search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா"

    • கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

    இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    சந்திரபாபு நாயுடுவை கடவுள் வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என்று நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.
    நகரி :

    ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்துவிட்டு சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் கண்கலங்கினார்.

    இதுகுறித்து நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா பேசுகையில், “பெண் பாவம் பொல்லாதது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டு காலம் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். பெண் என்றும் பாராமல் என்னை அவதூறு கேலி செய்தனர். அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன். கண்ணீர் வடித்தேன்.

    இதற்கெல்லாம் ஒருநாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. இன்னும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் உள்ளது. அதன் பிறகும் கூட அவர் வெற்றி பெறுவது, முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காது. எனவே கடவுள் அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
    ஆந்திர முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நகரி:

    ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.

    இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.

    கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவினார்.


    ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். ரோஜா பிரசாரம் செய்த இடங்களில் 97 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ரோஜாதான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார். அதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.

    பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார். #ParliamentElection #Roja
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    அடுத்த மாதம் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார்.

    அதே நேரத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார்.

    இந்தநிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “வேட்பாளர் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 41 இடங்களும், சிறுபான்மையினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்தினருக்கும் ‘சீட்’ வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என கூறினார்.



    வேட்பாளர் பட்டியலின்படி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.

    முதல்-மந்திரி என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    நடப்பு சட்டசபையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மருமகன் தக்குபட்டி வெங்கடேஸ்வரராவ், புர்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு (தெலுங்குதேசம்) எதிராக இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடுகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 2 பேருக்கு மட்டும் இப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23 தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லூர் தொகுதி எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் தொகுதி எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகிய இருவருக்கும் மீண்டும் களம் காண வாய்ப்பு தரப்படவில்லை. #ParliamentElection #Roja

    திருப்பதி கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தெரிவித்தார். #YSRCongress #Roja #Tirupati
    திருமலை:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:- ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே இருந்த மிகவும் பழமை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இடிக்கப்பட்டது.

    ஆயிரங்கால் மண்டபம் என்பது சாட்சாத் ஏழுமலையான் அமர்ந்து பக்தர்களுக்கு மோட்சம் அளிப்பதாக போற்றக் கூடிய இடமாக கருதி வந்ததால் அதனை இடித்து விடக்கூடாது என்று பல குருமார்களும் தலைவர்களும் எதிர்ப்பும் கண்டனம் தெரிவித்தும் ஆயிரம் கால் மண்டபம் இடிக்கப்பட்டது.


    ஆனால் இன்றளவும் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படவில்லை. இதற்கான எந்த நடவடிக்கையும் சந்திரபாபு நாயுடு எடுத்ததாகவும் தெரியவில்லை. மேலும் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும்.

    அத்துடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவிக்கு வந்த உடன் ஆயிரம் கால் மண்டபம் கட்டுவதையே முதல் பணியாக மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress #Roja #Tirupati
    ×