search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97076"

    ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு அதிகளவு டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனம் தயாரித்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    எல்ஜி டிஸ்ப்ளேவில் 270 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தகவல் வெளியானது. எதிர்கால ஐபோன்களுக்கான OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED பேனல்களை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக எல்ஜி மாறயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது டிஸ்ப்ளேக்களுக்கு சாம்சங்-ஐ மட்டும் நம்ப வேண்டிய நிலையை மாற்றும்.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மாடலுக்கு எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளே வழங்கலாம் என தகவல் வெளியானது. சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களின் படி எல்ஜி டிஸ்ப்ளே சுமார் 20 லட்சம் முதல் 40 லட்சம் யூனிட்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    ஏப்ரல் மாத வாக்கில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் பிரம்மான்ட உற்பத்தியில் சவால் ஏற்பட்டதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொன்னபடி டிஸ்ப்ளே வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாம்சங் போன்று எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனத்தால் அதிகளவு டிஸ்ப்ளேக்களை வழங்க முடியுமா என்ற நிலைக்கு ஆப்பிள் தள்ளப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து வணிக நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் எல்ஜி நிறுவனத்தால் 2018 ஐபோன் மாடல்களுக்கு தேவையான 20% OLED பேனல்களை வழங்க முடியும் என தெரிவித்திருந்தது.

    2018 செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வழங்க இருப்பதாகவே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இரண்டாம் தலைமுறை ஐபோன் X, விலை குறைந்த 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்துடனான ஏழு வருட போட்டியை ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இரு நிறுவனங்களும் வெளியிட்டிருக்கின்றன.




    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை விவகாரத்தை இரு நிறுவனங்களும் தாங்களாகவே முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

    2011-ம் ஆண்டு துவங்கிய காப்புரிமை விவகாரத்தின் இறுதி தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இறுதி தீர்ப்பை எதிர்த்து சாம்சங் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், "ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் காப்புரிமை விவகாரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளன. மேலும் இவ்வழக்கு தொடர்பான மற்ற விவகாரங்களை அவர்களாகவே தீர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளன".


    கோப்பு படம்

    இதுகுறித்து சினெட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வழக்கை தள்ளுபடி செய்து, மீண்டும் இந்த விவகாரம் குறித்த மேல்முறையீடுகளை செய்ய முடியாத வகையில் ஆவணங்களில் நீதபதி லுசி கோ கையெழுத்திட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஐபோன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் புரட்சியை துவங்கியது, சாம்சங் எங்களது வடிவமைப்பை அப்பட்டமாக காப்பியடித்தது. மக்களுக்கான புதிய சாதனங்களை கண்டறிய தொடர்ந்து கடினமாக உழைத்து, அவற்றை பாதுகாப்போம்," என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "நீதிபதிகள் வழங்கிய சேவைக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம், மேலும் சாம்சங் எங்களது வடிவமைப்பை காப்பியடித்ததை ஒப்பு கொண்டமைக்கு பெருமை கொள்கிறோம்," என ஆப்பிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    2018 செப்டம்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஆறு புதிய சாதனங்களை வெளியிட இருப்பதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார்.





    ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ 2018 ஆப்பிள் வெளியீடு குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிய வடிவமைப்பு, பெரிய திரை கொண்ட வாட்ச், குறைந்த விலை மேக்புக் ஏர், ஃபேஸ் ஐடி வசதி கொண்ட ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

    2019 ஐபோன்களில் முற்றிலும் புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களின் விற்பனை மற்ற மாடல்களை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

    இத்துடன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்ட புதிய ஐபேட், விலை குறைந்த மேக்புக் ஏர், பெரிய டிஸ்ப்ளே கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என்றும், 2018 ஐபோன்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X, 6.5 இன்ச் திரை கொண்ட ஐபோன் X பிளஸ் மற்றும் 6.1 இன்ச் ஐபோன் என மூன்று மொபைல் போன்களை அறிமுகம் செய்யலாம்.

    6.1 இன்ச் ஐபோன் விற்பனை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் பட்சத்தில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விற்பனையும் இதே காலகட்டத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன் மாடல்களில் அனைத்தும் செப்டம்பர் மாத வாக்கில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க சந்தையில் 6.1 இன்ச் ஐபோன் வாங்குவோர் தங்களது பழைய ஐபோன்களை வழங்கி, புதிய மாடலுக்கு அப்கிரேடு செய்து கொள்ளக்கூடிய வகையில் சலுகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் 6.1 இன்ச் ஐபோன் விலை மற்ற மாடல்களை விட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் அந்நிறுவனம் ஐபோனில் சேர்க்க இருக்கும் அம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

     



    ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் கையெழுத்துக்களை புரிந்து கொள்ளும் புதிய வசதியை ஐபோன்களில் சேர்க்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 2014-இல் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் மேனேஜிங் ரியல்-டைம் ஹேன்ட்ரைட்டிங் ரெகஃனீஷன் (Managing Real-Time Handwriting Recognition) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சம் பயனரின் சாதனத்தில் கையெழுத்து வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் சைனீஸ் உள்பட பல்வேறு மொழிகளை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் ஆப்பிள் சாதனங்களில் வேலை செய்யுமா அல்லது இதர திட்டங்களை ஆப்பிள் வகுத்திருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    ஐபோனில் மட்டும் வழங்கப்படுமா அல்லது இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் விழாவில் ஏர்பவர் எனும் வயர்லெஸ் சாதனம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் மூன்று புதிய ஐபோன்களும் இந்த ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்பவர் சாதனம் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஏர்பவர் சாதனம் கியூ.ஐ. வயர்லெஸ் பேட் சாதனத்துக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 வெளியீடு மற்றும் புதிய ஐபோன் மாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.


