search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96553"

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில், பசுவை கடத்தியதாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் சமீபத்தில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ரக்பர்கான் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், இருக்கும்போது அங்கு வந்த ராம்நகர் போலீசார் அடிபட்டவரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், பசுக்களை பாதுகாப்பதிலும், அவற்றை  கோஷாலாவுக்கு கொண்டு செல்வதிலுமே கவனம் செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி கரன் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார். பசுக்களை கடத்துவதாக பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர், ஆனால் ரக்பர்கான் கொலை வழக்கில் அவர்களிடம் எவ்வித கேள்வியும் எழுப்பப்படவில்ல எனவும் அவர் குற்றம்சாட்டினார். 4 மணி நேரமாக ரக்பர்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போலீசார் காட்டிய அஜாக்கிரதை காரணமாகவே அந்த வாலிபர் இறந்ததாகவும் எம்.பி கரன் சிங் தெரிவித்தார்.

    மேலும், உன்னாவோ கற்பழிப்பு வழக்கை மேற்கோள் காட்டிய எம்.பி கரன் சிங் குற்றவாளிக்கு ஆதரவாகவே பா.ஜ.க தலைவர்கள் இருந்தார்கள் என தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பாராளுமன்றத்தில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

    பசு பாதுகாப்பு என்ற பெயரில் அல்வார் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதாவை சேர்ந்த பூல் சிங் மீனா தனது 59 வயதில் பி.ஏ. படித்து வருகிறார். #PhoolSinghMeena #BJP
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் பா.ஜனதாவை சேர்ந்த பூல் சிங் மீனா (வயது 59).

    இவர் சிறுவயதில் தன்னுடைய தந்தையை இழந்ததால் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விவசாய தொழிலுக்கு சென்றுவிட்டார்.

    இதன் காரணமாக தன்னுடைய தொகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் சேர அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

    அந்த வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெரும் மாணவிகள் இலவச விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

    இப்படி தன்னுடைய தொகுதியில் அனைவருக்கும் கல்வி என்கிற நோக்கில் நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்து வரும் பூல் சிங் மீனாவுக்கு தான் கல்வி கற்கவில்லை என்ற வருத்தம் நீண்ட காலமாக இருந்து வந்தது. #PhoolSinghMeena #BJP #Tamilnews

    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத கைக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிய 19 வயது வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2-வது மாநிலமாக ராஜஸ்தான் அரசும் இதேபோல் கடந்த மார்ச் மாதம் புதிய சட்டத்தை இயற்றியது.

    இந்நிலையில், கடந்த 9.5.2018 அன்று ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் லக்‌ஷ்மன்கர் பகுதியில் தாதியின் பராமரிப்பில் இருந்த 7 மாத பெண் குழந்தையை பறித்து சென்ற ஒருவன், அருகாமையில் உள்ள கால்பந்து திடலில் வீசிச் சென்றான். குழந்தையை தேடித் திரிந்த பெற்றோர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்களது மகளை கண்டெடுத்து, அல்வார் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த கோர சம்பவம் தொடர்பாக, அந்த தாதியின் உறவினரான 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அறிமுகப்படுத்திய புதிய சட்டம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் அதிவிரைவு நீதிமன்றத்தில் பிடிபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    13 முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்தார். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் இந்த பாதகத்தை செய்த குற்றவாளிக்கு, புதிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். ராஜஸ்தான் அரசின் புதிய சட்டத்தின் கீழ் முதன்முறையாக கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்த வாலிபருக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajasthan
    ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த மெக்சிகோவைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்த ஐந்து நட்சத்திர ஓட்டல் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஓட்டல் மேலாளர் ரிஷி ராஜ் சிங் (40), மெக்சிகோ நாட்டு பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றுள்ளார். அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதுதொடர்பாக மெக்சிகோ நாட்டு பெண்கள் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ரிஷிராஜ் சிங் அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 
    உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்#InternationalYogaDay2018
    ஜெய்ப்பூர்:

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



    மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையில் வழங்கப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இன்று யோகா பயிற்சியும், யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. #InternationalYogaDay2018
    ராஜஸ்தானில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவியை ஒரு நாள் கலெக்டராக்கி மாவட்ட நிர்வாகம் கவுரவித்துள்ளது. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இவரது எதிர்கால விருப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாவட்ட கலெக்டராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், அவரை தன் இருக்கையில் அமரவைத்து கவுரவித்தார்.

    இதுதொடர்பாக, கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற வந்தனா குமாரி, தான் கலெக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ஆசையை ஊக்குவிக்க முடிவு செய்தோம். எனவே, அவரை ஒரு நாள் கலெக்டராக என் இருக்கையில் அமர வைத்தேன். அங்கு அவர் சில பணிகளை மேற்பார்வையிட்டார் என தெரிவித்தார்.

    முதலிடம் பிடித்த மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #Rajasthan #VandanaKumari #OneDayCollector
    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, 70 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது? என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #Jaipur #Amitshah #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பங்கேற்றார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: 

    சமீப காலமாக நடைபெற்ற எட்டு இடைத்தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு எதிராக இன்னும் 14 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறோம்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டியது, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கியது என பல்வேறு மக்கள் நலப்பணிகள் என பட்டியல் நீளுகிறது. ஆனால், ராகுல் இது போதாது, அது போதாது என்கிறார்.



    நீங்கள் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?  மூன்று தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் எதுவும் செய்யாததால் தான் எங்களால் மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்க முடிந்தது, ஏழைத் தாய்மார்களுக்கு சிலிண்டர்களை வழங்க முடிந்தது.      

    அவர் விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது என குற்றம் சாட்டினார். #Jaipur #Amitshah #RahulGandhi 
    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது யார்? என்பதை நிர்ணயிக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.#IPL2018 #RR #KKR
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் பின் வரிசையில் உள்ள அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

    ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தனது கடந்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை சுவைத்து கம்பீரம் கண்டுள்ளது. அந்த அணி வீரர் ஜோஸ்பட்லர் அடுத்தடுத்து 5 அரை சதம் அடித்து பேட்டிங்கில் அசத்தி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் அபாரமாக விளங்குகிறார். அவர் 7 ஆட்டங்களில் ஆடி 13 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். ரஹானே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அந்த அணிக்கு அவசியமானதாகும்.

    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி அடுத்தடுத்து சந்தித்த 2 தோல்வியில் இருந்து மீண்டு வந்து கடைசி லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி நம்பிக்கை பெற்றுள்ளது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்தது. கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். சுனில் நரின் இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

    இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வி காணும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்து இருக்க நேரிடும். வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IPL2018 #RR #KKR
    ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஜ்மீர் நகரில் உள்ள காஜா மொய்னுதீன் தர்காவுக்கு சென்று மலர்போர்வை காணிக்கை செலுத்துகிறார். #RamNathKovind #Ajmervisit
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக நாளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து நாளை பிற்பகல் 12.30 மணியளவில் ஜெய்பூர் நகரை வந்தடையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவர்னர் மாளிகையில் சற்று நேரம் தங்கி ஓய்வெடுத்த பின்னர், மாலை பிர்லா கோளரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.


    நாளை மறுநாள் அஜ்மீர் நகரில் உள்ள காஜா மொய்னுதீன் தர்காவுக்கு சென்று மலர்போர்வையை காணிக்கையாக செலுத்துகிறார். #RamNathKovind #Ajmervisit 
    ×