search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97076"

    ஆப்பிள் ஐபோன்களில் வாடிக்கையாளர் தரவுகளை திருட ஐ.ஓ.எஸ். செயலிகள் புது யுக்தியை கையாள்வது தெரியவந்துள்ளது. #iPhone #Apps



    ஐ.ஓ.எஸ். செயலிகளை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன. இந்த செயலிகள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் அனுமதியின்றி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். செயலிகள் உங்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதை உங்களால் கண்டறியவே முடியாது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பல்வேறு பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகள் கிளாஸ்பாக்ஸ் வழிமுறையில் செஷன் ரீபிளே எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்தும் போது பயனரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துவிடும். இதில் பயனரின் மிகமுக்கிய விவரங்களும் அடங்கும். 

    அந்த வகையில் ஐ.ஓ.எஸ். செயலிகளில் செஷன் ரீபிளே வசதியை செயலிழக்கச் செய்ய ஐ.ஓ.எஸ். டெவலப்பர்களுக்கு ஆப்பிள் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 



    இவற்றில் எந்த செயலியிலும் பயனரிடம் ஸ்கிரீனினை பதிவு செய்வதற்கான அனுமதியை கோருவதில்லை. பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகளான ஏர் கனடா மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்டவை கிளாஸ்பாக்ஸ் அனாலடிக்ஸ் கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதில் தங்கும் விடுதிகள், பயண வலைத்தளங்கள், வங்கி, விமான சேவை மற்றும் இதர சேவை வழங்கும் செயலிகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    செஷன் ரீபிளே தொழில்நுட்பம் செயிலில் பயனர் மேற்கொள்ளும் ஒவ்வொரு க்ளிக், கீபோர்டு பதிவு, பட்டன் புஷ் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும். எனினும், பயனர் செயலியை பயன்படுத்தும் போது மட்டுமே இவ்வாறு செய்யப்படும் என்பது பயனருக்கு சற்று ஆறுதலான விஷயம் எனலாம்.

    செயலிகளை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்யவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டது. எனினும், இவ்வாறு செய்யும் போது பயனரின் மிகமுக்கிய விவரங்களும் ஆப் டெவலப்பர் அறிந்து கொள்ள முடியும். 

    பொதுவாக ஐ.ஓ.எஸ். செயலிகளை இயக்கும் பயனரின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் பதிவு செய்யப்பட்டதும், அவை ஆப் டெவலப்பரின் சர்வெர்களுக்கு அனுப்பப்படும். இதன்மூலம் எவர் வேண்டுமானாலும் பயனர் விவரங்களை இயக்க முடியும். செஷன் ரீபிளே தொழில்நுட்பத்தினை கிளாஸ்பாக்ஸ் போன்று பல்வேறு இதர நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
    ஆப்பிள் நிறுவன சாதனங்களை உலகம் முழுக்க சுமார் 140 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Apple



    ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளில் ஒன்றை அதிகரித்திருக்கிறது. ஹூஸ்டனை சேர்ந்தவர் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் பிரிவு அபார வளர்ச்சி பெற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. அதன்படி ஆப்பிள் நியூஸ் சேவையை மாதம் சுமார் 8.5 கோடி பேரும் ஆப்பிள் மியூசிக் சேவையை சுமார் ஐந்து கோடி பேர் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் விடுமுறை காலத்தில் 15 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. ஆப்பிள் நிறுவன மூத்த நிதி அலுவலர் லுசா மேஸ்ட்ரி வெளியிட்டிருக்கும் தகவல்களில் உலகம் முழுக்க சுமார் 140 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.



    இவற்றில் 90 கோடி ஐபோன்கள் பயன்பாட்டில் இருக்கிறது என தெரிவித்தார். ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான டிம் குக் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் இதுவரை இல்லாத அளவு புதிய மைல்கல் கடந்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க சுமார் 140 கோடி பேர் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

    முன்தாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகில் சுமார் 130 கோடி பேர் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி வருவதாக அறிவித்தது. அந்த வகையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவன சாதனங்கள் 10 கோடி என அதிகரித்திருக்கிறது.

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் சேவைகள் 19.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் இதர உபகரணங்கள் 33 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. எனினும் மேக் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் முறையே 9 மற்றும் 17 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, உலகம் முழுக்க விற்பனை  செய்யப்படுகிறது. 

    அறிமுகமானது முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக்கட்டங்களில் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் லாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.

    ஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

    இந்நிலையில் ஐபோன் விற்பனை சரிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-



    ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.

    காலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம்  வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    இதேபோன்று ஐபோன் ஆக்டிவேஷன்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.



    புதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. முதல் காலாண்டில் ஐபோன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    வெளிப்புற சூழல் நமக்கு அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த காலாண்டு விற்பனை பற்றி விவாதிக்க ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் தனது கடிதத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
    ஐபோன் வாங்க ஆசைப்பட்டு ஒரு கிட்னியை விற்ற இளைஞர், தற்சமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #IPhone
    சீனாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வாங் என்ற இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, அதை வாங்க வழியில்லாமல் சோகத்தில் இருந்து வந்தார்.

    ஐபோன் மீது கொண்ட மோகத்தாலும், நண்பர்களின் பேச்சைக்கேட்டும் 2011 ஆம் ஆண்டு தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முன் வந்தார். தனது ஒரு சிறுநீரகத்தை 3,200 அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். கிடைத்த பணத்தில் தனது கனவு பொருளான புதிய ஐபோனையும் வாங்கினார்.


    உடலில் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில், நாளடைவில் வாங்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    அப்போதுதான் அவருக்கு அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததும், இதனால் தொற்று ஏற்பட்டதால் அவரின் மற்றொரு சிறுநீரகம் பாதிப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாங்கின் பெற்றோர் அவரது உயிரை காப்பாற்ற டயாலிசிஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான செலவுக்கு தேவையான பணம் திரட்ட முடியாமல் பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் தற்போது பரிதவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான செய்தி சமீப காலமாக சீன ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும் இதுபோல் உடலுறுப்பு தானம் மூலம் தங்களது தேவைகளை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். #IPhone
    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. #iPhone #smartphone



    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் வடிவமைப்பை 2020 ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலும் மாற்ற இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களை வித்தியாசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சோனியுடன் இணைந்து புதிய ஐபோன்களில் 3D கேமரா வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் புகைப்படம், பாதுகாப்பு மற்றும் கேமிங் என மூன்று தளங்களில் புதிய வசதிகளை வழங்க வழிசெய்யும்.

    “கேமராக்கள் மொபைல் போன்களில் புரட்சியை ஏற்படுத்தின, 3D கேமரா தொழில்நுட்பத்தை நானும் அதிகம் எதிர்பார்க்கிறேன்,” என சோனியின் சென்சார் பிரிவு தலைவரான சடோஷி யோஷிஹாரா தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதில் ஆப்பிளின் விருப்பம் பற்றி ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்ட நிலையில், சோனியின் யோஷிஹாரா இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். 



    மேலும் “சோனி நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் பிரைமரி மற்றும் செல்ஃபி என இருவிதங்களில் வழங்க ஏதுவாக 3D கேமராக்களை தயார்படுத்தி, 2019 கோடை காலத்தில் இதன் பெருமளவு உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என யோஷிஹாரா தெரிவித்தார்.  

    சோனியின் 3D கேமராக்கள் டைம் ஆஃப் ஃபிளைட் (Time Of Flight) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் கொண்டு முப்பறிமான படங்களை அதிக தெளிவாக பிரதிபலிக்கச் செய்ய முடியும் என்றும் அதிகபட்சம் ஐந்து மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களையும் தெளிவாக படமாக்க முடியும்.

    புகைப்படங்களை இந்த தொழில்நுட்பம் அதிக தெளிவாக படமாக்கும், அதுவும் குறைந்தளவு வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் காட்சிகள் தெளிவாக இருக்கும். பாதுகாப்பிற்கு இந்த தொழில்நுட்பம் ஃபேஸ் அன்லாக் வசதியை செயல்படுத்த பயனரின் முகத்தை முப்பறிமான முறையில் முன்பை விட அதிக தெளிவாக பதிவு செய்யும். 


    புகைப்படம் நன்றி: Bloomberg

    இதனால் சோனியின் 3D கேமராக்களுடன் வெளியாகும் புதிய ஐபோன் மாடல்களில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களில் இருப்பதை விட அதிக பாதுகாப்பானதாக மாறும்.

    சோனியின் 3D கேமராக்கள் கொண்டு அறை மற்றும் பொருட்களை மேப் செய்து ஏ.ஆர். அல்லது வி.ஆர். அனுபவத்திற்கு அவற்றை பயன்படுத்த முடியும். இதை கொண்டு கேமிங் அனுபவமும் வித்தியாசப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிள் சாதனங்களில் ஏற்கனவே ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய ஐபோன்களில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த புதிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகலாம்.
    சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் செல்போன் உற்பத்தி ஆலையில், ஐபோன்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதியளித்திருக்கிறது. #iPhone



    தைவானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது.

    15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஃபாக்ஸ்கான் ஆலையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக தமிழக அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

    நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் தயாரிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நிறுவன வளாகத்தில் ஏற்கனவே இதற்கென தனி ஆலை உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு தட்டுப்பாடுக்கு ஏற்ப புதிய ஐபோன் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கிறது.



