search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    கோவையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் இன்று காலை உள்ளே சென்று பார்த்தபோது 3 கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மற்றொரு கடையில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் எந்திரம் தயாரிக்கும் கம்பெனி, பேரிங் இரும்பு கம்பெனி உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களையும் பீதியடைய செய்துள்ளது.

    மதுரவாயல்-தேனாம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் கடந்த 23-ந்தேதி இரவு துபாய் செல்லும் நண்பரை வழியனுப்ப சென்னை வந்தார்.

    இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தி 2 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் அதே பகுதி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த கார்த்திக், சூர்யா, அவர்களது மற்றொரு நண்பர் ஆகியோர் சேர்ந்து ஜெகதீஸ்வரனை கத்தியால் குத்தி செயினை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், 2 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் தப்பி ஓடிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். கைதான கார்த்திக் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேனாம்பேட்டையில் கஜேந்திரன், சங்கரன், கந்தசாமி ஆகியோரிடம் அடுத்தடுத்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக நந்தனத்தை சேர்ந்த குள்ளுபிரதீப், நிர்மல், கண்ணகிநகர் சீனிவாசன், ராஜா ஆகிய 4 பேரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ஒரத்தநாடு அருகே கோவில் கதவை உடைத்து துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலை கொள்ளை போய் உள்ளதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று. கும்பாபிஷேக விழா நடந்தது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கோவிலில் இருந்த துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையை திருடினர். மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் கோவிலில் இருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த கிராம மக்கள், கோவில் கதவு உடைக்கப்பட்டு, அம்மன் சிலை கொள்ளை போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன அம்மன் சிலை 3 அடி உயரம் கொண்டதாகும். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே கோவில் விநாயகர்சிலை கொள்ளை போய் உள்ளது. இந்நிலையில் தற்போது துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையும் கொள்ளை போய் உள்ளதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓடும் ரெயிலில், 10 நாட்களுக்குள் 2 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கொண்ட கும்பலை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூர்:

     பெங்களூரு-மைசூரு மார்க்கத்தில் ஓடும் ரெயிலில், 10 நாட்களுக்குள் 2 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கொண்ட கும்பலை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பெங்களூர் வழியாக மைசூரு செல்லும் ரெயிலில், இரவு நேரங்களில் பயணிகள்போல் ஏறி, ரெயில் கதவு அருகே அமர்ந்திருக்கும் பயணிகளை முதலில் குறி வைப்பார்கள். பின்னர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், தங்க சங்கிலி, மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறிப்பார்கள்.

    பின்னர் அந்த கொள்ளையர்களில் ஒருவன், ரெயில் சங்கிலியை பிடித்து இழுப்பான். ரெயில் நின்றதும், அவர்கள் 5 பேரும் குதித்து ஓடி விடுவார்கள். வெவ்வேறு சம்பவங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் குவிந்ததையடுத்து அவர்கள் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், பெங்களூரு நாயண்ட ஹள்ளி அருகே உள்ள விநாயக நகரை சேர்ந்த கீர்த்திராஜ் (வயது 24), சந்திரா லேஅவுட் பகுதியை சேர்ந்த சுனில் (22), பனசங்கரி பகுதியில் வசிக்கும் குணமஞ்சா (24), நாயண்டஹள்ளி அபிஷேக் (25) மற்றும் பரத் (20) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

    பின்னர் ரெயில்வே போலீசார் அவர்களை கைது செய்து, கொள்ளை கும்பலிடம் இருந்து 24 கிராம் தங்க சங்கிலி, 3 தங்க மோதிரம், 10 மொபைல் போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 5 வாலிபர்களும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூரில் ஆடிட்டர் அலுவலகத்தில் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த், ஆடிட்டர். இவர் வருமானம் மற்றும் சொத்து வரி சம்பந்தமான ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். நேற்று இரவு மர்மநபர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி விட்டனர்.

    இதுகுறித்து விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நண்பருடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அச்சரப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்த கார்த்தி, அவரது நண்பர் செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அம்பேத்கார் என்பதும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்து சென்றதையும் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் கார்த்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் அம்பேத்கருடன் சேர்ந்து செவிட்டுபனப்பாக்கத்தில் உள்ள மாமியார் வரதம்மாள் வீட்டில் கொள்ளையடித்ததையும் ஒப்புக் கொண்டார்.

    உல்லாச செலவுக்காக பணம் தேவைப்பட்டதால் மாமியார் வீட்டில் கைவரிசை காட்டியதாக அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து கார்த்தி, அம்பேத்கரை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

    அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.52 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கோசாகுளம் எம்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (வயது 55). இவர் எல்லீஸ் நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

    சம்பவத்தன்று ஜோதிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு கேரளாவுக்குச் சென்றனர்.

    இந்த நிலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி அவர்கள் ஜோதிநாதனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக விரைந்து வந்து பார்த்தார். வீட்டினுள் இருந்த பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்ட ஜோதிநாதன், கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ, கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பது தெரிய வந்தது.

    பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.52 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜோதிநாதன் தெரிவித்தார்.

    வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைள் சேகரிக்கப்பட்டன.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. பூட்டிய வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த மவுலானா (58) வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திடீரென மாயமானது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்த மவுலானா, வீட்டு வேலைக்காரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலைக்காரி ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த காந்திமதி (75) வீட்டில் படுத்திருந்தபோது, யாரோ மர்ம மனிதன் நைசாக உள்ளே புகுந்துள்ளான். அவன், காந்திமதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றான்.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்க நகரில் வசித்து வருபவர் அல்லா பகாஷ்(வயது56). பட்டாசு வியாபாரியான இவர், மாந்திரீகம் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம், 26-ந்தேதி இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் ஓடு போட்ட தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றனர். . இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக எளாவூர் அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் பஸ் கம்பெனிக்குள் புகுந்த கொள்ளையனை பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது.

    இந்த பஸ் கம்பெனிக்குள் நேற்றிரவு 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் திடீரென புகுந்தார். இதை பார்த்த அங்கு பணியில் இருந்து ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அந்த மர்ம நபர் அங்குள்ள கழிவறையில் பதுங்கி கொண்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்து வெளியில் வந்த அவரை பிடித்து தர்ம அடி கொடுத்த ஊழியர்கள் அவரிடம் விசாரித்தனர். அவர் வாய் திறக்க மறுத்து விட்டார்.

    அப்போது பொருட்களை திருடும் நோக்கில் கம்பெனியில் புகுந்திருக்கலாம் என்றும் இதே போல மேலும் பல இடங்களில் புகுந்து கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ஊழியர்கள் மர்ம நபர் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் வாய் திறக்க மறுத்து வருகிறார். இதனால் அவர் ஊமையா அல்லது அப்படி நடிக்கிறாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அச்சம்பட்டி ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சண்முகையா (வயது 82). சம்பவத்தன்று இரவு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1000 ரூபாய் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

     இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    திருட்டு சம்பவங்களை தடுக்க சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தீவிர வாகன சோதனை மற்றும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். 

    விசாரணையில் கருத்தானுரை சேர்ந்த சண்முகையா மகன் இளங்கோ (22), மனோகரன் மகன் மதன்குமார் (17), கண்ணன் மகன் முரளிஆனந்த் (19) என தெரியவந்தது. இவர்கள் பெட்டிக்கடையை உடைத்து ரூ. 1000 ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதை தவிர வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பெரம்பூர் அருகே மொபட் சீட்டை உடைத்து பெண்ணிடம் ரூ.4 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு பட்டாளம் ராமானுஜம் காலனியை சேர்ந்தவர்வேல் முருகன். குவைத்தில் இருக்கிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி.

    நேற்று மதியம், ராஜலட்சுமி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். அதை தனது மொபட் சீட்டின் அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

    அங்கிருந்து போங்கல்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மொபட்டை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை பார்த்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜலட்சுமி மொபட்டில் வீடு திரும்பினார்.

    பணத்தை எடுப்பதற்காக சீட்டை திறந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி ஓட்டேரி போலீசில்புகார் செய்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் ஆயுர்வேத டாக்டர் மற்றும் அவரது மனைவியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆண்டிப்பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (75) ஆயுர் வேத டாக்டர். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய கிளினிக் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சாஜி தேவி (70). இவர்கள் இருவரும் தனியாக தான் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு ஸ்ரீதரன் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

    நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த 3 பேர் கும்பல் திடீரென எழுந்தனர்.

    அவர்கள் முகமூடி, கையுறை அணிந்து இருந்தனர். கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து இருந்தனர்.

    அக்கும்பல் சாஜி தேவியை பிடித்து அங்குள்ள அறையில் தள்ளி பூட்டினார்கள். பின்னர் ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை எங்கு உள்ளது என கேட்டனர்.

    அதற்கு ஸ்ரீதரன் பதில் அளிக்க மறுத்தார். உடனே கொள்ளை கும்பலில் ஒருவன் ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியால் லேசாக கீறினான். இந்த நிலையில் அறையில் அடைக்கப்பட்டு இருந்த சாஜி தேவி சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதனை பார்த்ததும் 3 வாலிபர்களும் தப்பி ஓடினார்கள். அவர்களை பொது மக்கள் துரத்தினர். அவர்களில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கினான்.

    அவனை பிடித்து கயிற்றால் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    பொதுமக்கள் பிடியில் சிக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் பேச முடியவில்லை.

    அவனது சட்டைபையில் சென்னையில் இருந்து திருப்பூர் வந்ததற்கான டிக்கெட் இருந்தது.

    எனவே அவன் சென்னையை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தப்பி ஓடிய மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் 3 பேரும் ஸ்ரீதரன் வீட்டிற்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளனர்.

    அவர்கள் கொள்ளையடிக்க வந்தார்களா? அல்லது ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து அவர்களது சொத்தை அபகரிக்க உறவினர்கள் கூலிப் படையை ஏவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×