என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தோசை"
- மசால் தோசை எனில் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.
- இன்று முட்டை சேர்த்து மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - அரை ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - கையளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து குழை வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .
இப்போது முட்டையை ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து , கல் சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை தோசை மேல் தோசை முழுவதும் பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுத்து , மேலே கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறினால் எத்தனை வைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இப்போது சூடான முட்டை மசாலா தோசை ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சோயா பீன்ஸில் அதிகளவு புரதங்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
- முளைக்கட்டிய சோயா பீன்ஸில் தோசையை செய்தால் அதிகளவு வைட்டமின் E கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் - 2 கப்
கேரட் - 1
முள்ளங்கி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
அரிசி மாவு - 4 ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கேரட், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.
சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான ஆரோக்கியமான தோசை ரெடி!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து இருக்கிறது.
- கருப்பு கொண்டக்கடலையில் வெள்ளை கொண்டக்கடலையை விட அதிகளவு சத்துக்கள் உள்ளன
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 250 மி.லி
பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
* கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
* மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
* பின்பு சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து மாவை சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.
* சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்
- கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
- கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.
- டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
- சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 1 கப்
கொள்ளு - கால் கப்
ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்ததை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக வார்த்து சுற்றி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 1 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.
- கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
- குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
தேவையான பொருட்கள் :
கருப்பு அரிசி - ஒரு கப்,
உளுந்து - கால் கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க விடவும். (அல்லது ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தலாம்).
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மாவை தோசைகளாக வார்த்து, சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
சட்னியுடன் பரிமாறவும்.
இப்போது சூப்பரான கருப்பு அரிசி தோசை ரெடி.
இந்த இட்லி, புட்டு போன்ற ஆரோக்கிய உணவுகளை தயார் செய்யலாம்.
- சென்னையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஸ்பைடர்மேன் தோசை பற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
- ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கும் அழகே தனி அழகாக உள்ளது.
சென்னை:
தோசை தெரியும். அது என்ன "ஸ்பைடர்மேன் தோசை"
சென்னையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஸ்பைடர்மேன் தோசை பற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள கோரா புட் ஸ்ட்ரீட் என்ற உணவகத்தில் இந்த ஸ்பைடர்மேன் தோசை தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதை ஒரு பெண்மணி தயாரித்து வழங்குகிறார். அவர் ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கும் அழகே தனி அழகாக உள்ளது.
தோசை மாவு ஊற்றிய பிறகு அதில் முட்டை, காய்கறிகள் சேர்த்து அவர் ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கிறார். நூல் நூலாக இருக்கும் அந்த தோசை கவர்ச்சியாக இருக்கிறது. பிறகு அதில் தக்காளி சாறு ஸ்மைலி வரைந்து கொடுக்கிறார். பார்ப்பதற்கு ஸ்பைடர்மேன் தோசை அழகாக இருப்பதால் சாப்பாட்டு பிரியர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஸ்பைடர்மேன் தோசை தயாரிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் இதுவரை சுமார் 2 கோடி பேரை கவர்ந்துள்ளது. சுமார் 1000 பேர் லைக் போட்டுள்ளனர்.
- ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும்.
தேவையான பொருள்கள் :
ஓட்ஸ் - 3 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தயிர் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸை போட்டு அதனுடன் சிறிது வெந்நீர், தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* கடைசியாக அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார்.
* இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக பயன்படுகிறது.
- சுரைக்காயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் விரைவில் குணமடையும்.
தேவையான பொருள்கள்
இட்லி அரிசி - 200 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சுரைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் வத்தல் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
சுரைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.
இப்போது சுவையான அடை ரெடி.
தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம்.
- எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.
- வெங்காய பொடி தோசை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவையான அளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.
பின்னர் அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சூப்பரான வெங்காய பொடி தோசை ரெடி!!!
- தோசையில் பல வகைகள் உள்ளன.
- இன்று கார தோசையை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - தேவையான அளவு.
அரைக்க
பழுத்த தக்காளி - மூன்று,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு பல் - 5,
வர மிளகாய் - 10,
உப்பு - தேவையான அளவிற்கு,
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி, பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை வார்த்து சுற்றி எண்ணெய் ஊற்றி அதன் மீது அரைத்த கார சட்னியை தடவி, இரண்டாக மடித்து திருப்பி போடவும். இருபுறமும் மொரறுமொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.
இந்த மதுரை ஸ்பெஷல் கார தோசை வேற லெவல்ல இருக்கும்.
- குழந்தைகள் இந்த தோசையை விரும்பி சாப்பிடும்.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
கேரட் - 1
பீன்ஸ் - 10
கோஸ் - சிறிதளவு
ஸ்வீட் கார்ன் - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* வரமிளகாய கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* பின்பு மிளகுத்தூள், கொரகொரப்பாக அரைத்த வரமிளகாய், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* அவ்வளவுதான் இப்போது மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்