என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96179"
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பகலும்- இரவும் என மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பல நோயாளிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களின் உறவினர்களும் அவர்களுக்கு துணையாக ஆஸ்பத்திரியின் வெளிப்புற வளாகத்தில் இருப்பார்கள். இவர்களில் பலர் ஆஸ்பத்திரியின் வளாகத்தில் இரவில் படுத்திருப்பார்கள்.
இதேபோல் நேற்று இரவும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மேல்தளத்தில் உள்ள சுவர் (சிலாப்) திடீரென இடிந்து கீழே விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் சிலாப் இடிந்து கீழே விழுந்ததில் அங்கு படுத்திருந்தவர்கள் மீது விழுந்தது.
இதில் ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 28) பேக்கரி தொழிலாளி, பொள்ளாச்சி கூட்டூர் தென்சங்க பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) எலக்ட்ரிஷியன், ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி அடுத்த பாலப்பாளையம் பழனியப்பன் (60) கூலி தொழிலாளி, ஈரோடு எஸ்.கே.எம். காலனியை சேர்ந்த ராமாயி (70), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்த விஜய்பாபு (56) தறிதொழிலாளி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் விஜய்பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். ஈரோட்டில் தறி பட்டறையில் வேலை பார்க்க வந்த இவர் இரவு நேரத்தில் ஊருக்கு போகாமல் ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து தூங்கினார். மேல் சிகிச்சைக் காக இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகள் சுவேதா (வயது 23). கோவை கல்வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சுபஸ்ரீ (23).
இவர்கள் இருவரும் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தனர். பயிற்சிக்காக கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் மொபட்டில் சென்று வந்தனர். வழக்கம் போல நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர்கள் மாலையில் மருத்துவ கல்லூரிக்கு திரும்பினர். அப்போது சுவேதா மொபட்டை ஓட்டினார். சுபஸ்ரீ பின்னால் அமர்ந்திருந்தார்.
மொபட் கொங்கணாபுரம்-மகுடஞ்சாவடி சாலையில் அழகானூர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கொங்கணாபுரம் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அவர்கள் படிக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுபஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் சக மாணவ-மாணவிகள் கதறி அழுதனர்.
சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் அருகே உள்ள தமிழக பகுதியான நல்லப்பரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 33). விவசாயி. இவரது மனைவி கலைவாணி.
அன்பு கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீராம்பட்டினம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டு ஓரம் நின்று கொண்டிருந்த காரில் மோதினார்.
இதில், படுகாயம் அடைந்த அன்புவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்பு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டிவனம்:
நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம்:
அரக்கோணம் காந்திநகரை சேர்ந்தவர் ராணி (வயது 40). இவர் இன்று காலையில், வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்ல சில தொழிலாளர்களுடன் அரக்கோணம் சுவால்பேட்டை மேட்டுத்தெருவில் உள்ள ஜானி என்பவரின் டீக்கடை முன்பு நின்றிருந்தார்.
அப்போது, திருத்தணி நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென நிலைதடுமாறி டீக்கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் பலரின் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
மேலும் அரக்கோணம் சிறுணமல்லியை சேர்ந்த சந்திரன், காந்தி நகரை ஜீவ ரத்தினம், நெமிலியை சேர்ந்த ராஜவேலு மற்றும் மங்கம்மாபேட்டையை சேர்ந்த சேகர் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு போராடிய அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சேகரை தவிர மற்ற 3 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் சீனிவாசனை (48) கைது செய்தனர்.
காருக்குள் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, குழந்தை உள்பட 4 பேர் இருந்தனர். இவர்கள், அரக்கோணம் நேதாஜி நகரில் நடந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தபோது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுல்தான்மைதீன் (வயது 55). இவர் மதுரையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார்.
