search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • இன்று விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
    • இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம், குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.

    அந்த அற்புதமான திருநாள் இன்று (6.3.23)

    மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.

    ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.

    அந்த தெய்வக் குழந்தைக்கு 'தாட்சாயிணி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

    மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் அழைப்பார்கள். இன்று விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

    இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.

    ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.

    அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.

    விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், 'இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்' என்று கேட்டார்.

    சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.

    • நரசிம்மருடைய மந்திரங்களை சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும்.
    • இன்று நடராஜர் அபிஷேக தினம்.

    இன்று நரசிம்ம சதுர்த்தசி தினமாகும். புதன் பெருமாளை குறிப்பார். புதனுடைய ஆயில்யம் நட்சத்திரமும், சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த சிறப்பாக இன்றைய தினம் வருகிறது.

    இன்று விரதம் இருந்து நடராஜர், நரசிம்மரை வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று சிவன் கோவிலில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு நடராஜரை வழிபாடு செய்யலாம். மாலையில் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

    இன்று மாலை சூரியன் மறையும் நேரமும் இரவுத் தொடக்கமும் கலந்த வேளையில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். விரதம் இருந்து நரசிம்மருடைய படத்திற்கு துளசி மாலை அணிவித்து பானகம் நைவேத்தியமாக படைத்தல் முக்கியமானது. மாலையில் பூஜை செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அப்போது நரசிம்மருடைய மந்திரங்களை சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். இன்று நடராஜர் அபிஷேக தினம். வருடத்தில் 6 அபிஷேகங்கள் நடராஜருக்கு உண்டு.

    அதில் கடைசி அபிஷேகம் இன்று (மாசி மாதம் சுக்ல சதுர்த்தசி) நடைபெறுவதால் நடராஜமூர்த்தியைத் விரதம் இருந்து தரிசிப்பதும், "நடராஜ பத்து" முதலிய மந்திரங்களை பாராயணம் செய்வதும் அற்புதமான பலன்களை தரும்.

    • சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
    • நினைத்த காரியம் நிறைவேறும்.

    சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை கருத்தில் கொண்டு தீமையான விஷத்தை சிவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்மையை தரும் அருளை வழங்குவார்.

    பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் நீராடி குளித்து முடித்த பின்னர் திருநீர் இட்டு சிவநாமம் ஆன நமச்சிவாய என்ற வாசகத்தை ஓதி உங்களது வேண்டுதலை துவங்கலாம். இன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவினை தவிர்த்து விரதமிருந்து பிரதோஷத்தை முடித்த பின்னர் உணவை உட்கொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி பதினொரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.

    மேலும் ஒரு சனி பிரதோஷமான இன்று ஒருநாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் ஐந்து வருடங்கள் தினமும் நீங்கள் சிவன் கோயிலுக்கு சென்று வந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரதோஷம் வேண்டுதல் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாதெனில் : திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் , ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை நீங்கும், நோய்களால் அவதிப்பட்டு துன்புற்று இருக்கும் நபர்களுக்கு நோய்கள் நீங்கும், எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே தடங்கலுடன் இருக்கும் அனைவருக்கும் சகல காரியங்களிலும் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும்.

    மேலும் சனிபிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்களுக்கு சிவன் அருளும் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை அனைவருடனும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இதே தினத்தில் நந்தியையும் சேர்த்து வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும் செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் தானங்கள் எண்ணிலடங்கா பலனை கொடுக்கும் என்பதால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை இன்று செய்யலாம்.

    ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு.
    • விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.

    விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என பத்ம புராணம், கருட புராணம் உள்ளிட்ட புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி திதியானது வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை வருகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நான்காவது நாளை ஏகாதசி என்கிறோம். வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியன.

    மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் அனைத்து திதிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. மாசி மாதத்தில் வரும் ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று ஜெய ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் கடுமையான விரதத்தை கடைபிடிப்பது பலரின் பழக்கம். ஜெய ஏகாதசி, பூமி ஏகாதசி என்றும், பீஷ்ம ஏகாதசி என்றும் தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இது பீஷ்ம ஏகாதசி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.

