search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்ட்ராய்டு"

    வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை சென்சார் வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை செயல்படுத்தியதும், பயனர்கள் கைரேகையை வைத்தால் மட்டுமே செயலியை திறக்க முடியும். 

    இதுகுறித்து WABetaInfo, வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த அம்சத்தை உருவாக்குவற்கான முதற்கட்ட பணிகள் மட்டுமே துவங்கி இருக்கிறது. இதனால் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.3 பதிப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக ஃபேஸ் ஐ.டி. மற்றும் டச் ஐ.டி. அம்சங்களை ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்குவதற்கான சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் இதேபோன்ற பாதுகாப்பு வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது. 


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் இதற்கான சோதனை மட்டும் நடைபெற்று இருக்கும் நிலையில், இதுவரை இந்த வசதி வழங்கப்படாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செயலியின் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சத்தை இயக்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாக்க முடியும். ஏற்கனவே தங்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதியை செயல்படுத்தி இருப்பின் இந்த அம்சம் தேவைக்கதிகமானதாகும்.

    ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தமிழ் மொழி வசதியுடன் புதிய மொபைல் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது. #Jio #browser



    ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ புதிய பிரவுசர் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ பிரவுசர் என அழைக்கப்படும் புதிய செயலி இந்தியாவின் முதல் பிரவுசர் என்றும், இது இந்திய பயனர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஜியோ தெரிவித்துள்ளது.

    குறைந்த மெமரியில் வேகமாகவும், மிக எளிமையாகவும் பயன்படுத்தக்கூடியதாக ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதால், மலிவு விலை சாதனங்களிலும் இதனை எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் புதிய செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

    ஜியோ பிரவுசர் செயலியில் பயனர்கள் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் செய்திகளை வாசிக்க முடியும். தற்சமயம் தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி என அதிகபட்சம் எட்டு மொழிகளில் ஜியோ பிரவுசரை பயன்படுத்தலாம். பயனர்கள் அவரவர் விரும்பும் மொழியை தேர்வு செய்து, அந்த தலைப்பில் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.



    பிரவுசரில் பிரத்யேகமாக செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கான பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஃபாஸ்பைட்ஸ் வழங்கும் தரவுகள் வாடிக்கையாளர்களுக்கு பட்டியலிடப்படும். வேகமான பிரவுசிங் அனுபவம் வழங்கும் நோக்கில் ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக செயலிக்கான விவரக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை இணையத்தின் முன்னணி வலைத்தளங்களை விரைவில் இயக்க க்விக் அக்சஸ் எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரைவேட் பிரவுசிங் அனுபவத்தை வழங்கும் இன்காக்னிட்டோ மோட், செய்திகள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள், குடும்பத்தாருடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.



    பயனர்கள் டவுன்லோடு செய்த தரவுகளை இயக்கும் வசதி மற்றும் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய வலைத்தளங்களின் விவரங்கள் வழங்கப்படுகிறது. செயலியை மேம்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்கள் பரிந்துரைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க ரிலையன்ஸ் ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.

    தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் ஜியோ பிரவுசர் செயலி ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வெளியாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia



    பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே.-Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும்.

    இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 34 செயலிகளை எடுத்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் 10 முதல் அதிகபட்சம் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர். 



    பின் இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அனைத்து செயலிகளும் ஆகஸ்டு 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    ஆய்வறிக்கையின்படி 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள் தானாக ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த சூழலில் பயனர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் இன் செய்யவில்லை என்றாலும் பயனர் விவரங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று ஸ்பேம் குறுந்தகவல்களை கண்டறியும் வசதி வழங்கப்படுகிறது. #Google #Messages



    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய அம்சம் சில பயனர்களுக்கு வழங்கப்படுவதாகவும் வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய அம்சம் சர்வெர் சார்ந்து வெளியிடப்படுவதால், ஸ்பேம் பாதுகாப்பு வசதி சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் வடிவில் வழங்கப்படுகிறது. 

    புதிய ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் -- அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் -- ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் -- எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.



    தனியுரிமை தரப்பில் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்ற விவரங்கள் கூகுளின் சப்போர்ட் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது. 

    இந்த ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

    அனைவருக்கும் வழங்கப்படும் போது இந்த அம்சம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனினும், நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்கள் பற்றி கவலை கொள்ளும் பட்சத்தில் இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.
    இந்தியாவின் நம்பத்தகுந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டு பற்றிய விவரங்களை சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. #Smartphone
    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகம் விரும்பும் பிராண்டாக ஒன்பிளஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோரில் 90 சதவிகிதம் பேர், ஒன்பிளஸ் பிராண்டு புத்தம் புதிய சிறப்பம்சங்களை வழங்குவதாகவும், பலர் ஒன்பிளஸ் பிராண்டு மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஸ்மார்ட்போன் வாங்க ஆன்லைன் முறையை தேர்வு செய்வோரின் முதல் தேர்வாக ப்ளிப்கார்ட் தளத்திற்கு வருவதாகவும், பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்குவோரின் முதல் தேர்வாக அமேசான் இருக்கிறது என ஐ.டி.சி. அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆஃப்லைன் சந்தையை பொருத்த வரை பிரீமியம் சாதனங்களை வாங்க ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.


