search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97412"

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதனை முன்னிட்டு சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உட்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ரவிச்சந்திர பட்டர் பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.

    • மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம்.
    • பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் நாளை (21-ம் தேதி). பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நாம் செய்யும் பூஜைகளும் ஜபதபங்களும் மந்திரங்களும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும்.

    சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான வழிபாடு என்று பிரதோஷத்தைக் குறிப்பிடுவார்கள். பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது. திரயோதசி என்பது ஒவ்வொரு பெளர்ணமிக்கும் முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிறது.

    திரயோதசி திதி வருகிற மாலை நேரம் பிரதோஷம். பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் சிவனாருக்கு பூஜைகள் நடத்தப்படும்.

    பிரதோஷ நன்னாளில், சிவலிங்கத்திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது போலவே, அந்த நாளில், நந்திதேவருக்கும் வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பிரதோஷம் என்பது எப்போதுமே, மாலை 4.30 முதல் 6 மணி வரை.

    செவ்வாய்க் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ராகுகால வேளையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு விளக்கேற்றுவார்கள். நெய்தீபம் அல்லது எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள்.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நாளில், விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கு நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி, அபிஷேகத்தை தரிசியுங்கள். நமசிவாய மந்திரத்தைச் சொல்லி சிவனாரை வழிபடுங்கள். சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தந்தருள்வார் சிவனார்!

    • பிரதோஷங்களிலேயே 20 வகையான பிரதோஷம் இருக்கின்றது.
    • இந்த நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்..

    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலை கடைந்தனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் இதற்கு பயன்படுத்தினர். அப்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, அதற்குள் இருந்து பல தெய்வீக அம்சம் நிறைந்த பொருட்களும், தேவதைகளும், தெய்வங்களும் கூட வெளிப்பட்டன. இறுதியாகத்தான் அமிர்தம் வெளிப்பட்டது. ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக முதன் முதலில் கடலில் இருந்து வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அதோடு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகியும் வலி பொறுக்க முடியாமல், விஷத்தை கக்கியது. அந்த இரண்டு விஷமும் ஒன்று சேர்ந்து 'ஆலகால' விஷமாக மாறியது. அது இந்த உலகையே அழிக்கும் சக்தி படைத்ததாக இருந்தது.

    இதையடுத்து அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் அவரது உடலுக்குள் நுழையாமல் இருக்க, அவரது கழுத்தை பிடித்தார், பார்வதி. அதனால் விஷம் கழுத்திலேயே நின்று, கழுத்து நீலநிறமாக மாறியது. இதனால்தான் ஈசனை 'நீலகண்டன்' என்றும் அழைக்கிறோம். கழுத்தில் விஷம் பரவியதால் மயக்கமடைந்த சிவன், மயக்கம் தெளிந்ததும் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று ஆனந்த நடனம் புரிந்தார். அந்த நாளே 'பிரதோஷ தின'மாக வழிபடப்படுகிறது.

    இதனால்தான் பிரதோஷ தினத்தில் சிவன்- பார்வதி மற்றும் நந்தியம்பெருமான் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். பிரதோஷங்களிலேயே 20 வகையான பிரதோஷம் இருக்கின்றது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர், ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் 'திரயோதசி' திதியை 'பட்சப் பிரதோஷம்' என்கிறோம். இந்த பிரதோஷ கால வேளையில், பட்சி லிங்க வழிபாடு (பறவைகளோடு தொடர்புடைய மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்று) செய்வது உத்தமம்.

    3. மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறையில் பவுர்ணமிக்குப் பிறகு 13-வது திதியாக வரும் 'திரயோதசி' திதியே 'மாதப் பிரதோஷம்' ஆகும். இந்த பிரதோஷ நாளில் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு (பாணம் என்பது ஒரு வகை லிங்கம்) செய்வது நன்மையான பலன்களைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை, பிரதோஷ நேரத்தில் வழிபடுவது 'நட்சத்திர பிரதோஷம்' ஆகும்.

    5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராமல், திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷ நாளை, 'பூரண பிரதோஷம்' என்பார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்புவாக தோன்றிய லிங்கத்தை தரிசனம் செய்வது சிறப்பான பலனைத் தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது 'திவ்யப் பிரதோஷம்' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி அன்று தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபாடு செய்வதையும் 'தீபப் பிரதோஷம்' என்கிறோம். இவ்வாறு செய்வதால் சொந்த வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.

    8. சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் 'வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களை, 'சப்தரிஷி மண்டலம்' என்பார்கள். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே 'சப்தரிஷி பிரதோஷம்' ஆகும். இதனை அபயப் பிரதோஷம் என்றும் அழைப்பார்கள். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் பாவ-புண்ணியம் பார்க்காது அருள்புரிவார்.

