என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96812"
ராயபுரம்:
கொத்தவால்சாவடி, ஆறுமுகம் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று மாலை அவர் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இது பற்றி கொத்தவால் சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தர்ஷன் கொள்ளையடித்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து தர்ஷனை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் மீட்கப்பட்டது. கைதான தர்ஷன் மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடன் பிரச்சினை காரணமாக கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெப்பளாம்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த நம்பியாம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது 42), விற்பனையாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (50) உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஊத்தங்கரை- அரூர் சாலையில் காட்டேரி பகுதியில் அவர்கள் சென்றபோது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆனந்தன் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து 2 பால்ரஸ் குண்டுகள் அகற்றப்பட்டன.
காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த முருகன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஊத்தங்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) தங்கவேல், தடயவியல் நிபுணர் மாணிக்கம் உள்பட பலர் நேரில் வந்து சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் ஐ.ஜி. பெரியய்யா போலீசாரிடம் கூறியதாவது:-
இது ஒரு சவாலான வழக்கு. இதை உடனடியாக கண்டுபிடிக்காவிட்டால் மேலும் கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி விடும். எனவே உடனடியாக இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொள்ளை குறித்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எஸ்.பி.எம்.எல். என்று அழைக்கப்படும் சிங்கிள் பேரல் மஸ்லோடு கன் வகை துப்பாக்கி மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் கொள்ளையர்கள் சுட்டது தெரியவந்து உள்ளது.
இந்த வகை துப்பாக்கிகளை உள்ளூரை சேர்ந்த மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் வைத்திருப்பது வழக்கம். எனவே கொள்ளையர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே உள்ள செல்போன் டவரில் உபயோகத்தில் இருந்த செல்போன் நம்பர்களை இன்று போலீசார் கேட்டு வாங்கி உள்ளனர். அந்த செல்போன் எண்களை வைத்து துப்புதுலக்கும் பணியில் ஒரு தனிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல சம்பவம் நடந்த இடம் அருகே அரூர்- அனுமன்தீர்த்தம் சாலையிலும், ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலையிலும் காட்டு பகுதி உள்ளது. இங்கு மிருகங்களை வேட்டையாட சிலர் கள்ளத்துப்பாக்கி வைத்து உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படி வனத்துறையினரும், போலீசாரும் கேட்டுக் கொண்டபோது ஒருசிலர் மட்டுமே துப்பாக்கிளை ஒப்படைத்தனர். பலர் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை. அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்கள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி கொள்ளை நடந்தது. தற்போது ஊத்தங்கரையில் டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை நடந்து உள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியையொட்டி அரசு மதுபான டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.
இந்த டாஸ்மாக் கடையில் தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், அரூர் நம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (42) என்பவர் உதவி விற்பனையாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று இரவு மதுபான கடையில் கணக்கு சரிபார்த்து விட்டு 10.45 மணியளவில் கடையை பூட்டினர்.
அப்போது விற்பனை செய்த ரூ.3½ லட்சத்தை எடுத்து கொண்டு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்தனர். வண்டியை ஆனந்தன் ஓட்டி வந்தார்.
அவர்கள் 2 பேரும் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்தி வந்ததை கண்டனர். உடனே ஆனந்தன் வண்டியை வேகமாக ஓட்டினார். அப்போது மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் வழிமறித்தனர்.
அவர்கள் முருகனையும், ஆனந்தனையும் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தாக்கி பணத்தை முழுவதும் கொடுக்குமாறு கூறினர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டதால் முருகன் பணப்பையை தராமல் தடுக்க முயற்சி செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஆனந்தனையும், முருகனையும் சுட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ரூ.3½ லட்சத்தையும் எடுத்து சென்றனர்.
இதில் முருகனுக்கு காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். ஆனந்தனுக்கு பின் முதுகு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். உடனே முருகன் தனது செல்போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். நடந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் 2பேரும் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகனை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், பின்முதுகு பகுதியில் குண்டு பாய்ந்ததால் அதனை அகற்ற ஆனந்தனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tasmac
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் விஜய். இவர் ரெட்டியார்பட்டியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இங்கு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார், முருகன் ஆகியோர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி விஜய் வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் தீபாவளி விற்பனை பணம் ரூ. 8 லட்சம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ரெட்டியார் பட்டியை சேர்ந்த லெட்சுமணன் என்ற தினேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடையில் வேலை பார்த்த உதயகுமார், முருகன் ஆகியோரின் நண்பர் லெட்சுமணன் என்ற தினேஷ். கடந்த 4-ந்தேதி தனது நண்பர் தினேசை உதயகுமார், முருகன் ஆகியோர் வரவைத்துள்ளனர்.
அப்போது தீபாவளி விற்பனை நடந்ததால் விஜய் அவர்களை கண்காணிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து தினேசை கடைக்குள்ளேயே ஒரு மறைவான இடத்தில் தங்க வைத்தனர். இதை அறியாத விஜய் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இரவில் கடையில் தங்கியிருந்த தினேஷ் அங்கு விற்பனையான பணம் ரூ.8 லட்சம் மற்றும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கொள்ளையடித்தார். பின்பு விடியும் வரை அங்கேயே காத்திருந்தார்.
