search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95897"

    சிட்னி போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீசியபோது, அவரது பந்து வீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக போட்டி அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இந்தியா இறங்கியது.

    கலீல் அகமது அதிக அளவில் ரன் கொடுத்தபோது, முகமது ஷமி கை வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பகுதி நேர பந்து வீச்சாளரான அம்பதி ராயுடுவை கேப்டன் விராட் கோலி பந்து வீச அழைத்தார்.

    அம்பதி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரது பந்து வீச்சு முறை ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக போட்டி நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை இந்திய அணி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.

    இன்னும் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் முடிவு வெளியாகும் வரை அவர் பந்து வீசலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளார். ஒருவேளை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றால், சர்வதேச போட்டியில் ராயுடுவால் பந்து வீச முடியாது.

    இதற்குமுன் தவான் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும்போது, இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் தவான் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் பந்து வீசவில்லை என்ற முடிவை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் விவரத்தை வெளியிட்டது ஐசிசி. #ICC
    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கு 10 அணிகள் ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதிபெறும். ஆனால் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு 8 அணிகள்தான் தகுதி பெறும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகள் பெயரை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன்படி முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 2-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 3-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து. 4-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 5-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா, 6-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, 7-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ், 8-வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

    இலங்கை மற்றும் வங்காள தேச அணி தகுதிச் சுற்றுக்கான தொடரில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும். தகுதி சுற்றுத் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் ஆடுகளத்தை ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. #AUSvIND #ICC
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் எப்படி செயல்பட்டது என்பதை ஐசிசி மதிப்பீடு செய்யும்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக இருந்து. ஆடுகளத்தில் அதிக அளவு புற்கள் காணப்பட்டது. பவுன்சர் பந்திற்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்தது. பெர்த் ஆடுகளத்தை ஐசிசி ‘சராசரி’ ஆடுகளம் என மதிப்பீடு செய்தது. இதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இந்நிலையில் 3-வது போட்டி நடைபெற்ற மெல்போர்ன் ஆடுகளத்தையும் ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது. மெல்போர்ன் மைதான ஆடுகளம் முதல் இரண்டு நாட்களில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு பவுன்ஸ் பந்திற்கு சாதகமாக இருந்தது. இதனால் பும்ரா, கம்மின்ஸ் பந்து வீச்சில் அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் நடந்த பெர்த் ஆடுகளம் சராசரியான ஆடுகளம் என்று ஐசிசி கூறியதற்கு சச்சின் தெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ICC #SachinTendulkar
    மும்பை:

    ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சொல்வது வழக்கம். இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் நடந்த பெர்த் ஆடுகளம் குறித்து பெரிய அளவில் திருப்தி அடையாத ஐ.சி.சி., ‘சராசரியான ஆடுகளம்’ என்று கூறியது.  இதற்கு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், சுவாரஸ்யத்தை உருவாக்கவும் பெர்த் போன்ற ஆடுகளங்கள் தான் தேவையாகும். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் உண்மையான திறமையை சோதித்து பார்க்கக்கூடிய ஆடுகளமாக அது அமைந்தது. அதனால் இதை சராசரி ஆடுகளம் என்று சொல்வது சரி அல்ல’ என்று பதிவிட்டுள்ளார். #ICC #SachinTendulkar
    கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வரி சலுகையாக 160 கோடி ரூபாயை பிசிசிஐ தரவேண்டும் என ஐசிசி நெருக்கடி கொடுத்து வருகிறது. #BCCI #ICC #T20
    மும்பை:

    இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தப் போட்டி தொடரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வரி சலுகை தரவேண்டும் என்று கோரியது.

    இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் வரி சலுகை தொகை விரைவில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை.



    இந்நிலையில், வரி சலுகை தொகையான ரூ.160 கோடியை வரும் 30-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என்று ஐ.சி.சி. உத்தரவிட்டு உள்ளது.

    அப்படி செலுத்தாத பட்சத்தில் நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்படும் வருவாயில் கழித்துக் கொள்ளப்படும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. #BCCI #ICC #T20
    பிசிசிஐ-க்கு எதிராக நஷ்டஈடு கேட்டு ஐசிசி-யில் முறையிட வேண்டும் என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று நஜம் சேதி தெரிவித்துள்ளார். #BCCI #PCB
    இந்திய கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் நஜம் சேதி கையெழுத்திட்டிருந்தார். அதில் 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும் பிசிசிஐ இறங்கி வரவில்லை. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    இது தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.

    இந்த வழக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜம் சேதியால் ஐசிசி-யில் தாக்கல் செய்யப்பட்டது. இவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.



