search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96697"

    சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீர்க்காயுள் கிடைக்கும்.
    ஹஸ்தாப்யாம் கலசத்வயாம்ருத ரஸைராப்லாவயந்தம் சிரோ
    த்வாப்யாம் தெள தத்தம் ம்ருகாக்ஷவலயே த்வாப்யாம் வஹந்தம் பரம்
    அங்கந்யஸ்தகரத்வயாம்ருத்தரம் கைலாசகாந்தம் சிவம்
    ஸ்வச்சாம்போஜகதம் நவேந்துமகுடம் தேவம் த்ரிநேத்ரம் பஜே,

    – ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்

    பொதுப் பொருள்: இரண்டு கைகளில் அம்ருதத்தை ஏந்திய வரும், மற்ற இரு கைகளில் மான் மற்றும் ருத்ராக்ஷ மாலையை ஏந்தியவாறு மேலிரண்டு கைகள் மேலே ஆகாயத்தை நோக்கியும், கீழிரண்டு கைகளும் தொடையில் வைத்தவாறு தலையில் பிறை சந்திரனை அணிந்தவரும், வெள்ளை மேகம் போல் காட்சியளிக்கும் கைலாயத்தில் வசிப்பவருமான அந்த முக்கண்ணனை வணங்குகிறேன்.
    ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.
    பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.

    உலகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நேரம் பிரதோஷ நேரமாகும். அதாவது ஆலகால விஷத்தை சிவன் உண்டு, நீலகண்டனாகி உலகத்தைக் காப்பாற்றிய நேரம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை பூஜிப்பதோடு, நந்திக்கொம்பு வழியே நாயகனைப் பார்த்து, நந்தியையும் வழிபட்டால் சிந்தித்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.

    ஒளி தீபம் ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் வந்து சேரும். அர்ச்சனைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும். அபிஷேகம் பார்த்தால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது.
    மகா சிவராத்திரி, மாத சிவராத்திரிக்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
    “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள் தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் கூட, ஒருநாளாகவும், திருநாளாகவும் கொண்டாடப்படும் சிவராத்திரி இரவில், விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.

    இந்த விழிப்பு விரதத்தை ‘மங்கலம் தரும் மகாசிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும் ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும் ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ என்றும் மக்கள் வர்ணிக்கிறார்கள்.

    சிவன் பெயரை உச்சரித்து சிறப்புகளை பெற்ற அறுபத்து மூவரைப் போல, நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் சிவராத்திரி. அன்றைய தினம் நடைபெறும் ஆறுகால பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற்று வாழமுடியும்.

    திருவாரூரில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர்.
    திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் விளமல் என்ற ஊர் இருக்கிறது. இங்கு பதஞ்சலி மனோகர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர். பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில்தான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை தினத்தில், திருவாரூர் கமலாலய தீர்த்தத்தில் (தெப்பக்குளம்) உள்ள பிதுர் கட்டத்திலும், விளமல் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சி யடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை.
    கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும்.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

    நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.

    அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

    குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.
    சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. சிறப்புப் பொருந்திய இத் திருநாள் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.
    இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதம் கடைபிடிக்கலாம்.

    இத்தினத்தில் எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறும். சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்குச் சிறப்புப் பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று தாயாரை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தில் விரதத்தை மேற்கொள்ளலாம். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வதால் இந்நாள் பித்ருகளுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

    நம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி தினம் அமைகின்றது.

    வான் மண்டலத்தில்; சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை “திதி” என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு ”திதி” கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பவுர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சமமாக இருப்பார்கள்.)

    இந்நாளில் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.

    சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

    பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் கிரிவலத்தில் பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை, சதுரகிரி மலை, பொதிகை மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

    வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணா மலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகையால் வருகிற 18&ந்தேதி இரவு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.பொதிகை மலையில் அகத்தியரை அன்று வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். வருகிற 19-ந்தேதி கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே வருகிற 19-ந்தேதி கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.



    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்தராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான்.

    இதனால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.

    ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.

    இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.

    அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ரா பவுர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

    பவுர்ணமி தினம் அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

    சித்திரை மாத பவுர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    அன்னதானம் செய்யுங்கள்

    சித்ரா பவுர்ணமியில் அன்னதானம் செய்து சிவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கேட்டது கிடைக்கும். கேட்க மறந்ததும் கிடைக்கும். காரணம் சிவன் கருணை வள்ளல், தியாகராஜன், தன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கையேந்தி தன் அடியார்களை அவன் வெறுங்கையுடன் அனுப்பியது இல்லை.

    ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் வறுமை அகலும். நோய்கள் நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். திருமணம் நிறைவேறும். மகப்பேறும் கிடைக்கும். மனக்குழப்பங்கள் ஒழியும். புண்ணியங்கள் சேரும், வீடு பேற்றை அடையவும் முடியும்.

    வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்

    சித்ரா பவுர்ணமி தினத் தன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளில் தீபங்கள் ஏற்றி கோடிக் கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.
    வீட்டு வாசல்களிலும் தங்களுக்கு சொந்தமான நிறு வனங்களிலும், வர்த்தக கட் டிடங்களிலும், கோவில்களிலும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு அல்லது சக ஊழியர்களோடு, தனியா கவோ அல்லது கூட்டா கவோ விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    ஏற்றி வைக்கும் விளக்கு, குத்து விளக்காகவும் இருக்கலாம். காமாட்சி விளக்காகவும் இருக்கலாம், சாதாரண அகல் விளக்காகவும் இருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப மாலை 6.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தீபங்களை ஏற்றி கோடிக் கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும்.

    சித்ராதேவி

    சித்ரா பவுர்ணமியன்று வணங்க வேண்டிய தெய்வம் சித்ராதேவி. இவள் குபேரனின் மனைவி. லட்சுமிக்குரிய செல்வத்தை குபேரன் பராமரிக்கிறான். உலக உயிர்கள் செய்யும் பாவ, புண்ணியம், முன் வினை பயன்களுக்கு ஏற்ப அதைப் பிரித்துத் தருகிறான்.

    அவ்வாறு தரும்போது, உழைப்பாளிகளுக்கு சற்று அதிகமாகத் தர சிபாரீசு செய்பவள் இவள். எனவே இவளை சித்ரா பவுர்ணமி நாளில் நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். இவளை வணங்கினால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

    எண்ணெய் முழுக்கு பலன்

    தீபாவளியைப் போல, எண்ணைக் குளியலுக்கு முக்கியமான மற்றொரு நாள் சித்ரா பவுர்ணமி. சித்ரா பவுர்ணமிக்குரிய தெய்வம் சித்ரகுப்தர். எமனின் கணக்குப் பிள்ளை இவர். எமனுக்கு உதவி செய்ய அவுதும்பரன், சண்டா முருகன், சம்பரன், சார்த்தூலன் என்ற நான்கு தூதர்கள் உள்ளனர். திசைக்கு ஒருவராகச் சென்று குறித்த நேரத்திற்குள் உயிரைப் பறிப்பது இவர்களின் பணி.

    சித்ரகுப்தர் உயிர்கள் செய்த பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்ம ராஜாவுக்கு அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் எமன் அவர்களுக்கு தண்டனை கொடுப் பார். சித்ரா பவுர்ணமி அன்றுதான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுமாம்.

    எனவே அன்று சித்ரகுப்தரை மனதார நினைத்து, சித்ர குப்தரே என் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் போது, பாவங்களைக் குறைத்து புண்ணியத்தை எழுதுவீர். இனி நான் எத்தகைய பாவத்தையும் செய்ய மாட்டேன். இதுவரை செய்த பாவங்களுக்கு, இந்த எண்ணை குளியலுடன் முழுக்கு போட்டு விடுகிறேன் எனச் சொல்லி, நல்லெண்ணையை தேய்த்து குளித்து விட வேண்டும். இதற்கு கை மேல் பலன் உண்டு.
    நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. இன்று சித்ரகுப்தனை விரதம் இருந்து வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.
    நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவி நமக்கு அமையும். இதையே ஜோதிட ரீதியாக யோகம், காலம், நேரம் என்கிறோம். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடைபெறும் தசாபுத்தி, அந்தரம் போன்றவை யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோச்சார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும்.

    முற்பிறவியில் நாம் செய்த கா்ம வினைகளின் பயனை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. அந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியாது என்றாலும், அந்த தாக்கத்தை தாங்குவதற்கான மன வலிமையையும், உடல்பலத்தையும் பெறுவதற்காகவே நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    மனித வாழ்வில் விதி தந்த பலனால், எந்த வழியில் சென்றால் வாழ்க்கை வளமாக அமையும் என்பதற்கு ஜோதிடம் கூறும் எளிய பரிகார வழிபாட்டு முறை திதி, நட்சத்திர வழிபாடு. அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி திதியிலும், சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலும் செய்யும் பூஜை பல மடங்கு பலன் தரும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். அவற்றில் சித்ரா பவுர்ணமிக்கு அதிக பலம் இருக்கிறது. அந்த நாளில் செய்யும் வழிபாடு, நம்முடைய ஜனன ஜாதகத்தின் பலனையே மாற்றும் வல்லமை கொண்டது.

    நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைக்கும் பணியைச் செய்பவர் சித்ரகுப்தன். ஒருவர் இறந்தபிறகு அவரது ஆன்மா, சொர்க்கத்திற்கு செல்வதா? நரகத்திற்குச் செல்வதா? என்பதை முடிவு செய்யும் எமதர்மனின் உதவியாளராக சித்ரகுப்தன் உள்ளார். ஒரு உயர் அதிகாரியை சந்திக்க அவரின் உதவியாளரை சந்தித்து முதலில் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே அந்த அதிகாரியை சந்திக்க முடியும். அதன்படி எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

    சித்ரா பவுர்ணமி அன்று பூஜை அறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர் அலங்காரம் செய்யுங்கள். பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள், கலவை சாதங்கள் நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி, தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும். இதன் மூலம் பாவ பலன் குறைந்து, புண்ணிய பலன் பெருகும். மேலும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.

    சித்ர குப்தனின் மனைவி சித்ராதேவி ஆவாள். அந்த அன்னைக்கு, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப் பொடி சாதம், மாங்காய் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா படைத்து, அவற்றை தானமாக வழங்கியும் புண்ணியம் பெறலாம். கல்வி கேள்விகளில் சிறந்தவர் சித்ரகுப்தன் என்பதால், அவரது பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டு புத்தகங்களை வைத்து வழிபட்டால் பிள்ளைகளுக்கு படிப்பு நன்றாக வரும்.

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான கடன் உண்டு. ஒன்று பிறவிக் கடன், மற்றொன்று பொருள் கடன். பெரும்பான்மையானவர்கள், இந்த இரண்டு கடன்களில் இருந்து மீள முடியாதவர்களாக, அவதிப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த துன்பத்தை நீக்கும் வழிபாடாகத் திகழ்வதுதான் சித்ரா பவுர்ணமி வழிபாடு.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று, சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திலும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால் முறையான பவுர்ணமி பூஜை வழிபாடு பாவ விமோசனம் தரும். சூரியன் சித்திரை மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சம் பெறுவார். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. அவருக்கு ஞானகாரகன், மோட்சக்காரகன் என்று பெயர். அன்று சூரியன் தன் முழு சக்தியான உச்சத்தை வெளிப்படுத்துவதால் செய்யும் பவுர்ணமி வழிபாடு ஆன்ம பலத்தையும், ஞானத்தையும், மோட்சத்தை தந்து பிறவிக் கடனில் இருந்து மீளச் செய்யும். சந்திரன் சஞ்சாரம் செய்வது சித்திரை நட்சத்திரம். அது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் பொருள் கடன் தீரும் என்பதில் ஐயமில்லை. எல்லா வருடமும் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பவுர்ணமி வருவதில்லை. எனவே இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியில் வழிபடுவது பல மடங்கு பலனைத் தரும்.

    சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வில்லீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
    கோவை இடிகரையில் பழமை வாய்ந்த வில்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர் கோடுகள் உள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் இதனை நேரில் பார்ப்பவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இந்த வருடம் பங்குனி மாதத்தில் வில்லீஸ்வரர் மீது கடந்த 5 நாட்களாக சூரியஒளி விழுந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல கடந்த வாரம் துடியலூர் அருகில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலிலும் சூரிய கதிர்கள் இறைவனின் மீது விழுந்தது. வடமதுரை விருந்தீஸ்வரர், இடிகரை வில்லீஸ்வரர் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புடையது திருஇடைமருதூர். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதின பரிபாலனத்தில் விளங்குகிறது. “ஈசன் உறைகின்ற இடைமருது” என்று திருஞான சம்பந்தரால் போற்றிப் பாடப்பெற்ற இத்திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. இத்தலம் ‘மத்தியார்கள் சேத்திரம’ என்று போற்றப்படுகிறது. மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம்.

    “திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு” என்று கூறுவது வழக்கம். அதற்கிணங்க இங்கு தெருக்களின் அமைப்பு சிறப்பான ஒன்றாகும்.

    இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு ஸ்ரீமகாலிங்கப் பெருமான் ஆவார். அம்மையார் பெயர் பெருநலமா முல்லையம்மை.
    இத்தலத்தில் தேரோடும் வீதிகளில் கோடியில் விநாயகர் ஆலயமும், கீழை வீதியில் ஸ்ரீ விசுவநாதர் ஆலயமும், தெற்கு வீதியில் ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயமும், மேல வீதியில் ஸ்ரீ ரிஷிபுரீசுவரர் ஆலயமம், திருமஞ்சன வீதியில் (வடக்கு வீதி) ஸ்ரீ சொக்கநாதர் ஆலயமும் அமைந்து நடுவில் ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளதால் இது பஞ்சலிங்கத் தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் மகாதேவர் தமது ஞானசக்தியாகிய உமா தேவியாருக்கு ஆகமங்களை உபதேசிக்க, அன்னையார் அவற்றையெல்லாம் திருவுளங்கொண்டு மகிழ்ந்து ஏற்று இறைவனை வணங்கி, “பிரபோ! இவ்வுலக வளங்களையும் அதற் கொப்ப ஆன்மாக்கள் வழிபட்டு உய்ய தேவரீர் எழுந்தருளிச் சிறப் பிக்கும் தலங்களையும் அவற்றில் உயர்ந்ததாக- சிறந்ததாக விளங் கும் ஒன்றைக் காட்டியருள வேண்டுகிறேன்” என வேண்டினாள்.

    சிவபெருமான் அதை ஏற்று, ரிஷபாரூடராய்க் கைலாயத்தினின்றும் புறப்பட்டு எல்லாத் தலங்களையும் காட்டி, காவிரியின் தென்கரையில் உள்ள இந்த திருவிடை மருதூர் தலத்தை அடைந்தார். “தேவி! இந்தத் தலம் மிகவும் அழகானது. அமைதியானது. எனக்கு அதிகம் விருப்பமானது. இதன் அழகை நீ காண்பாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    உமாதேவியாரும் அந்தத் தலத்தை நன்கு சுற்றிப்பார்த்து, காசிபர் போன்ற முனிவர்கள் தவஞ்செய்தலையும், மற்ற விசேஷங்களையும் கண்டு களிப்புற்றாள். அங்கே தவஞ்செய்யும் முனிவர்கள் தம்முட் பேசிக் கொள்ளும் வினாவிடைகளைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, பார்வதி தேவியோடு ஈஸ்வரனும் ஒரு முகூர்த்த காலம் யாவரும் அறியா வண்ணம் மறைந்திருந்தார்.

    அப்போது அங்கே வந்த அகஸ்திய முனிவரைக் கண்ட தவயோகிகள் அவரை வணங்கி, “தேவரீர் இங்கே எழுந்தருளியிருப்பது நாங்கள் செய்த பாக்கியமே. சுவாமி! யாகம் முதலிய கருமங்களைச் செய்யப் பயனளிப்பது அக்கருமமா? அல்லது ஈஸ்வரனா என்ற சந்தேகம் நெடுநாளாக எங்கள் மனத்தில் உள்ளது தாங்கள் அந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டுகிறோம்” என்றனர்.

    அதைக் கேட்ட மலையமுனி “கர்மா தானே பயன் தராது. அதன் பயனைத் தருபவர் ஈஸ்வரனே” என்று விளக்கிக் கூறி முனிவர்களே, அவனருளாலேயே அவனை அடைய வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. ஆதலால் நீவிர் அருள்வள்ளலாம் உமாதேவியாரைக் குறித்துத் தவம் செய்து அவள் அருளால் ஈசனைத் தரிசியுங்கள்” என்று கூறினார்.

    இதைக்கேட்ட அன்னை இவர்களுக்குக் காட்சி கொடுத்தல் வேண்டும் என்று இறைவனை வேண்ட, “நாம் இப்போது இவர்களுக்கு வெளிப்படுவது முறையன்று. அகஸ்தியன் கூறியபடியே நடக்கட்டும்” என மொழிந்து உமாதேவியுடன் திருக் கயிலாயம் எழுந்தருளினார். பின்பு அகத்திய முனி கூறியபடி அனைவரும் கலை மகளை நோக்கித் தவம் செய்து வேதாகமங்களின் உண்மைப் பொருள் உணர்ந்து, பின் மலர்மகளான லட்சுமியை நோக்கித் தவம் செய்து, யாகத்துக்குரிய பொருள்கள், தடாகம், மண்டபம், சண்பகச் சோலை, நவமணிக்குவியல், காமதேனு, கற்பகம் போன்றவற்றைப் பெற்றனர். பின்பு முனிவர்களுடன் அகஸ்தியரும் உமாதேவியாரை நினைத்து அந்தச் சண்பகச் சோலையிலிருந்து யாகம் வளர்த்துத் தவம் செய்யத் தொடங்கினார்.

