search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ஆப்பிள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய அப்டேட் மூலம் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #AppleMaps



    இந்தியாவில் ஆப்பிள் மேப்ஸ் செயலியில் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கிறது.

    புதிதாக நேவிகேஷன் வசதி தவிர உபெர் மற்றும் ஒலா போன்றவற்றில் இருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்குகிறது. இதனை இயக்க மேப்ஸ் செயலயின் ரைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். எனினும், பொது போக்குவரத்து சார்ந்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

    அதிகளவு விவரங்களை சேகரித்து சரியான தகவல்களை வழங்கினாலும், கூகுள் மேப்ஸ் சேவையுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேப்ஸ் சற்று பின்தங்கியிருக்கிறது. ஏற்கனவே தாமதமாகி இருந்த போதும் மாற்றம் செய்ய ஆப்பிள் முன்வந்திருப்பதே ஆப்பிள் ப்ரியர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.



    பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை தெரிவிப்பதோடு, குறிப்பிட்ட முகவரியில் பணி நடைபெறும் நேரம், சரியான முகவரி, தொடர்பு விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்குகிறது. 

    இவை தவிர ஆப்பிள் மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் முப்பறிமான காட்சி போன்ற வசதிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.
    கம்ப்யூட்டர் சாதனங்களில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்களை இயக்கும் வசதியுடன் அறிமுகமான வி.எல்.சி. மென்பொருள் இதுவரை 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. #VLC

      

    பிரபல வீடியோ பிளேயர் மென்பொருள்களில் ஒன்றான வி.எல்.சி. 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஆண்ட்ராய்டு செயலியில் ஏர்பிளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி கொண்டு பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆப்பிள் டி.வி.யில் ஸ்டிரீம் செய்து பார்த்து ரசிக்க முடியும்.

    வி.எல்.சி. ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட் ஒரு மாதத்தில் வெளியாகும். இந்த அப்டேட் வெளியானதும் ஆப்பிளின் ஏர்பிளே ப்ரோடோகால் சூட் வசதியுடன் வயர்லெஸ் ஸ்டிரீமிங் செய்ய முடியும். 

    வி.எல்.சி. மீடியா பிளேயர் சேவையை தொண்டு நிறுவனமான வீடியோலேன் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைத்து வெவ்வேறு தளங்களில் இருந்து வி.எல்.சி. டவுன்லோடுகள் கண்காணிக்கப்பட்டது.



    சி.இ.எஸ். 2019 துவக்க நிகழ்வின் போது, வி.எல்.சி. பிளேயர் 300 கோடி டவுன்லோடுகளை கடக்க சில லட்சங்கள் பின்தங்கியிருந்தது. பின் 300 கோடி டவுன்லோடுகளை நேற்று (ஜனவரி 10) கடந்தது. மைல்கல் டவுன்லோடுகளை கடந்ததும், வி.எல்.சி. டெவலப்பரான லுடோவிக் ஃபாவெட் டவுன்லோடு கவுண்ட்டர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 

    ஆண்ட்ராய்டு வி.எல்.சி. செயலிக்கான ஏர்பிளே வசதி வி.எல்.சி. 4 பதிப்பில் வழங்கப்படும் என மூத்த டெவலப்பர்களில் ஒருவரான ஜீன் பாப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்தார். ஏர்பிளே வசதி எல்.ஜி.யின் OLED டி.வி., சாம்சங் டி.வி. உள்ளிட்டவற்றிலும் வழங்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர ஸ்மார்ட் டி.வி. நிறுவனங்களும் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. 
    சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். #Samsung #Facebook



    சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி இருக்கின்றனர். 

    ஸ்மார்ட்போன்களில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை அழிக்க முடிவதில்லை என பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பு கருதியோ, செயலியை தொடர்ந்து பயன்படுத்த விருப்பமில்லை, ஃபேஸ்புக் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது போன்ற காரணங்களால் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய முயற்சிப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சுகிறது.

    சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், அமேசான், மெசஞ்சர் மற்றும் இதர செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது. இவற்றுடன் சில கூகுள் செயலிகளும் அடங்கும். இவ்வாறு பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் சிலவற்றை மட்டும் செயலிழக்க செய்ய முடியும் என்றாலும், சிலவற்றை அன்இன்ஸ்டால் செய்ய முடியாது.



    சாம்சங் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சில பயனர்கள் தங்களது மொபைலில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை டெலீட் செய்வதற்கான ஆப்ஷனே வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒற்றை ஆப்ஷன் ஃபேஸ்புக் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வது மட்டும் தான். இவ்வாறு செய்தாலும் ஃபேஸ்புக் ஐகான் ஸ்மார்ட்போனில் அப்படியே இருக்கும்.

    பயனற்று இருக்கும் சமூக வலைத்தள ஐகான்கள் ஸ்மார்ட்போன்களின் மெமரியை ஆக்கிரமித்துக் கொள்வதை தவிர வேறு எதையும் செய்வதில்லை. எனினும், சாம்சங் பயனர்கள் தரப்பில், ஃபேஸ்புக் செயலி பயனர் விவரங்களை பின்னணியில் சேகரிக்கிறதா என்ற அச்சம் பயனர்கள் மனதில் எழுகிறது.



    இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது “செயலிழக்க செய்யப்பட்ட செயலி கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதற்கு சமமானது. இதனால் பயனர் விவரங்கள் சேகரிக்கப்படாது. எனினும், அவ்வப்போது இதுபற்றி பயனர்களுடன் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.” என தெரிவித்தார்.

    “செயலி அழிக்கக்கூடியதாக இருப்பது ஃபேஸ்புக் கடந்த காலங்களில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை பொருத்து வேறுபடும்,” என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கலிபோர்னியாவை சேர்ந்த விங் எனும் ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் கொண்டு ஸ்மார்ட்போனில் வீடியோ ரிங்டோன் செட் செய்து கொள்ள முடியும். #app



    கலிபோர்னியாவை சேர்ந்த வீடியோ ரிங்டோன் செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலி வழங்கப்படுகிறது.

    இந்தியா முழுக்க டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் விங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு ஒவ்வொரு அழைப்பிலும் வீடியோவினை ரிங்டோனாக செட் செய்து கொள்ளலாம். இதன் இந்திய பதிப்பில் பயனர்கள் பாலிவுட் வீடியோக்களை தங்களது ஸ்மார்ட்போனில் ரிங்டோனாக செட் செய்யலாம்.



    பயனர் விரும்பும் வீடியோக்களை தங்களது ரிங்டோனாக செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட வீடியோக்களை ரிங்டோனாக செட் செய்யவோ அல்லது தங்களது நண்பர்களுக்கென பிரத்யேக ரிங்டோன்களை செட் செய்யலாம்.

    இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நேபால், நைஜீரியா, கானா, இந்தோனேசியா என உலகம் முழுக்க 174 நாடுகளில் விங் செயலி பயன்படுத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விங் செயலியில் உலகம் முழுக்க இதுவரை சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான விங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை சென்சார் வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை செயல்படுத்தியதும், பயனர்கள் கைரேகையை வைத்தால் மட்டுமே செயலியை திறக்க முடியும். 

    இதுகுறித்து WABetaInfo, வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த அம்சத்தை உருவாக்குவற்கான முதற்கட்ட பணிகள் மட்டுமே துவங்கி இருக்கிறது. இதனால் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.3 பதிப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக ஃபேஸ் ஐ.டி. மற்றும் டச் ஐ.டி. அம்சங்களை ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்குவதற்கான சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் இதேபோன்ற பாதுகாப்பு வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது. 


