search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    உலகளவில் அதிகளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. #spam #TRAI



    2018 ஆம் ஆண்டு ஸ்பேம் (தேவையற்ற) அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல தகவல் பரிமாற்ற செயலியான ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்தியர்களுக்கு வரும் மொத்த அழைப்புகளில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஸ்பேம் அழைப்புகளாக இருந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை 22.3 கால்கள் என மாதாந்திர அடிப்படையில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1.5 சதவிகிதம் குறைவு ஆகும்.

    பிரேசிலில் வசிக்கும் ட்ரூகாலர் பயணர்கள் மாதம் 37.5 ஸ்பேம் அழைப்புகளை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 81 சதவிகிதம் அதிகம் என க்ரூகாலர் இன்சைட் பிரித்யேக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில், இந்தியாவை தொடர்ந்து சிலி, தென் ஆப்ரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் அதிக ஸ்பேம் அழைப்புகளுக்கு காரணமானவர்கள் பட்டியலில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

    இந்த ஆண்டு பயனர்கள் எதிர்கொண்ட ஸ்பேம் அழைப்புகளில் 91 சதவிகிதம் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் இருந்துள்ளன. இவற்றில் பேலன்ஸ் இருப்புத் தொகையை நினைவூட்டுவது, புதிய சலுகைகளை அறிவிப்பது போன்றவற்றுக்காக டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    டெலிகாம் நிறுவனங்களை தொடர்ந்து டெலிமார்கெடிங் செய்வோர் ஏழு சதவிகிதம் பயனர்களுக்கு இடையூறாக இருக்கும் படி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் 1.77 கோடி ஸ்பேம் அழைப்புகள் கண்டறியப்பட்டதாக ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. பயனர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நான்காவது அழைப்பும் ஸ்பேம் ஆகும்.
    ஃபேஸ்புக் வலைத்தளம் பயன்படுத்துவோரில் 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Facebook #databreach



    ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழை சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு அம்பலப்படுத்தியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இம்முறை கண்டறியப்பட்ட பிழை பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் தளத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த சுமார் 68 லட்சம் பயனர்களின் புகைப்படங்கள் பிழையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு இந்த புகைப்படங்கள் அம்பலமாகி இருந்தது என்றும், இந்த பிழை சரி செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.



    ஃபேஸ்புக்கில் சரி செய்யப்பட்ட புதிய பிழை ஆப் டெவலப்பர்களுக்கு பயனரின் மற்ற புகைப்படங்கள்: அதாவது மார்கெட்பிளேஸ் அல்லது ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பதிவிடப்பட்டவைக்கான அனுமதியை வழங்கியிருந்தது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

    இத்துடன் இந்த பிழை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய முயன்று, பின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் இதர காரணங்களால் பதிவேற்றப்படாத புகைப்படங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.
    உலகின் பிரபல சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. #Pixalive #Apps
    இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.

    அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் முயற்சியில் பிக்சாலைவ் சமூக வலைத்தளம் உருவாகி இருக்கிறது.

    பிக்சாலைவ் சமூக வலைத்தளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் டிரெண்டிங் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.



    உலகில் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. வழக்கமான சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றுடன் டெக்ஸ்ட் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக்சாலைவ் செயலியில் புகைப்படம், வீடியோவுடன் வாய்ஸ் நோட் சேர்க்கலாம்.

    பிக்சாலைவ் செயலியில் பயனர் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் பிக்சாலைவ் செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    பிக்சாலைவ் வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் டீசர் மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என பிக்சாலைவ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்தார்.

    பிக்சாலைவ் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் ஐ.ஓ.எஸ். மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. #Pixalive #Apps
    இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் சராசரியாக 50 செயலிகளை இன்ஸ்டால் செய்வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #Apps



    இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தங்களது மொபைலில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளை இன்ஸ்டால் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போனில் 51 செயலிகளை இன்ஸ்டால் செய்கின்றனர்.

    சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது மொபைலில் சராசரியாக 51 செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தாலும் அவை அனைத்தையும் அவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் (techARC) வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் 24 செயலிகளையே பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் செயலிகளை இன்ஸ்டால் செய்வோர் அவற்றை பற்றி அதிகம் யோசிக்கவும், புரிந்துகொள்வதும் இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஸ்மார்ட்போனில் அதிகளவு செயலிகளை இன்ஸ்டால் செய்வதால், ஸ்மார்ட்போன் இயக்கத்தை எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் மால்வேர் இருப்பின் அவை பயன்படுத்துவோரின் விவரங்களை அம்பலப்படுத்தலாம்.

    பிரிவுகளின் படி பார்க்கும் போது 70 சதவிகித பயனர்கள் சமூக வலைதள செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்கின்றனர். பெரும்பாலானோர் வணிகம் சார்ந்த செயலிகளான பேங்கிங் செயலிகள், வாலெட் செயலிகள் உள்ளிட்டவற்றை இன்ஸ்டால் செய்துள்ளனர். #Apps
    இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram

      

    இன்ஸ்டாகிராம் செயலியில் இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த அம்சத்தில் இருந்தபடி வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் வசதி வாக்கி டாக்கி போன்று செயல்படுகிறது. 

    அதாவது மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு பேச வேண்டும், பேசி முடித்த பின் மைக்ரோபோன் பட்டனை விடுவித்தால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டு விடும். ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இருப்பதை போன்று இந்த அம்சம் இயங்குகிறது.

    இன்ஸ்டாகிராம் செலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புது வாய்ஸ் மெசேஜ் வசதி ஏற்கனவே ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையை நினைவூட்டுகிறது. இன்ஸ்டாகிராம் இந்த சேவையை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் அல்லது டெக்ஸ்ட் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ள முடியும். 



    வழக்கமான வாய்ஸ் மெசேஜிங் வசதியை போன்று இல்லாமல், இன்ஸ்டாகிராம் வாக்கி டாக்கி போன்று இயங்கும் படி புது வசதியை வழங்கி இருக்கிறது. 

    "இன்று துவங்கி, டைரக்ட் அம்சம் கொண்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும்," என இன்ஸ்டாகிராம் ட்விட் மூலம் தெரிவித்திருக்கிறது. "நீங்கள் விரும்பும் வகையில் பேசலாம், மெல்லிய குரலிலோ அல்லது சத்தமாகவோ பேசலாம்." என தெரிவித்திருக்கிறது.



    இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் முறை:

    இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் பகுதிக்கு சென்று நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய இன்ஸ்டா நண்பரை தேர்வு செய்ய வேண்டும். இங்கு ஒருவரையோ அல்லது பலரை தேர்வு செய்யலாம்.

    இனி மெசேஜ் பாரில் கேமரா ரோல் பட்டனிற்கு அடுத்து காணப்படும் மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து மைக்ரோபோன் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டியதை பதிவு செய்ய வேண்டும், பேசி முடித்ததும் மைக்ரோபோன் ஐகானை விடுவிக்க வேண்டும்.

    பதிவு செய்த வாய்ஸ் மெசேஜை நிராகரிக்க மெசேஜை திரையின் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டும். இத்துடன் வாய்ஸ் மெசேஜை பதிவு செய்ய புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஒரு நிமிடம் மட்டும் (one minute only) ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் அனுப்பும் குறுந்தகவல் நிரந்தரமாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு நிமிடத்திற்கு மட்டும் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.

    ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்கள் இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து விடும். இவ்வாறு அழியாமல் இருக்க பயனர்கள் மெசேஜை அனுப்பும் முன் "keep" எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் வாட்ச் ஓ.எஸ். 5 இயங்குதளத்தில் வாக்கி டாக்கி எனும் அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

    இன்ஸ்டாகிராமின் வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து, வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப துவங்கலாம். #Instagram 
    ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp



    ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.

    புது மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், நீங்கள் கால் செய்ய வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.



