search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • ஐந்து இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
    • பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதே பிரதமரின் முதன்மையான பொறுப்பு.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து

    இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெளிநாடு சென்று திரும்பிய மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பவன் கேரா கூறியதாவது:-

    நாங்களும் அவருக்கு (பிரதமருக்கு) பெரும் வரவேற்பை வழங்குவோம். ஆனால் மற்ற மோடிகள் மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே இந்த வரவேற்பு இருக்கும். லலித் மோடி அல்லது நிரவ் மோடியை அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தால் டெல்லி விமான நிலையத்தில் நின்று பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்போம்.

    பிரதமர் நாடு திரும்பிய இரண்டு மணி நேரத்திற்குள், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தது.

    இதுதான் பிரதமரின் சாதனையா? இந்த செய்தி வரும்போது அவர் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு கூட வந்திருக்க மாட்டார். இந்திய பிரதமர் வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவின் பிரதிநிதியாக செல்கிறார். என்னதான் அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும், பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதே அவரது முதன்மையான பொறுப்பு.

    ஐந்து இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கும்போது இது தொடர்பான ஆலோசனை எப்போது நடக்கும்? நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் மாணவர்கள் தடைசெய்யப்பட்டால், ராஜதந்திரத்தில் இது மிகவும் கசப்பான பதிலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

    இதன்மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அகில இந்திய அளவில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2022-23ம் நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு 16.3 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறது. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கு மாறாக, பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு எடுத்து வருகிறது. இதற்கு சமீபத்தைய காரணம் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாகும்.

    இதனால் 6 கோடி சிறு, குறு தொழில்களும் 11 கோடி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ.850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டிடம் கட்டுவது துக்ளக் ஆட்சியை தான் நினைவுபடுத்துகிறது. துக்ளக் ஆட்சியில் தலைநகர் மாற்றப்பட்டது. ஆனால் நவீன துக்ளக் ஆக செயல்பட்டு வருகிற மோடி ஆட்சியில் தற்போது பாராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அழைக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர். பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் குடியரசு தலைவரையும் அவமதிக்கிற செயலாகும்.

    எனவே தான் 28-ந்தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.

    இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தது.

    ராகுல் காந்தியின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று கோர்ட்டு தெரிவித்தது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு கண்டனம்.
    • திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கின்றனர்.

    சென்னை:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இதையடுத்து, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் தி.மு.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றனர்.

    • பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழலால் சட்டசபை புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதை சீர்படுத்த கோமியம் தெளித்ததாகவும் காங்கிரசார் தெரிவித்தனர்.
    • கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். நேற்றும், இன்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையை கோமியம் தெளித்து காங்கிரசார் சுத்தம் செய்தனர்.

    பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழலால் சட்டசபை புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதை சீர்படுத்த கோமியம் தெளித்ததாகவும் காங்கிரசார் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    • அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை காங்கிரஸ் தொண்டர்கள் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார்.

    அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தொண்டர்கள் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

    அதனுடன் கனரக லாரி டிரைவர்கள் இரவு முழுவதும் லாரி ஓட்டும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இரவு நேரத்தில் லாரியில் ஏறி பயணம் செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    இதேபோல் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்காரியும், ராகுல் காந்தி லாரிக்குள் அமர்ந்து தொண்டர்களை நோக்கி கையசைக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில்,' இந்த நாட்டின் குரலை கேட்கவும், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் ராகுல் காந்தி விரும்புகிறார்' என்றார்.

    இதற்கிடையே தற்போது ராகுல் காந்தி குருத்வாராவில் உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரான்ஸ்பர், பதவி நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது- உச்சநீதிமன்றம்.
    • உச்சநீதிமன்றம் உத்தரவை குறைக்கு வகையில் மத்திய அரசு புதிய உத்தரவு.

    இந்தியாவின் தலைநகர் மாநிலமான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துவருகிறது. கெஜ்ரிவால் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்- அமைச்சரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகமாக இருந்து வந்தது.

    இதனால் கெஜ்ரிவாலால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்தது. அப்படி எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் கெஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

    முதல்-அமைச்சர் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது.

    இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

    இதனால், கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் கிடையாது. இதனால் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாட இருக்கிறார்.

    இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களோடு துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விக்குப்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார். இந்த நிலையில் மம்தா பானர்ஜியை கெஜ்ரிவால் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    • அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது.
    • காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

    சென்னை:

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்து விட்டதாகவும், அதற்கு அரசு துணை போவதாகவும் குற்றம் சாட்டி அ.தி.மு.க. இன்று பேரணி நடத்தி கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து விட்டது. அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் தவறு செய்பவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 7 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்யும். அதை அரசும் வேடிக்கை பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துதான் வருகிறது.

