search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia



    பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே.-Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும்.

    இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 34 செயலிகளை எடுத்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் 10 முதல் அதிகபட்சம் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர். 



    பின் இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அனைத்து செயலிகளும் ஆகஸ்டு 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    ஆய்வறிக்கையின்படி 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள் தானாக ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த சூழலில் பயனர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் இன் செய்யவில்லை என்றாலும் பயனர் விவரங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். #Facebook #messenger



    ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
    கூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று ஸ்பேம் குறுந்தகவல்களை கண்டறியும் வசதி வழங்கப்படுகிறது. #Google #Messages



    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய அம்சம் சில பயனர்களுக்கு வழங்கப்படுவதாகவும் வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய அம்சம் சர்வெர் சார்ந்து வெளியிடப்படுவதால், ஸ்பேம் பாதுகாப்பு வசதி சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் வடிவில் வழங்கப்படுகிறது. 

    புதிய ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் -- அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் -- ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் -- எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.



    தனியுரிமை தரப்பில் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்ற விவரங்கள் கூகுளின் சப்போர்ட் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது. 

    இந்த ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

    அனைவருக்கும் வழங்கப்படும் போது இந்த அம்சம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனினும், நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்கள் பற்றி கவலை கொள்ளும் பட்சத்தில் இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.
    ஸ்மார்ட்போனில் செயலிகள் பயன்படுத்தப்படும் விதம் பற்றி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்தியர்கள் இந்த மாதிரி செயலிகளுக்கு செலவழிக்க அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. #Apps



    கிரே மேட்டர்ஸ் கேபிட்டல் நிறுவனம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் சுமார் 89 சதவிகித இந்தியர்கள் கல்வி சார்ந்த செயலிகளை கட்டணம் செலுத்தி பயன்படுத்த விரும்புவது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்தியர்கள் 25 எம்.பி.க்கும் அதிக மெமரி கொண்ட செயலிகளை டவுன்லோடு செய்ய விரும்புவதில்லை. 18 முதல் 25 வயதில் இருக்கும் இந்திய மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு அதிகளவு தயாராகி வருவதாகவும், இதற்கென அவர்கள் போட்டி தேர்வு மற்றும் வகுப்பறை பயிற்சி சார்ந்த செயலிகளை அதிகம் இன்ஸ்டால் செய்கின்றனர்.

    இவர்களில் சுமார் 85 சதவிகிதம் பேர் மாதம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை செயலிகளுக்கு கட்டணமாக செலுத்த தயாராக இருக்கின்றனர். ஆய்வில் பங்கேற்ற பெற்றோர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் தங்களது குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் செயலிகளுக்கு மாதம் ரூ.250க்கும் அதிகமாக செலவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



    மீதமிருக்கும் 50 சதவிகிதம் பெற்றோர்கள் தங்களால் மாதம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை செலவிட முடியும் என தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் செயலிகளின் தரவுகள் தங்களது உள்ளூர் மொழியில் இருப்பதை அதிகம் விரும்புவதாக தெரிவித்தனர்.

    இளம் குழந்தைகளின் கல்வியறிவு, குறிப்பாக அவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வழிகளில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். 

    இத்துடன் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் எளிதில் பணியில் சேர்ந்துவிட முடியும் என்பதை தாண்டி, அதனை பணியிடங்களில் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்வதே பலரின் முக்கிய குறிக்கோளாக மாறியிருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #cryptocurrency



    ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பண பரிமாற்றம் செய்ய இந்த க்ரிப்டோகரென்சியை பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

    அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்ற இறக்க சூழ்நிலை காரணமாக நிலையான மதிப்பு கொண்ட காயின்களை ஃபேஸ்புக் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த க்ரிப்டோகரென்சி உருவாக்குவதற்கான ஆயத்த பணிகள் மட்டுமே துவங்கியிருப்பதால், இது வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    2014 ஆம் ஆண்டு பேபால் நிறுவன தலைவர் டேவிட் மார்கஸ் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின் மே மாதத்தில் மார்கஸ் ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் நடவடிக்கைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் குழுவில் தற்சமயம் வரை சுமார் 40 பேர் உள்ளனர். 

    ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் உண்மையில் ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    உலகம் முழுக்க ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 250 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 4000 கோடி டாலர்கள் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் க்ரிப்டோகரென்சி வெளியிடப்படும் பட்சத்தில், இவ்வாறு செய்யும் முதல் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும். 
    ஸ்னாப்சாட் செயலியில் டிக்டொக் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. #SnapChat



    ஸ்னாப்சாட் செயலியில் லென்ஸ் சேலஞ்சஸ் என்ற பெயரில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்ற பயனர்களுடன் சவால்களில் பங்கேற்க முடியும்.

