search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97076"

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XR மாடல்களின் விலையை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneXR



    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் XR மாடலின் விலையை ஜப்பானில் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது ஐபோன் வெளியான ஒரே மாதத்திற்குள் விலையை குறைக்க பரிசீலனை செய்வது ஆப்பிள் நிறுவன வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்.

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜப்பானில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்கள் ஐபோன் XR விலையை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஐபோன் 8 தொடர்ந்து பிரபலமான ஐபோன்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் XR ஜப்பானி்யர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.

    ஜப்பானில் ஐபோன் XR விலை குறைப்பு பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. ஜப்பானை போன்றே இந்தியாவில் ஐபோன் XR விலை குறைவது பற்றி எவ்வித தகவலும் இல்லை. 



    எனினும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் நிறுவனங்களிடம் ஐபோன் XR மாடலை கூடுதலாக உற்பத்தி செய்யும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 2018ல் ஆப்பிள் அறிமுகம் செய்த மூன்று ஐபோன் மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்கள் எதிர்பார்ப்புகளைக் கூட பூர்த்தி செய்யாமல் மிக குறைவான விற்பனை பதிவு செய்ததது.

    ஐபோன் XR விற்பனை ஆப்பிள் நிறுவனத்திற்கு தொடர்ந்து நெருக்கடி சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் ஏழு கோடி யூனிட்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. 

    எனினும் மோசமான விற்பனை காரணமாக மூன்றில் ஒரு பங்கு யூனிட்களின் தயாரிப்பை நிறுத்த ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

    புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டிருந்ததாக அறிவித்தது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.



    1 -  ஃபேஸ்டைம் ஆப் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

    3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்யலாம்.

    4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.



    க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்து பேச முடியும்.

    1 - சாட் ஸ்கிரீனில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

    2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

    1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து Moreஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் போன்றவற்றில் ஒன்றை பதிவிட வேண்டும்.

    4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

    5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.

    க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

    குறிப்பு:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #5G #iPhone



    ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். தரப்பில் இருந்து 5ஜி சாதனம் குறித்த தகவல்கள் மர்மமாக இருந்து வந்த நிலையில் 5ஜி ஐபோன் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.

    அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான மோடெம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இன்டெல் நிறுவனம் 8060 மோடெம்களை உருவாக்கி வருவதாகவும் இவை 5ஜி ஐபோனில் சோதனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8161 ரக சிப்செட் இன்டெல்லின் 10 நானோமீட்டர் வழிமுறையில் ஃபேப்ரிகேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் போனில் கனெக்டிவிட்டி சீராவகவும் வேகமாக்க முடியும்.

    சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் இன்டெல் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 8060 சிப்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு வெப்பத்தை வெளியேற்றியது தான் என்றும் இதை சரி செய்வதில் இன்டெல் அதிகளவு சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.



    அமெரிக்காவின் பிரபல டெலிகாம் சேவை வழங்கும் வெரிசான் மற்றும் எடி&டி உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி போன்களுக்கான சேவையை வழங்க மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரத்தை நாடுகின்றன. மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் அதிகளவு செயல்திறன் கொண்டவை ஆகும்.

    இதனால் போனில் அதிகளவு வெப்பம் ஏற்படுவதோடு, வெப்பத்தை போனின் வெளியே உணர முடியும். இவ்வாறு ஏற்படும் போது போனின் பேட்டரி ஆயுள் பெருமளவு பாதிக்கப்படும். எனினும் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து 5ஜி மோடெம்களை விநியோகம் செய்ய முயற்சிக்கலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மீடியாடெக் உடன் இணைந்து சிப் விநியோம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. எனினும் இது இரண்டாவது திட்டமாக இருக்கும் என்றும் இன்டெல் நிறுவனத்திற்கு போதுமான நேரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    5ஜி தொழிலநுட்பம் கொண்ட மொபைல் போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ, ஹூவாய் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் 5ஜி மோடெம் சிப்களை குவால்காம் விநியோகம் செய்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 12.1 அப்டேட் சார்ந்த விவரங்களில் புதிய ஐபோன்களில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #iPhoneXS #iPhoneXSMax



    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்திற்கான ஐபோன் யூசர் கைடை அப்டேட் செய்திருக்கிறது. புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் வழங்க இருந்த அம்சங்களை வழங்குகிறது.

    அந்த வகையில் புதிய இயங்குதளத்தின் மிகமுக்கிய அம்சங்களாக க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் டூயல் சிம் வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் அதன் பெருக்கு ஏற்றார்போல் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ கால் பேச வழி செய்யும்.