    இந்நிலையில் நஜம் சேதி பிசிசிஐ-க்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘பிசிசிஐக்கு எதிராக ஐசிசி செல்ல வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அப்போது ஷகாரியார் கான் சேர்மனாக இருந்தார். ஐசிசி 60 சதவிகிதம்தான் பிசிசிஐ-க்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஏனென்றால், அது பாகிஸ்தானுக்கு சட்டப்பூர்வமான விவகாரம் இருந்ததாக நம்பியுள்ளது’’ என்றார்.
    பெர்த் டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற நாதன் லயன் ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில் டாப் 10-க்குள் நுழைந்துள்ளார். #ICC #NathanLyon
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய பேட்ஸ்மேன்கள் நாதன் லயன் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தனர். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    8 விக்கெட் வீழ்த்திய நாதன் லயன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். முதல் டெஸ்டில் ஏற்கனவே 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இரண்டு போட்டியில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா வீரர் ரபாடா 882 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 874 புள்ளிகளுடன்  2-வது இடத்தில் உள்ளார்.

    ஜடேஜா 796 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், அஸ்வின் 778 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், நாதன் லயன் 766 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், பேட் கம்மின்ஸ் 761 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், ஹசில்வுட் 758 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    பெர்த் டெஸ்டில் சதம் அடித்த விராட் கோலி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 915 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 892 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ஜோ ரூட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடுத்த நஷ்டஈடு வழக்கில், பிசிசிஐ-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவான தொகையில் 60 சதவீதம் வழங்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையே கடந்த 2014-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி பிசிசிஐ பாகிஸ்தான் கூட விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவு முயற்சி செய்தும், பிசிசிஐ இறங்கி வரவில்லை.

    இதனால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்காக பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் தொடரில் பங்கேற்க முடியும் என பிசிசிஐ கூறியிருந்தது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது, மேலும் ஐசிசிக்கு வருவாய் கிடைப்பதற்கான வழிவகைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தரவில்லை. 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசுதான் இருதரப்பு தொடர்களுக்கு அனுமதி தர வேண்டும் என பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

    ஒப்பந்தத்தின்படி இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்காததால், பிசிசிஐ ரூ.500 கோடி இழப்பீடு தரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. ஐசிசி தகராறு தீர்ப்பாயத் தலைவர் மைக்கேல் பெலாஃப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதற்காக இரு வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வழக்காட நியமித்தன.

    கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் மேல்முறையீடும் செய்ய முடியாதது எனவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கிற்கான செலவை பிசிபி வழங்க வேண்டும் என்று பிசிசிஐ முறையிட்டது. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.
    இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஐசிசி தடைவித்துள்ளது. தடை தற்போதில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. #ICC
    இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். அப்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று ஐசிசி தெரிவித்திருந்தது.



    இந்நிலையில் அவரது பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.

    அகில தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், டி20-யில் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். யாசிர் ஷா 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #ICCTestRankings
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து 3-0 என இலங்கையை துவம்சம் செய்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்தும், 2-வது டெஸ்டில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா முதல் இன்னிங்சில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 143 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும் என 14 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் 19-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    டிரென்ட் போல்ட் 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பேட் கம்மின்ஸ் 6-வது இடத்திலும், அஸ்வின் 7-வது இடத்திலும் உள்ளனர்.
    ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. #WT20
    ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் சுருண்டது.



    பின்னர் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹீலி (22), மூனே (14) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ரன்களும், கேப்டன் லேனிங் 28 ரன்களும் அடிக்க 15.1 ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே சூதாட்ட புகாரில் நீக்கப்பட்டதன் மூலம் ஒரே மாதத்தில் 3 வீரர்களை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. #ICC #DilharaLokuhettige
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி சூதாட்ட பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.

    அந்நாட்டின் முன்னாள் அதிரடி வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் புகாரை கூறி இருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து கடந்த 31-ந்தேதி இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரரும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சா சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே மீதும் மேட்ச் பிக்சிங் புகார் கூறப்பட்டு அவரை ஐ.சி.சி. சஸ்பெண்டு செய்துள்ளது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஓவர் ‘லீக்’ போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஆல்ரவுண்டரான தில்கரா சூதாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.சி.சி. ஊழல் தடுப்புக்குழு விசாரித்தது.

    ஆட்டத்தின் போக்கை மாற்றி முடிவை நிர்ணயம் செய்தல், வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விதிமீறலில் ஈடுபட வலியுறுத்தியது போன்ற புகார்கள் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.

    ஆட்டத்தில் விளையாடாமலேயே தில்கரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. அவகாசம் வழங்கி உள்ளது.

    38 வயதான தில்கரா 9 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். #ICC #DilharaLokuhettige
    ×