search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது. #ENGvIND #INDvENG
    லீட்ஸ்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை சந்தித்தது. ஒருவர் கூட அரை சதத்தை எட்டவில்லை. லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். முன்னாள் கேப்டன் டோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. நடுவரிசைபேட்டிங்கில் ஏற்பட்ட சறுக்கலை இந்திய அணி சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

    அதேபோல் பந்து வீச்சும் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சு எடுபடவில்லை. காயத்தில் இருந்து தேறிவரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இந்த ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் களம் இறங்கும் பட்சத்தில் சித்தார்த் கவுல் கழற்றி விடப்படக்கூடும்.

    இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்டது. அந்த அணியில் ஜோரூட் சதம் அடித்து கலக்கினார். கேப்டன் இயான் மோர்கன், ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்தனர். பந்து வீச்சில் பிளங்கெட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோரின் செயல்பாடு அருமையாக இருந்தது. டேவிட் வில்லி பேட்டிங்கிலும் ஜொலித்தார். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டு, 20 ஓவர் போட்டி தொடரை போல் ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் சந்திக்கும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ்ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் அல்லது புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட். #ENGvIND #INDvENG
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விர்திமான் சகா இடம்பெற மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பணியை தொடருவார். #EnglandVsIndia #Saha
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் முடிந்ததும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான விர்திமான் சகா, டெஸ்ட் போட்டிக்கு திரும்பமாட்டார் என தெரிகிறது. ஐபிஎல் போட்டியின்போது அவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் குணமடையவில்லை. முழுமையாக குணமடைந்து உடற்தகுதி பெறுவதற்கு நான்கைந்து வாரம் ஆகலாம் என்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான்.  அவருக்குப் பதிராக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக களமிறங்குவார்.



    தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிந்ததும், டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #EnglandVsIndia #Saha
    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜேசன் ராய் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் அதிரடியாக ஆடி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    அடுத்து இறங்கிய டேவிட் வில்லே அதிரடியாக ஆடினார். லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட். இது சர்வதேச அளவில் 12-வது சதம். டேவிட் வில்லே 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இறங்கினர். ரோகித் 15 ரன்னிலும் ஷிகர் தவான் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவ்ருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். தோனி 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

    அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளங்கெட் 4விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. #ENGvIND #INDvENG
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும். தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை கதிகலங்க வைத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்து வீச்சு மீது இன்றைய ஆட்டத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த ஆட்டத்தை ஜூலை 15-ந்தேதி நடத்த தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை மனதில் கொண்டு, ஒரு நாள் இடைவெளி விட்டு உடனடியாக வைத்து விட்டார்கள். குல்தீப் யாதவின் பவுலிங்கை, வீடியோ காட்சிகள் மூலம் அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆயத்தமாக, இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த அவகாசம் போதுமா? என்று தெரியவில்லை.

    ஆனாலும் சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #ENGvIND #INDvENG
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மோதுகின்றன.

    லீக் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம், இந்த தொடரில் பிரமிக்கத்தக்க வகையில் விளையாடியது. கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. அரைஇறுதியில் பிரான்சிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியை தழுவியது.

    1986-ம் ஆண்டில் 4-வது இடம் பிடித்ததே உலக கோப்பையில் பெல்ஜியத்தின் சிறந்த நிலையாகும். இந்த முறை மேலும் ஒரு படி முன்னேறும் வேட்கையில் இருக்கிறார்கள். எடன் ஹசார்ட், ரோம்லு லுகாகு, பெல்லானி, கெவின் டி புருன் உள்ளிட்டோர் பெல்ஜியம் அணியில் நல்ல பார்மில் உள்ளனர்.

    இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அரைஇறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை கோட்டை விட்டது. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி அதன்பிறகு உயரிய நிலையுடன் தாயகம் திரும்புவதில் ஆர்வம் காட்டும்.

    இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்து தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார். இந்த ஆட்டத்திலும் ஒன்றிரண்டு கோல்கள் போட்டால் அந்த விருது அவருக்கு உறுதியாகி விடும். ஏற்கனவே லீக் சுற்றில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

    3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.161 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.148 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

    இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் கூறுகையில், ‘அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களது வீரர்களுக்கு கடந்த சில நாட்கள் மனரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வழியாக வீரர்கள் நேற்று மீண்டும் பயிற்சியை தொடங்கினர். இந்த உலக கோப்பையில் பெல்ஜியத்தின் பயணம் பிரமாதமாக இருந்தது. வெற்றியுடன் இந்த தொடரை முடிக்க அவர்கள் விரும்புவார்கள். நாங்களும் அப்படி தான். இந்த உலக கோப்பையில் நாங்கள் முன்னணி அணிகளை வீழ்த்தவில்லை. அதனால் இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #FIFA2018 #England #Belgium
    இங்கிலாந்து எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு அபாரமாக இருந்து என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #ViratKohli
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று நாட்டிங்காமில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் (53) ஜோஸ் பட்லர் (50) அரை சதம் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 40 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ரோகித்சர்மா-கேப்டன் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோகித்சர்மா சதம் அடித்தார். விராட் கோலி 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 137 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் ரன் குவிக்க உகந்தது என்பதை அறிவோம். ஆனால் நடு ஓவர்களில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பந்துவீச்சு தாக்கம் திருப்புமுனையாக இருந்தது. முதல் 10 ஓவருக்கு (வேகப்பந்து வீச்சு) பிறகு அவர்கள் சுழற்பந்து வீச்சில் திணறுவார்கள் என்பதை அறிவோம். குல்தீப்யாதவ் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதுவரை நான் ஒரு நாள் போட்டியில் இதுபோன்ற சிறந்த பந்து வீச்சை பார்த்ததில்லை என நினைக்கிறேன். அவர் தன்னம்பிகையுடன் இருக்க விரும்புகிறோம். ஏனென்றால் அவர் ஒரு நாள் போட்டியில் மேட்ச் வின்னராக இருக்கிறார். நீங்கள் விக்கெட் எடுக்க வில்லை என்றால் (குல்தீப் யாதவின் டெஸ்ட் வாய்ப்பு) அது மிகவும் கடினமாக இருக்கும். சில நாட்களில் டெஸ்ட் அணி தேர்வு செய்ய இருக்கிறோம்.அதில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதை பார்த்தால் குல்தீப் யாதவை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது.

    அங்குள்ள வானிலை அற்புதமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வு இல்லை. ஆனால் எங்கள் முன்பு கடினமாக கிரிக்கெட் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #ViratKohli
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். #FIFA2018 #fifa2018 #England #Belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து திருவிழா முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன.

    இறுதிப்போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இதில் 1998-ம் சாம்பியனான பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    அதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை (14-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி 3-வது இடத்தை வெல்லபோகிறது? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் மோதுவது இது 2-வது முறையாகும். ‘லீக்’ ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. 2002-ல் பிரேசில்- துருக்கி அணிகள் 2 தடவை மோதின.

    இந்தப்போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதியில் 0-1 என்ற கணக்கில் பிரான்சிடம் தோற்றது.

    பெல்ஜியம் அணி 1986-ல் 4-வது இடத்தை பிடித்தே சிறந்த நிலையாக இருக்கிறது. தற்போது அதில் இருந்து முன்னேற்றம் காண இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசாட், லுகாகு, டுபுரு யன், பெலானி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    1966-ம் ஆண்டு சாம்பியான அந்த அணி இதற்கு முன்பு 1990-ல் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் தோற்று இருந்தது. தற்போது அதே மாதிரி நடந்துவிடாமல் இருக்க வெற்றி பெற போராடும். இங்கிலாந்து அணியில் ஹாரிகேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    இங்கிலாந்து அணி அரை இறுதியில் குரோஷியாவிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #FIFA2018 #fifa2018 #England #Belgium
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. #ENGvIND #IndiavEngland
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தொடர்ந்து ஜோ ரூட்டையும், பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார். 

