search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    சென்னை நகரம் முழுவதும் வழிப்பறி மற்றும் கொள்ளையை தடுக்க இதுவரை 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #CCTVCameras

    சென்னை:

    கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    போலீஸ் கமி‌ஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பிறகு சென்னை நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை துரிதப்படுத்தினார்.

    அதன் பேரில் சென்னை மாநகரம் 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பல இடங்களில் பொதுமக்களே முன் வந்து தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகிறார்கள். போலீசாரும் அவர்களின் கேமரா பொருத்தும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கேமரா பொருத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள்.

    முக்கிய சாலைகளில் குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேமரா பொருத்துவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்தை சீர் செய்யும் இடங்களை சுற்றியுள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் பயனாக சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்பவர்களும் சிக்குகிறார்கள். போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகனங்களின் எண்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து அவர்களின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கேமராக்கள் மூலம் குற்றவாளிகளும் சிக்குகிறார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே சில தினங்களுக்கு முன்பு ஒரு கொலை நடந்தது. அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்காக ஆய்வு செய்த போது வடமாநில வாலிபரை சிலர் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதுபோல பல்வேறு குற்ற செயல்களில் துப்பு துலக்குவதற்கு கேமராக்கள் உதவியாக உள்ளன.

    குற்றவாளிகளுக்கு வைக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தவறு செய்யும் போலீசாரும் சில நேரங்களில் சிக்குகிறார்கள். சமீபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் மது அருந்தி பணிக்கு வந்திருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். அது பொய்யான குற்றச்சாட்டு என்பது கண்காணிப்பு கேமரா மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த போலீஸ்காரர் ஒரு பைக்கில் செல்லும் போது இன்ஸ்பெக்டர் அவரை தள்ளி விட்ட காட்சி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை நகரம் முழுவதும் இதுவரை 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன் சாவடி சந்திப்பில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் 12.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நேற்று 443 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #CCTVCameras
    நத்தம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நத்தம்:

    நத்தம் அண்ணாநகரை சேந்தவர் வேலவன் (வயது45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தைப்பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்துடன் குலதெய்வ சாமி கும்பிட சென்று விட்டார். இதனை நோட்டமிட்டு மர்மநபர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்தனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைக்க முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்து 17½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள புகழேந்தி என்பவரது வீட்டிற்குள்ளும் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். பீரோ லாக்கரை தூக்கி சென்று வெளியில் வைத்து உடைத்து பார்த்ததில் அதில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஊருக்கு சென்று திரும்பிய வேலவன் தனது மாடி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. மேலும் தடையவியல் நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவையில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் மூவேந்தர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது62). இவர் புதுவை கால்நடை துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் ரெயின்போ நகரில் கால்நடைகளுக்கான கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை மனோகரன் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ. 1½ லட்சம் பணத்தை எடுத்து பேக்கில் வைத்து தனது காரில் கொண்டு வந்தார். காரை கிளினிக் அருகே நிறுத்திவிட்டு கிளினிக் உள்ளே சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்ல காரை எடுக்க வந்தபோது காரின் பக்கவாடு கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரில் பேக்கில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டுகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோகரன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
    திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடையின் சுவரில் பெரிய துளைபோடப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுக்கடையில் விற்பனை பணத்தை நேற்று ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டதால் அவை தப்பியது.

    பணம் இல்லாததால் கடையில் இருந்த சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம கும்பல் சுருட்டி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சீர்காழி மெயின் ரோட்டில் வள்ளாலகரம் வெங்கடேசா நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சோமு பிள்ளை என்பவர் வந்தார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் விநாயகர் சிலையில் இருந்த வெள்ளி கீரிடமும் திருட்டு போய் இருந்தது.

    உடனே இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர்.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. திருட்டு போன வெள்ளி கீரிடம் 820 கிராம் ஆகும்.

    கோவில் உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொருக்குப்பேட்டையில், நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது. #GoldRobbery
    பெரம்பூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.

    நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery
    ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் சோலார் பேனல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கண்டமனூர் சாலையில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடமலைக்குண்டுவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பராமரித்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவை மூடிச் சென்றார். மறு நாள் காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த சோலார் பேனல் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வரு‌ஷநாடு அருகே உள்ள தும்மக் குண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 22), விக்னேஷ் (24) ஆகியோர் சோலார் பேனலை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சோலார் பேனலையும் பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூரில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவ்வழியாக ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர்.

    உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். சந்தேகமடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து பார்த்த போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

    சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. ஏ.டி.எம்.எந்திரத்தை மர்ம கும்பல் கடப்பாரையால் உடைத்து உள்ளனர். பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

    இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பெண்ணிடம் 16 பவுன் நகையை பறித்துச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை புட்டுத்தோப்பு ரோட்டைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி ஹேமலதா (வயது 42). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு தனது ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு ஹெல்மெட்டை கழற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர் திடீரென ஹேமலதா கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.

    இது குறித்து ஹேமலதா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்தவனை தேடி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள கோவில்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 60) விவசாயி. இவர் நேற்று காலை தன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடலூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த இரண்டு பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைபோனவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த செல்வராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குத்தாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரையில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வரும் கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கண் இமைக்கும் நேரத்தில் பெண்களை தாக்கி நகை பறித்துச் செல்வதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    நாள்தோறும் நகை பறிப்பு, வழிப்பறி போன்றவை தொடர்பான புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் போலீசாருக்கு உத்தர விட்டார். மேலும் தனிப் படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த வாரம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து 158 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேர் சிக்கினர்.

    நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க சட்டம், ஒழுங்கு துணை கமி‌ஷனர் சசிமோகன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் கூடல்நகர் பகுதியில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அடிக்கடி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 28), சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (24), வண்டியூரைச் சேர்ந்த அஜித் (23), புதூர் கார்த்திக் (25), வில்லாபுரம் மொட்டை செல்வம் (24), ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய 6 பேர் என தெரியவந்தது.

    போலீசார் அவர்களை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகள், அண்டை மாவட்டங்களில் 30 நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட் டுள்ளது தெரியவந்தது.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நடந்து செல்லும் இளம்பெண்கள், முதியவர்களை குறிவைத்து கொள்ளைகளில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இவர்களிடம் இருந்து போலீசார் 85 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வழிப்பறி கும்பலிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்த போலீசாரை, மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாராட்டினார்.

    கோச்சடையில் பால்வாடி ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அச்சம்பத்து:

    மதுரை கோச்சடை கானை அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 54). தெற்குவாசல் பகுதியில் பால்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று கல்யாணசுந்தரம் பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றார். பின்னர் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார்.

    பட்டப்பகலில் வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையில் வைத்திருந்த 31 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நகை-பணம் கொள்ளை நடந்த பகுதி பரபரப்பான குடியிருப்பு பகுதியாகும். இங்கு பட்டப்பகலில் திருட்டு நடந்திருப்பது அங்கு வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×