search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
    • இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி சார்பாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் அறிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேரில் சென்று இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.

    மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர்ரஞ்சன், துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான இந்த குழுவில் கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான தி.மு.க. சார்பாக அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெற்று உள்ளார். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன், தி.மு.க. ரவிக்குமார், சுஷ்மிதா தேவ், சந்தோஷ் குமார், ஏ.ஆர். ரஹிம், மனோஜ் குமார் ஜா, ஜாவத் அலிகான், மஹுவா மாஜி, முஹம்மது பைசல், மொஹம்மது பஷீர், பிரேம சந்திரன், சுஷில் குப்தா, அரவிந்த் சாவந்த், ஜெயந்த் சிங் மற்றும் புலோ தேவி உள்ளிட்ட 21 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த இந்த 21 எம்.பிக்கள் இன்று மணிப்பூர் சென்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

    இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த குழுவினர் இன்று இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுரா சந்த்பூருக்கு சென்றார்கள். இந்த குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசினர். குக்கி பழங்குடியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து வன்முறை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் இம்பாலுக்குத் திரும்பும் முன், மைதேயி சமூகத்தினரையும் சந்திப்பார்கள் என்று எதிர்க்கட்சி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிவாரண முகாம்களுக்குச் சென்று நிலைமையை பர்வையிட்ட இந்த குழு நாளை (ஞயிற்றுக் கிழமை) காலை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவையும் சந்திக்க உள்ளது.

    குழுவில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில் "மணிப்பூரில் உண்மை நிலவரத்தை கண்டுபிடித்து, அந்த உண்மையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது என்றார். ஆதிர்ரஞ்சன் எம்.பி. கூறுகையில், மணிப்பூர் நிலவரம் குறித்து அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து எங்கள் பரிந்துரைகளை அரசுக்கு முன்வைப்போம் என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.

    • பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை-தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்ப டுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது.

    சமீபத்தில் அங்கு பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டனர். மனிதாபிமான மற்ற இந்த கொடுமையான சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்தது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை 4 மணிக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு முன்னி லையில் மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திரளாக பங்கேற்கின்றனர். கழக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் 128-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமான மகளிர் அணியினருடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    அங்கு திரளாக உள்ள மகளிர் அணியினர் மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.

    • 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.

    இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் வரும் 23ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது.
    • தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது.

    நெல்லை:

    பாளை சித்த மருத்துவக்கல்லூரி அருகே அமைந்துள்ள மேடை போலீஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள மேற்கு கோட்டைவாசல் பூங்காவில் ஓவிய பயிலரங்கு நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன், ஆர்.டி.ஓ/ சந்திரசேகர், ஓவியர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    திராவிட மொழியின் முதல் மொழி தமிழில் இருந்து தொடங்கியது என முதலில் சொன்னவர் கால்டுவெல். இந்தியாவின் நாகரிகம் தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கியது என சொல்லிய தமிழக முதலமைச்சர் தாமிரபரணி நாகரிகத்தை கண்டறிய அகழாய்வு செய்ய உத்தரவிட்டார்.

    பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்து பண்பாட்டு நாகரிகத்தை அரசு காத்து வருகிறது.

    15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2.30 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நூவர் அருங்காட்சியகத்தில் மிக அழகாக பல வண்ண தொன்மையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

    ஓவியங்கள் பண்டைய வரலாற்று நாகரிகங்களை தாங்கி படித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைவிட அழகாக நம் தமிழகத்தில் பல நூற்றாண்டு தொன்மையான ஓவியங்கள் இன்றளவும் பல கோவில்களில் காணப்படுகிறது.

    பண்டைய கால அற்புதங்கள் நிறைந்த இடங்கள் பாழடைந்து கிடந்ததை தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றப் பின்னர் புனரமைத்து அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் வெள்ளையடித்து அதனை கெடுத்து விடுகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். அந்த எண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடலாம் என தோன்றும்.

    தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இதுபோன்ற செயல்காட்டுகிறது. பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் அரசு அந்த மொழிக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்து உதவுகிறது. கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.

    வாழ்க்கை என்பது கலை. கலைஞர்கள் வாழ்க்கையில் இருந்துதான் கலையை கண்டெடுக்க முடியும். தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல் நிறைந்த இந்த உலகில் நாம் வாழக்கூடிய தகுதியை இழந்து வருகிறோம். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும்.

    நம் கருத்துக்கள் எடுத்து வைக்கும் விஷயங்களுக்கு எதிராக வன்முறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்கள் வைக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக செயல்கள் நடந்து வருகிறது. இயற்கை பதிலடி கொடுக்கும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர் மன்றத்தில் மாணவர்களுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
    • இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கனிமொழி எம்.பி.

    நாளை (செவ்வாய்க்கிழமை) தென்காசி வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வருகிறார். அவருக்கு தேவர்குளத்தில் காலை 11 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    தொடர்ந்து தேவர்குளத்தில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர் மன்றத்தில் மாணவர்க ளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நூற்றாண்டு விழா

    அதனைத் தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் அறிவித்துள்ள இல்லம் தோறும் கட்சிக்கொடி என்ற அறிவிப்பின்படி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் குருக்கள்பட்டி, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியம் மதீனா நகர், சங்கரன்கோவில் நகரம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார்.

    பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார். தொடர்ந்து, மாலையில் கரிவலம்வந்த நல்லூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

    எனவே இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிரைவராக வேலை பார்த்து வரும் ஷர்மிளாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    • இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்தான் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

    இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இன்று பிற்பகலில் தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் ஷர்மிளாவுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    • ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை.
    • கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.

    பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை. ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பெண் நடத்துனருடன் தான் பிரச்சினை என்று கூறினார்.

    இதன்பின்னர் விளக்கம் அளித்த பேருந்து நடத்துனர், கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    இருந்தாலும் ஓட்டுநர் ஷர்மிளாவிடம் பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் வீண்பிடிவாதம் செய்கிறார். வேலை செய்ய பிடிக்கவில்லை என பலமுறை கூறினார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.
    • விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

    விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.
    • பெண்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த கூற்றுக்கு ஏற்ப இவர் பஸ்சை இயக்கி வருகிறார்.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.

    பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    பின்னர் கனிமொழி எம்.பி., பீளமேட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆண்களும் பெண்களும் சமம் தான். பெண்கள் லாரி, பஸ் ஓட்டுவார்களா என்று கேட்பார்கள். தற்போது அதனை இந்த பெண் செய்து காட்டியுள்ளார். ஷர்மிளா பஸ்சை இயக்குவது மிகவும் பாராட்டுக்குரியது. இது மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    மேலும் பெண்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த கூற்றுக்கு ஏற்ப இவர் பஸ்சை இயக்கி வருகிறார். இது பெருமைக்குரிய விஷயமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, கனிமொழி எம்.பி.யிடம் பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் பங்கேற்கும் எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், இன்றைய தினத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரே தளத்தில் ஒன்றிணைவது என்பது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இது வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை என்றார்.

    • தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.
    • இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் உள்ளார்.

    தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.


    லிங்குசாமி -கனிமொழி -அறிவுமதி

    தற்போது லிங்குசாமி கடந்த 2010-ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பையா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அறிவுமதியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார்.
    • பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அரசாங்கமே டாஸ்மாக்கை திறந்து வைத்துள்ளது. தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை.

    தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும்போது கனிமொழி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதலில் மது ஒழிப்பு தான் என பேசினார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை.

    பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது.

    அவர்கள் தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 84 தொகுதிகளில் வெற்றியும் 54 தொகுதிகளில் முன்னிலையும் வகிக்கிறது.

    இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

    ×