    அடுத்த ஆண்டு முதல் புதிய ஐபோன்களின் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கப்படுகிறது. ஐபோன்கள் விலை உயர்ந்த சாதனம் என்பதால் இவை சென்னையில் தயாரிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இது தொடர்பாக  கூறும் போது, ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தனது தொழிலை மேலும் விருத்தி செய்யும் வகையிலும் இங்கிருந்து வெளிமாநிலத்துக்கு சென்று விடாமல் தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
    ஆன்லைனில் ஐபோன் வாங்க முயன்று ரூ.26,000 விலையுள்ள சாதனத்திற்கு பேடிஎம் மூலம் ரூ.73,000 கொடுத்த வாலிபர், தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி புலம்புகிறார். #iPhone #SCAM


    இந்தியர்கள் விலை குறைந்த பொருட்களை வாங்க ஆர்வம் செலுத்துவது புதிதல்ல. எனினும் விலை குறைந்த பொருட்களை வாங்கும் அனுபவம் எப்போதும், அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. ஆன்லைன் வர்த்தக பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதன் மூலம் பணம் இழப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    அந்த வரிசையில் சித்தார்த் என்ற டெக்கி புதிதாக இணைந்திருக்கிறார். தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சித்தார்த் ஓ.எல்.எக்ஸ் (OLX) வலைத்தளத்தில் ஐபோன் விளம்பரம் ஒன்றை பார்த்து, அதனை வாங்க திட்டமிட்டுள்ளார். இவர் ஆன்லைனில் பார்த்த ஐபோன் 8 பிளஸ் மாடலின் விலை ரூ.26,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், சித்தார்த் அதனை உடனடியாக வாங்க ஆர்வம் காட்டினார்.

    சந்தையில் புத்தம் புதிய ஐபோன் 8 பிளஸ் (64 ஜி.பி. மாடல்) ரூ.68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விலை குறைவாக இருந்ததால் ஐபோன் 8 பிளஸ் மாடலை வாங்க அந்த விளம்பரத்தை பதிவிட்ட சாஹில் குமாரை சித்தார்த் தொடர்பு கொண்டு பேசினார். மறுபுறம் அழைப்பை ஏற்று பேசிய நபர் பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்து பணம் கொடுத்து ஐபோனை பெற்றுக் கொள்ள கூறியிருக்கிறார்.



    இதை நம்பி விமான நிலையம் விரைந்த சித்தார்த் ஐபோனினை விற்க தயாராக இருந்த சாஹிலை தொடர்புகொண்டார். மறுபுறம் பேசிய சாஹில் வேலை சுமை காரணமாக வெளியில் வர முடியாது என்றும், ஐபோனிற்கான முதல் தவணையாக ரூ.5,000 செலுத்தி சுங்க பிரிவில் ஐபோனை பெற்றுக் கொண்டு மீதித் தொகையான ரூ.21,500 செலுத்த சித்தார்த்திடம் கேட்டார். 

    ஆர்வ மிகுதியில் சித்தார்த் தனது பேடிஎம் அக்கவுன்ட் மூலம் சாஹில் அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினார். எனினும், தனக்கு பணம் வரவில்லை என கூறியதால் சித்தார்த் தொடர்ச்சியாக 11 தவணையாக சாஹில் அக்கவுன்ட்டில் மொத்தம் ரூ.73,091 தொகையை செலுத்தியிருக்கிறார்.

    பின் தனக்கான ஐபோனினை வாங்க விமான நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். வீடு திரும்பிய சித்தார்த் தனக்கு நடந்த சம்பவத்தை நண்பரிடம் பகிர்ந்து கொண்ட பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் உடனடியாக காவல் நிலையம் விரைந்த சித்தார்த் சாஹில் மீது புகார் தெரிவித்தார்.

    காவல் நிலையத்தில் சாஹில் மீது இந்திய குற்றப்பரிவு எண் 420 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ஐபோன் விற்பனைக்கான தடையை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் மாடல்களுக்கு அப்டேட் வழங்க முடிவு செய்துள்ளது. #Apple



    சீனாவில் உள்ள ஐபோன்களுக்கு அப்டேட் வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் ஐபோன்களின் விற்பனைக்கு குவால்காம் நிறுவனம் தடைக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சீன நீதிமன்றம் ஐபோன் விற்பனைக்கு தடை விதித்தது.

    அந்த வகையில் சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குகிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும் போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க ஒவ்வொருத்தரை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.



    பல கோடி டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு இருதரப்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்புக்கும் வெற்றி, தோல்விகள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் குவால்காமின் சமீபத்திய வழக்கில் சீன நீதிமன்றம் தேர்வு செய்யப்பட்ட சில ஐபோன் மாடல்களின் விற்பனைக்கு தடை விதித்தது.