    5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்சும் ஜோஸ் பட்லரும் ஜோடி சேர்ந்தனர். ஜோஸ் பட்லர் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களும், சாஹல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆடினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 59 ஆக இருந்தபோது ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

    ஒருபுறம் ரோகித் சர்மா சதமடிக்க, மறுபுறம் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 167 ரன்கள் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி 75 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்னுடனும், ராகுல் 9 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND #IndiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்து வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் நாளை நடக்கிறது. #ENDvIND #INDvEND
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங் காமில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    கடைசியாக 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இங்கிலாந்தில் விளையாடிய போது 5 போட்டிகொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல தற்போதைய இந்திய அணியும் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

    யசுவேந்திர சாஹல்- குல்தீப் யாதவின் பந்துவீச்சை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.

    பேட்டிங்கில் கேப்டன் கோலி, ரோகித்சர்மா, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் தொடரில் வாய்ப்பு கிடைக்காத தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடரிலாவது இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இங்கிலாந்து உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் திகழ்கிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 97-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 96 ஆட்டத்தில் இந்தியா-52-ல், இங்கிலாந்து-39-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, டோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

    இங்கிலாந்து: மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோரூட், பென்ஸ்டோகஸ், ஜேக்பால், டாம் குர்ரான், புளுன்கெட், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட். #ENDvIND #INDvEND
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #FIFA2018 #FifaWorldCup2018 #England #Croatia
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது.

    ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை நையபுடைத்து எடுத்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையில் சாய்த்தது.

    2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்துள்ள குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டும் வேட்கையில் வரிந்து கட்டுகிறது. அந்த அணிக்கு பிரதான பலமே நடுகளம் தான். கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், (2 கோல் அடித்துள்ளார்), இவான் ராகிடிச்சும் நடுகள பகுதியின் இரட்டை தூண்கள் ஆவர். உலகின் மிகச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படும் இவர்களிடம் இருந்து பந்தை தட்டிப்பறிப்பது எளிதல்ல. ரஷியாவுக்கு எதிரான கால்இறுதியில் மோட்ரிச்சின் கால்களை பந்து 139 முறை தொட்டு பார்த்தது. அதில் 102 முறை சக வீரர்களுக்கு பந்தை கடத்தி கொடுத்தது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

    இவர்களை தவிர்த்து மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் குரோஷிய அணி குறிப்பிட்ட வீரரை சார்ந்து இருந்ததில்லை. நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்திருப்பது அதற்கு உதாரணமாகும். தசைப்பிடிப்பால் அவதிப்படும் கோல் கீப்பர் டேனிஜெல் சுபசிச் களம் காண்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை துரத்தியது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி 52 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளது.

    இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் நம்பிக்கை வீரர்களாக மின்னுகிறார்கள். சுவீடனுக்கு எதிராக இங்கிலாந்து அணி கச்சிதமாக செயல்பட்டதால் இந்த ஆட்டத்தில் அணியில் மாற்றத்தை செய்ய பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் விரும்பவில்லை.

    அந்த அணியினர் நேற்று வித்தியாசமாக, ரப்பரால் ஆன சிக்கன் போன்ற பொம்மைகளை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் அதனை வேகமாக தூக்கி போட்டு பிடித்தும், சக வீரர்களிடம் இருந்து இந்த பொம்மை சிக்கனை பறிப்பது போன்றும் பயிற்சி மேற்கொண்டனர். இந்த மாதிரியான பயிற்சி இன்றைய ஆட்டத்தில் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    குரோஷிய வீரர் டேஜன் லோவ்ரென் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர். கடந்த சில சீசன்களில் அவர் 25 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை களத்தில் காட்டுவேன்’ என்றார்.

    இவ்விரு அணிகளும் தகுதி சுற்று, நட்புறவு போட்டிகளில் மோதியுள்ளன. ஆனால் உலக கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும். சரிசம பலத்துடன் திகழும் இவ்விரு அணிகளில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்பதை யூகிப்பது கடினமாகும். ஆட்டம் இன்னொரு முறை பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #FIFA2018 #FifaWorldCup2018 #England #Croatia
    ×