என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95786"
- கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திரகுமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும் தி.மு.க. நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
இதையடுத்து சண்முகம் பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோ லையை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திர குமார் இன்று காலை பல்லடம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
- மூதாட்டியிடம் பணம் கேட்டு வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூபாய் 1500 பணத்தை பிடுங்கிச் செல்லுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
- அர்ஜுன் மீது பல்வேறு செல்போன், செயின் பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராமன் பிள்ளை தெருவில் கடந்த 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் 108 அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த தகவலின் பெயரில் ஐஸ் அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மூதாட்டி கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தார் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.
இதில் மது போதையில் வயதான மூதாட்டியிடம் பணம் கேட்டு வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூபாய் 1500 பணத்தை பிடுங்கிச் செல்லுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்காவை சேர்ந்த அர்ஜுன் (எ) அஜி (வயது 30) மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அர்ஜுனை போலீசார் கைது செய்தனர்.
அர்ஜுன் மீது பல்வேறு செல்போன், செயின் பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைதான வாலிபர் அர்ஜூன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் போதையில் இருந்த தான் மேலும் மது குடிப்பதற்காக மூதாட்டியை கொடூரமாக தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மூதாட்டியை அவர் தாக்கும் வீடியோ காட்சிகள் பதை பதைக்க வைக்கும் வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர்.
- கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ஆத்தூர் பைத்தூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா (வயது 30), கர்ப்பிணியான இவரும், பன்னீர்செல்வமும் கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் வெளியே பன்னீர்செல்வம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுவது, தன்னை குறித்து தான் என நினைத்த பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி சித்ரா, மகள் கோகிலா, மருமகன் சிரஞ்சீவி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அதனை தடுக்க வந்த சத்யாவையும் தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 42 சிறுவர்கள் உள்ளனர்.
- மோதலில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 42 சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 20 போலீசார் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறுவர் சீர்திருத்தப்பள்யில் சேர்க்கப்பட்டு உள்ள சிறுவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து உள்ளனர். நேற்று மாலை அவர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் அங்கு கிடந்த கம்பு, கம்பி மற்றும் கையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிறுவர்களை அப்புறப்படுத்தினர்.
இந்த மோதலில் சேலம், விருத்தாசலம், சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சிறுவர்கள் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சார்பில் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது போன்று மீண்டும் சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் சீர்திருத்தப்பள்ளி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ரவுடி யோனா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன். 26 வயதான இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
அ.தி.மு.க. பிரமுகரான இவரது தந்தை ரவி கடந்த 2015-ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாயும் இறந்துவிட்டார். இதனால் தனது சகோதரி மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த கருணாகரன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி யோனாவின் மீது கல்லை தூக்கி போட்டு தாக்கி தாக்குதல் நடத்தி உள்ளார். அவரது நண்பர்கள் 5 பேரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ரவுடி யோனா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கருணாகரன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கருணாகரன் சிறையில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியில் வந்தார். இந்த நிலையில் நேற்று மர்ம கும்பல் அவரை வழிமறித்து குட்டியப்பன் தெரு பகுதியில் வைத்து தாக்கி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.
இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பழிக்கு பழியாக ரவுடி யோனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருணாகரனை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. யோனா சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், தன் மீது கல்லை தூக்கி போட்டு காலில் முறிவு ஏற்படுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் 7 மாதங்கள் காத்திருந்து கருணாகரனை அவர் கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அனைவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாகரன் கொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் 18 வயதில் இருந்து 20 வயதுக்குள்ளேயே இருக்கும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குப் பழியாக கொலை சம்பவம் அரங்கேற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள்.
சிறையில் இருந்து வெளியில் வந்ததும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள். இந்த வழக்கில் அதுபோன்று கொலை நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே கண்டறிந்து இருந்திருந்தால் கருணாகரன் கொலையை தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இனி வரும் காலங்களில் அதுபோன்ற கண்காணிப்பை கண்டிப்பாக தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உடையார்பாளையம் அருகே வீட்டின் ஓட்டை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்கு தொடரபட்டுள்ளது
- இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டினம் மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குமார் (வயது 49). இவர் தனது ஊரில் அமைந்துள்ள சென்னீஸ்வரர் குளத்திற்கு வரும் நீர் வழி புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் (42), ரவி (48), மணிகண்டன் (36) ராமு மற்றும் சிலர் குமார் வீட்டில் இருந்தபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு வீட்டின் ஓட்டை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
- தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது38). இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இன்பராஜ், அழகுராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
மாரியப்பன் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவும் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.
மாரியப்பன் வேலை பார்க்கக்கூடிய மாந்தோப்புக்கு அருகில் மற்றொரு நபரின் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக, தோட்டத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.
இதனை அறியாத மாரியப்பன், அந்த தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மாரியப்பன் தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை இன்று காலை தோட்டத்துக்கு சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் இறந்து கிடந்த தோட்டத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று மின்வேலி அமைத்திருந்தாரா அல்லது அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக அமைத்து உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் மாரியப்பன், தான் வேலை பார்த்த தோட்டத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேரத்தில் சென்றது ஏன்? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
நெல்லை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்நிலையில் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 60) என்பவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவில் 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் தேவராஜை பிடித்து அவரது வாயில் மதுவை ஊற்றியது. பின்னர் அவரை மிரட்டிவிட்டு கடையின் ஷட்டர் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்றது. அங்கிருந்த விலை உயர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து காவலாளி தேவராஜ் பணகுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் 15-ந்தேதி இதே கடையில் காவலாளியை மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் நான்கு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் ஏற்றி சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை துப்பு துலங்கவில்லை.
இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கன்குளத்தில் கடந்த வாரம் இதேபோல் டாஸ்மாக் கடையை உடைத்து சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்மநபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
- வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோபாலா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அனுப்பாண்டி, அழகு பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் மனோபாலாவின் கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மனோபாலாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந் அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின்பேரில் மனோபாலாவை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.
பொன்னேரி:
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில், விபத்து, திருட்டு, கேட்பாரற்று கிடந்த வாகனம், மது போதையில் வாகனம் பறிமுதல், உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பை பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் வெளியிட்டார். அதன்படி பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னிலையில் கடந்த 3 நாட்களாக வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.
- சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்ய தேடிய நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு நேற்று விரைந்தனர். அப்போது சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.
அப்போது சிறிது நேரத்தில் ஜீப்பில் இருந்த சதாம் உசேன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை மனு ஐ.ஜி.யிடம் வழங்கப்பட்டது.
- வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
மதுரை
கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழு வதும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி னர்.
இந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஜல்லிக்கட்டு வழக்கு முறி யடிப்பு குழுவினர் மதுரை யில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில்
ஜல்லிக்கட்டு போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் மற்றும் சாமா னியர்கள். அவர்களால் தொடர்ந்து வழக்கை எதிர்கொள்ள முடியாத பொருளாதார நிலை இருப்பதால் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்