என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97548"
- தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது.
- பக்தர்களுக்கு சமூக ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது. ஆனால் ஆடிஅமாவாசை தினத்தன்று தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடைபயணமாக செல்ல தொடங்கியுள்ளனர்.
உப்புத்துறை பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ.தூரம் கரடு முரடான மலைப்பாதையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர். இந்த வனப்பகுதி புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
இந்த மலைப்பகுதியில் 3 இடங்களில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் பக்தர்கள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்து, பிளாஸ்டிக் பைகள், தீப்பெட்டி, பத்தி, சூடம், நெய்விளக்கு போன்றவற்றை பறிமுதல் செய்துவிட்டு நடந்து செல்ல அனுமதிக்கின்றனர். வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசனம் செய்தால் போதும் என்ற மனநிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழியாக செல்லும் பக்தர்களின் நலனுக்காக சில சமூக ஆர்வலர்கள் 4 நாட்களுக்கு தொடர்ந்து அன்னதானமும், மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
- வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.
- பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மலை அடிவாரத்தில் இருந்து 5.5 கி.மீ. தூரத்தில் மேலே அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரியிலும் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டதால் முதல் நாளில் இருந்தே கணிசமான அளவில் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்கினர்.
ஆடி மாத பிரதோஷமான 26-ந்தேதி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். கார், வேன், பஸ்களில் வந்த பொதுமக்கள் மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர்.
நேற்று அதிகாலை 5 மணி முதலே பக்தர்களின் எண்ணிக்ககை அதிகரித்ததால் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் சதுரிகிரியில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் மிதமான மழை பெய்துகொண்டே இருந்ததால் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் முன்பு உள்ள ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் ஓடைகளில் கணிசமான நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக மலை மேல் இருந்த பக்தர்கள் கீழே இறங்கவும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. நடு வழியில் சிக்கியிருந்த பக்தர்கள் மழைக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் தவித்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திடீர் மழையால் சதுரகிரிக்கு செல்ல தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மழை நின்று வானிலை மாறியது. இதனைத் தொடர்நது ஆடி அமாவாசையான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அடிவார கேட் திறக்கப்பட்டதும் பக்தர்கள் சாரை, சாரையாக பக்தி கோஷம் முழங்க மலையேற தொடங்கினர். வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.
இன்று மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. அடிவாரமான தாணிப்பாறையில் மடங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கோவில் பகுதியில் குறைவானவர்களுக்கு மட்டுமே அன்னதானம் கிடைத்தது. மலைப்பாதையில் அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இன்று மாலை 3 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் சதுரகிரியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக ஆடி அமாவாசையான இன்று சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கடைசி நாளான நாளை மறுநாள் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி மாவாசையை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
- கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை மலைக்கு செல்ல பத்கர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நாள் முதல் கனிசமான அளவில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் திரண்டனர்.காலை 7 மணி முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஆடி அமாவாசை நாளை வருவதை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மலை ஏறினர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதித்த பின் மலைஏற அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேன், கார்களில் சதுரகிரி மலை அடிவாரத்திற்கு வந்து குவிந்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மடத்தின் சார்பில் மலை அடிவாரம் மற்றும் மலை மேல் கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு வரவும், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பவும் பஸ் வசதிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாதைகளில் மருத்தவ முகாம்கள், போலீஸ் பாதுகாப்பு போன்றவை போடப்பட்டிருந்தது.
- இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வருகிற 28-ந் தேதி வருகிறது.
- நேற்று முதல் 6 நாள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வருகிற 28-ந் தேதி வருகிறது.
இதையொட்டி நேற்று முதல் 6 நாள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து மலை ஏறிச்சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அடுத்து வரும் நாட்களில் பக்தர்களின் வருகை பெருமளவு அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு, தம்பிபட்டி விலக்கு, மாவுத்து உதயகிரிநாதர் கோவில், லிங்கம் கோவில், தாணிப்பாறை அடிவார பகுதிகளில் விருதுநகர் மாவட்ட போலீசார் 1,800 பேரும், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து கோவில் வரை மதுரை மாவட்ட போலீசார் 800 பேரும், வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல தீயணைப்புத்துறையினர் 140 பேர், சதுரகிரி கோவிலுக்கு செல்லும் நீரோடை பகுதிகள் மற்றும் மலைப்பாதை, கோவில் வளாகம் என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், டவுன் பஸ்களும் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 18 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
- ஆடி அமாவாசை அன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.
- மலைப்பாதைகளில் ஆற்று ஓடைகள் மற்றும் வேறு வழிகளில் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழும் மலையாக கருதப்படும் இங்கு அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் வழிபட்டால் சிறப்பு என கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி அமாவாசை அன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று முதல் 30-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று சதுரகிரிக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் இன்று மலைக்கு புறப்பட்டனர். காலை 7 மணிக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மலைப்பாதைகளில் ஆற்று ஓடைகள் மற்றும் வேறு வழிகளில் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்தனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். ஆடி அமாவாசைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் நாளை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
- சதுரகிரி கோவிலில் நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில், கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, நாளை (25-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும். எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்படும்.
சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளியூர் பஸ்கள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.
சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) திலீப்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன், வத்திராயிருப்பு வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.
- காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வன உயிரினச்சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலான 4 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வாகனங்களுக்கு தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகளும், தாணிப்பாறை விலக்கில் இருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வரை வாகனங்கள் வருவதற்கும் மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் என ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தாணிப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு பஸ்சை பயன்படுத்துபவர்களுக்கு என்று தாணிப்பாறையை அடுத்து கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றொரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரை அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
கோவிலுக்குச் செல்ல கோவில் நுழைவுச் சீட்டு ஏதும் வழங்கப்படாது. பக்தர்கள் யாத்திரை செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்துமிடங்கள், வாகனங்கள் முறையாக எந்தெந்த வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பஸ் நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மருத்துவ வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வனப்பகுதியில் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது,
பக்தர்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கோவிலிருந்து (தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து) மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கோவில் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொது மக்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் வனப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
- வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.
சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணிப்பாறை அடிவாரப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு உண்டான முன்னேற்பாடு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் தாணிப்பாறை வண்டிப்பண்ணை பஸ்நிறுத்தத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் குறுகலாக உள்ளதால் 2 பஸ்கள் செல்ல முடியாத சூழ்நிலையும் உள்ளது. பஸ் நிறுத்த சரியான வசதி செய்து தரப்படவில்லை. ஆடி அமாவாசைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சாலை வசதி, பஸ் நிறுத்த வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதப்படுத்தி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாளை வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
- சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் நாளை (14-ந்தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இன்று பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரத்தில் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புத்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பிரதோஷம், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:- சதுரகிரி கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் போதுமானதாக இல்லை. எனவே 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 3 நாட்கள் அனுமதி அளித்து ஒரு வாரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்குக்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சதுரகிரியில் ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 26-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்