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் இதற்கான சோதனை மட்டும் நடைபெற்று இருக்கும் நிலையில், இதுவரை இந்த வசதி வழங்கப்படாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செயலியின் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சத்தை இயக்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாக்க முடியும். ஏற்கனவே தங்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதியை செயல்படுத்தி இருப்பின் இந்த அம்சம் தேவைக்கதிகமானதாகும்.

    ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
    வாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps



    உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதிகளவு பிரபலமாக இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகளவு தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் பரப்பப்படுகிறது.

    முன்னதாக 2016 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் கோல்டு எனும் செயலியை பதிவிறக்கம் செய்யக் கோரி குறுந்தகவல்கள் பரப்பப்பட்டன. இவ்வாறு செய்யும் போது பயனர்களுக்கு வீடியோ காலிங் வசதி, ஒரே சமயத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி உள்ளிட்டவை கிடைக்கும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த குறுந்தகவல் போலியானது என பின்னர் அறிவிக்கப்பட்டது. 

    இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர் டவுன்லோடு ஆகும். தற்சமயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த வதந்தி பரப்பப்படுகிறது. 



    தற்சமயம் பரப்பப்படும் குறுந்தகவலில்: "வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் உண்மை தான். வாட்ஸ்அப்பில் நாளை ஒரு வீடியோ வெளியாகிறது. மார்டினெலி என இந்த வீடியோ அழைக்கப்படுகிறது. அதை திறக்க வேண்டாம். திறக்கும் பட்சத்தில் என்ன செய்தாலும், அதனை சரி செய்ய முடியாது. இத்தகவலை நீங்கள் அறிந்தவருக்கு அனுப்பவும். வாட்ஸ்அப் கோல்டு செயலிக்கு அப்டேட் செய்யக் கோரும் குறுந்தகவல் வந்தால், அதனை திறக்க வேண்டாம்! இந்த வைரஸ் மிகவும் கொடியது. இதை அனைவருக்கும் அனுப்பவும்."

    இந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மார்டினெலி என்ற வீடியோ எதுவும் இல்லை. இந்த குறுந்தகவல் கொண்டு பயனர்கள் மத்தியில் பீதியை பரப்ப திட்டமிட்டுள்ளனர். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் பலர் இத்தகவலை தங்களது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.



    இதுபோன்ற குறுந்தகவல்கள் வரும் பட்சத்தில் அவற்றை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் அவற்றுக்கான பிளே ஸ்டோர் மூலமாகவே வழங்கப்படும். இதுதவிர மூன்றாம் தரப்பு சேவைகள் அல்லது இணைய முகவரிகளில் அப்டேட் வழங்கப்பட மாட்டாது. இதனால் உங்களுக்கு வரும் ஃபார்வேர்டு மெசேஜ்களை நம்பர வேண்டாம். 
    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp #Apps
    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.

    அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.

    இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.  #Whatsapp #Apps
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். #Facebook #messenger



    ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
    கூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று ஸ்பேம் குறுந்தகவல்களை கண்டறியும் வசதி வழங்கப்படுகிறது. #Google #Messages



    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய அம்சம் சில பயனர்களுக்கு வழங்கப்படுவதாகவும் வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய அம்சம் சர்வெர் சார்ந்து வெளியிடப்படுவதால், ஸ்பேம் பாதுகாப்பு வசதி சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் வடிவில் வழங்கப்படுகிறது. 

    புதிய ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் -- அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் -- ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் -- எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.



    தனியுரிமை தரப்பில் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்ற விவரங்கள் கூகுளின் சப்போர்ட் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது. 