    எப்போதும் உமாதேவியாருடைய திருவடிகளை நினைத்துப் பல நாட்கள் தவம் புரிந்தனர். அம்மையாரின் தரிசனம் கிட்டவில்லை. அகஸ்திய முனிவர் பெரிதும் வருந்தினார். திருவருள் கூட்டினாலன்றி எவ்வித முயற்சியும் பயன் தராதன்றோ! அகஸ்தியர் அம்மையார் அருளாமை குறித்துச் சிவபெருமானை வேண்ட, இறைவன் அகஸ்தியர் பால் கனிந்து உமையைத் தரிசனத்துக்கு அனுப்புகிறார்.

    அம்மையார் வேள்விச்சாலையில் அக்னியில் தோன்றிக் காட்சியளிக்கிறார். முனிவர்கள் அம்பிகை வடிவத்தைத் தரிசித்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்கள். ஆடினர், பாடினர், அன்புக் கோஷம் எழுப்பினர். அவளை ஆசனத்தில் இருத்திப் பூசையாற்றினார். தங்களது வேண்டுகோளை இறைவரையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார்கள். அம்பிகை முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று அம்முனிவர்கள் போல் தாமும் தவவேடம் மேற்கொண்டார்.

    அம்பிகை பக்தியுடன் காவிரியில் நீராடி, நித்திய கர்மங்களை முடித்து திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதி, வேண்டிய உபகரணங்களை எல்லாம் சேகரம் செய்து ஐவகை சுத்தியும் செய்து சிவபெருமானை நோக்கி பூஜித்து, பின் இறைவனை தியானித்து மோனநிலையை அடைந்து சிவோக பாவனையில் தவமிருந்தார். இத்திருக்கோலமே மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. இம்மூர்த்தம் இவ்வாலயத்தில் தனிச்சந்நிதியாக திகழ்கிறது.

    இப்படி நிகழும் காலத்தில், அம்பிகை ஹிருதய கமல மத்தியில் இறைவன் ஜோதிர்மய மகாலிங்கமூர்த்தியாய் அவர்களுக்கு தோன்றினார். அதனின்றும் பிறையுடன் கூடிய முடியும், மான், மழு, அபயம், வரதம் அமைந்த திருக்கரங்களுடன் ஏகநாயகமூர்த்தியாய் எழுந்தருளிக் காட்சி அளித்தார்.

    முனிவர்கள் வணக்கத்துடன் துதி செய்து “நாம் செய்த தவம் பலித்தது” என்று கூறி, ஆனந்தப் பரவசமுற்றனர். இறைவன் அம்பிகையை நோக்கி, “உனது தவம் கண்டு மகிழ்ந்தோம். அகஸ்தியர் போன்ற முனிவர்களுக்கும் காட்சியளித்தோம். இனி யாரும் அறியும்படி நாம் முன்னை வடிவமாகக் கொண்ட ஜோதிமய மகாலிங்கத்தை அநாதியாக உள்ள நம் உருவமாகிய லிங்கத்துடன் ஐக்கியத்து பூஜிக்கிறோம்” என்று கூறி தேவர்கள், வானவர்கள் தத்தம் பணிகளைச் செய்து முடித்து இறைவன் அருகே நிற்க, தாம் உரைத்தருளிய வேதாகம் விதிப்படி மகாலிங்கத்தைப் பூஜிக்கலானார்.

    இதைக் கண்ட தேவி, “பிரபோ! பிரம்மன், விஷ்ணு போன்ற தேவர்கள் அன்றோ தங்களை அர்ச்சிப்பர். தாங்கள் இந்த ஜோதிலிங்கத்தில் எவரைப் பூஜித்தீர்கள்?” என்று வினவ, அதற்கு மகேஸ்வரன், “உமையே! பூசித்தோனும் பூசனையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூஜிப்பதற்கு காரணம்.

    இம்முனிவர்களுக்கு நம்மைப் பூஜிக்கும் முறையை அறிவுறுத்தற்பொருட்டே” என்று கூறி முனிவர்களுக்குச் சிவஞானத்தை அருளி, லிங்கத்தின் பெருமையையும் பூஜை செய்யும் முறையையும் பூஜிப்பவர்கள் அடையும் பயனையும் விவரித்து கூறி உமையுடன் திருக்கயிலாயம் சென்றார்.

