என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97412"
- மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோ ஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டு கள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவி லில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பா ளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் எழுந்தரு ளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்தி பெருமா னுக்கும் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடை பெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
- நினைத்த காரியம் நிறைவேறும்.
சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை கருத்தில் கொண்டு தீமையான விஷத்தை சிவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்மையை தரும் அருளை வழங்குவார்.
பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் நீராடி குளித்து முடித்த பின்னர் திருநீர் இட்டு சிவநாமம் ஆன நமச்சிவாய என்ற வாசகத்தை ஓதி உங்களது வேண்டுதலை துவங்கலாம். இன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவினை தவிர்த்து விரதமிருந்து பிரதோஷத்தை முடித்த பின்னர் உணவை உட்கொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி பதினொரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் ஒரு சனி பிரதோஷமான இன்று ஒருநாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் ஐந்து வருடங்கள் தினமும் நீங்கள் சிவன் கோயிலுக்கு சென்று வந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரதோஷம் வேண்டுதல் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாதெனில் : திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் , ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை நீங்கும், நோய்களால் அவதிப்பட்டு துன்புற்று இருக்கும் நபர்களுக்கு நோய்கள் நீங்கும், எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே தடங்கலுடன் இருக்கும் அனைவருக்கும் சகல காரியங்களிலும் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும்.
மேலும் சனிபிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்களுக்கு சிவன் அருளும் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை அனைவருடனும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இதே தினத்தில் நந்தியையும் சேர்த்து வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும் செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் தானங்கள் எண்ணிலடங்கா பலனை கொடுக்கும் என்பதால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை இன்று செய்யலாம்.
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…
- இன்று முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதி அளித்திருந்தது.
- சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாத பவுர்ணமி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (4-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலைஏற வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இன்று சனிபிரதோ ஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிபாறையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
10 வயதிற்குட்பட்ட வர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சனிபிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
- 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
- மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 7-ந் தேதி மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களை சதுரகிரிக்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது.
- நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெல்லை:
மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டம் சார்பில் வரும் 18-ந் தேதி மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தையொட்டி நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து இரவு 8 மணிக்கு பஞ்ச பூத தலங்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் நெல்லை புதிய பஸ்நிலையம், சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் 18-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு நவ கைலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சங்கரன்கோவில் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையங்களில் இன்று (10-ந் தேதி) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை.
- இரவு பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை. கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம்.
- பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம்.
- நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன.
சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார்.
நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ
என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.
- குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது.
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.
நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (19/1/23) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
வியாழக்கிழமை (இன்று) நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும்.
- இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் வரும் பிரதோஷ தினமான இன்று வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.
அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.
"பொன்" எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் புதன் கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.
புதனை வலிமைப்படுத்த இன்று பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.
- ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன.
- ஜூலை 1-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மகாபிரதோஷம் வருகிறது.
ஆங்கில மாதத்தின் கணக்கின்படி ஒரு ஆண்டிற்கு ஒருமுறையே ஒரு விழா வரும். ஆனால் வருகின்ற 2023-ம் ஆண்டை பொறுத்தவரை பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி 2 முறை வருகிறது. அதாவது ஜனவரி-2023-ல் 2-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது. மேலும் 2023-ல் டிசம்பர் மாதம் 23-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் வைகுண்ட ஏகாதசி வருகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவிலில் சொக்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதால் 2 முறையும் சொர்க்கவாசல் திறக்கப்படுமா?அல்லது ஐதிக முறைப்படி, நட்சத்திரம் அடிப்படையில் சொர்க்கவாசல் திறக்கப்படுமா? என்பது தெரியவில்லை. இதே சமயம் ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதை சிறப்பானதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்
சிவப்பெருமானுக்கு உகந்த பிரதோஷ நாளானது ஒரு மாதத்திற்கு 2 முறை மட்டுமே வரும். அதன்படி 2023-ம் ஆண்டின் கணக்கின்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷம் வருகிறது. ஆனால், ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. அதுவும் இதே மாதத்தில் மகாபிரதோஷம் என்று சொல்லக்கூடிய ஜூலை- 1-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் வருகிறது. சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை மகாபிரதோஷம் என்பார்கள்.
ஜூலை 1-ந் தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் சனிக்கிழமை வருவதால் ஒரே மாதத்தில் 2 மகாபிரதோஷம் வருவதை பக்தர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். மேலும் ஜூலை 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வழக்கத்திற்கு மாறாக மேலும் ஒரு பிரதோஷம் வருகிறது. 2023 ஆண்டின் கூடுதல் சிறப்பாக பிப்ரவரி மாதம் 18-ந்தேதி அன்றும் சனி மகாபிரதோஷம் வருவது குறிப்பிடத்தக்கது.
- சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்
கரூர் :
கரூர் வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தினர். இதேபோல், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர்,நன்னீர் சவுந்திரநாயகி உள்பட பல்வேறு சிவன்கோவில்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்