    இந்த ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

    அனைவருக்கும் வழங்கப்படும் போது இந்த அம்சம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனினும், நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்கள் பற்றி கவலை கொள்ளும் பட்சத்தில் இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.
    ஸ்மார்ட்போனில் செயலிகள் பயன்படுத்தப்படும் விதம் பற்றி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்தியர்கள் இந்த மாதிரி செயலிகளுக்கு செலவழிக்க அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. #Apps



    கிரே மேட்டர்ஸ் கேபிட்டல் நிறுவனம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் சுமார் 89 சதவிகித இந்தியர்கள் கல்வி சார்ந்த செயலிகளை கட்டணம் செலுத்தி பயன்படுத்த விரும்புவது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்தியர்கள் 25 எம்.பி.க்கும் அதிக மெமரி கொண்ட செயலிகளை டவுன்லோடு செய்ய விரும்புவதில்லை. 18 முதல் 25 வயதில் இருக்கும் இந்திய மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு அதிகளவு தயாராகி வருவதாகவும், இதற்கென அவர்கள் போட்டி தேர்வு மற்றும் வகுப்பறை பயிற்சி சார்ந்த செயலிகளை அதிகம் இன்ஸ்டால் செய்கின்றனர்.

    இவர்களில் சுமார் 85 சதவிகிதம் பேர் மாதம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை செயலிகளுக்கு கட்டணமாக செலுத்த தயாராக இருக்கின்றனர். ஆய்வில் பங்கேற்ற பெற்றோர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் தங்களது குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் செயலிகளுக்கு மாதம் ரூ.250க்கும் அதிகமாக செலவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



    மீதமிருக்கும் 50 சதவிகிதம் பெற்றோர்கள் தங்களால் மாதம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை செலவிட முடியும் என தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் செயலிகளின் தரவுகள் தங்களது உள்ளூர் மொழியில் இருப்பதை அதிகம் விரும்புவதாக தெரிவித்தனர்.

    இளம் குழந்தைகளின் கல்வியறிவு, குறிப்பாக அவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வழிகளில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். 

    இத்துடன் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் எளிதில் பணியில் சேர்ந்துவிட முடியும் என்பதை தாண்டி, அதனை பணியிடங்களில் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்வதே பலரின் முக்கிய குறிக்கோளாக மாறியிருக்கிறது.
    ஸ்னாப்சாட் செயலியில் டிக்டொக் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. #SnapChat



    ஸ்னாப்சாட் செயலியில் லென்ஸ் சேலஞ்சஸ் என்ற பெயரில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்ற பயனர்களுடன் சவால்களில் பங்கேற்க முடியும்.

    புதிய அம்சத்தை பயன்படுத்துவோர் ஸ்னாப்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்னாப்களில் பாடல்கள், நடனம், விடுமுறை அல்லது ஏதேனும் நிகழ்வை பயன்படுத்த வேண்டும். விடுமுறையொட்டிய நிகழ்வுக்கு, சவால் அம்சமாக ஜிவென் ஸ்டீஃபானியின் ஜிங்கிள் பெல் பாடலை உடன் சேர்ந்து பாட வேண்டும்.



    இந்த அம்சம் ஸ்னாப்சாட் மற்றும் லென்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனை, திறமை மற்றும் சுய வெளிப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது. புதிய சேலஞ்சர் அம்சம் பயன்படுத்துவோர் லென்ஸ் ஸ்டூடியோவை பயன்படுத்துவார்கள் என ஸ்னாப்சாட் எதிர்பார்க்கிறது.

    லென்ஸ் சேலஞ்ச் அம்சத்தின் முதல் சவாலாக மறைந்து போகச் செய்வது இருந்தது. இந்த லென்ஸ் ஜை ட்ரூடிங்கர் மூலம் உருவாக்கப்பட்டது. இது பயனர்கள் இரண்டு புகைப்படங்களை சூப்பர்இம்போஸ் வகையில் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தினுள் இருக்கும் பொருள் மறைந்து போகும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பூமராங் வீடியோ, புதிய செல்ஃபி மோட் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. #Facebook #messenger



    ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வருகிறது. 

    அந்த வகையில் பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    மெசஞ்சர் செயலியில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக மெசஞ்சர் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

    அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. எனினும், இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
    ×