search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96359"

    ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கூறியுள்ளார். #Mayawati #Farmer
    லக்னோ:

    சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 (ஒரு மாதத்துக்கு ரூ.500) நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். உத்தரபிரதேசத்தில் இந்த திட்டம் தொடங்கி வைத்த சில மணி நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசை குறைகூறினார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். தங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்கு லாபகரமான விலையையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறு பணத்தை கொடுக்கும் பா.ஜனதாவின் மனநிலை கோரமானது மட்டுமின்றி ஆணவப்போக்கிலானது. தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜனதா தவறிவிட்டது’ என்று கடுமையாக சாடினார்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால், கொஞ்சம் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.17 கொடுப்பது வெறும் ஏமாற்றுவேலை என்று கூறியுள்ள மாயாவதி, விவசாயிகள் பிரச்சினையில் பா.ஜனதா மட்டமான முறையில் சிந்திப்பதாகவும், தங்கள் அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.#Mayawati #Farmer
    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி என்பது ஜெயலலிதா பிறந்தநாளில் வரலாற்று சிறப்பு திட்டம் என பியூஸ்கோயல் கூறியுள்ளார். #Piyushgoyal #Farmers

    சென்னை:

    இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

    தமிழகத்தில் இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரி கால் நடை மருத்துவக் கல்லூரி பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து 200 விவசாயிகள் விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

    இந்த விழாவில் மத்திய மந்திரி பியூஸ்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களுக்கு எனது உயர்ந்த மரியாதையை இந்த நேரத்தில் செலுத்துகிறேன்.

    தமிழகத்தில் மிகப்பெரும் தலைவராக இரும்பு பெண்மணியாக விளங்கியவர் ஜெயலலிதா.

    அவரது நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. பிறந்த நாளான இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாம் அவருக்கு அளித்துள்ள உயரிய மரியாதை ஆகும்.


    அன்னதான பிரபுக்களாக விளங்கும் விவசாயிகளுக்கு நாம் உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களது நலன் பற்றி எந்த தலைவர்களும் சிந்திக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் நாடுமுழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

    தமிழகத்தில் 70 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்த பணம் விவசாயிகளின் எந்த விதமான கடன் தொகையிலும் பிடித்தம் செய்யப்படமாட்டாது. நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்று வேறு எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.

    2004-ம் ஆண்டில் இருந்து 2009 வரை காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்காக ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜனதா அரசு ஒரு வருடத்திலேயே ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது.

    விவசாயிகளைப் போன்று மீனவர் நலனிலும் மத்திய அரசு அக்கறை காட்டி வருகிறது. 4 சதவீத வட்டியில் அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 1½ கோடி மீனவர்கள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு பியூஸ்கோயல் பேசினார்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மற்றும் வானதி சீனிவாசன், பி.டி.அரசகுமார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன், மீன் வளத்துறை இயக்குனர் விஜயன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். #Piyushgoyal #Farmers

    விவசாயத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். #Nallakannu
    சேலம்:

    சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 26-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை சேலம் வந்த நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க உள்ளது. இது தேர்தலை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்ட நடவடிக்கை. விவசாயிகள் மீது உண்மையான அக்கறை உள்ள அரசாக இருந்தால் விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது, அப்பகுதி மக்களை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. தற்போது பிரதமர் மோடி தேர்தல் லாபத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.



    மேகதாது பகுதியில் கர்நாடக மாநில அரசு அணை கட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. காவிரி தமிழகத்திற்கு மிக முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 12 மாவட்டத்திற்கு விவசாயம் மற்றும் நீராதாரமாகவும், 9 மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணை கட்டினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசாயம் இன்றி, குடிநீரின்றி பாதிக்கப்படும். பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.

    தமிழகத்தில் 8 வழிச்சாலை தேவை இல்லை. ஏற்கனவே 3 வழிச்சாலை, 4 வழி பாதை உள்ளது. அதனால் பசுமை மரங்களை அழித்து உருவாக்கப்படும் 8 வழிசாலை தேவையில்லை.

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். விவசாயத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nallakannu
    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதம் வழங்குகிற வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த தொகை 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும். 2 ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) வரையில் சாகுபடி நிலம் வைத்திருக்கிற விவசாயிகள் அனைவரும் இந்த நிதி உதவியைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

    இந்த நிதி உதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். மார்ச் 31-ந்தேதிக்குள் முதல் தவணையை வங்கிக்கணக்குகளில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதில், “சாகுபடி செய்யத்தக்க 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்கு கூட்டாக இந்த வரையறைக்குள் சொத்து இருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகை விவசாயிகளில் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதுவும் வழிமுறையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அது வருமாறு:-

    * அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள், வகிக்கிறவர்களுக்கு கிடையாது.

    * மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மேயர்கள், முன்னாள் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட விவசாய குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது.

    * மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள், முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கான நிதி உதவி கிடையாது.

    * மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுகிற ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கும் கிடையாது.

    * கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடையாது.

    * பதிவு செய்துள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், கட்டுமான வல்லுனர்கள் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கான நிதி உதவி கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இரண்டாவது தவணையின்போது நிதி உதவி பெறுகிற விவசாயிகள் ஆதார் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
    விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், வேளாண்மையை எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    வேளாண்மைக் கருவிகளும், எந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், சிறு, குறு ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை எந்திரமயமாக்கலின் உப இயக்கம் திட்டங்களின் கீழ் டிராக்டர், பவர் டில்லர், சுழற்கலப்பை, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், நேரடி நெல் விதைப்புக் கருவி, விசை களையெடுக்கும் எந்திரங்கள் போன்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் 1080 பயனாளிகளுக்கு ரூ.783.71 லட்சம் மானிய விலையில் இத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகளை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை www.agrimachinery.nic.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவும், உழவன் செயலியின் வாயிலாகவும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தையும், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி வட்டார விவசாயிகள் 04562 - 252192 என்ற தொலைபேசி எண்ணிலும், சாத்தூர், சிவகாசி, வெம்பக் கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் 04563-289290 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மானாமதுரை அருகே பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    மானாமதுரை:

    மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கடந்த 2017–ம் ஆண்டிற்குரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் பல்வேறு பேராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டது. அதில் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து விவசாயிகள் கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சில கிராமப்புற கூட்டுறவு வங்கி செயலாளர்கள் இழப்பீட்டு தொகையை விவசாயிகளிடம் தெரிவிக்காமல் மானாமதுரை கூட்டுறவு வங்கிக்கு வரவழைத்தனராம்.

    தொடர்ந்து அவர்கள் மானாமதுரை அருகே உள்ள சூரக்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்களை மானாமதுரை கூட்டுறவு வங்கிக்கு வரவழைத்து அலைக்கழித்தனராம். இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, விவசாயிகளை வங்கிக்குள் அனுமதிக்காமல் வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டனர். இதனால் பலரும் வங்கி வாசலில் காத்துகிடந்தனர். கொளுத்தும் வெயிலில் பலரும் வங்கியில் பணம் எடுக்க காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை காத்துகிடந்தனர்.

    மதியத்திற்கு மேல் விவசாயிகள் ஒவ்வொருவராக வரவழைத்து பணம் வழங்கினர். மேலும் கிராமப்புற கூட்டுறவு வங்கி செயலாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினால் மட்டுமே இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை முழுமையாக கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றனர். #tamilnews
    திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் நடந்த பயிர் விளைச்சல் போட்டியில் மேல்பென்னாத்தூரை சேர்ந்த விவசாயி முதல் பரிசு பெற்றார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி அவர்கள் அறுவடை செய்த விளைச்சல்கள் கணக்கிடப்பட்டன.

    இதில் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி கலந்து கொண்டார். தனது நிலத்தில் 1 ஏக்கரில் பரிந்துரை செய்திருந்த டி.எம்.வி.13 என்ற ரக விதையை கொண்டு நிலக்கடலையை பயிரிட்டிருந்தார்.

    வழக்கமாக 1 ஏக்கரில் 20 மூட்டைகள் மட்டுமே மகசூல் பெற முடியும் என்ற நிலையில் சின்னத்தம்பி 30 மூட்டை நிலக்கடலை சாகுபடி செய்து சாதனை படைத்தார். பயிர் விளைச்சல் போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

    விவசாயி சின்னத்தம்பிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

    அப்போது வேளாண்மை இணை இயக்குநர் செல்வசேகரன், செங்கம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கிற விதத்தில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Farmer #CentralGovernment
    புதுடெல்லி:

    இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் இன்றைக்கு விவசாயிகள் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளாகவே விவசாயிகள் வேதனையில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

    அவர்களது மிகப்பெரிய மனக்குறை, கடன்களை வாங்கி சாகுபடி செய்தாலும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதுதான்.

    இந்த நிதி ஆண்டு, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக முடியப்போகிறது என்பதை அரசின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    டிசம்பர் மாத மொத்த விலை குறியீட்டு எண் விவரங்களை மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களாக எதிர்மறையாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, முதன்மை உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து உள்ளன.

    முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் ஜூலை மாதத்தில் மைனஸ் 2.1 சதவீதம், ஆகஸ்டு மாதத்தில் மைனஸ் 4 சதவீதம், செப்டம்பர் மாதத்தில் மைனஸ் 0.2 சதவீதம், அக்டோபர் மாதத்தில் மைனஸ் 1.4 சதவீதம், நவம்பர் மாதம் மைனஸ் 3.3 சதவீதம், டிசம்பர் மாதம் மைனஸ் 0.1 சதவீதம் என இருந்து இருக்கிறது.