    க்ரூப் ஃபேஸ் டைம் வசதியுடன் புதிய ஐபோன் மாடல்களுக்கான டூயல் சிம் வசதியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐபோன் “XR”, “XS” மற்றும் “XS மேக்ஸ்” உள்ளிட்ட மாடல்களுக்கு டூயல் சிம் வசதி வழங்கப்பட இருக்கிறது. இவை ஐ.ஓ.எஸ். பாயின்ட் அப்டேட்கள் வரும் போது கிடைக்கும்.

    புதிய அப்டேட் மூலம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்றே ஆப்பிள் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதி மூலம் பயனர்கள் இரண்டு செல்லுலார் சேவைகளை பயன்படுத்த முடியும். ஆப்பிள் ஐபோன்களில் டூயல் சிம் வசதிக்கென அந்நிறுவனம் டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குகிறது. 



    இந்த தொழில்நுட்பம் புதிய ஐபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மற்றொன்றில் எம்பெட் செய்யப்பட்ட இசிம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டுமே இரண்டு சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தின் வெளியீட்டு தேதி குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வி தகவலும் வழங்கப்படவில்லை, எனினும் இதன் பீட்டா பதிப்புகள் செப்டம்பர் மாதம் முதல் சோதனை செய்யப்படுகிறது.
    இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு இந்த சேவையை வழங்கும் முதல் நிறுவனம் நாங்கள் தான் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. #Jio



    இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு இசிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இசிம் வசதி ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரீபெயிட் பயனர்களுக்கும் இசிம் சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது. 

    ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ஐபோன்களான ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் இசிம் சேவையை வழங்க ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் டூயல் சிம் வசதியை வழங்கியது. டூயல் சிம் வசதி ஒரு நானோ சிம் மற்றொன்றில் டிஜிட்டல் இசிம் வடிவில் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலில் இசிம் வசதியை வழங்க முன்வந்தன.
    ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த 2018 ஐபோன் மாடல்களை வாடிக்கையாளர்கள் விரைவில் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்யலாம். #iPhoneXS



    ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களை ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்தில் விரைவில் முன்பதிவு செய்யலாம்.

    அதன்படி ஐபோன் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். ஐபோன் XR மாடலின் முன்பதிவு அக்டோபர் 19-ம் தேதி துவங்குகிறது. புதிய ஐபோன் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு இதுவரை எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் ஐபோன் XS 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.99,900 முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,.09,900 என்றும் ஐபோன் XR 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.76,900 முதல் துவங்குகிறது. 

    ஏர்டெல் வலைத்தளத்தில் முன்பதிவு துவங்க இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில், முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்தில் பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்கள் எளிமையான மாத தவணை முறை வசதியில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு மாத தவணையில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மாத தவணையுடன், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது.
    ஐபோன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி 2018 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS



    ஆப்பிள் ஐபோன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி 2018 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவான அம்சமாக டூயல் சிம் வசதி இருக்கிறது. முன்னதாக டூயல் சிம் வசதி மிட்ரேன்ஜ் மற்றும் ஃபிளாக்ஷிப் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், ஹூவாய், சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் போன்றவை தங்களது ஃபிளாக்ஷிப் மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்க துவங்கின.

    ஐபோன் மாடல்களில் நீண்ட காலமாக வழங்கப்படாத அம்சமாக இருந்தது. இந்நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கியுள்ளது. முன்னதாக ஐபேட் ஏர் 2 செல்லுலார் மாடலில் ஆப்பிள் சிம் வழங்கப்பட்டு இருந்தது.



    ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க்களை மாற்றிக் கொள்ள முடியும். ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்பெட் செய்யப்பட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலிலும் இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இதில் நெட்வொர்க் சேவை வழங்குவோரிடம் டேட்டா திட்டத்தை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இதைகொண்டு ஐபோன் அருகில் இல்லாமலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    அந்த வகையில் இம்முறை இசிம் தொழில்நுட்பம் புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நானோ-சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. மொபைல் போன்களில் இசிம் தொழில்நுட்பம் புதிதான ஒன்றாகும். தற்சமயம் இந்த தொழில்நுட்பம் பத்து நாடுகளில் உள்ள நெட்வொர்களில் மட்டுமே வேலை செய்கிறது.



    புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதி

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    அனைத்து ஐபோன் மாடல்களும் ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப் மற்றும் இன்டெல் மோடெம் கொண்டிருப்பதால், இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது.



    இசிம் என்றால் என்ன?

    வழக்கமாக நம்மிடையே பயன்பாட்டில் இருக்கும் சிம் கார்டுகள் மினி, மைக்ரோ மற்றும் நானோ என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இசிம்கள் புரோகிராம் மூலம் எம்பெட் செய்யப்பட்ட சிம் கார்டுகள் ஆகும். இவற்றை கொண்டு வழக்கமான சிம் ஸ்லாட்டை எடுத்து மெல்லிய சாதனங்களை வடிவமைக்க முடியும். 