    ஜெய ஏகாதசி விரதம் மிகவும் உயர்வான விரத நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபட்டால் கொடுமையான பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். இது சிவனை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவின் பத்தினியான மகாலட்சுமியை வணங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். ஏகாதசி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்று இரவு தூங்காமல், விஷ்ணுவின் நாமங்களை பாராயணம் செய்த படி இருக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு.

    சொல்ல வேண்டிய மந்திரம்

    "ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

    "ஓம் நமோ நாராயணா"

    இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத் தரும்

    • ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான்.
    • முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும்.

    ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு செய்யுங்கள் என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும் ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம்.

    அந்த அடிப்படையில் தை மாத பூச நட்சத்திரமன்று, முருகப்பெருமான் ஆலயத்துக்கு சென்று 'ஓம்' என்ற பிரணவத்தின் பொருளை போதித்து தகப்பன்சாமியை வழிபட்டால், சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தைப்பூச திருநாளில் "வேலை வணங்குவதே வேலை" எனக் கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். தைப்பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். பாதயாத்திரை செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    பன்னிரு கரத்தாலும் அவன் அள்ளிக் கொடுப்பதால்தான், அவன் 'வள்ளல்' என்று பெயர் பெறுகிறான். வேலால் சூரபத்மனை வென்று அவனை சேவலும், மயிலுமாக மாற்றிய பெருமை முருகப்பெருமானுக்கு உண்டு. பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தரப்பம் நெய்வேத்தியம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் கவலைகள் எல்லாம் நீங்கும்.

    • பைரவர் வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது.
    • சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    இல்லங்களில் திரிசூல வழிபாடாக போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடம் இருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தஜாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதை தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்திய பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. மேலும் பைரவருக்கு எட்டு வித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.

    அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்

    இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது. விரதம் இருந்து பைரவரை மனம் உருகி வழிபடுவர்களுக்கும், உரிய முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கும் இந்த சக்தி கிடைக்கும்.

    • கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம்.
    • வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும்.

    தெய்வங்களின் திருவருளைப் பெரிதும் பெறுவதற்கு அருந்துணை புரிவன விரதங்கள் ஆகும். முறையாக விரதங்களை மேற்கொண்டு ஒழுகினால் நிறைவான வாழ்வு பெறலாம். இவைகளை திதி, வார, நக்ஷத்திர விரதங்கள் என்பர்.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதம் தோறும் வரும் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

    • தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.
    • தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும்.

    நாளைய தினம் சஷ்டி விரதம் வருகிறது. மாதந்தோறும் வருகிற சஷ்டி நாளைய தினம் வருகிறது. சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், அல்லது முருகப் பெருமானைத் தரிசிக்க மட்டும் செய்பவர்கள், நாளைய தினம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப்பெருமானுக்கு வீட்டில் சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வீட்டின் கருத்துவேற்றுமைகள் நீங்கும். தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும். வழக்கு முதலான சிக்கல்கள் அனைத்தும் தீர்த்து அருளுவார் செந்தில்வேலன்.

    நாளைய தினத்தில், விரதம் இருந்து முருக வழிபாடு செய்யுங்கள். முருகக் கடவுளைத் தரிசியுங்கள். பன்மடங்கு பலன்களைப் பெற்று, சகல ஐஸ்வரியங்களுடன் இனிதே வாழ அருளுவார் கந்தக்கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நாளை விரதம் இருந்து மறக்காமல் முருகப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும்!

    நாளைய விரத நாளில், கந்தப் பெருமானை நினைத்து, காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலமாக வழங்குங்கள்.

    செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டி முருகப்பெருமானை அலங்கரியுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ அல்லது சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதிக்கோ சென்று தரிசியுங்கள். குறிப்பாக செவ்வாய் தோஷக்காரர்கள் மறக்காமல், முருக தரிசனம் செய்வது அவர்களை தோஷ நிலையில் இருந்து விடுவிக்கும் என்பது உறுதி என்கிறார்கள்.

    நாளை முருகப்பனை கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் நல்ல வேலை, வேலையில் பதவி, சம்பள உயர்வு ஆகியவை அடுத்தடுத்துக் கிடைக்கும். நிலம், பூமி தொடர்பான சிக்கல்களும், வழக்குப் பிரச்சினைகளும் தீர்வுக்கு வரும். நல்ல முடிவைத் தந்தருள்வார் முருகக்கடவுள்.