இன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
பாண்டாங்குடி விலக்கு அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
காரில் இருந்த சுல்தான் மைதீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தினர் மீரா, அசார், வஜிதா, பாத்திமா, சிறுமிகள் அமீரா, சபீனா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய 7 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சபீனாவை தவிர மற்ற 6 பேரின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, இன்ஸ்பெக்டர் பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சி:
பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த சிலர் தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் நேற்றிரவு பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர்.
காரை கர்நாடகா மாநிலம் கோலார் கோல்ட் பீல்ட் உருகம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 27) ஓட்டினார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ரெங்கமலை கணவாய் அருகில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறிய கார், சாலையின் சென்டர் மீடியனில் மோதி மறுபுறம் உள்ள சாலையில் பாய்ந்தது.
அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து பரமக்குடிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்து, இடி பாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் கே.ஆர்.புரம் விஜினிபுரம் குல்சார் பில்டிங் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்த பிரட்டிசாமுவேல், ராக் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பெரணாம்பட்டுவை சேர்ந்த குமார் (50) ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர்.
மேலும் பெங்களூர் கே. ஆர். புரத்தை சேர்ந்த மேரி அன் ஜாய்ஸ்(45), பெங்களூர் ராமமூர்த்தி நகர் நாராயணரெட்டி லேஅவுட் பகுதியை சேர்ந்த கிரேசி கீர்த்திகா (18), ரூத் (45), டிரைவர் தினேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலியான 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து ஏற்பட்டது எப்படி? என்று தெரியவில்லை. டிரைவர் தினேஷ் தூங்கிய தன் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான குமார் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணைநல்லூர்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த மனக்குடி கிராமத்தை சேர்ந்த 50 பேர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு ஆம்னி பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி முன்னால் சென்ற மற்றொரு ஆம்னி பஸ்சின் மீது மோதியது.
இதில் அந்த ஆம்னிபஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பரமகுடியை சேர்ந்த அங்குச்சாமி (வயது 62), பால்ராஜ் (55), கருப்பையா (65), சுப்பிரமணியன் (64), முருகேசன் (58), பிரபாகரன் (29) உள்பட 28 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 28 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகன் சண்முகசுந்தரம் (35). இவர் சிவகாசியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாத்தூர் ஓடைப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோதியதில் சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார்.
அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 38). தொழில் அதிபர். இவர் செஞ்சி பகுதியில் உரக்கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை லட்சுமிநாராயணன் மற்றும் வக்கீல்கள் சக்திவேல் (42), ஆதிமூலம் (55), சின்னையா வீரப்பன் (40), சின்னதுரை (40), ஏழுமலை (45) ஆகியோர் ஒரு காரில் இன்று காலை செஞ்சியில் இருந்து ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.
காரை செஞ்சியை சேர்ந்த டிரைவர் நிஜாமொய்தீன் (30) ஓட்டினார். அந்த கார் காலை 11 மணி அளவில் செஞ்சி அருகே வளத்தியை அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் திடீரென்று திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த லட்சுமிநாராயணன், சக்திவேல், கார் டிரைவர் நிஜாமொய்தீன் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சின்னையா வீரப்பன், ஏழுமலை, ஆதிமூலம், சின்னதுரை ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
சென்னையில் இருந்து நேற்றிரவு அரசு பஸ் 40 பயணிகளுடன் தருமபுரிக்கு புறப்பட்டது. பஸ்சை வெள்ளக்குட்டை பகுயை சேர்ந்த கெங்காதரன் (வயது 35) டிரைவர் ஓட்டிச் சென்றார்.ஆம்பூர் அடுத்த அய்யனூர் அருகே இன்று அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.
விபத்தில் பஸ் டிரைவர் கெங்காதரன். கண்டக்டர் சந்திர சேகர். பயணிகள் ராமசாமி (55). மாதையன் (44). கோவிந்தராஜன் ( 40). காவேரி (65). சிவகாமி (37). தங்கராஜ் (50). வெண்ணிலா (20). காந்தி (30). புஷ்பா (50). கவிதா (45). பிடல்கோஸ் (32). சந்திரா (50). உள்பட 26 பேர் கடுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்