    கடந்த 1990-ல் இப்படி முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் தொடர்ந்து இருமுறை எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்ததால், விவசாயிகளின் வருமானம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வளவுக்கும் கடந்த ஜூலை மாதம் 14 விவசாய பொருட்கள் மீதான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது. இருப்பினும் கரீப் பருவத்தில் (சம்பா) குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் தரவில்லை. ஏனெனில் பொருட்களுக்கு கிராக்கி குறைந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக ஆக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

    இருப்பினும் சமீபத்தில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், விவசாயிகள் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த தீர்மானம், “சமீப ஆண்டுகளில் பட்ஜெட்டில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி அரசு வழங்கப்பட்டுள்ள உரிய காலத்திற்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்ற நோக்கத்தை அடைவதில் இந்த தேசிய செயற்குழு நம்பிக்கை வைத்துள்ளது” என கூறப்பட்டு உள்ளது.

    விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் படுகிற இன்னல்களால்தான் சமீபத்தில் இந்தி பேசுகிற மாநிலங்களான சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாரதீய ஜனதா கட்சிக்கு தோல்வியை தந்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த தோல்வி வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்பதில் பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கையுடன் உள்ளது.

    எனவே தொடர்ந்து அவதிப்படும் விவசாயிகளின் நலன்களை பேணுகிற வகையில் அவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, 1 ரூபாயில் பயிர்க்காப்பீடு, விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஈடுகட்டுகிற வகையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்டவை பரிசீலனையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கூட்டணி அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
    சீர்காழி பகுதி விவசாயிகள் 15-ந்தேதி வரை உளுந்து- கடலைக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று அதிகாரி தகவல் கூறியுள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் பொ.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும்,பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறு, எள்,நிலக்கடலை,கோடை நெல்,தரிசுபருத்தி பயிரை காப்பீடு செய்ய ஒவ்வொரு பயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டு அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.கடன்பெறா விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள்,வங்கிகள்,மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு பிரிமியம் பயிர் தொகையாக உளுந்துபயிருக்கு ரு.214.50,பாசிப்பயிருக்கு ரூ.214.50,நிலக்கடலைக்கு ரூ.357.00,எள் பயிருக்கு ரூ.180.00 இவற்றிக்கு பிரிமியம் தொகை செலுத்த ஜனவரி 15ம் தேதி கடைசி நாளாகும்.

    கோடை நெல் சாகுபடிக்கு ரூ.442.50.கடைசி தேதி பிப்ரவரி 15 மற்றும் பருத்திக்கு ரு.354 கடைசிதேதி மார்ச் 15-ந்தேதி ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம்,கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது உதவி வேளாண்மை அலுவலரால் வழங்கப்படும் சாகுபடி சான்று, வங்கி கணக்குப்புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பயிர் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 65). விவசாயி. இவரது உறவினர் பாக்கியராஜ்(30). இருகுடும்பத்தினருக்கும் இடையே பொதுவாக இருந்த நிலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அதில் சரியாக தனக்கு பங்கு பிரிக்கப்படவில்லை என்றுகூறி பாக்கியராஜ் பிரச்சினை செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்காரவேலுதனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது பாக்கியராஜ் அங்கு சென்றார். இதையடுத்து இருவருக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பாக்கியராஜ் கீழே கிடந்த கட்டையை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக தாக்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தகராறை விலக்கினர். பின்பு பாக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சிங்காரவேலுவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிங்காரவேலு நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) சுகந்தி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாக்கியராஜை வலைவீசி தேடி வருகின்றனர். 
    கும்பகோணம் அருகே அணைக்கரையில் உள்ள விவசாயி தோட்டத்தில் முதலை புகுந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆறு, முதலைகள் நிறைந்த பகுதியாகும்.

    ஏராளமான முதலைகள், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கின்றன. கொள்ளிடம் ஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் செல்லும்போது ஆற்றுக்குள் இருக்கும் முதலைகள் வெளியே தென்படுவதில்லை.

    ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டால் முதலைகள் தண்ணீரை தேடி, ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் அணைக்கரை விநாயகம் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று திடீரென ஒரு முதலை புகுந்தது.

    அந்த முதலை எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.

    இதுகுறித்து திருவிடைமருதூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பள்ளத்தில் இருந்து வெளிவர முடியாமல் போராடிக்கொண்டிருந்த முதலை மீது கயிற்றை கட்டி மீட்டு, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விட்டனர்.

    கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை ஊருக்குள் வர தொடங்கி இருப்பதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. #tamilnews
    புயல் நிவாரணம் வழங்ககோரி அரசு அலுவலகம் முன்பு விவசாயிகள் பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #Farmers

    மன்னர்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்த ஆலாத்தூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 சதவீத மகசூல் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேச அரசு மறுத்து வருகிறது.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணைம் வழங்க வலியுறுத்தி பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் நீதி கேட்டு மன்னார்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் தினத்தன்று பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Farmers

    ×