    • குருவாரம் என்று வியாழனைச் சொல்லுவார்கள்.
    • நீங்கள் நினைத்த காரியத்தை நடத்தித் தருவார் சாய்பாபா.

    பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும், சிக்கல்களெல்லாம் தீரவேண்டும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகவேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையில்லை? இவை அனைத்தையும் நீக்கியருள்வார் சாயிபாபா.

    'என்னைத் தேடி வந்துவிட்டீர்களென்றால், உங்கள் துக்கங்களையெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன். அந்த துக்கங்களெல்லாம் என் பொறுப்பு' என அருளியுள்ளார் சாய்பாபா. எனவே, முழுமனதுடன் எவரொருவர் சாயிபாபாவை நம்பி, அவரை சரணடைகிறாரோ, அவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துத் தருவார் பாபா. கஷ்டங்களையெல்லாம் போக்கிவிடுவார். துக்கங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து அருளுவார் ஷீர்டி சாயிபாபா.

    பாபாவை நம்பி, பாபாவைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டால், வியாழக்கிழமை என்றில்லை. எந்தநாளிலும் பாபாவை வழிபடலாம். குருவாரம் என்று வியாழனைச் சொல்லுவார்கள். ஆனால் எல்லாநாளும் குருவின் நாளே!

    பிரார்த்தனையை வியாழக்கிழமை அன்று தொடங்குவது சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும் எந்தநாளிலும் வழிபாட்டைத் தொடங்குவதில் தவறேதுமில்லை என்கிறார்கள் சாயி பக்தர்கள்.

    வீட்டில் பாபாவின் படம் அல்லது சிலையை நன்றாகச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். பாபாவுக்கு பழங்களை நைவேத்தியமாக படைக்கலாம். ஜாங்கிரி, லட்டு முதலான இனிப்புகளை வழங்கலாம். குருவுக்கு உகந்தது மஞ்சள் நிறம் என்பதால், லட்டு முதலான மஞ்சள் நிற இனிப்புகளை வைப்பது இன்னும் சிறப்பு.

    இதேபோல், பாபாவுக்கு மிகப்பிடித்த இன்னொரு இனிப்பு... கற்கண்டு. இனிப்பைக் கொண்டு பாபாவுக்குப் படையலிட்டு, நம் பிரார்த்தனையை வைக்கவேண்டும். பூஜித்து முடித்ததும் பழங்களையும் இனிப்புகளையும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் வழங்கவேண்டும்.

    படாடோபத்தை பாபா ஒருபோதும் விரும்புவதில்லை. மிக எளிமையான வழிபாட்டையே விரும்புகிறார் பாபா. பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நம்மால் என்ன முடியுமோ அதை நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை பிறருக்கு விநியோகிக்கலாம். அந்த அன்பையும் பக்தியையும் மட்டுமே பார்த்து, நம் துயரங்களைப் போக்க ஓடிவருகிறார் பாபா.

    இன்னொரு விஷயம்...

    பாபாவை விரதம் இருந்து வழிபடுவது மகத்துவம் வாய்ந்ததுதான். அதேசமயம், பக்தர்களோ... மக்களோ... பசியுடன் இருப்பதை ஷீர்டி நாயகன் விரும்பமாட்டார். வழக்கம் போல் உணவு எடுத்துக் கொள்ளலாம். விரதம் மேற்கொள்ளலாம்.

    காலையும் மாலையும் பாபாவை பூஜித்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும். அந்த நைவேத்திய உணவை, பழங்களை, இனிப்புகளை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு வழங்கவேண்டும். தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகள், பாபாவை ஒரு விரதம் போல், காலையும் மாலையும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், நீங்கள் நினைத்த காரியத்தை நடத்தித் தருவார் சாயிபாபா.

    பூஜை இருக்கும் நாளில், நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்கவேண்டும். பாபாவை நினைத்து, 'சாயிராம்' சொல்லி, அன்னதானம் செய்தால், அங்கே நமக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில் சுட்சுமமாக வந்து அருளுகிறார் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

    வியாழக்கிழமை என்றில்லாமல், பாபாவை நினைத்து, எந்தநாளில் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யுங்கள். நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். அப்போதெல்லாம் ஏதோவொரு ரூபத்தில் சூட்சுமமாக வந்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து அருளுவார். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வார்.

