என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96529"
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும், பகலும் பாராமல் கண் விழித்து விரைவாக செயல்பட்ட அனைத்துதுறை அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து சிறப்பாக பணிகளை ஆற்றியதற்கு தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறோம்.
மிக முக்கிய புயல் பாதிப்புக்கான இடமாக வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளது. அங்கு அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.
உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரிசெய்வதற்கும், வீடுகள் சேதம் அடைந்ததை சரிசெய்வதற்கும், சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும், மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்வதற்கும் உதவிட வேண்டும்.
தமிழக அரசு கஜா புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMDK #Vijayakanth #GajaCyclone #TamilnaduGovt
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.
இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆண்டவர் கோவில் அருகே செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரவுண்டானா அருகே கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். #vijayprabhakaran #vijayakanth #dmdk
வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சர்கார் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை பார்க்காமல் அதை பற்றி கருத்து கூறுவது தவறாகும். சர்கார் படம் குறித்த பிரச்சினையை நான் கவனித்து வருகிறேன். சினிமாவை, சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடுவது வேதனை அளிக்கக்கூடியது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்துக்கு தடை விதிக்க முடியாது. படம் வெளியே வந்து விட்ட பின் மீண்டும் காட்சிகளை நீக்குவது என்பது தணிக்கை குழு எதற்கு?, தணிக்கை செய்தவர்கள் தவறாக தணிக்கை செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது.
திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு படத்தை சர்ச்சைக்குள் கொண்டு சென்று படத்தை ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் அண்மை காலமாக விஜய் நடிக்கும் படங்களும் அவ்வாறு தான் வருகிறது. இனிவரும் காலங்களில் யோசித்து செய்ய வேண்டும்.
விஜயகாந்த் தலைமையில் தான் இயக்குனர் முருகதாசுக்கு திருமணம் நடந்தது. விஜய் நடித்து முருகதாஸ் இயக்கிய படத்துக்கு சர்ச்சை வந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும். தணிக்கை செய்த படத்துக்கு அ.தி.மு.க. தடை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே குளிர்விட்டு போன மாதிரி தான் இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.
ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா?, நடனம் ஆடினார்களா? அல்லது தீபாவளிக்கு வீடு, வீடாக சென்று இனிப்பு வழங்கினார்களா? என்றால் இல்லை.
டெங்கு, பன்றிக்காய்ச்சல், வேலையின்மை, குடிநீர் பிரச்சினை போன்ற அதிக அளவு மக்கள் பிரச்சினை இருக்கும்போது அதை எல்லாம் தீர்க்க வேண்டிய அமைச்சர்கள் ஒரு திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்று பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓட்டு போட்டு வெற்றிபெற செய்த மக்களுக்கு அமைச்சர்கள் நல்லது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Sarkar #Vijay #PremalathaVijayakanth
பண்ருட்டியில் தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார்.
விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது. தமிழகத்தில் தற்போது எல்லா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது.
ஓ.பி.எஸ். மீதான வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி முருகன், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரின் வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ளார்.
தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர்கள் சோதனை (ரெய்டு) பயத்தில் உள்ளனர். மக்கள் பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. தமிழக அரசு முடங்கி உள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததை சாதனை படைத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி வரவேண்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth
சென்னை:
தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக் கூட்டத்தில், அக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவையும் எதிர்க்கட்சியான தி.மு.கவையும் கடுமையாகச் சாடினார். அவரது பேச்சு வருமாறு:-
தமிழகத்தில் நிலையில்லாத அவல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியின் அவலத்தை தட்டிக்கேட்கும் இடத்தில் தி.மு.க. இருக்கிறது 98 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள ஸ்டாலின் என்ன ஆக்கபூர்வமான பணிகளைச் செய்தார்? எதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் தொடர வைக்கிறார் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வி.
20 தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உண்மையிலேயே, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொறுப்பு இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதைவிட்டுவிட்டு நாங்கள் பின்புற வழியாக வந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை என சப்பைக் காரணத்தைக் கூறுகிறார்.
உடனடியாக இந்த ஆட்சியை ஸ்டாலின் அகற்ற வேண்டும். பொறுப்பில்லாத ஆட்சி நடந்து கொண்டிருப்பதால்தான் தமிழகம் தற்போது அவலநிலையில் உள்ளது. குட்கா ஊழல், சி.பி.ஐ ரெய்டு என ஊழல் அரசாங்கம் நடைபெற்று வருகிறது.
வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லையே என்று கேட்டால், கஜானாவில் காசு இல்லை என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு அமைச்சர் வீட்டு கஜானாவிலும் கோடிகள் புரளுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார். #premalatha #mkstalin #tngovt
தே.மு.தி.க. தலைமை கழகத்தில் இன்று பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது பிரேமலதா பேசியதாவது:-
இப்போது எல்லோரும் ‘மீடூ’ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் ‘மீடூ’ எப்படி வரும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அவர் வெளிநாடு செல்வார்.
அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சி தே.மு.தி.க. தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இவ்வாறு பிரேமலதா பேசினார். #Vijayakanth #PremalathaVijayakanth #DMDK
சென்னை:
கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா, மாநில நிர்வாகிகள் மோகன்ராஜ், பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவேன், மாவட்ட செயலாளர்கள் தினகர், அனகை முருகேசன், மதிவாணன். பிரபு, ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சிலரது பொறுப்புகளை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்த டாக்டர் இளங்கோவன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்தும், அவைத் தலைவராக இருந்து வந்த அழகாபுரம் மோகன்ராஜ் கொள்கைபரப்பு செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ.க., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரேமலதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பிரேம லதாவுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரேமலதா இதுவரை கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் கட்சி பொதுக் கூட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அக்கோ நகர் 3-வது தெருவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு கட்டப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பணி தொடங்கியது. சமீபத்தில் வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் அப்பாராவ் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு வளர்க்கப்படும் 3 கறவை மாடுகளையும் அப்பாராவே பராமரித்து வந்தார். இவை வேங்கை இன மாடுகள் ஆகும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாடுகள் வீட்டிலேயே கட்டப்பட்டிருந்தன. நேற்று காலையில் அப்பாராவ் எழுந்து பார்த்த போது 2 மாடுகளை காணவில்லை. அதை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி அவர் விஜயகாந்த் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். மாடுகள் திருட்டு போனது தொடர்பாக பூந்தமல்லி நகர தே.மு.தி.க. செயலாளர் ஸ்ரீராம் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விஜயகாந்த் வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் பார்த்த போது மாடு திருட்டு போன காட்சிகள் சரியாக பதிவாகவில்லை. விஜயகாந்த் வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் மாட்டை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலில் குதித்து வெற்றியை ருசித்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் அவர் எட்டி பிடித்தார்.
விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடங்கிய நாளில் இருந்தே உடன் இருக்கிறார். விஜயகாந்த் பங்கேற்கும் கூட்டங்களில் தவறாமல் அவரும் கலந்து கொள்வார்.
விஜயகாந்த் பங்கேற்க முடியாத நிகழ்ச்சிகளில் பிரேமலதா தனியாகவும் கலந்து கொண்டு உள்ளார்.
விஜயகாந்தின் மகன்களான விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அரசியல் வாடை இன்றியே இதுநாள் வரையில் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை பொய்யாக்கும் வகையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் திடீரென அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளார்.
விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் விஜய் பிரபாகரன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-
சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் காஞ்சீபுரத்துக்கு அடிக்கடி சென்றுள்ளேன். எனக்கு பிடித்தமான ஊர் காஞ்சீபுரம்தான். ஏன் என்றால் சங்கர் படத்தை போல காஞ்சீபுரம் பிரமாண்டமாக காட்சி அளிக்கும்.
நான் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விடட்டுமா? என்று அப்பா கேட்டார். இதற்கு பதில் அளித்த நான், “விஜயகாந்த் மகனாக வெற்றி பெற விரும்பவில்லை. பிரபாகரனாகவே வெற்றி பெற விரும்புகிறேன் என்று கூறினேன்.
எனது விருப்பப்படியே நான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க அனுமதி அளித்தார். எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்தே செய்ய வேண்டும் என்று அப்பா கூறுவார். அதன்படி நான் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
எனது தொழில் விஷயமாக அருகில் உள்ள பெங்களூருக்கு அடிக்கடி சென்று உள்ளேன். ஆனால் அங்குள்ள வளர்ச்சி சென்னையில் இல்லை. இது போன்ற விஷயங்கள் எல்லாம் மாற்ற வேண்டும்.
எனக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அது புனிதமான பெயர். எப்போதுமே மனதுக்கு பிடித்த விஷயங்களை விரும்பி செய்வேன்.
