search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    2019 தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,

    * தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன்.

    * மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு உள்ளேன்.

    * மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன்.

    * வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை தெரிவிப்பேன் என்று கூறினார்.

    • தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
    • ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் விளாத்திகுளத்தில் நேற்று மாலை விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒன்றிய அரசு தமிழகத்தின் மக்கள் பணத்தை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் வசூலித்து கொண்டு சென்று வடமாநிலங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. மாறாக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு ஒரு தலைப்பட்சமாக வழங்காமல் நிதி நெருக்கடியை உருவாக்க முயற்சி செய்கிறது.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

    பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் கொள்ளை அடித்து இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தியது போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது.

    பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனை போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது.

    ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் தி.மு.க. அரசு அஞ்சுவதில்லை.

    டெல்லியில் விவசாயிகளின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்காத ஒன்றிய அரசு தமிழகத்திலும் சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் மக்களின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்கவில்லை. வெள்ள நிவாரண நிதியையும் வழங்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் தமிழக மக்கள் பா.ஜ.க. அரசை ஏற்க மாட்டார்கள். பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுகள் விழாது. நாடும் நமதே நாற்பதும் நமதே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம். அவைகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசும். அதுபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பஸ் பயணம், உரிமை தொகை , விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என மக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார்.

    தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் பெயருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர்.

    தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை. நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை.

    தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.

    இந்த மண்ணின் பண்பாடு, கலாசாரம், மொழி உள்பட அனைத்தையும் காத்து நிற்கும் அரணாக தி.மு.க உள்ளது. திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.

    இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
    • அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விட போகிறார்.

    இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஆளும் தி.மு.க. கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் தி.மு.க. விரைவில் காணாமல் போகும் என்றும் அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

    பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. சார்பில் எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்தார். இது குறித்து பேசிய அவர், தி.மு.க. காணாமல் போகும் என்று கூறிய பலர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து மோடியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலிலதாவை வைத்து தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க பிரதமர் மோடி நினைக்கிறார். தி.மு.க.-வை இல்லாமல் ஆக்கிடுவோம் என்று கூறியவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விட போகிறார்."

    "தி.மு.க. உருவான 1949-ம் ஆண்டில் இருந்து 74 ஆண்டு காலமாக பலர் இவ்வாறு பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க. என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

    • குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.
    • எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    * இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

    * நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை.

    * பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது.

    * திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.

    * குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.

    * குலசை ராக்கெட் ஏவுதளம் தொடர்ந்து எங்களால் வலியுறுத்தப்பட்டு, அமைக்கப்பட்டுள்ளது.

    * எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.

    * முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

    * அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.

    * தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை மக்கள் அறிவர் என்று அவர் கூறினார்.

    • பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
    • தேர்தல் அறிக்கையில் அவசியம் இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலர் ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அரசு கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், நா. எழிலன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெற இந்தக் குழுவினர் மண்டல வாரியாக பயணம் மேற்கொண்டனர். கடந்த 5-ந் தேதி தூத்துக்குடியில் பயணத்தைத் தொடங்கிய குழுவினர், வெவ்வேறு மண்டலங்களில் பயணத்தை முடித்த நிலையில், இறுதியாக சென்னையில் நேற்று கருத்துகளைக் கோரினர்.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.

    முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பேசுகையில்,

    மக்களுடைய கருத்துகளை எதிரொலிக்கும் வகையில் அவர்களுக்கான அறிக்கையாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தோம். அவர்கள் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று கருத்துக்களை முன்வைத்தார்களோ, அதையெல்லாம் ஒருங்கிணைத்து தி.மு.க. தலைவரிடம் ஒப்புதலைப் பெறுவோம். அதன்பின்னர் தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம் என்றார்.

    சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சியைச் சேர்ந்த துணை அமைப்புகளிடம் இருந்தும் கோரிக்கைகள், கருத்துகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பெறப்பட்டன.

    இன்று தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். தேர்தல் அறிக்கையில் அவசியம் இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இதுவரை சுமார் 25 ஆயிரம் மனுக்கள் குவிந்து இருக்கிறது. அதில் சுமார் 18 ஆயிரம் கருத்துக்கள் போன் மூலம் வந்தவையாகும். 2,500 கருத்துக்கள் இ-மெயில் மூலம் வந்திருக்கின்றன.

