search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது.
    • இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

     திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது.

    இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களுக்கான OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். "PERIYAR VISION- Everything for everyone" என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

    தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.

    கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என்று பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. 'பராசக்தி' படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் 'சேகுவேரா' படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.

    இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறினார்.

    கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓடிடி மக்களிடையே பரவி அதற்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஓடிடியில் வெளிவரும் கண்டண்ட்டுகளை பார்க்கும் மக்கள் இந்த ஓடிடி- யில் வரும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும் படங்களை பார்த்து ஆதரிக்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
    • ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன.
    • மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை செம்மொழி பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு அரங்கையும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோரும் பார்வையிட்டனர்.

    பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பதாவது:-


    "இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம்நம் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஆகும்" .

    புலம்பெயர்ந்து இந்தியா வந்த மக்கள் சில சவால்களை இன்னும் சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன. இத்திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

    • பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
    • வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க” என 3 திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் கோஷமிட்டனர்.

    அதாவது இன்று பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.

    கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, தருமபுரி எம்.பி ஆ மணி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிர பிற திமுக எம்.பிக்கள் அமைச்சர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, "வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க" என கோஷமிட்டனர்.

    கடைசியாக பதவியேற்ற தென்காசி திமுக எம்.பி ராணி, வாழ்க கனிமொழி, வாழ்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என கோஷமிட்டார்.

    கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 'அம்மா வாழ்க' என கோஷமிட்டதற்கு திமுக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இப்போது திமுக எம்.பிக்கள் பலரும் உதயநிதி வாழ்க என கோஷமிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    திமுகவின் முக்கிய எம்.பி.யான தயாநிதி மாறன் கூட உதயநிதி வாழ்க என கோஷமிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.
    • கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

    இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


    இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தமாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.


    குவைத்தில் இருந்து கேளரா கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாரியப்பனின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    • வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது.
    • 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.

    வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக எம்.பி கனிமொஹி தனது எஸ்கே பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது. கருணை மதிப்பெண்களுக்கு அப்பால், பாடத்திட்ட முரண்பாடுகள், பயிற்சி மையத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் போன்ற சிக்கல்கள் மாணவர்களின் கனவுகளை தகர்த்துள்ளன. சமூக அநீதியை நிலைநிறுத்துகின்றன. விளிம்புநிலை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • கனிமொழியின் பதின் பருவத்தில் கலைஞர்தான் எனக்கு அறிமுகம் செய்தார்.
    • காற்றோடு உரையாடும் பூவைப்போன்ற மென்மையும் கல்லுறுதி போன்ற சொல்லுறுதியும் சிங்கத்தின் இருதயமும் கனிமொழியின் தீராத குணங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கனிமொழி எம்.பி.க்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பெரும் பெருமை

    வாய்த்திருக்கிறது

    கனிமொழி கருணாநிதிக்கு

    பாராளுமன்றங்களின்

    குழுத் தலைவராய்

    தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது

    கலைஞர் திருமகள்

    கவிஞர்

    முதலமைச்சரின் தங்கை

    பகுத்தறிவாளர் என்ற

    பிறவிப் பெருமைகளைத் தாண்டி

    மாதர் குலத்துக்கு

    மகுடம் என்றுதான்

    இந்திய அரசியல் இதைக்

    கணக்கிட்டுக் களிக்கும்

    கனிமொழியின்

    பதின் பருவத்தில்

    கலைஞர்தான் எனக்கு

    அறிமுகம் செய்தார்

    காற்றோடு உரையாடும்

    பூவைப்போன்ற மென்மையும்

    கல்லுறுதி போன்ற

    சொல்லுறுதியும்

    சிங்கத்தின் இருதயமும்

    கனிமொழியின் தீராத குணங்கள்

    கனிமொழியை

    அமைச்சராக்கவில்லையா

    என்று கலைஞரை

    ஒருமுறை கேட்டேன்

    'காலம் வரட்டும்' என்றார்

    இப்போது ஒருகாலம்

    அருகில் வந்து

    நழுவியிருக்கிறது

    ஐந்தாண்டுகளில் ஆகலாம்

    அல்லது

    அதற்கு முன்பேகூடக்

    காலம் 'கை'சேரலாம்

    கனவு மெய்ப்பட

    வாழ்த்துகிறேன்

    இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

    • திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமனம்.
    • திமுக மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா நியமனம்.

    திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி எம்.பி நியமனம் செய்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து, திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திமுக மக்களவை குழுத் துணைத் தலைவராக தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திமுக மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திமுக மாநிலங்களவை குழுத் துணைத் தலைவராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திமுக மாநிலங்களவை கொறடாவாக பி.வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அவைகளின் பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
    • சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், எம்.ஜான் கென்னடி - எல்.அனிட்டா அலெக்ஸ் தம்பதியின் மகள் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதில் நடிகர்கள் சிவகுமார், செந்தில், எஸ்.வி.சேகர், அழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதையடுத்து திருமண விருந்து நிகழ்ச்சி சாந்தோம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் சென்டர் ஹாலில் நடந்தது. சார்லியின் மூத்த மகன் எம்.ஆதித்யா சார்லி - எஸ்.எழில் அம்ரிதா, பேத்தி ஏ.ரேயா புஷ்பம் சார்லி உள்ளிட்டோர் விருந்தினர்களை வரவேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - ஜே.பெர்மீசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நியூஸ்-7 டி.வி. மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, நாசர், விஜயகுமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் சச்சு, சுகன்யா, விஜி சந்திரசேகர், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிடு நடராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    • தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.
    • பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெற்றார்.

    பாஜக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தோற்றுவிட்டார்.

    இதையடுத்து கனிமொழி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

    தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.

    அதற்கு பதிலடியாக, கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறினார்.

    அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கனிமொழி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும். அவர்கள் கட்சியை வளர்க்க நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு தெரிந்த இயக்கம். என்னை இங்கிருந்து யாரும் எதுக்காகவும் அசைக்க முடியாது. அதைத்தாண்டி அவர்கள் கட்சியை வளர்ப்பது என்னுடைய வேலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது.
    • தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. மீண்டும் வாகை சூடினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, "தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, 2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

    அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து கனிமொழியின் பேச்சு குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "என் தந்தை முதலமைச்சரோ, எல்.எல்.ஏ.வோ கிடையாது. குப்புசாமி ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் எனக் கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பா.ஜ.கவில் இணைந்தால் நான் பதவி விலகுவதை குறித்து பரிசீலனை செய்கிறேன்" என்று பதில் அளித்தார்.

    • தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
    • கருணாநிதியின் ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில்,

    டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.


    தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இங்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையான விஷயம்," என்று தெரிவித்தார்.

    ×