இப்போது நான் எந்த நாட்டுக்கு சென்றாலும் எனக்காக 100 பேர் அங்கு நிற்பார்கள். பேட்மிண்டன் போட்டிக்கான அணியை வாங்கி இருந்தேன். அதில் தான் பி.சி.சிந்து சாதித்து காட்டினார். எப்போதுமே ஒரே மாதிரி சிந்தனை இல்லாமல் மாற்றி மாற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். பிடித்த விஷயத்தை செய்தால் அதில் எளிதாக வெற்றி பெற முடியும்.
இப்போது தெரிந்தோ தெரியாமலோ எனக்கு பிடித்த இடத்தில் (அரசியல் மேடை) நின்று கொண்டு இருக்கிறேன். இதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும். எனக்கு வைத்துள்ள பிரபாகரன் என்ற பெயரை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்.
கூட்டத்துக்கு புறப்படும் போது அப்பா 2 விஷயங்களை என்னிடம் சொல்லி அனுப்பினார். கட்சியினரிடம் சீக்கிரம் வருவேன் என்று சொல்லு. கூட்டத்தை சீக்கிரம் முடிக்க சொல். மழை வருவது போல் இருக்கிறது. பெண்கள் எல்லாம் சீக்கிரம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
10 ஆயிரம் பேர் என்ன? ஒரு லட்சம் பேர் வந்தாலும் தே.மு.தி.க.வை அசைக்க முடியாது. அதில் இருந்து ஒரு செங்கலைகூட உருவ முடியாது. என்னோடு இணைந்து செயல்பட இளைஞர்கள் பலர் கைகோர்ப்பார்கள்.
கண்டிப்பாக நான் சாதித்து காட்டுவேன். அதற்கு நீங்களும் கை கொடுக்க வேண்டும்.
எனக்கு எப்போதுமே திமிரு அதிகம். அந்த திமிரோடு சொல்லிக் கொள்கிறேன். சத்தியமாக தே.மு. தி.க. ஆட்சியை பிடிக்கும். நீங்கள் எல்லோரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனகை முருகேசன் அங்கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் விரைவில் காலில் செருப்பு அணிவீர்கள். தாடியையும் எடுப்பீர்கள். இது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு விஜய் பிரபாகரன் பேசினார்.
காஞ்சீபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளரான அனகை முருகேசன் விஜயகாந்த் முதலமைச்சர் ஆகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விழா மேடையில் தே.மு.தி.க. நிர்வாகிளும், தொண்டர்களும் விஜய் பிரபாகரனுக்கு மாலைகள், சால்வைகளை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினார்கள். “தே.மு.தி.க.வின் எதிர் காலமே”, “இளைஞர்களின் எழுச்சி தளபதியே”, கேப்டனின் தளபதியே” என்பது போன்ற கோஷங்களையும் தொண்டர்கள் எழுப்பினர்.
பின்னர் விஜய் பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன். எனக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பொறுப்பை தேடிப்போவது அரசியல் இல்லை, சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்காக நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதை அனைத்தையும் செயல்படுத்தப்போகிறேன். கட்சியில் பொறுப்பு வகிப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.
இது ஒருநாள் கூத்து இல்லை. என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைத்தான் நானும் செய்யப்போகிறேன்.
இதற்காக இளைஞர்கள் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #vijayprabhakaran #vijayakanth #DMDK
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரன் பேட்மிண்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார்.
தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார்.
இன்று அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க கட்சியின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய்பிரபாகரன் கலந்துகொள்ள உள்ளார். அவருக்கு இது முதல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-
‘விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.
அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்’
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விஜய் பிரபாகரன் கட்சிக்கு வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படலாம்? என்று கேட்டபோது:-
கட்சியில் வெகுகாலமாக இளைஞரணி செயலாளர் பொறுப்பை தலைவர் காலியாகவே வைத்துள்ளார். யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்பில் விஜய் பிரபாகரன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறினர். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே. மு.தி.க. கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சியானது.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விதிமுறைகளை மீறியதாக அப்போதைய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான திருவெறும்பூர் செந்தில்குமார், பார்த்தீபன், சந்திரகுமார் உள்பட 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
அதனை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருவெறும்பூரில் 30.3.2013 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்போதைய தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளராக இருந்த ஏ.ஆர்.இளங்கோவன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக இளங்கோவன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.இளங்கோவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஏ.ஆர்.இளங்கோவன் தற்போது சேலம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். கோர்ட்டில் ஆஜராக வந்த அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால், சரவணன், பெருமாள், பகுதி செயலாளர் நூர்முகமது உள்பட பலர் உடன் வந்தனர். #Jayalalithaa #ADMK #DMDK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்