என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 97071
நீங்கள் தேடியது "slug 97071"
11,400 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடியில் தலைமறைவாக பதுங்கியுள்ள மெஹுல் சோக்சியின் 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்தது. #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.
இதைதொடர்ந்து, மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. முன்னர் லண்டனில் இருந்ததாக நம்பப்பட்ட மெஹுல் சோக்சி அங்கிருந்து தப்பிச்சென்று, கரிபியன் நாடுகளான ஆண்டிகுவா பர்புடாவில் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கருப்புப்பணப் பதுக்கல் தடுப்பு சட்டத்தின்கீழ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள மெஹுல் சோக்சியின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் மெஹுல் சோக்சி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
#PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. #KarthiChidambaram #ED #AircelMaxisCase
சென்னை:
மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
கடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பங்குகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு நிதி திரட்டப்பட்டன. இது தவிர நேரிடையாகவும் வெளிநாடுகளில் பணபரிமாற்றம் நடந்தன. அந்த வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை விற்றதாக தெரிகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமானால் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.
அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். 2007-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்திராணி முகர்ஜி நிதி திரட்டிய போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார்.
அவர் செல்வாக்கை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ்களை பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தடையில்லா சான்றிதழ் பெற்று கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் கணிசமான தொகையை பெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன. புகார் கூறியவர்கள், “மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு பணம் வந்துள்ளது” என்றனர்.
இந்த பணத்தை பெறுவதற்கு கார்த்தி சிதம்பரம் தனி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.
கார்த்தி சிதம்பரம் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பல தடவை கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து அவரிடமும் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், ஊட்டியில் உள்ள 3 காட்டேஜ்கள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லி ஜார்பாக் பகுதியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பங்களாவும் முடக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சோமர்செட் பகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு காட்டேஜும், பங்களாவும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டென்னிஸ் கிளப் உள்ளது. அந்த சொத்தும் முடக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அட்வான்டேஜ் ஸ்டெரடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.90 லட்சத்துக்கு பிக்சட்டெபாசிட் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாகும்.
எனவே அந்த ரூ.90 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. #KarthiChidambaram #ED #AircelMaxisCase
மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
கடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பங்குகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு நிதி திரட்டப்பட்டன. இது தவிர நேரிடையாகவும் வெளிநாடுகளில் பணபரிமாற்றம் நடந்தன. அந்த வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை விற்றதாக தெரிகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமானால் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.
அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். 2007-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்திராணி முகர்ஜி நிதி திரட்டிய போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார்.
அவர் செல்வாக்கை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ்களை பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தடையில்லா சான்றிதழ் பெற்று கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் கணிசமான தொகையை பெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன. புகார் கூறியவர்கள், “மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு பணம் வந்துள்ளது” என்றனர்.
இந்த பணத்தை பெறுவதற்கு கார்த்தி சிதம்பரம் தனி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.
கார்த்தி சிதம்பரம் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பல தடவை கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
24 நாட்கள் சிறைக்கு பிறகு கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், ஊட்டியில் உள்ள 3 காட்டேஜ்கள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லி ஜார்பாக் பகுதியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பங்களாவும் முடக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சோமர்செட் பகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு காட்டேஜும், பங்களாவும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டென்னிஸ் கிளப் உள்ளது. அந்த சொத்தும் முடக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அட்வான்டேஜ் ஸ்டெரடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.90 லட்சத்துக்கு பிக்சட்டெபாசிட் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாகும்.
எனவே அந்த ரூ.90 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. #KarthiChidambaram #ED #AircelMaxisCase
தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
நகரி:
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.
மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.
மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி பாடியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
புதுடெல்லி:
முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த தடையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை டெல்லி பாடியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல தடை கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரை அமெரிக்கா செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த தடையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை டெல்லி பாடியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல தடை கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரை அமெரிக்கா செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
கடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்ததாக மும்பை கோர்ட்டில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya #ED #MumbaiCourt
மும்பை:
புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு தனது வக்கீல் மூலமாக விஜய் மல்லையா நேற்று பதில் அளித்தார்.
அதில் அவர் கூறி இருந்ததாவது:-
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த நான் தொடர்ந்து முயன்று வருகிறேன். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்தது. பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறது. லண்டன் கோர்ட்டில், என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனவே, நான் இந்தியாவுக்கு வர மறுப்பதாக கூறுவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அடுத்தகட்ட விசாரணையை, 28-ந் தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி ஒத்தி வைத்தார். #VijayMallya #ED #MumbaiCourt
புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு தனது வக்கீல் மூலமாக விஜய் மல்லையா நேற்று பதில் அளித்தார்.
அதில் அவர் கூறி இருந்ததாவது:-
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த நான் தொடர்ந்து முயன்று வருகிறேன். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்தது. பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறது. லண்டன் கோர்ட்டில், என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனவே, நான் இந்தியாவுக்கு வர மறுப்பதாக கூறுவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அடுத்தகட்ட விசாரணையை, 28-ந் தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி ஒத்தி வைத்தார். #VijayMallya #ED #MumbaiCourt
ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #ED
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக முறைகேடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 6 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கால அவகாசம் முடிந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மேலும் சில ஆதாரங்களை திரட்ட வேண்டியது இருப்பதால் கால அவகாசம் வழங்கும் படி கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததோடு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #KarnatakaMinister #DKShivakumar
பெங்களூரு:
கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.
இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.
இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
புதுடெல்லி:
முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தை முன்வைத்த அமலாக்கத்துறை, வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தது.
இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல இனிமேல் அனுமதிக்க கூடாது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையையும் ரத்து செய்யவும் வேண்டியிருந்தது.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனு குறித்து கார்த்திக் சிதம்பரம் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
புதுடெல்லி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
எஸ்.பி.ஐ. வங்கியில் 90 கோடி ரூபாய் கடன் வாங்கி ஊழல் செய்த வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியுள்ளது. #EnforcementDirectorate #TamilNadu
சென்னை:
விருதுநகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் செண்பகன் என்பவருக்குச் சொந்தமான இன்சுமதி சுத்திகரிப்பு நிலையம் என்ற தனியார் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் சுமார் 87.36 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான செண்பகத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.#EnforcementDirectorate #TamilNadu
விருதுநகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் செண்பகன் என்பவருக்குச் சொந்தமான இன்சுமதி சுத்திகரிப்பு நிலையம் என்ற தனியார் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் சுமார் 87.36 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான செண்பகத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.#EnforcementDirectorate #TamilNadu
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மீண்டும் விசாரணை நடத்தியது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. #AircelMaxisCase
புதுடெல்லி:
ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.
ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.
ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.
இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது. #AircelMaxisCase
ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.
ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.
ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.
இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது. #AircelMaxisCase
ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #RailwayTenderScam #LaluPrasad
புதுடெல்லி:
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், அங்கிருந்து சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி லாலு மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை நிராகரித்த ராஞ்சி ஐகோர்ட், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வே உணவு டெண்டரில் ரூ.44.75 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #RailwayTenderScam #LaluPrasad
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X