    • கிராமமக்கள் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதில்லை.
    • இந்த கிராமங்களில் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

    மேலூர் அருகே வெள்ளலூரை சுற்றி உள்ள 56 கிராமங்கள் வெள்ளலூர்நாடு என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் வல்லடிகாரர் கோவில் திருவிழா மாசி மாதம் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா பாரிவேட்டை நாளன்று தொடங்கியது. இதையொட்டி 15 நாட்களுக்கு வெள்ளலூர் நாட்டு 56 கிராம மக்கள் கடுமையான விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    அதன்படி மேற்கண்ட கிராமமக்கள் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. ஓட்டல்களில் தோசை, புரோட்டா மற்றும் அசைவ சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வீடுகள் கட்டுமான வேலைகள் செய்வதில்லை, மண் தோண்டுவது, மரம் வெட்டுவது போன்ற வேலைகளையும் அந்த கிராம மக்கள் செய்வதில்லை. இந்த கிராமங்களில் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதத்தை வெள்ளலூர் நாடு எனப்படும் 56 கிராம மக்களும் மேற்கொண்டுள்ளனர்.

    அதேபோல் வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் இந்த 56 கிராமங்களை சேர்ந்தவர்களும் விரதம் இருந்து வருகின்றனர்.

    • அமாவாசை முன்னோர் தர்ப்பணம், வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
    • யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும்.

    இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், மாசி மாத அமாவாசைக்கு தனி சிறப்பு உள்ளது. மாசி மாதமே சிறப்பானது தான். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரண்டு மடங்கு நன்மைகளை கொடுக்கக் கூடியது என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பிற மாதங்களில் அமாவாசை அன்று மட்டும்தான் முன்னோர் தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் மாசியில் பெளர்ணமி அன்று கூட முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது புண்ணியம் தரும். 

    இந்தாண்டில் மாசி மாத அமாவாசை பிப்ரவரி 20ஆம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 04.04 மணி முதல் பிப்ரவரி 20 ம் தேதி பிற்பகல் 01.47 மணி வரை அமாவாசை திதி இருக்கிறது. பின்னர் பிரதமை திதி, இதனால் பிப்ரவரி 20ஆம் தேதியை அமாவாசை தினம் கணக்கிட்டுள்ளார்கள். இந்த நாளில் தான் விரதம் இருப்பார்கள். 

    மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையான நீரில் நீராடி, விரதத்தை தொடங்கவேண்டும். வீட்டில் இல்லாமல் கோயில் ஆறு, குளங்களில் புனித நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். முன்னோருக்கு கோயில் குளம், ஆற்றங்கரை, கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபடவேண்டும். அனைத்து சடங்குகளையும் நிறைவு செய்த பின்னர் அந்தணர்களுக்கு அரிசி, காய்கறி, வஸ்திரம் தானமாக கொடுக்க வேண்டும்.

    பித்ருகளாக கருதப்படும் காகத்திற்கு உணவு கொடுத்த பின் தான் நாம் உணவு சாப்பிட வேண்டும். யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி முன்னோரை நினைந்து வழிபடவேண்டும். தொழில் செய்யும் நபர்கள் மாசி அமாவாசை நாளில் கண் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உரிய நேரத்தில் பொல்லாத கண் திருஷ்டி கழித்து உடைத்தால் நல்லது. 

    விரத பலன்கள் 

    பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற மாசி அமாவாசையில், விரதம் இருந்து முன்னோரை வழிபட்டால், அவர்களுடைய ஆன்மா நற்கதி அடையும். நமக்கு ஆசி வழங்கி வாழ்த்தும். குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள கிரக தோஷங்கள், திருமண தடை, உடல் நலக்கோளாறு விலகிவிடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி அடையும். 

    மாசி அமாவாசையான இன்று அன்னம் தானமாக கொடுப்பதால் ஆயிரமாயிராம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன்களை பெறலாம் என்பது விஷ்ணு புராணத்தில் உள்ளது.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது உகந்தது.

    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.

    (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோவிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

    சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

    ×