    சமூக வலைதளங்கள் மூலம் 4 ஆயிரம் கருத்துக்கள் கனிமொழி எம்.பி.யிடம் வந்து சேர்ந்து இருக்கிறது. நேரடியாக மக்களிடம் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஆய்வை முடிக்கும் போது சுமார் 40 ஆயிரம் பரிந்துரைகள் பெறப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த 40 ஆயிரம் பரிந்துரைகளில் இருந்து முக்கிய அம்சங்களை தொகுத்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக தயாரிக்க உள்ளனர்.

    • தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.
    • அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனி மொழி எம்.பி. தலைமையிலான11 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்று வருகின்றனர்.

    இந்த குழுவில் கனிமொழியுடன் தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தி.மு.க. மாணவரணிச் செய லாளர் சி.வி.எம்.பி.எழிலர சன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.

    நேரயடியாக மனுக்களை பெற்றதுடன் தொலைபேசி வாயிலாக 18,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000-க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மக்களை சந்தித்தனர்.

    அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை அளித்தனர்.

    வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வி யாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை வழங்கினார்கள். இவைகளை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. உங்களது கோரிக்கைகளை தீர்த்து வைக்க தேர்தல் அறிக்கையில் இவற்றை தொகுத்து இடம் பெற செய்வோம் என்று கூறினார்.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது.
    • மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.

    நெல்லை:

    'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா எந்தவொரு மசோதாவை கொண்டு வந்தாலும் மாநில உரிமைகளை பறிக்கும் உள்நோக்கத்துடனே கொண்டு வருகிறது. புதிய திட்டங்களின் பெயர்களைக் கூட இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சாமானிய மக்களுக்கு புரியாத வகையில் வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றாலும் திருக்குறளைக் கூறி பெருமை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழ்தான் பழமையான மொழி என்றும் கூறுகிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு வழங்குகிற நிதியில் பாதிகூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது இல்லை.

    ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது. ஒரு ரூபாயில் தமிழகத்திற்கு 29 பைசாவை மட்டுமே திரும்ப தரும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.2.02 வழங்குகிறது. 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் உத்தரப்பிரதேசம் இன்றளவும் முன்னேற வேண்டிய மாநிலமாகவே தொடர்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெருமழை பெய்தது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் சிரமம் அடைந்தனர். மழை சேதத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆய்வுக்கு பின்புகூட எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.

    பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தால் அந்தக் கட்சியே ரூ.6,564 கோடி நிதி பெற்றுள்ளது. நாட்டில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள நிதியை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பா.ஜனதாவின் நேர்மை மிகவும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுக்கப்படவில்லை.

    மணிப்பூரில் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி எந்தவித நலத்திட்டங்களையும் அளிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதிலேயே பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அரசுக்கு எதிராக போராட டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை, தீவிரவாதிகளை போல சித்தரித்து டிரோன்களை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.

    இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது, மதநல்லிணக்கத்தை பேணுவது, எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கான கல்வி குறித்து சிந்திக்காமல், மத அரசியலை மக்களிடம் திணித்து ஆட்சியில் தொடர பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். பா.ஜனதாவை பல்வேறு மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மக்கள் தூக்கி எறியும் காலம் வரும். அந்த நாளே இந்தியாவுக்கான நாளாக அமையும். பா.ஜனதாவின் வெற்றி என்பது நம் நாட்டின் தோல்வியாகிவிடும். ஆகவே, பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்.
    • அப்போது, மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

    நெல்லை:

    தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக்கூட்டங்களை நடத்துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. எம்.எல்.ஏ. அப்துல் வகாப், தி.மு.க. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மேயர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

    மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.

    பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார். உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கின்றனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளிக் கொடுக்கும் அவர்கள் தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.

    பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார்.

    • பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
    • 27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை அறிய பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டசபை நடைபெற்ற காரணத்தாலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருவதாலும் இக்குழுவினர் சுற்றுப்பயணம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    23-ந்தேதி வேலூரில் சந்திப்பு காலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆரணி மாலை 3 மணி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு 26-ந்தேதி தஞ்சாவூரில் சந்திப்பு காலையில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாலை 3 மணிக்கு விழுப்புரத்தில் சந்திப்பு. கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.

    27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    28-ந்தேதி சென்னை (காலை 10 மணி) சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு.

    ×