மறுநாள் காலை விஜய் கடையை திறக்க வந்தார். அப்போது தொழிலாளர்கள் உதயகுமார் மற்றும் முருகன் கடைக்கு வேலைக்கு வந்துள்ளனர். காலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதயகுமாரும், முருகனும், தினேசை கொள்ளையடித்த பணத்துடன் தப்பவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கார், பைக் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்தை மீட்டனர்.
சோழவரத்தை அடுத்த நாரனம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி விவசாயி.
இவர் நேற்று செங்குன்றத்திற்கு வந்து திருவள்ளுர் கூட்டுசாலை அருகே உள்ள அரசு வங்கி ஒன்றில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் எடுத்தார். அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டினார்.
செங்குன்றம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். சாப்பிட்டுவிட்டு வந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
சேலம் மாவட்டம் மல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுவேல். பெரியார் பல்கலைக்கழக ஊழியர். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 2-வது குழந்தையான ஹெம்ரிஸ்சின் (வயது 2) இடுப்பு பகுதியில் ஒரு கட்டி உள்ளதால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து சென்றனர்.
வழக்கம் போல கடந்த 7-ந் தேதி பென்னுவேல்-சுதா தம்பதியினர் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு சேலத்தில் உள்ள அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கடந்த 3 நாட்களாக தங்கியிருந்து குழந்தைக்கு சிகிச்சை பெற்ற அவர்கள் நேற்றிரவு மீண்டும் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது. கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பணம்-நகையை கொள்ளையடித்து சென்றதை அறிந்த பொன்னுவேல் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூரையை பிரித்து வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை ஹேம்ரிஸ்சுக்கு சிகிச்சைக்காக சீட்டு எடுத்து வீட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பொன்னுவேல் தவித்து வருகிறார். எனவே கொள்ளையர்களை பிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று கடையை திறக்க பணியாளர்கள் வந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் மிகப்பெரிய துளை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடைக்குள் துளையிட்டு நுழைந்த கும்பல் 15 மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்து சென்றது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகமாக இருக்கும்.
அதனை மறுநாள் வங்கியில் கட்டுவதற்காக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பணியாளர்கள் எடுத்து சென்று விட்டனர். இதனால் பணம் தப்பியது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர்மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக தாடிக்கொம்பு பகுதியில் காலை நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கும்பல் கொள்ளையடித்து சென்றது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த குற்ற செயல்களுக்கு கொள்ளையர்கள் பெரும் பாலும் திருட்டு மோட்டார் சைக்கிளையே பயன்படுத்தி வந்தனர்.
எஸ்.பி. சக்திவேல் உத்தரவுபடி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியதால் செயின் கொள்ளையர்கள் பிடிபட்டனர். மேலும் குற்றச் செயல்களும் குறைந்தன.
திண்டுக்கல்- தாடிக் கொம்பு சாலையில் நகர் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்துள்ள போலீஸ்காரர் பரமேஸ்வரன் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது18) என்பதும் பைக்கை திருடியதும் தெரியவந்தது.
மேலும் சிவக்குமார் மீது நகர் வடக்கு, மேற்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேறு ஏதும் கொள்ளை கும்பலுக்கு இவருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவர் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை செல்போன் கடை அருகில் சலூன் கடைக்காரர் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயகுமாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
விரைந்து வந்த விஜயகுமார் கடையை திறந்து பார்த்தபோது விலை உயர்ந்த 7 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருபவர் நாகராஜ். இவர் நேற்று மதியம் 2 மணிக்கு காரில் சென்னை ஆலந்தூர் பகுதிக்கு வந்தார்.
ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
சாப்பிட்டு முடிந்ததும் திரும்பி வந்து பார்த்தார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 20 கிராம் தங்க நெக்லஸ், லேப்டாப் மற்றும் அவரது மகளின் எம்.எஸ்.சி. படிப்பு சான்றிதழ் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
நாகராஜ் இதுபற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கார் கண்ணாடியை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம் நகரைச் சேர்ந்தவர் பிரபாகர். சென்னை ரெயில்வேயில் சட்டப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மேலும் பொருட்களை குவித்து வைத்து வீட்டுக்கு தீ வைத்து எரித்து இருந்தனர். தீ பெரிய அளவில் பிடிக்காமல் உடனடியாக அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளனர்.
இதையடுத்து அறையில் இருந்த டி.வி., 2 லேப்-டாப் மற்றும் மோட்டார்சைக்கிளை திருடி மர்ம கும்பல் தப்பி இருப்பது தெரிய வந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளை கும்பல் தீ வைத்த சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
திருப்பதி:
மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர் திருப்பதிக்கு ரெயிலில் சென்றார். அவர் ஒரு பையில் 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார்.
ரெயில் ரேணிகுண்டா வந்தபோது ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த நகை பையை திருடிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜி திருப்பதி ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் பாபுவிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவருடன் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர் நகைகள் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்