக் கிடைக்கும். 
    தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற28-ந் தேதி சிவபெருமானுக்கு முக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.
    தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற 28-ந் தேதி(வியாழக் கிழமை) சிவபெருமானுக்கு முக்கனிகளான மா, பலா, வாழையால் பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானால் பல திருவிளையாடல் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூலவரான சொக்கநாத பெருமானுக்கு உச்சிகால வேளையில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறவுள்ளது.

    அதற்கு முன்னதாக நாளை அருணகிரி நாதர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று இரவு ஆவணி மூல வீதிகளில் அருணகிரி நாதர் புறப்பாடு நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி நிறைவடைகிறது, 7-ம் நாளான நேற்றும் 100-கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழா காலங்களில் தங்க தேர் உலா, உபயதிருக்கல்யாணம் போன்றவை நடைபெறாது.

    ஆனி பவுர்ணமி அன்று மதுரை இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரர், திருவாப்புடையார், தென் திருவாலவாய, பழைய சொக்கநாதர் ஆகிய கோவில்களிலும், திருவாதவூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள சிவன் கோவில்களில் உச்சி காலத்தில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். 
    சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    தயிரால் ஈசனை அபிஷேகித்தால் உடல் பலம், ஆரோக்கியம் பெறுவீர்கள்.

    பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வரியம் சேரும்.

    கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி ஏற்படும்.

    தேன் கொண்டு அபிஷேகித்தால் தேகம் பொலிவு பெறும்.

    மிருதுவான சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும்.

    புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பூலோக பாவம் அகலும்.



    இளநீரால் ஈசனை அபிஷேகித்தால், சகல சம்பத்துகளும் வாய்க்கப்பெறுவீர்கள்.

    ருத்திராட்சம் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆனந்த வாழ்வு அமையும்.

    அரைத்து எடுத்த சந்தனத்தால் அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

    வில்வத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் வந்து சேரும்.

    அன்னத்தால் அபிஷேகித்தால் அதிகாரம், தீர்க்காயுள், மோட்சம் கிடைக்கும்.

    திராட்சைச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

    பேரீச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் எதிரிகள் விலகுவார்கள்.

    மாம்பழத்தால் அபிஷேகித்தால் தீராத வியாதிகள் நீங்கும்.

    மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கலம் உண்டாகும்.
    இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் 3 பேருக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா இடையஞ்சாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வர்ணமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் செடல் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செடல் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினமும் காலையில் வர்ணமுத்து மாரியம்மனுக்கும் அங்காள பரமேசுவரி அம்மனுக்கும் விசே‌ஷ அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகளும் நடந்தன. மேலும் இரவில் தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 4 மணி அளவில் பக்தர்கள் தங்கள் உடலில் மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனை வேண்டி பயபக்தியுடன் விரதம் இருந்த 3 பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தார். மேலும் அந்த பக்தர்கள் மிளகாய் கரைசலை குடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து செடல் (பக்தர்கள் அலகு குத்தி வருதல்) எடுத்து வந்தும், அக்னிகுண்டம் இறங்கி தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சில பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி பல்வேறு வாகனங்களையும் இழுத்து வந்தனர். தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இரவில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. 
    நெல்லையப்பர் கோவிலில் நாளை கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
    நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த பூஜை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 1008 சங்காபிஷேகமும், 9 மணிக்கு 1008 கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 1 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து அன்னதானம் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தங்க சப்பரத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கோவில் செயல் அலுவலர் ரோஷினி தெரிவித்து உள்ளார். 
    திருப்பரங்குன்றம் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி முருகப்பெருமானின் கையில் உள்ள தங்கவேலுக்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 8-வது ஆண்டு வருடாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் யாகசாலையில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    இதையடுத்து கருவறையில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தையொட்டி கருவறையில் முருகப் பெருமானுக்கு புனுகு தைலம் சாத்தப்பட்டது.

    இதேபோல கருவறையில் வீற்றிருக்கும் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சாம்பிராணி தைலம் சாத்தப்பட்டது. முன்னதாக சமவேளையில் 5 சன்னதியிலும் மகா அபிஷேகம் நடைபெற்று, பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். 
    விளம்பி வருடத்தில் வரும் ஸ்ரீநடராஜருக்கு உகந்த சிறந்த அபிஷேக தினங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சித்திரை 24 - திருவோணம்
    ஆனி 6 - உத்திரம்
    ஆவணி 8 - சுக்ல சதுர்தசி
    புரட்டாசி 7 - சுக்ல சதுர்தசி
    மார்கழி 7 - திருவாதிரை
    மாசி 6 - சுக்ல சதுர்தசி

    ×