    எனினும், ஆப்பிள் தொடர்ந்து தனது ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்கிறது.

    “ஆப்பிள் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. சட்ட ரீதியாக ஐபோன்களின் விற்பனையை நிறுத்த வேண்டும், விற்பனைக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது, உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை இறக்குமதி செய்யக் கூடாது,” என குவால்காம் நிறுவனத்தின் துணை தலைவர் டான் ரோசென்பர்க் தெரிவித்தார். 

    சீன நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து, ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் குவால்காம் நிறுவனம் ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட காப்புரிமைகளுக்கு உரிமை கொண்டாட முயற்சிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் பதிவு செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் சில ஐபோன்கள் சீனாவில் விற்பனை செய்யக் கூடாது என சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Apple #iPhone



    ஐபோன் மாடல்களில் குவால்காம் காப்புரிமைகளை அவற்றுக்கான கட்டணம் செலுத்தாமல் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியதாக குவால்காம் நிறுவனம் சீனாவில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தின் சில ஐபோன் மாடல்களை விற்பனை செய்ய தடை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சீன நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

    குவால்காம் பதிவு செய்திருக்கும் வழக்கில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் உள்ளிட்ட மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. குவால்காம் வழக்கு பதிவு செய்த பின் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை வழக்கில் சேர்க்கப்படவில்லை.



    குவால்காம் வழக்கில் தொடர்புடைய ஐபோன்கள் சீனாவில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களில் 15% பங்குகளை கொண்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தும் சில தொழில்நுட்பங்களை எவ்வித கட்டணங்களையும் செலுத்தாமல் பயன்படுத்தியிருப்பதாக குவால்காம் குற்றஞ்சாட்டி இருக்கிறது.

    இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் கூறும் போது, குவால்காம் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் உலகம் முழுக்க பல்வேறு ஒழுங்கமுறை ஆணையங்களில் விசாரிக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளது.

    குவால்காம் வழக்கு ஒருபுறம் இருக்க, ஆப்பிள் நிறுவன சாதனங்களின் சீன விற்பனை சரிந்து வருகிறது. ஹூவாய் மற்றும் ஒப்போ போன்ற உள்ளூர் நிறுவன சாதனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதே ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விற்பனை குறைய காரணமாக கூறப்படுகிறது. #Apple #iPhone
    ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp



    ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.

    புது மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், நீங்கள் கால் செய்ய வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.



    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். 

    புது க்ரூப் காலிங் பட்டன் முன்னதாக ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.110.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. இந்த பீட்டா அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு டெஸ்ட்ஃபிளைட் (TestFlight) மூலம் வழங்கப்பட்டது. டெஸ்ட்ஃபிளைட் என்பது, செயலிகளை ஓவர்-தி-ஏர் மூலம் சோதனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையாகும்.



    புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி கடந்த மாத ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு புது அம்சத்திற்கான பொதுப்படையான அப்டேட் இதுவரை வழங்கப்படவில்லை. #WhatsApp
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விளம்பரப்படுத்த ஐபோன் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #Samsung



    சாம்சங் மற்றும் ஐபோன்களிடை அவ்வப்போது நடைபெறும் அக்கப்போர் இம்முறை ட்விட்டரில் ஆரம்பித்து இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் மூலம் ஏற்கனவே சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், மற்றொரு சாம்சங் அக்கவுண்ட் ஐபோன் மூலம் ட்விட் பதிவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கடந்த முறை சாம்சங் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்த சாம்சங் இம்முறை எதுபோன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சாம்சங் மொபைல் நைஜீரிய அக்கவுண்ட் ட்விட்டர் கணக்கில் சாம்சங் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ ஐபோன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பிரபல யூடியூபரான MKBHD தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார். 



    விவகாரம் ட்விட்டரில் சூடுப்பிடித்த நிலையில், சாம்சங் மொபைல் நைஜீரிய ட்விட்டர் அக்கவுண்ட் சில மணி நேரங்களுக்கு டி-ஆக்டிவேட் செய்யப்பட்டு பின் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட சாம்சங் அதிகாரிகள் தான் காரணம் என தெரிகிறது.

    சமீபத்தில் ரஷ்யாவுக்கான சாம்சங் விளம்பர தூதர் செனியா சோப்சாக் பொதுவெளியில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான செனியா சோப்சாக் ஐபோன் X பயன்படுத்திய வீடியோ தொலைகாட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சாம்சங் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது. #Samsung #iPhone
    ஐபோன் மாடல்களில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் செயலியை அனுமதிக்க ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. #Apple #TRAI



    டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

    ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

    அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. 

    எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

    ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது. #Apple #TRAI
    ×