    பல்வேறு சாதனங்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. பொருட்களை வாங்க சிறந்த மையமாக, ஆன்லைன் தளங்கள் பலரின் முதன்மை தேர்வாக மாறி வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர்.

    ஆன்லைனில் பொருட்களை வாங்குவது எளிமையானதாக இருப்பதாக ஷாப்பிங் செய்வோரில் 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகர்கள் வழங்கும் சலுகைகள் அடுத்தடுத்த காரணங்களாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

    ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கடந்து மாத தவணை முறை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். பல்வேறு வணிக நிறுவனங்கள் மாத தவணை முறையை எளிமையாக்கியதே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Smartphone
    உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming



    பப்ஜி மொபைல் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை மூன்று கோடியாக அதிகரித்துள்ளது என பப்ஜி உருவாக்கிய பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பப்ஜி விளையாடுவோரின் எண்ணிக்கை இது என்றாலும், இதில் சீனா மட்டும் சேர்க்கப்படவில்லை.

    இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பப்ஜி விளையாடுவோர் எண்ணக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மெமரி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் பப்ஜி மொபைல் விளையாட முடியும் என்பதால், இந்த கேம் அதிக பிரபலமாக முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.

    பப்ஜி மொபைல் கேமினை உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். தினசரி பப்ஜி மொபைல் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்த கேம் பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கிறது. சில சந்தைகளில் ஃபோர்ட்நைட் பயனர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றாலும், பப்ஜி மொபைல் கேம் இதனை பின்தள்ளி இருக்கிறது.



    குறிப்பாக ஃபோர்ட்நைட் கேமினை பதிவு செய்து விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருக்கிறது. ஃபோர்ட்நைட் மற்றும் பப்ஜி மொபைல் பிரபலமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் கேமாக பப்ஜி மொபைல் ஃபோர்ட்நைட் கேமினை பின்தள்ளியது. 

    சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஆசியா மற்றும் சீன சந்தைகளில் பப்ஜி மொபைல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பப்ஜி மொபைல் பிரபலமானதாக இருக்கும் நிலையில், கணினி மற்றும் கன்சோல்களில் இந்தியா போன்ற சந்தைகளில் பிரபலமாக இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பப்ஜி மொபைலில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகி்ன்றன. பப்ஜி மொபைல் பல்வேறு இயங்குதளங்களில் சீராக இயங்கும் படி மிக நேர்த்தியாக வழங்கப்படும் நிலையில், ஃபோர்ட்நைட் பல்வேறு சாதனங்களில் விளையாட ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்படவில்லை.
    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. #WhatsApp #Android



    வாட்ஸ்அப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி.) ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே பார்க்க வழி செய்யும். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப் பி.ஐ.பி. மோட் சப்போர்ட் செய்கிறது.

    கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர செயலியில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. 



    வாட்ஸ்அப் ஐபோன் செயலியில் சமீபத்தில் க்ரூப் காலிங் பட்டன் வழங்கப்பட்டது. இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் க்ரூப் ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முதலில் ஒருவரை அழைத்து, அதன்பின் மற்றவர்களை அழைப்பில் சேர்க்க வேண்டும்.

    புதிய வசதி வழங்கப்படும் போது, அழைக்க வேண்டியவர்களை அழைப்புக்கு முன்னதாக சேர்க்க முடியும். இதேபோன்று செயிலயில் டார்க் மோட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வசதி வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்த முடியும். குறிப்பாக OLED ரக ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிக பலன்கள் கிடைக்கும்.

    ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் டிராப் டவுன் நோட்டிஃபிகேஷன் பேனல் வழங்கப்பட்டது. இந்த வசதி நோட்டிஃபிகேஷன் டிராப் டவுன் பேனலில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோக்களின் பிரீவியூக்களை காண்பிக்கும்.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Micromax #smartphone



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட புது ஸ்மார்ட்போனினை டிசம்பர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை மைக்ரோமேக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருந்த நிலையில், இடையே ஸ்மார்ட்போன் சந்தையில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு பின் தீபாவளி சமயத்தில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அக்டோபர் மாதத்தில் அந்நிறுவனம் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன், பாரத் 4 தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.



    புது ஸ்மார்ட்போனின் டீசரை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பு முதன்முறையாக ஐபோன் X மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய ஒப்போ ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே நாட்ச் வழங்கப்படுகிறது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக இது அமைகிறது. புது ஸ்மார்ட்போனின் டீசருடன் "Does the powerful excite you?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாயந்த பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், மைக்ரோமேக்ஸ் புதுவித விளம்பர யுக்திகளை பார்க்கும் போது, அந்நிறுவனம் மெல்ல சந்தையில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. #AboveTheRest
    ×