என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95936"
சேதராப்பட்டு:
புதுவை அருகே திருச் சிற்றம்பலம் கூட்டு ரோடு சப்தகிரி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். டிரைவர். இவரது மனைவி அமுதமொழி (வயது 32).
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே ஆறுமுகத்துக்கும், அவரது மனைவி அமுதமொழிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அமுதமொழி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதமொழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை சமத்துவபுரம் பாப்பாத் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவரது மனைவி வெண்ணிலா (37). இவர்களது மகன் பரத் (20). கூலித் தொழிலாளி.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பரத், வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் வெண்ணிலா , செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த பரத், இரவு நேரத்தில் யாரிடம் பேசி கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் தாய்- மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து வெண்ணிலா வாக்குவாதம் செய்து பேசிக்கொண்டே இருந்ததால் பரத் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் திடீரென வெண்ணிலாவை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் பரத்தை கைது செய்தனர்.
செல்போனில் பேசிய தாயை பெற்ற மகனே தாக்கி கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு வீரமணி (வயது36) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக ராஜதானி அருகில் உள்ள கொட்டபட்டியில் அய்யனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 12.3.19-ந் தேதியன்று அய்யனார் தலையில் காயங்களுடன் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
உறவினர்கள் அனைவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யனார் உடலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யனார் எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது.
தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வீரமணியே போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பல்வேறு கோணங்களில் பலரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் சம்பவத்தன்று அதேபோல் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாளால் தலையில் தாக்கியதாக கூறினார். இதனையடுத்து போலீசார் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருவெறும்பூர்:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பாத்திமா நகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி (வயது 36). சொந்தமாக ஆம்னி கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
மேலும் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வேலையும் பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அப்பாஸ் அலி திருச்சி மஞ்சத்திடல்-பாப்பாக்குறிச்சி இடையே உள்ள சுடுகாடு அருகில் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று காரில் தீயில் கருகிய நிலையில் கிடந்த அப்பாஸ் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பாஸ் அலிக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பினர்.
அப்பாஸ் அலி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது தாய் நூர்ஜகானிடம் சவாரி உள்ளதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பாஸ் அலி உடலில், தலை, கை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. காரில் 5 லிட்டர் பெட்ரோல் கேனும் எரிந்த நிலையில் கிடந்தது.
அவரை மர்ம நபர்கள் சவாரி இருப்பதாக கூறி அழைத்து சென்று, வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, இங்கு வந்து உடலை போட்டு சென்றுள்ளனர். உடலை எரிக்க முயன்றுள்ளனர். ஆனால் அப்போது யாராவது வந்திருக்கலாம். அதனால் உடலை பாதியிலேயே அப்படியே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
நேற்று காலை சவாரிக்கு சென்ற அப்பாஸ் அலி திருச்சி ஏர்போட் பகுதியில் காரில் சுற்றியதாக அவரது செல்போன் டவர் காட்டுகிறது. அதன்பிறகு காலை 9 மணிக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் பிறகு தான் அவர் அடித்து கொலை செய்யபட்டிருக்கலாம் என உறவினர்கள் கூறுகிறார்கள்.
வாடகை கார் ஓட்டி வந்த அப்பாஸ் அலி சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பொதுப்பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முன் நின்று தீர்த்து வைப்பார். எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
காரில் கிடந்த கேன் மற்றும் செல்போன் பொருட்களை கைப்பற்றிய போலீசார் தடயவியல் நிபுணர்களையும் வர வழைத்து துப்பு துலக்கினர். தடயவியல் நிபுணர்கள் காரில் இருந்த கை ரேகைள். பெட்ரோல் கேன் மற்றும் கார் கதவுகளில் இருந்த கை ரேகைகள் ஆகியவற்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பாஸ் அலி உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இதில் உள்ள மர்மங்கள் விலகும்.
கொலையுண்ட அப்பாஸ் அலிக்கு பேகம், என்ற மனைவியும், அப்துல் அஜித் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் அப்பாஸ் அலியின் உடல் பிரேத பரி சோதனை நடைபெறும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தலைவர் ஹசன் தலைமையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்பாஸ் அலி கொலையில் உரிய விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
உடன்குடி:
ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகராஜன் (வயது 33). இவர் குரும்பூரில் பூக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி வனப்பிரியா என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவரது உறவினர் சத்யராஜ் என்பவருடன் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கல்லாமொழி அருகே வந்த போது உடன்குடி பதுவைநகரைச் சேர்ந்த ஜேசுராஜ் (35) என்பவரது பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மகராஜன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருவாரூர் அகரநல்லூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் அப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு பிரவீன்குமார்(9), மதன் குமார் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரவி தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இதேபோல் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இரவு நீண்டநேரமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றியது. பின்னர் ரவி தூங்கி விட்டார்.
இந்த நிலையில் கணவர் மீது சித்ரா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வரும் கணவரை கொலை செய்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
இன்று அதிகாலையில் வீட்டில் ரவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ரவியின் தலையில் சித்ரா, சுத்தியால் ஓங்கி அடித்தார். கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் பலமுறை சுத்தியால் தாக்கியதால் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் ரவியை கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம், தனது கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீசார் சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை கைது செய்தனர்.
அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 30). பேண்ட் வாத்திய இசை கலைஞர். இவருடைய மனைவி சின்னபாப்பா (28). தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து சின்ன பாப்பாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து, முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னபாப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டோமே என்று அதிர்ச்சியடைந்த முருகன் தானும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிணத்தின் மீது அவரது உடலும் கிடந்தது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனாதையான 2 குழந்தைகளும் தாய், தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மனைவியை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
உசிலம்பட்டி மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில் கார்த்திக் தனது தந்தையிடம் ‘எனக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு ‘நான் ரூ.50 ஆயிரம் தருகிறேன். மீதிப்பணத்தை நீ தயார் செய்து கொள்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.
இதையடுத்து கார்த்திக் பல இடங்களில் கடன் வாங்க முயற்சி செய்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சீனி (40). மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் பணியில் இருந்த சீனி நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்