என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சினிமா"
- திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார்.
- தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மொழி. இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படம் முழுக்க பேசாமல் தன்னுடைய முக பாவனையிலேயே மக்கள் மனதை கட்டிப் போட்டார் ஜோதிகா.
அதைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்ஜூனா நடிப்பில் பயணம் திரைப்படத்தை இயக்கினார்.
கடந்தாண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாணி போஜன் இதற்கு முன் ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டூ அமினிசியா என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட சூழ்நிலையில் தற்பொழுது தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
அமுதா கஃபே நடத்தி வரும் ஒரு குடும்பம் அந்த ஹோட்டலில் சாம்பார் மிகவும் ஃபேமசாக இருக்கிறது. அந்த சாம்பார் ருசிக்கு காரணம் யோகி பாபுவின் கைப்பக்குவம், மற்றொரு நண்பர்கள் நட்த்தும் ஹோட்டலில் சட்னி மிகவும் ஃபேமசாக இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் அவர்களில் ரெசிப்பியை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து யோகி பாபுவிடம் கேட்பது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. விரைவில் ரிலீய்ஸ் நீதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் பாகம் 1 இயக்கி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
- அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்று கூறினாலே நமக்கு நியாபகத்திற்கு வரும் முதல் இயக்குனர் ஷங்கர் ஆவார். அவரின் கதையை நேர்த்தியாகவும் , மிக பிரம்மாண்டமாகவும் எடுக்கும் திறம் பெற்றவர். இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தியன் பாகம் 1 எடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. உலகமெங்கும் பல நகரங்களில் படக்குழுவினர் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்படும் போது அங்கு நடந்த நேர் காணலில் அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார். அதில் அவர் கூறியது " தற்பொழுது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன, ஒன்று ஒரு வரலாற்று சிரப்புமிக்க திரைப்படம், மற்றொன்று ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று சை ஃபை கதைக்களத்துடன் 2012 என்ற பெயரில் உருவாகவுள்ளது" என கூறினார்.
இந்த மூன்று திரைப்படங்களும் மிகப் பெரிய பொருட் செலவிலும் அதில் நிறைய VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படங்களில் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்பதையும் கூறீனார்.
மேலும் அவர் ராம் சரண் நடிப்பில் இயக்கிக் கொண்டு இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு இன்னும் 15 - 20 நாட்கள் தான் படப்பிடிப்பு பணிகள் இருக்கிறது என கூறியுள்ளார். இந்தியன் 3 பாகத்தில் பெரும்பாலான காட்சிகளை படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதால் இன்னும் 6 மாதங்களில் அப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை சுனைனாவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.
தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து சுனைனாவுக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யார் அந்த மாப்பிள்ளை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.
தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் " தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு முடிவடைந்தது, நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், தங்கலான் எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை, கூடிய விரைவில் ஒரு அசத்தலான டிரைலர் வர இருக்கிறது, இந்தியன் சினிமா மிகப் பெரிய படைப்பான தங்கலானை பார்க்க இருக்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமலா பாலுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
- அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஹேமா தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, "ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.
ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை.
அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார்.
நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம்.
ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம். இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறையவே நடைபெற்றன.
கேமரா முன் நடிக்கும் நடிகர்களை அழகாக காமிப்பதற்கு எங்களது முழு உழைப்பை நாங்கள் தருகிறோம், திரைத்துறையில் நாங்களும் முக்கிய பங்கை வகிக்கிறோம் ஆனால் ஒப்பனை கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் தபு போன்ற ஸ்டார் நடிகைகளுடன் கூட சேர்ந்து பணியாற்றினோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு வேனையெல்லாம் அவரே புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்'' என்றார்.
அமலா பாலுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் வீட்டுக்கும் வரும் போட்டாவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். மகனுக்கு இலாய் என்ற பெயரை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்திய அணியை பாராட்டும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவரது ஒரு பாடலை பரிசாக வழங்கியுள்ளார்.
டீம் இந்தியா ஹை ஹும் என்ற தலைப்பிடப்பட்ட அந்தப் பாடல், சமீபத்தில் வெளியான மைதான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.
இதுக் குறித்து ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்து இந்த பாடலின் யூடியூப் லிங்கை அதில் பதிவு செய்துள்ளார். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
- அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா ’பேட் காப்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.
மகாராஜா திரைப்படத்தில் அவரது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
அங்கு ஜெயில் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கு விதமாக " ஆம் நான் ஜெயிலில் இருந்திருக்கிறேன், யார அடிக்கக்கூடாதோ அவங்கள அடிச்சதுனால நான் ஜெயிலுக்கு போனேன், நான் தப்பான ஆள் மேல கைய வச்சிட்டேன். நான் ஒரு இரவு முழுசா ஜெயில்ல இருந்தேன். யார் அடிச்சு நான் ஜெயிலுக்கு போனேனோ அவரே தான் என்னோட வாழ்க்கை மாறுனதுக்கு முக்கியமான காரணம், அவரே தான் என்னய ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு" என்று கூறினார்.