     

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்2 மாடலை வெளியிடாது என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்2 முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆலிக்சர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன் விவரங்களை சரியாக லீக் செய்ததில் பிரபலமாக இருக்கிறது. இவை ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அவற்றுக்கான உபகரணங்களை (அக்சஸரீ) தயாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    உபகரணங்களை தயாரிக்கும் ஆக்சிலர்-க்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்2 மாடலுக்கு மாற்றாக இதுவரை ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரிய ஐபோன் மாடலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஐபோன் X மாடலை ஆப்பிள் உருவாக்கி வருவதாகவும், இதற்கான உபகரணங்களை தயாரிக்க ஆக்சிலர் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மினி மாடலாக ஐபோன் எஸ்இ2-வை வெளியிடும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையி்ல் ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் அளவில் பெரிய ஐபோன் X வெர்ஷனை சற்றே குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது. 

    மிகப்பெரிய ஐபோன் X மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதன் விலை அதிகமாகவே நிர்ணயம் செயய்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 இன்ச் மாடல் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. வழக்கம் போல இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
    இந்தியாவில் ஐபோன் வாங்குவோரை கவர ஆப்பிள் நிறுவனம் சார்பில் அதிரடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஐபோன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு முன்பணம் இல்லாமல், குறைந்த வட்டியில் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X போன்ற மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்பதோடு பயனர்கள் 18 மாதங்களுக்கு மாத தவனை செலுத்த வேண்டும். இந்தியாவில் வழங்கப்பட்ட தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    இத்துடன் கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், ஹெச்டிபி நிதி சேவைகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பில் வழங்கப்பட்ட டெபிட் கார்டுகளுக்கும் தவனை முறை வசதி வழங்கப்படுகிறது. 

    மேலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி, ஜெ&கே வங்கி, கோடாக் மஹேந்திரா வங்கி, ஆர்பிஎல் வங்கி, ஸ்டேன்டர்டு சேட்டர்டு வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கும் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.



    அனைத்து சலுகைகள் மற்றும் முழு விவரங்கள் இந்தியாஸ்டோர் (indiaistore.com) வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதில் மாத தவனையை கணக்கிட பிரத்யேக கால்குலேட்டர் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிள் இந்த சலுகையை அறிவித்திருக்கும் ஐபோன் மாடல்கள் மற்றும் அவற்றுக்கான மாத தவனை சார்ந்த விவரங்களை இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

    இத்துடன் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு, சிட்டி கிரெடிட் கார்டு, ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு, ஹெச்டிஎஃப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஸ்டான்டர்டு சேட்டர்டு கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 5% கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முதல்முறை அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையில் 18 மாதங்களுக்கு தவனை முறையை தேர்வு செய்வோருக்கு மட்டும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஒரு கார்டுக்கு இரண்டு பரிமாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுகிறது, இதற்கான கேஷ்பேக் தொகை பரிமாற்றம் நடைபெற்றதில் இருந்து 120 நாட்களுக்குள் கிரெடிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படும் இந்த சலுகை ஜூன் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஐபேட், மேக்புக் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை வாங்குவோருக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை சிட்டிபேங்க் கார்டுகளை வைத்திருப்போருக்கு மட்டும் ஜூலை 31, 2018 வரை வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் ஒன்று எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X பயனர்களை கவர்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், சிலர் இதன் விலை பட்டியலை பார்த்து பதறவே செய்தனர். அதிக விலை குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்ட ஆப்பிள், ஒருவழியாக பயனர் விரும்பும் விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான அமெரிக்க செய்தி தாள் ஒன்றில் புதிய ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் எல்சிடி டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட சாதனங்கள் ஐபோன் விற்பனையை ஊக்குவிக்கும் என ஆப்பிள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த ஐபோன் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. விலை குறைந்த ஸ்மார்ட்போனாக 6.1 இன்ச் ஐபோன் மாடல் இந்தியா போன்று விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெறும் சந்தைகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.


    கோப்பு படம்

    அந்த வகையில் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முன்பு எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் இதே டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஐபோன் X மாடல்களில் OLED பயன்படுத்திய திட்டம் ஆப்பிள் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்தது. குறிப்பாக ஐபோன் X விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதோடு, எல்சிடி டிஸ்ப்ளேக்களை பயன்படுத்திய ஐபோன் 7 ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் இருக்கின்றன.

    ஆப்பிளின் விலை உயர்ந்த ஐபோன் X விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதே விற்பனை குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்ற ஐபோன்களின் விலை காரணமாகவே அவற்றின் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
    ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

    - ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    - க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.

    - செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.

    - இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.

    - பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.


    கோப்பு படம்

    புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
    6.5 இன்ச் அளவு கொண்ட ஐபோன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய மாடல் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    கேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.


    புகைப்படம்: நன்றி OnLeaks

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

    2018 6.5 இன்ச் ஐபோனின் முதல் வீடியோவை கீழே காணலாம்..,


    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்களிலும் ஒரேமாதிரியான டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சியோல்:

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

    ஐபோன் மாடல்களில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்.சி.டி.) ஸ்கிரீன்களை விநியோகம் செய்தில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பான் டிஸ்ப்ளே இருந்தது. எனினும் எல்ஜி நிறுவனம் தயாரித்த OLED ஸ்கிரீன்களால் ஜப்பான் டிஸ்ப்ளே பின்னடைவை சந்தித்தது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்க இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED (ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு பேனல்கள்) பயன்படுத்தப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஆப்பிள் நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வழங்ப்படவில்லை.


    கோப்பு படம்
     
    இதேபோன்று ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் ஐபோன்களுக்கான OLED பேனல்களை 2019-ம் ஆண்டு முதல் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

    அந்த வகையில் இந்நிறுவனம் புதிய தயாரிப்பு ஆலையை துவங்க முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன்களில் OLED பயன்படுத்தும் பட்சத்தில் எல்ஜி நிறுவனம் அதிகளவு பேனல்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்கும் என தெரிகிறது. 
    ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இலவசமாக ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் பயன்படுத்துவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ஐகிளவுட் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பி விடுவது தான் எனலாம். 

    ஐபோன் புகைப்படங்களை பேக்கப் செய்யும் போது இடையே: உங்களது ஐபோனினை பேக்கப் செய்ய ஐகிளவுடில் போதுமான ஸ்டோரேஜ் இல்லை என்ற தகவல் திரையில் தோன்றி பயனர்களை பதற்றத்தில் ஆழ்த்தும். நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைக்கு தீர்வை ஆப்பிள் வழங்கியுள்ளது.

    அதன்படி வாடிக்கையாளர்கள் ஒருமாதத்திற்கு ஐகிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது. முன்னதாக அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. 5 ஜிபி ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் திட்டம் 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில் டேட்டா பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து இருக்கும் நிலையில் டேட்டா அளவு கடந்த சில ஆண்டுகளில் நீட்டிக்கப்படாதது ஏன் என்பது மர்மமாகவே இருந்தது. ஆப்பிள் சார்பில் வழங்கப்படும் 5 ஜிபி டேட்டாவில் வாடிக்கையாளர்கள் அனைத்து வித டேட்டாக்களையும் பேக்கப் செய்ய வேண்டும் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவு டேட்டாவை பேக்கப் செய்ய கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    ஆப்பிள் இவ்வாறு இருக்க மறுபுறம் கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அன்லிமிட்டெட் புகைப்படங்களை அதிக தரத்தில் பேக்கப் செய்ய வழி செய்கிறது. இதற்கு கூகுள் சார்பில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கூகுள் போட்டோஸ் செயலியில் இதற்கு அன்லிமிட்டெட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் தற்சமயம் அறிவித்து இருக்கும் ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் ஒரு மாதத்திற்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஐபோன் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றியவர்களுக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டிருந்த பேட்டரிக்கள் ஐபோன்களின் வேகத்தை குறைத்து, அவற்றை வேண்டுமென்றே ஷட் டவுன் செய்ய வைத்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமாய் வெடித்த நிலையில் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.

    இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேட்டரி மாற்றுவோருக்கு ஆப்பிள் சார்பில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றுவோருக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

    ஆப்பிள் வழங்கும் தொகையை பெற தகுதி உள்ளவர்களுக்கு பேட்டரியை மாற்றும் போது இந்த தொகை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு மே 23-ம் தேதி முதல் மின்னஞ்சல் வாயிலாக ஆப்பிள் சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


    கோப்பு படம்

    இந்த விவகாரத்தில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட மாடல்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. 

    ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31, 2018 வரை ஐபோன் 6 அல்லது அதற்கும் அதிக மாடல்களை பயன்படுத்திய வாடிக்கையாளர்ளில் வாரன்டி இல்லாமல் தங்களது பேட்டரிகளை மாற்றியிருந்தால் இந்த சலுகையில் தகுதியுடையவர்களாவர் என ஆப்பிள் நிறுவனம் புதிதாய் துவங்கியுள்ள சப்போர்ட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் மாற்றியவர்களுக்கு மட்டுமே கிரெடிட் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரன்டியில் உள்ள ஐபோன் பேட்டரிகளை மாற்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

    ஆப்பிள் கிரெடிட் திட்டத்திற்கு தகுதியுடைவர்களுக்கு மே 23-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் ஆப்பிள் நிறுவனம் தொடர்பு கொள்ளும். ஒருவேளை ஆப்பிள் சார்பில் தொடர்பு கொள்ளப்படவில்லை எனில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தை அனுகலாம்.
    ×