search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97736"

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    மீண்டும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 184 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரத்து 583 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.

    நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மாலை 5 மணிக்கு பிறகு 22 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    கோத்திக்கல்- மணல் திட்டு இடையே பரிசல் இயக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். மெயின் அருவியில் இன்று 55-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கர்நாடக- தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலத்தில் மழைக்குறைவு காரணமாக தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று 23 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த அளவே வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்திக்கல் பாறையில் இருந்து பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் அந்த பகுதிகளில் பரிசல் இயக்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து வருகின்றனர்.

    வழக்கமான பாதையான பரிசல் நிலையத்தில் இருந்து பரிசல்களை இயக்க இன்று அல்லது நாளை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மெயினருவில் தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி இன்னும் நடைபெறாததால் அங்கு தொடர்ந்து 52-வது நாளாக இன்றும் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மெயினருவியை தவிர மற்ற பகுதிகளான முதலை பண்ணை, காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிள் எண்ணை மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். #Hogenakkal #Cauvery


    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் இருந்தது. இன்று படிப்படியாக சரிந்து காலை 8 மணிக்கு 23 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணை களுக்கு நீர் வரத்து அதிகமாகியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    திறந்து விடப்பட்ட நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடையும். ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் இருந்தது. இன்று படிப்படியாக சரிந்து காலை 8 மணிக்கு 23 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இன்று 51-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery

    கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து இன்று காலை 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 26,590 கன அடியும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலையில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை இந்த நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கொட்டுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

    இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல்திட்டு வரை இன்று 3-வது நாளாக பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.

    முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்தது நேற்று 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    நேற்று மதியம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு சற்று அதிகரித்தது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முதல் ஒகேனக்கல்லில் கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் தொடர்ந்து 48-வது நாளாக மெயினருவில் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.  #Hogenakkal #Cauvery
    நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் பாறைகள் தெரிய தொடங்கின. #Hogenakkal #Cauvery
    பென்னாகரம்:

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து குறைந்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வந்தது.

    இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து சின்னாறு வழியாக மணல் திட்டு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டது.

    நீர்வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் இரவு அணையில் இருந்து உபரிநீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. கடந்த 2 வாரத்தில் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து 110 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Hogenakkal #Cauvery

    கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. ஒகேனக்கலுக்கு நேற்று 70 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்தது.
    ஒகேனக்கல்:

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இன்று 4 ஆயிரத்து 570 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி அணையில்இருந்து இன்று 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கனஅடி வீதமும் நேற்று 70 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்தது. தற்போது 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.

    நீர்வரத்து குறைந்தாலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்து உள்ளது. அங்கு குப்பை கூளங்களும் அதிக அளவில் தேங்கி உள்ளன. இவற்றை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ஒகேனக்கலுக்கு நேற்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 1 லட்சம் கன அடி ஆனது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த ஓரு மாதமாக கொட்டித்தீர்த்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேலாக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில மழை சற்று தணிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. நேற்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 1 லட்சம் கன அடி ஆனது.

    இருந்தாலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இன்று 43-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட உள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல்லில் காவிரி ஆற்று வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்து இருப்பதால் கிராம மக்கள் மலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லை அடுத்த கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் புளியமரத்துக் கொம்பு கொண்டலாம் கொட்டாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு மீன்பிடி மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்குள்ள குடிசைகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் 40 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி அருகில் உள்ள மலை மீது ஏறி தங்கி உள்ளனர்.
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Hogenakkal #Cauvery
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மழை நீரும் சேர்ந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்-வேன், பஸ்களில் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சும்புருட்டு, புளியமரத்து கொம்பு ஆகிய கிராமங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் தங்கள் படகுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதால் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்து பொதுமக்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஒகேனக்கல்லில் இருந்து கரைபுரண்டு ஒடும் வெள்ள நீர் ஊட்டமலை வழியாக பென்னாகரம், நாகமரை, செல்லமுடி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, பூச்சியூர், குருகலையனூர் ஆகிய ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்கிறது.

    அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மற்றும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலையிலும் இன்று வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும் நிலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் பென்னாகரத்தை அடுத்த நாகமரை, நெருப்பூர், சித்திரம்பட்டி பகுதிகளில் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் சாலைகளில் தேங்கி உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் நாகமரை- பண்ணவாடி செல்லும் படகு போக்குவத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நாகமரையில் இருந்து பண்ணவாடிக்கு பரிசல் இயக்குவது மிகவும் ஆபத்தான பயணம்.