இவ்வாறு கூறியவுடன் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடந்தனர், மேலும் அனுராக் யார் அந்த நபர் என்ற விவரத்தை கூறவில்லை.
தற்பொழுது அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா 'பேட் காப்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.
பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முதலில் திரைப்படம் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர் ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை.
தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது இம்முறை சொன்ன தேதியில் வெளியாகும் என ரசிகர்களால் நம்பப் படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார்.
- இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார்.
இந்தி சினிமாவில் சர்ச்சைக்குறிய இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா, அவர் பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ராட் ராத்ரி, பூத், ஃபூங்க் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
என்னதான் இயக்குனர் ஹாரர் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவர் வாழ்க்கையில் இம்மாதிரி அமானுஷ்ய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பாரா என்ற கேள்வி இருக்கும். அப்படி ஒரு சம்பவத்தை ஆர்.ஜி.வி சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார். அவர்கள் இருவரும் விமான பயணத்தின் போது சந்தித்ததாகவும், தனக்கு பின்னாடி இருக்கையில் தாவர் அமர்ந்திருந்தார். இதனால் ஆர்.ஜி.வி அவருடன் பேசலாம் என பின் இருக்கைக்கு சென்று பேசியுள்ளார். அப்போது தாவர் ஆர்ஜிவி ஐ பார்த்து `உங்க அப்பா இறந்துட்டாரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த சந்திப்பிற்கு 15 நாட்கள் முன் ஆர்ஜிவி இன் தந்தை இறந்ததால் இவர் ஆமா என்று பதிலளித்துள்ளார். பின் சிறிய அமைதிக்கு பின் தவார் " உங்க அப்பா இப்போ நம்ம கூட தான் இருக்காரு" என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஆர்ஜிவி- க்கு பெரும் அதிர்ச்சி பின் "எனக்கு இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல" என்று கூறியுள்ளார்.
அதற்கு தாவர் " அவருக்கும் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல அவர் உன்னைய பற்றி ரொம்ப கவலை படுறாரு" என்று ஆர்ஜிவியின் தந்தை கூறியதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி, பயம், கோபம் என பல எமோஷன்களை மேற்கொண்ட ஆர்ஜிவி அந்த இருக்கையில் இருந்து எழுந்து பழைய இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். இவ்வாறு இந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்ஜிவி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன்.
- இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்பட பூஜை விழாவில் இருந்தே இப்படத்தின் சர்ச்சையும், கேளி மற்றும் கிண்டல்கள், ட்ரோல் செய்த வண்ணம்தான் உள்ளது. சில நாடகளுக்கு முன் கூட மதுரையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ஃபோன் பேசிய படி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்பொழுது ஜாமினில் வந்துள்ளார். இப்படி டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகவே முடியும் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஐபிஎல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் இரண்டாம் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர் மற்றும் அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது வெளியாகிய போஸ்டரில் டிடிஎப் வாசன் மிகவும் கோபமாகவும் அவருக்கு பின்னாடி ஒரு கார் ரோட்டில் இருக்கிறது.
தலைப்பில் Indian Penal Law{IPL} என குறிப்பிட்டுள்ளது. இப்படம் கார் ரேசிங் தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகியது.
சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரித்விராஜ் அவரது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப் போட்டார். ப்ளெசி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அதற்கு நேர்மாறாக குருவாயூர் அம்பலநடையில் என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகளவில் 90 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து பேசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், சிஜு சன்னி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்தில் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது.
கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி- யில் வெளியாகி மக்கள் அனைவரும் பார்த்து விட்டு சமூக வலைத்தலங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படம் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
உங்களுக்கு காமெடி திரைப்படம் பிடிக்கும் என்றால் இப்படம் கண்டிப்பாக உங்களுக்குதான். இதுவரை இப்படி ஒரு கதைக்களம் தமிழ் சினிமாவில் வரவில்லை. படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் பிரியாவிடம் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்தவர் ராகவ் மிர்தாத்.
- காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
இயக்குனர் பிரியாவிடம் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்தவர் ராகவ் மிர்தாத். அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத். பிரசாத் ஸ்டுடியோவின் கிராஃபிக்ஸ் பிரிவில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களுக்கு விசுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசராக பணிபுரிந்தவர்.
அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தில் மாத்யூ வர்கீஸ், சவுந்தர்யா, சுவாமினாதன் மற்றும் அஞ்சலி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தற்பொழுது அவர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராகவ் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு `பன் பட்டர் ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர் நடித்திருக்கும் படம் இது. திரைப்படங்களில் வருவதுபோன்ற காதல் வாழ்க்கையை விரும்பும் இளைஞன், உண்மையான காதலை எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பதுதான் கதை. குறைந்த செலவில் புதுமுக நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பாகவே எடுத்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்