    ஆனால் அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது. இந்த விசயத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

    தமிழக மக்கள் இவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இதற்கென்று மிகப்பெரிய பாரம்பரியமே உள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் கள் மற்றும் சாராயம் விற்பதற்கு அரசே கடைகளை திறந்தது. அப்போது தமிழகத்திலும், குஜராத்திலும் மட்டும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதுபற்றி பலரும் காமராஜரிடம் கேட்டு இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதே உங்கள் மாநிலத்தில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

    அதற்கு காமராஜர் சொன்ன பதில், "இன்னொருத்தர் தப்பு செய்தால் அதே தப்பை நானும் செய்ய வேண்டுமா? நான் ஒரு காலத்திலும் சாராய கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறி இருக்கிறார். அதனால்தான் அவரை கருப்பு காந்தி என்று அழைத்தார்கள்.

    இன்றும் தமிழகத்தில் மதுவிலக்கு வர வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் காங்கிரஸ் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே எண்ணத்தில் இருக்கிறார். இதை அவரோடு உரையாடிய போது நான் நேரிலே அறிந்தவன். இப்போதும் படிப்படியாக மதுவிலக்கு அமல் செய்யப்படும் என்றுதான் கூறி வருகிறார்.

    எந்த காரியத்தையும் எடுத்தவுடன் ஒரேயடியாக செய்து விட முடியாது. அவ்வாறு செய்யும் போது அதற்கு எதிர் வினைகள் உருவாகும். தி.மு.க. அரசின் கொள்கையும், மது விலக்கு என்பதாக இருக்கிறது. எனவே தமிழகத்திலும் மது விலக்கை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மது விலக்கை அமல்படுத்த கோரி காங்கிரசும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
    • கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தபோதே இது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்போதே கூறினேன். சாதாரண சில்லறை வியாபாரத்துக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் பலனளிக்காததால் அப்போது மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர்.

    சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.

    இப்போது கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    ஆனால் ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்ற அடையாள சான்று தேவையில்லை, ஆதாரம் தேவையில்லை எனக்கூறியுள்ளது. அப்படி என்றால் இந்த நோட்டை பதுக்கி வைத்துள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய கருத்தும் தவறாகிவிட்டதே?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது.
    • மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் தி.மு.க. ஆட்சியில் சாதனை என்பதை விட மக்களுக்கு வேதனை தான் அதிகம். தாராளமாக புழங்கும் சாராயம் எங்கும் கொலைகள், கொள்ளைகள்.

    எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பார்களில் மது விற்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதை போலீசார் கண்டு கொள்வது கூட இல்லை.

    பா.ஜ.க.வை விமர்சிக்க தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. விரைவில் நாலாவது இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது. அவர் ஒரு தர்மயோகி என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டி வருகிறார்.

    அதனால் தான் வெளிநாட்டு பிரதமர் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெரும் அளவுக்கு எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காரணத்திற்காக இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்பது காங்கிரஸ் காணும் ஆட்சிக்கனவு. கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது. மன்னர் உடையை அணிந்து நானும் மன்னர் தான் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மன்னர் ஆக வேண்டுமே.

    தனது சொந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளவே முடியாத ராகுல் காந்தி எப்படி நாட்டை பிடிக்க முடியும். தமிழகத்தில் தி.மு.க.வின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி தமிழர்களுக்கு ஏழரை என்ற கதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    • மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்.

    புதுடெல்லி:

    தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பொதுப்பணித்துறை மேற்பார்வையில், டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம், கட்டுமான பணியை மேற்கொண்டது.

    சுமார் 2 ஆண்டுகளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் தாராளமாக அமரும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கும்போது, மக்களவையில் 1,280 உறுப்பினர்கள்வரை அமரலாம்.

    கட்டுமான பணி முடிந்தநிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், வருகிற 28-ந்தேதி திறக்கப்படுகிறது. அதை திறந்து வைக்குமாறு பிரதமர் மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி திறக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திறப்பு விழா தேதியான மே 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் ஆகும். அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ''இது, தேசத்தின் முன்னோர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்'' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். பாராளுமன்றமோ, சட்டம் இயற்றும் பிரிவாக உள்ளது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும்.

    மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா, ''புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்கக்கூடாதா?'' என்று கேட்டுள்ளார்.

    அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதிய கட்டிடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாக அமைப்பின் தலைவர். சட்டம் இயற்றும் அமைப்பின் தலைவர் அல்ல. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவை தலைவரோ கூட திறந்து வைக்கலாம்.

    அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது. பிரதமர் ஏன் தன்னுடைய நண்பர்களின் சொந்த பணத்தால் கட்டப்பட்டதுபோல் நடந்து கொள்கிறார்?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்கு அருகே பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. சர்வ மத பிராத்தனை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்.பி., மாநில எஸ்.சி.எஸ்.டி.துணை தலைவர் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ராஜீவ் அமைதி ஜோதி எடுத்து செல்லப்பட்டது. இந்த ஜோதி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்று அடைந்து அங்குள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    ×