    பிறகு தேவர்களும் முனிவர்களும் விஸ்வகர்மாவை அழைத்து ஆலயம் அமைக்கும் முறையைக் கூறி அதன்படி கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் போன்ற ஆலயக் கட்டிடங்களை எழுப்பினர். இன்னும் இவ்வாலயத்தில் ஐந்தாம் திருவிழா அன்று தம்மைத் தாமே அர்ச்சித்தல் நடைபெறுகிறது.
    திருவிடை மருதூர் கோவிலின் முதல் பிரகாரத்தில் அன்பிற்பிரியாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    திருஞான சம்பந்தர் திருவிடை மருதூர் தலத்துக்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார்.

    அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை “அன்பிற் பிரியாள்’ என அழைக்கின்றனர். அம்மன் கோவிலின் முதல் பிரகாரத்தில் அன்பிற்பிரியாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எழுதி வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    1. அருள்மிகு மகாலிங்கப்பெருமானை வழிபட்டவர்கள் இச்சன்னதியில் எழுந்தருளிக்கும் அன்பிற்பிரியாளைத் தவறாது வழிபட வேண்டும்.

    2. குழந்தைப்பேறு இல்லாதவர்களும், கரு உண்டாகி அடிக்கடி கருகலைந்தும் குறைபிரசவம் கண்டவர்களும் அன்பிற்பிரியாளை வணங்கி பிரார்த்தித்து வருபவர்களுக்கு கருஉருவாகி கருகாக்கப்பட்டு குழந்தை பாக்கியம் உண்டாகி சுகப்பிரசவம் அருள்வாள்.

    3. இதுபோல் பாதிக்கப்பட்ட சேலத்து செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த அம் மையார் ஒருவருக்கு அடிக்கடி கரு உருவாகி கரு கலைந்து குடும்பத்தில் மன உளைச்சல் ஏற்பட்டதால், இந்த அன்பிற்பிரியாள் அம்மனை பிரார்த்தனை செய்து, இந்த சன்னதியை புதிப்பித்து, தனிக்கோயிலாக அமைத்தும் திருப்பணிகள் செய்து கொடுத்ததின் பலனாக அவர்களுக்கு கரு உருவாகி, கருகாக்கப்பட்டு குழந்தை பாக்கியம் பெற்று அவர்கள் வம்சம் தழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்ந்து வருவது உண்மைச் சம்பவமாகும்.

    4. அன்பிற்பிரியாள் அம்மனை வேண்டி குழந்தைபேறு பெற்றவர்கள் தொட்டில் கட்டி அம்மையை வழிபடுவது வழக்கத்தில் ஒன்று.

    5. எனவே அன்பிற்பிரியாள் அம்மையை வணங்கி வம்சாவளியை வளர்த்துக் கொள்ள பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டுகிறோம். மகாலிங்கசுவாமியை சுற்றி வரும் போது பிரகாரத்திலும் அன்பிற்பிரியாளுக்கு மலை மீது அமர்ந்த கோலத்தில் தனி சன்னதி உள்ளது.
    திருமுருகன்பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்டுள்ள மகா சதாசிவ மூர்த்தி சிலை சிவகங்கை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலை கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் கலை நயமிக்க சிலைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அங்குள்ள ஒரு சிற்ப கலை கூடத்தில் 25 தலை மற்றும் 50 கைகளுடன் கூடிய மகா சதாசிவ மூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை குறித்து ஸ்பதி சண்முகம் கூறியதாவது:-

    திருமுருகன்பூண்டியில் தினமும் பல சிலைகள் வடிவமைத்தாலும் இதுபோன்ற சிலை வடிவமைக்கப்படுவது முதல்முறையாகும். இந்த சிலை 4 டன் எடையுடன், 7½ அடி உயரத்தில் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 தலைகள், 50 கைகள் மற்றும் அம்பாள் மடியில் இருப்பது போன்று மிகவும் தத்ரூபமாக மகா சதாசிவ மூர்த்தி சிலையை வடிவமைத்துள்ளோம். இந்த சிலையை 6 பேர் கொண்ட குழு 6 மாத காலத்தில் உருவாக்கி உள்ளோம்.

    இதேபோல் 6¾ அடி உயரத்தில், 3 டன் எடை அளவுள்ள 11 தலைகள் கொண்ட விஸ்வரூப சுப்பிரமணிய சாமி சிலையையும் கலைநயத்துடன் செதுக்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த 2 சிலைகளும் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் உள்ள பிரத்தியங்கர தேவி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    ×