    மேலும் பரிசல் மற்றும் படகில் செல்லும்போது லைப்ஜாக்கெட் எதுவும் கிடையாது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உள்ளதால் நாகமரை- பண்ணவாடி பரிசல் போக்குவத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்து உள்ளது.

    நாகமரையில் இருந்து கொளத்தூருக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் மேச்சேரி வந்து பின்பு மேட்டூர் வழியாக கொளத்தூர் சுற்றி செல்கின்றனர். இவ்வாறு சுற்றி செல்வதால் நேரம் விரையம் ஆகிறது.

    எனவே நாகமரை- பண்ணவாடிக்கு செல்ல மாற்று வழிபாதை அல்லது மாற்று போக்குவரத்து வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று 120.05 அடியாக இருந்தது.

    நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக கடந்த 11-ந் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் 8-வது நாளாக இன்றும் 120 அடியை தாண்டியே மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் போக்கி வழியாக ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அதன் கரையோரம் உள்ள நாகராஜன் என்பவரது வீடு நேற்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் அங்குள்ள பெரியார் நகர், அண்ணா நகர் பகுதி வீடுகளில் வசிக்கும் மக்களை காலி செய்யுமாறு வருவாய் துறையினர் அறிவுறுத்தினர். அதில் பலர் காலி செய்ய மறுத்ததால் 11 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேட்டூரிலிருந்து எடப்பாடிக்கு செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 4-வது நாளாக அந்த சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது. தேவூர் அருகே உள்ள காவேரி கரையோர கிராமமான காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள அண்ணமார் கோவில் வளாகத்திலும் நீர் புகுந்தது. அந்த கோவிலையொட்டி உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 3-வது நாளாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 400 ஏக்கர் வாழை உள்பட பல்வேறு பயிர்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதனால் கல்வடங்கம், வற்றாம்பாளையம், கொடாரபாளையம், வெள்ளாளபாளையம் உள்பட பல பகுதிகளுக்கு தேவூர் வழியாக 8 கி.மீ. சுற்றி செல்கின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான குமாரபாளையம், பள்ளி பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. காவிரி மற்றும் பவானி ஆறுகள் பவானி கூடுதுறையில் கலக்கிறது.

    இதன் காரணமாக தண்ணீர் அழுத்தம் ஏற்பட்டு கோம்பு பள்ளத்தின் வழியாக தண்ணீர் குமாரபாளையம் நகருக்குள் புகுந்தது. இதனால் பள்ளி பாளையம் ரோடு, அப்பன் பங்களா, பெருமாபாளையம் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில் உள்ள குமாரவேல், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். இதற்கிடையே வீட்டின் கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 86 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    குடகு மாவட்டத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 7 மணிக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதன் பிறகு நீர்வரத்து 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இன்று காலை தொடர்ந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை தொட்டபடி காவிரி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஒகேனக்கல், ஊட்டமலை, நாகர்கோவில், நாடார் கொட்டாய் மற்றும் நீர்அளவீடு செய்யப்படும் பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் நீர்வரத்தை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆறு 45 கிலோ மீட்டர் தூரம் காப்புக்காடுகளுக்கு இடையே ஓடுவதால் இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ளப்பெருக்கால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஒகேனக்கல், நாகர்கோவில் பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 31 வீடுகள் ஆற்று புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவற்றில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 9 வீடுகளை தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றில் வசித்த 46 பேர் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லுக்கு மேலே ஆலம்பாடி பகுதியில் அஞ்செட்டிக்கு செல்லும் சாலையில் பிலிகுண்டுலு முன்பாக சாலையில் தண்ணீர் நிரம்பி செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் அந்த வழியாக யாரும் செல்லமுடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹேரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பி விட்டன. ஏற்கனவே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்து கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 2½ லட்சம் கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கபினி அணையில் இருந்து 55 ஆயிரம் கன அடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 988 கன அடி வீதமும், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாகவும், மாலை 5 மணிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் இருந்த 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல ஊட்டமலையில் இருந்து ஒகேனக்கல் வரை காவிரி கரையோர பகுதியில் வசித்த மக்கள் ஒகேனக்கல்லில் உள்ள பெரியால் பில்டிங்கில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று மாலை முதல் தங்கி உள்ள 55 பேருக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக்காண இன்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ்களில் ஒகேனக்கலுக்கு வந்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் மடம் சோதனைச்சாவடி மற்றும் கண்ணாடி குண்டு ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

    ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. 2005-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. 2013-ம் அண்டு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் (2018ல்) 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    கடந்த 1961-ம் ஆண்டு ஒகேனக்கலுக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது தான் அதிகபட்ச அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. #Hogenakkal #Cauvery

    ×