    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். 

    புது க்ரூப் காலிங் பட்டன் முன்னதாக ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.110.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. இந்த பீட்டா அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு டெஸ்ட்ஃபிளைட் (TestFlight) மூலம் வழங்கப்பட்டது. டெஸ்ட்ஃபிளைட் என்பது, செயலிகளை ஓவர்-தி-ஏர் மூலம் சோதனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையாகும்.



    புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி கடந்த மாத ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு புது அம்சத்திற்கான பொதுப்படையான அப்டேட் இதுவரை வழங்கப்படவில்லை. #WhatsApp
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும் போது கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதேபோன்ற சலுகையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்து, வழங்கி வருகின்றன. வோடபோன் 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும். 

    வோடபோன் வழங்கும் கேஷ்பேக் கூப்பன்களை மை வோடபோன் செயலி மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போன்ற சலுகையை முன்னதாக ஏர்டெல் அறிவித்தது. எனினும் ரிலையன்ஸ் ஜியோ இந்த சலுகையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது.



    மை வோடபோன் செயலியின் படி 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு எட்டு கூப்பன்களும், ரூ.458 ரீசார்ஜ் செய்வோருக்கு ஒன்பது கூப்பன்கலும், ரூ.509 ரீசார்ஜ் செய்வோருக்கு 10 கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

    சில வட்டாரங்களில் ரூ.199 ரீசார்ஜ் செய்வோருக்கும் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் பீகார், ஜார்கண்ட் பகுதிகளில் உள்ள வோடபோன் பயனர்கள் ரூ.409 (மற்ற வட்டாரங்களில் ரூ.399) சலுகையை பயன்படுத்த முடியாது. இதே போன்று இமாச்சல பிரதேச பயனர்கள் ரூ.458 சலுகைக்கு மட்டும் 100 சதவிகித கேஷ்பேக் பெற முடியும்.

    பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற வட்டாரங்களில் ரூ.399 சலுகை ரூ.409 விலையிலும், ரூ.458 சலுகை ரூ.459 விலையிலும் ரூ.509 சலுகை ரூ.529 விலையில் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை முறையே 70 நாட்கள், 80 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. #Vodafone #Offers
    ஐபோன் மாடல்களில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் செயலியை அனுமதிக்க ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. #Apple #TRAI



    டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

    ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

    அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. 

    எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

    ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது. #Apple #TRAI
    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் தங்களது ஸ்டோரிக்களை அவர்கள் விரும்பும் நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. #Instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிக்களை நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள க்ளோஸ் ஃபிரென்ட் லிஸ்ட் (close friend list) வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வசதியின் மூலம் பயனர்கள் உருவாக்கும் ஸ்டோரியை அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யும் சிலருடன் மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் பயனர்கள் தங்களது தனிப்பட்ட உணர்வுகளை அவர்கள் விரும்பும் சிறு குழுவுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஸ்டோரியில் நண்பர்களை சேர்க்க ப்ரோஃபைல் ஆப்ஷனின் பக்கவாட்டில் காணப்படும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் (Close Friends) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு உங்களுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்களை உங்களால் மட்டுமே பார்க்க முடியும். இங்கு தங்களை சேர்த்துக் கொள்ள யாரும் கேட்க முடியாது. 



    மேலும் இங்கு நீங்கள் விரும்பும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்டோரிக்களை பதிவிடும் போது, அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, அனைவரிடம் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் மட்டும் என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும். 

    இன்ஸ்டாவில் யாரேனும் உங்களை தங்களது நெருங்கிய நண்பராக சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களது ஸ்டோரிக்களை பார்க்கும் போது பச்சை நிற பட்டை தெரியும். இத்துடன் அவர்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை சுற்றி பச்சை நிற வளையம் தெரியும். 
    இன்ஸ்டாகிராமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. #Instagram #Apps

    இன்ஸ்டாவில் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் நிறைந்து இருந்ததாக சுமார் 13 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். #Google #PlayStore #Apps



    கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 13 செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்து இருக்கிறது.

    பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர செயலிகள் இடம்பெற்று இருந்தன.

    இசெட் (ESET)  பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர் பரப்பிய 13 செயலிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த செயலிகள் பிளே ஸ்டோரின் டிரென்டிங் பகுதியில் இடம்பெற்று இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.



    எனினும், மால்வேர் நிறைந்த செயலிகள் தற்சமயம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. கூகுள் இவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். கேமினை திறந்து விளையாட முற்படும் போது செயலி கிராஷ் ஆனது.

    மேலும் இந்த செயலிகள் பயனர்களை கேம் சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது. இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருக்கிறது. 

    கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3.6 கோடி மொபைல் சாதனங்களை ஆட்வேர் மூலம் பாதிப்பில் ஆழ்த்த கூகுள் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
    இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கத்தில் புதிய தோற்றம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் வாரங்களில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மற்றவர்களுடன் எளிதில் இணையும் வகையில் வழிமுறைகளை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னதாகவே, சில பயனர்களின் ப்ரோஃபைல் பக்கத்தின் மேல் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கின்றனர்.

    புதிய மாற்றங்களின் படி புதுவித ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்கள் செயலியின் தோற்றம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் தெரிகிறது. புதிய அப்டேட் பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ப்ரோஃபைல் க்ரிட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது.



    அடுத்த சில வாரங்களில் இதுபோன்று பல்வேறு மாற்றங்களை இன்ஸ்டாகிராம் செயலியில் பார்க்க முடியும். அந்த வகையில் ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்களிடையே நேவிகேட் செய்யும் முறைகளில் மாற்றம் செய்யப்படலாம். இவை செயலியின் தோற்றத்தை சுத்தமாகவும் பயன்பாட்டை எளிமையாக்கும் படி இருக்கும்.

    செயலியின் புதிய மாற்றங்களை வெவ்வேறு கட்டங்களில் இன்ஸ்டாகிராம் சோதனை செய்யும் என்றும், இவற்றை வெவ்வேறு இணைப்புகளில் சோதனை செய்து, பயனர் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் அனுபவத்தை மேம்படுத்தும்.

    முன்னதாக இந்த வாரத்தில் போலி பின்தொடர்பாளர்கள் மற்றும் ஸ்பேமர்களை முடக்க செயலியில் முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலி செயலிகளை பயன்படுத்தி ஃபாளோ, லைக், கமென்ட் உள்ளிட்டவற்றை பெறும் பயனர்களின் அக்கவுன்ட்களை முடக்கத் துவங்கியது. 

    மேலும் இன்ஸ்டா பயனர்கள் தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுல்ளது. இதன் மூலம் பயனர்களின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவோ அல்லது ஸ்பேம் அக்கவுன்ட் போன்று பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு.
    வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Whatsapp #Apps



    வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. 

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது. 

    இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிஃபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.



    இதன் மூலம் மெசேஜை பார்த்தாலே பயனர்களின் லாஸ்ட் சீன் மாறிவிடும். மேலும் புதிய வசதியுடன் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே செயலியில் வரும் அனைத்து வித மெசேஜ்களையும் பார்க்க முடியும் என்பதோடு, லாஸ்ட் சீன் மாறாமல் இருக்கும். சில பயனர்களுக்கு லாஸ்ட் சீன் நேரம் பெரியதாக இல்லை என்றாலும், சிலர் அவற்றை முக்கியமானதாக பார்ப்பர். 

    லாஸ்ட் சீன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களின் குறுந்தகவல்களை பார்த்து இருப்பார்களா, இல்லையா என்பதை குறுந்தகவல் அனுப்பியவர் பார்த்து புரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர் ஆன்லைனில் இருந்துகொண்டு குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

    புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை WABetaInfo மூலம் தெரியவந்து இருக்கிறது. புதிய வசதியை வாட்ஸ்அப் முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களை அழிப்பதாக ஆப்பிள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    ×