    9. மகா பிரதோஷம்: புராணத்தில் பிரதோஷம் நடந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் 'மகா பிரதோஷம்' ஆகும். அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குாியது.

    திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீசுவரர் ஆலயம், திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் சிவ ஆலயம், கும்பகோணம் அருகே உள்ள 'திருக்கோடி காவல்' சிவ ஆலயம் ஆகியவை, எமன் வழிபட்ட சுயம்பு லிங்கங்களில் குறிப்பிடத்தக்கவை. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், 'மகா பிரதோஷம்' எனப்படும்.

    10. உத்தம மகா பிரதோஷம்: சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. அதிலும் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் 'உத்தம மகா பிரதோஷம்' ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு 'அர்த்தநாரி பிரதோஷம்' என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது 'திரிகரண பிரதோஷம்.' இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது 'பிரம்மப் பிரதோஷம்.' இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம்:வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது 'அட்சரப் பிரதோஷம்.' தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் 'கந்தப் பிரதோஷம்' எனப்படும். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜபிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்டதிக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் வரும் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது 'நவக்கிரகப் பிரதோஷம்.' இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி-சோமநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகம், சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் நந்தி, சோமநாதருக்கு பிரதோஷ காலத்தில் 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிருங்கேரி சங்கரமடம் சந்திரமவுலீசுவரர், நாகலிங்கம் நகர் அண்ணாமலையார், ெரெயில் நிலையம் எதிரில் உள்ள பூரணசக்கரவிநாயகர் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர், இடைக்காட்டூர் மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர், திருப்புவனம் புஸ்பவனேசுவரர், திருப்பாசேத்தி அழகேசுவரர், மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சிகோவிலில் உள்ள காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த காசிவிசுவநாதர் ஆகிய கோவில்களில் கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுத முடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் சனி பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது.
    • சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வரன். லிங்கம். நந்திகேஸ்வரர். சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத் தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.

    சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

    தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

    மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் கூறுகின்றன.

    பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மற்றும் எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோவில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    • 108 சங்காபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகிறது.
    • ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா 8-ந்தேதி நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் சனி மகாபிரதோஷ வழிபாடு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பிரதோஷ நாயகர் வலம்வருதலும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

    ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கும்பபூஜையும், ஹோமங்களும் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் அன்னாபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • இன்று செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.
    • இன்று விரதம் இருந்து சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம்.

    பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது.

    விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.

    விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.

    சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்களாம். நந்திதேவரையும் சிவனாரையும் அபிஷேகித்து,ஆராதித்து தரிசித்தார்களாம். பிரதோஷ பூஜைக்கு நாமும் அபிஷேகப் பொருட்களையும் பூக்களையும் வழங்குவோம்.

    நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே ஈசன் திருநடனம் புரியும் தருணம் பிரதோஷம் என்கிறது புராணம். விரதம் இருந்து பிரதோஷ நாளில், நமசிவாயம் என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து, சிவ பூஜையை தரிசித்தாலோ சிவ பூஜை செய்தாலோ, நம் முன்னோர்கள் செய்த ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம்.

    இன்னொரு விஷயம்... மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதாலும் சிவ பூஜை செய்வதாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறதோ... சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

    பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், சிவ பூஜை செய்யவேண்டும். குளித்துவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, 'நமசிவாயம்' என்று ஜபித்துக் கொண்டிருந்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். புண்ணியம் பெருகிவிடும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மட்டும எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    வீட்டில் விளக்கு ஏற்றி சிவன்பெருமான் புகைப்படத்தின் முன்பு அவருடைய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக இந்த நாளில் சிறப்பு பயன்களை நீங்கள் முழுமையாக அடைய முடியும்.

    இன்று (22ம் தேதி) சனிப் பிரதோஷம். மாலையில் சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்.

    நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

    • சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.
    • பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும்.

    புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான மாதம். இந்த மாதம் முழுவதுமே துளசி தீர்த்தம் பருகுவதும் பெருமாளுக்கு துளசிமாலை சார்த்துவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் வழிபாடு செய்வது உத்தமம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும்.

    அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.

    புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. இன்று பிரதோஷம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.

    கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

    பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

    • புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள்.
    • கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

    இன்று புரட்டாசி விரதம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.

    புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. அதுவும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.

    இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.

    கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

    இன்று மாலையில் சிவன் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

    • சோழவந்தான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்,

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் வலம்வந்து சிவாய நமக... சிவாய நமக... என்று சொல்லி வந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத்தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவி ல்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. 

    ×