    புதிய அம்சத்தை பயன்படுத்துவோர் ஸ்னாப்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்னாப்களில் பாடல்கள், நடனம், விடுமுறை அல்லது ஏதேனும் நிகழ்வை பயன்படுத்த வேண்டும். விடுமுறையொட்டிய நிகழ்வுக்கு, சவால் அம்சமாக ஜிவென் ஸ்டீஃபானியின் ஜிங்கிள் பெல் பாடலை உடன் சேர்ந்து பாட வேண்டும்.



    இந்த அம்சம் ஸ்னாப்சாட் மற்றும் லென்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனை, திறமை மற்றும் சுய வெளிப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது. புதிய சேலஞ்சர் அம்சம் பயன்படுத்துவோர் லென்ஸ் ஸ்டூடியோவை பயன்படுத்துவார்கள் என ஸ்னாப்சாட் எதிர்பார்க்கிறது.

    லென்ஸ் சேலஞ்ச் அம்சத்தின் முதல் சவாலாக மறைந்து போகச் செய்வது இருந்தது. இந்த லென்ஸ் ஜை ட்ரூடிங்கர் மூலம் உருவாக்கப்பட்டது. இது பயனர்கள் இரண்டு புகைப்படங்களை சூப்பர்இம்போஸ் வகையில் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தினுள் இருக்கும் பொருள் மறைந்து போகும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பூமராங் வீடியோ, புதிய செல்ஃபி மோட் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. #Facebook #messenger



    ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வருகிறது. 

    அந்த வகையில் பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    மெசஞ்சர் செயலியில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக மெசஞ்சர் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

    அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. எனினும், இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. #WhatsApp #Android



    வாட்ஸ்அப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி.) ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே பார்க்க வழி செய்யும். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப் பி.ஐ.பி. மோட் சப்போர்ட் செய்கிறது.

    கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர செயலியில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. 



    வாட்ஸ்அப் ஐபோன் செயலியில் சமீபத்தில் க்ரூப் காலிங் பட்டன் வழங்கப்பட்டது. இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் க்ரூப் ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முதலில் ஒருவரை அழைத்து, அதன்பின் மற்றவர்களை அழைப்பில் சேர்க்க வேண்டும்.

    புதிய வசதி வழங்கப்படும் போது, அழைக்க வேண்டியவர்களை அழைப்புக்கு முன்னதாக சேர்க்க முடியும். இதேபோன்று செயிலயில் டார்க் மோட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வசதி வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்த முடியும். குறிப்பாக OLED ரக ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிக பலன்கள் கிடைக்கும்.

    ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் டிராப் டவுன் நோட்டிஃபிகேஷன் பேனல் வழங்கப்பட்டது. இந்த வசதி நோட்டிஃபிகேஷன் டிராப் டவுன் பேனலில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோக்களின் பிரீவியூக்களை காண்பிக்கும்.
    ஃபேஸ்புக் வலைத்தளம் பயன்படுத்துவோரில் 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Facebook #databreach



    ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழை சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு அம்பலப்படுத்தியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இம்முறை கண்டறியப்பட்ட பிழை பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் தளத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த சுமார் 68 லட்சம் பயனர்களின் புகைப்படங்கள் பிழையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு இந்த புகைப்படங்கள் அம்பலமாகி இருந்தது என்றும், இந்த பிழை சரி செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.



    ஃபேஸ்புக்கில் சரி செய்யப்பட்ட புதிய பிழை ஆப் டெவலப்பர்களுக்கு பயனரின் மற்ற புகைப்படங்கள்: அதாவது மார்கெட்பிளேஸ் அல்லது ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பதிவிடப்பட்டவைக்கான அனுமதியை வழங்கியிருந்தது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

    இத்துடன் இந்த பிழை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய முயன்று, பின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் இதர காரணங்களால் பதிவேற்றப்படாத புகைப்படங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.
    உலகின் பிரபல சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. #Pixalive #Apps
    இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.

    அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் முயற்சியில் பிக்சாலைவ் சமூக வலைத்தளம் உருவாகி இருக்கிறது.

    பிக்சாலைவ் சமூக வலைத்தளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் டிரெண்டிங் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.



    உலகில் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. வழக்கமான சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றுடன் டெக்ஸ்ட் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக்சாலைவ் செயலியில் புகைப்படம், வீடியோவுடன் வாய்ஸ் நோட் சேர்க்கலாம்.