    இதன் மூலம் டெலிகாம் நெட்வொர்க் அலுவலகம் சென்று சிம் கார்டை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன் சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இசிம்களை தங்களது சாதனங்களில் ஏற்கனவே வழங்கி இருக்கின்றன. 



    பிரைமரி மற்றும் இரண்டாவது நம்பர்கள் எவ்வாறு இயங்கும்?

    ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் இரண்டு நம்பர்கள் எவ்வாறு இயங்கும் என ஐ.ஓ.எஸ். 12 தளத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை ஆப்பிள் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன்களை வாங்கும் போதே முதல் சிம் ஸ்லாட்டில் நானோ சிம் கார்டும், இரண்டாவது இசிம் கொண்டிருக்கிறது. இசிம் சேவையை ஆக்டிவேட் செய்வது எளிமையான காரியம் தான். 

    சிம் பயன்பாட்டை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் இசிம் சேவையை பிரைமரி சிம் போன்று மாற்றிக் கொள்ள முடியும். எனினும் இதற்கு நெட்வொர்க் சப்போர்ட் வழங்க வேண்டும். 

    பிரைமரி சிம் கொண்டு வாய்ஸ், எஸ்.எம்.எஸ்., டேட்டா, ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்த முடியும். இரண்டாவது சிம் கொண்டு வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே பயன்படுத்த முடியும். 

    இரண்டாவது சிம் சேவையை டீஃபால்ட் லைனில் வைத்தால், இரண்டாவது நம்பர் கொண்டு வாய்ஸ், எஸ்.எம்.எஸ்., டேட்டா, ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பிரைமரி சேவையில் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே பயன்படுத்த முடியும்.



    டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை எவ்வாறு வேலை செய்யும்?

    டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது DSDS சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது, பெறவது மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 

    பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, இரண்டாவது எண்ணிற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பப்படும். இதேபோன்று டேட்டாவும் ஒரு சமயத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும். 

    டூயல் வோல்ட்இ வேலை செய்யுமா?

    புதிய ஐபோன் மாடல்களில் டூயல் வோல்ட்இ வசதி மென்பொருள் அப்டேட் மூலம் பின்னர் வழங்கப்படும் என்றும் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க்களில் மட்டுமே வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    உண்மையில் டூயல் சிம் வசதியை வழங்க ஆப்பிள் அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்த அம்சம் ஆப்பிள் பிரியர்களுக்கு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 கேட்ஜெட்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இவ்விழாவில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent
    ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. 2018 ஐபோன் மாடல்களின் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஐபோன் XS

    ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய ஐபோன் மாடலாக ஐபோன் XS இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் XS மேக்ஸ்

    ஐபோன் XS மேக்ஸ் மாடல் இந்த ஆண்டு வெளியாக பெரிய ஐபோன் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 9 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் இதில் 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    ஐபோன் 9

    2018 ஐபோன் மாடல்களில் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், புதிய நிறங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

    செப்டம்பர் 12 நிகழ்வில் ஆப்பிள் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி வட்ட வடிவம் கொண்ட பெரிய டையல், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக ரெசல்யூஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கின்றன.  #AppleEvent
    ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு என ஆப்பிள் புதிய காப்புரிமைகளை பெற்றிருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #AppleWatch



    ஆப்பிள் பதிவு செய்திருக்கும் இரண்டு காப்புரிமைகளில் வளைந்த ஓரங்களுடன் பெரிய ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்கள், OLED டிஸ்ப்ளேக்களுக்கு ஆன்டி-பர்ன்-இன் தீர்வு உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளது.

    காப்புரிமை விண்ணப்பத்தின் படி, டிஸ்ப்ளேவில் முழுமையான பிக்சல்கள் மற்றும் முழுமையான அளவு கொண்ட பிக்சல்களில் தேர்வு செய்யப்பட்ட ஆன்டி-அலைசிங் பிக்சல்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிக்சல்கள் OLED அல்லது LCD பிக்சல்களாகவோ அல்லது பெரிய டிஸ்ப்ளே பிக்சல்களை கொண்டிருக்கலாம்.

    இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது 15% பெரிய டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் காப்புரிமை விண்ணபம் 20180246363 “Pixel Array Antialiasing to Accommodate Curved Display Edges,” தலைப்பில் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஏப்ரல் 2018-இல் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது, இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வட்டம் அல்லது வளைந்த டிஸ்ப்ளே இன்டர்ஃபேஸ் வழங்க முடியும். பர்ன்-இன் பிழையை சரி செய்ய ஆப்பிள் காப்புரிமையில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    சில தினங்களுக்கு முன் 2018 ஆப்பிள் நிகழ்வினை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.00 மணி்க்கு ஆப்பிள் தலைமையகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருக்கிறது. 

    இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் 6.5 இன்ச் OLED ஐபோன் X பிளஸ், மேம்படுத்தப்பட்ட 5.8 இன்ச் OLED ஐபோன் X, 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல், ஐ.ஓ.எஸ். 12 புதிய ஏ12 பிராசஸர் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஐபோன்கள் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ புதிய ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி 2018 ஐபோன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது என அவர் தெரிவித்தார். பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிகளவு ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்ட சாதனங்களில் வழங்கப்படுகின்றன.

    ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து வழங்கப்படுவதால், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் 2019-ம் ஆண்டு 500 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்றும், ஆப்பிள் நிறுவனம் டச் ஐடி தொழில்நுட்பத்தை தனது சாதனங்களில் இம்முறை வழங்க அதிக வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.



    ஆப்பிள் நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பம் ஐபோன் மாடல்களில் சிறப்பாக வேலை செய்கிறது, மேலும் ஆன்ட்ராய்டு மாடல்களில் சீராக வளர்ந்து வரும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் சோதனையாக இருக்கும் என தெரிவித்தார்.

    2019-ம் ஆண்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலில் இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கான முதல் அப்டேட் ஆக இருக்கும் மிங் கணித்துள்ளாப். முன்னதாக விவோ நிறுவனம் வெளியிட்ட X21 ஸ்மார்ட்போனில் முதல் முறையாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.
    2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஐபோன் பிராசஸரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் பேட்டரி பேக்கப் ஐபோன்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், புதிய பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிகிறது. புதிய பிராசஸர் ஆப்பிள் ஏ12 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் மூன்று புதிய ஐபோன்களிலும் ஏ12 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய பிராசஸர் அடிப்படை வடிவமைப்பை முற்றிலும் மாற்றப்படுவதால், இந்த பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.



    பிராசஸர்களில் உள்ள டிரான்சிஸ்டர்களில் எலெக்டிரானிக் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மின்சாரம் செல்ல அனுமதிக்கிறது, இதை பொருத்தே ஸ்மார்ட்போன்களில் கம்ப்யூட்டிங் நடைபெறுகிறது. சிப்செட்டில் அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், அதிக கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கும். 

    கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்து வழங்கிய ஏ11 பிராசஸர்களில் 10 என்.எம். முறையில் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு டிரான்சிஸ்டர் இடையேயான அளவு 10 நானோமீட்டர்கள் ஆக இருந்தது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஏ12 சிப்செட் 7 என்.எம். உற்பத்தி முறையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் டிரான்சிஸ்டர்களிடையேயான இடைவெளி 7 நானோமீட்டர்கள் ஆக இருக்கும்.

    புதிய உற்பத்தி முறையால் அதிக டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்த முடியும் என்பதால் ஸ்மார்ட்போனின் வேகம் 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், செயல்திறன் அதிகரிக்காது எனினும் சிப்செட் அதிக சிறப்பாக இயங்கும். மேலும் 7 என்.எம். சிப்கள் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தினால், பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் கிடைக்கும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple


    ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்களில் பேக்பிளேன் தொழில்நுட்பத்தை பொருத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனங்களில் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பேக்பிளேன் தொழில்நுட்பம் ஒவ்வொரு பிக்சல்களை ஆன் செய்து, ஆஃப் செய்யும் பணியை மேற்கொண்டு டிஸ்ப்ளே ரெசல்யூஷன், ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் மின்சக்தி பயன்பாடு உள்ளிட்டவற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய OLED டிஸ்ப்ளேக்கள் LTPS TFT அல்லது குறைந்த வெப்பநிலை பாலிசிலிகான் மெல்லிய ஃபிலிம் டிரான்சிஸ்டர்களை பயன்படுத்துகின்றன. 

    எனினும் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களில் LTPO TFT அல்லது குறைந்த வெப்பநிலை பாலிக்ரிஸ்டலைன் ஆக்சைடு பயன்படுத்தலாம் என தெரிகிறது. LTPO தொழி்ல்நுட்பம் முந்தைய LTPS வகைகளை விட 5 முதல் 15% வரை மின்சக்தியை சேமிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் எதிர்கால ஐபோன்களின் பேட்டரியை நீட்டிக்க முடியும்.

    OLED டிஸ்ப்ளேக்களில் அதிக கட்டுப்படுத்த LTPO தொழில்நுட்பத்தை ஆப்பிள் உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் வளையக் கூடிய OLED பேனல்களை சாம்சங் நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. சாம்சங் நிறுவனத்துடன் எல்.ஜி.யும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பேனல்களை வழங்கலாம் என தெரிகிறது. 

    அந்த வகையில் டிஸ்ப்ளேக்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் LTPO தொழில்நுட்பத்தை முதலில் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வழங்கி, அதன் பின் ஐபோன்களுக்கு வழங்க ஆப்பிள் திட்டமிட்டிருக்கலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது. #Apple #iPhone
    ×