    பிக்சாலைவ் செயலியில் பயனர் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் பிக்சாலைவ் செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    பிக்சாலைவ் வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் டீசர் மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என பிக்சாலைவ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்தார்.

    பிக்சாலைவ் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் ஐ.ஓ.எஸ். மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. #Pixalive #Apps
    இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் சராசரியாக 50 செயலிகளை இன்ஸ்டால் செய்வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #Apps



    இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தங்களது மொபைலில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளை இன்ஸ்டால் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போனில் 51 செயலிகளை இன்ஸ்டால் செய்கின்றனர்.

    சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது மொபைலில் சராசரியாக 51 செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தாலும் அவை அனைத்தையும் அவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் (techARC) வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் 24 செயலிகளையே பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் செயலிகளை இன்ஸ்டால் செய்வோர் அவற்றை பற்றி அதிகம் யோசிக்கவும், புரிந்துகொள்வதும் இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஸ்மார்ட்போனில் அதிகளவு செயலிகளை இன்ஸ்டால் செய்வதால், ஸ்மார்ட்போன் இயக்கத்தை எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் மால்வேர் இருப்பின் அவை பயன்படுத்துவோரின் விவரங்களை அம்பலப்படுத்தலாம்.

    பிரிவுகளின் படி பார்க்கும் போது 70 சதவிகித பயனர்கள் சமூக வலைதள செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்கின்றனர். பெரும்பாலானோர் வணிகம் சார்ந்த செயலிகளான பேங்கிங் செயலிகள், வாலெட் செயலிகள் உள்ளிட்டவற்றை இன்ஸ்டால் செய்துள்ளனர். #Apps
    இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram

      

    இன்ஸ்டாகிராம் செயலியில் இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த அம்சத்தில் இருந்தபடி வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் வசதி வாக்கி டாக்கி போன்று செயல்படுகிறது. 

    அதாவது மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு பேச வேண்டும், பேசி முடித்த பின் மைக்ரோபோன் பட்டனை விடுவித்தால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டு விடும். ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இருப்பதை போன்று இந்த அம்சம் இயங்குகிறது.

    இன்ஸ்டாகிராம் செலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புது வாய்ஸ் மெசேஜ் வசதி ஏற்கனவே ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையை நினைவூட்டுகிறது. இன்ஸ்டாகிராம் இந்த சேவையை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் அல்லது டெக்ஸ்ட் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ள முடியும். 



    வழக்கமான வாய்ஸ் மெசேஜிங் வசதியை போன்று இல்லாமல், இன்ஸ்டாகிராம் வாக்கி டாக்கி போன்று இயங்கும் படி புது வசதியை வழங்கி இருக்கிறது. 

    "இன்று துவங்கி, டைரக்ட் அம்சம் கொண்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும்," என இன்ஸ்டாகிராம் ட்விட் மூலம் தெரிவித்திருக்கிறது. "நீங்கள் விரும்பும் வகையில் பேசலாம், மெல்லிய குரலிலோ அல்லது சத்தமாகவோ பேசலாம்." என தெரிவித்திருக்கிறது.



    இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் முறை:

    இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் பகுதிக்கு சென்று நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய இன்ஸ்டா நண்பரை தேர்வு செய்ய வேண்டும். இங்கு ஒருவரையோ அல்லது பலரை தேர்வு செய்யலாம்.

    இனி மெசேஜ் பாரில் கேமரா ரோல் பட்டனிற்கு அடுத்து காணப்படும் மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து மைக்ரோபோன் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டியதை பதிவு செய்ய வேண்டும், பேசி முடித்ததும் மைக்ரோபோன் ஐகானை விடுவிக்க வேண்டும்.

    பதிவு செய்த வாய்ஸ் மெசேஜை நிராகரிக்க மெசேஜை திரையின் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டும். இத்துடன் வாய்ஸ் மெசேஜை பதிவு செய்ய புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஒரு நிமிடம் மட்டும் (one minute only) ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் அனுப்பும் குறுந்தகவல் நிரந்தரமாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு நிமிடத்திற்கு மட்டும் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.

    ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்கள் இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து விடும். இவ்வாறு அழியாமல் இருக்க பயனர்கள் மெசேஜை அனுப்பும் முன் "keep" எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் வாட்ச் ஓ.எஸ். 5 இயங்குதளத்தில் வாக்கி டாக்கி எனும் அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

    இன்ஸ்டாகிராமின் வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து, வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப துவங்கலாம். #Instagram 
    ×