search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று பா.ஜ.க.வினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். #SabarimalaVerdict #BJPRally
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதற்கிடையில், துலாம் மாத சிறப்பு பூஜைக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.



    இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

    திருவனந்தபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரும் பங்கேற்றனர்.

    கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, பாரதிய தர்ம சேனா தலைவர் துஷார் வேலப்பள்ளி உள்ளிட்டோர் இந்த பேரணியில் முன்வரிசையில் அணிவகுத்து சென்றனர்.

    பேரணியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீதரன் பிள்ளை, இவ்விவகாரத்தில் கேரள மாநில அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணாவிட்டால் எங்கள் போராட்டம் வேறு வடிவத்தில் தலைதூக்கும் என எச்சரித்துள்ளார்.  #SabarimalaVerdict #BJPRally
    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பாதுகாப்பான முறையில் இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
    தேவதானப்பட்டி:

    கேரளாவில் இறைச்சிக்காக மாடுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள மாட்டு சந்தைகளில் குவியும் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு மாடுகளை வாங்கி வேன்கள் மற்றும் லாரிகளில் கொண்டு செல்வார்கள்.

    மாநில எல்லையில் விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் இதுபோன்று மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

    மாடுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, அதற்கான சான்றுகள், அதிக அளவிலான மாடுகளை அடைத்து வைத்து செல்லக்கூடாது. லாரிகளில் மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கெடுபிடிகளை சுட்டிகாட்டி மாடுகள் கடத்துவதை தடுத்து வந்தனர்.

    இதனால் தற்போது நூதன முறையில் மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது. மாடுகள் கொண்டு செல்லப்படும் லாரி முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது உள்ளே வேறு ஏதேனும் சரக்குகள் உள்ளது என்றுதான் எண்ணத்தோன்றும்.

    இது குறித்து லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்லும்போது அடிக்கடி அதனை மறித்து பறிமுதல் செய்து விடுகின்றனர்.

    இதனால் வியாபாரிகளுக்கு நாங்கள் பதில்சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். தற்போது கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க லாரி முழுவதும் கவர் செய்யப்பட்டு கொண்டு செல்கிறோம். இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சோதனைச்சாவடியில் மட்டும் மாடுகளை காட்டினால் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    நவரத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி கோவில் சிலைகள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்தது. #Navratri
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நேற்று இரவில் பத்மநாபபுரம் வந்தடைந்தது. இதேபோல குமார கோவில் முருகன் சிலையும் பத்மநாபபுரம் வந்து சேர்ந்தது.

    இன்று காலை சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது.

    முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் முருகன் பூப்பல்லக்கிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் எழுந்தருளினர். தொடர்ந்து சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் வாணவேடிக்கைகள், செண்டை மேளம் முழங்க 3 சிலைகளும் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டன.

    சாமி சிலைகளுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.

    அரண்மனை கண்காணிப்பாளர் அஜிதகுமார், தொல்பொருள் இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், ஆகியோரிடம் கொடுத்தனர்.

    அவர்கள் உடை வாளை குமரி மாவட்ட தேவசம்போர்டு ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் பணியாளர் மோகனகுமாரிடம் கொடுத்தார்.

    மோகனகுமார் உடைவாளை சாமி சிலைகள் ஊர்வலத்தின் முன்பு ஏந்தியபடி புறப்பட்டுச் சென்றார். சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பெண்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    தக்கலையில் புறப்பட்ட ஊர்வலம் கேரளபுரம், அழகியமண்டபம் வழியாக செல்லும் சாமி சிலைகள் இன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்குகின்றன. நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு செல்கின்றன.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்த விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கேரள மாநிலம் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. சுரேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு மறுத்துவிட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த முதல்மந்திரி பினராயி விஜயன், கோவிலுக்கு பெண்கள் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.



    இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொட்டையம் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெருந்திரளான பெண்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யுமாறு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து பேரணி நடத்தினர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
    தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD
    புதுடெல்லி:

    அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்பதால், தமிழகம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கட்டப்பது. இதையடுத்து தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் இருப்பதால், நாளை அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD
    தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #RedAlert
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



    இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.  #TNRain #RedAlert

    சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள நாயர் சேவை சமூகம் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabrimalaVerdict #NairServiceSociety
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே செல்ல அனுமதி இருந்தது. இந்த முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்டோபர் 28-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு பலதரப்பிலும் வரவேற்பை பெற்றபோதும், சில இந்து அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தன.

    இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை நிராகரித்த முதல்மந்திரி பினராயி விஜயன், சபரிமலை கோவிலில் பெண்களுக்கான வசதிகள் செய்துகொடுக்க உத்தரவிட்டார். அதேபோல், சபரிமலை கோவிலை பராமரித்துவரும் தேவசம்போர்டும் தீர்ப்பை எதிர்க்க மறுப்பு தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், கேரளாவின் செல்வாக்கு பெற்ற நாயர் சேவை சமூகம் சார்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய நாயர் சேவை சமூகத்தின் பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர், தீர்ப்பை எதிர்த்து தேவசம்போர்டு மறுஆய்வு மனு அளிக்காது இருப்பது விரக்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict #NairServiceSociety
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கும், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRain #KeralaRain
    சென்னை:

    கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் பலமாக கொட்டி நாடு முழுவதும் பரவலாக பெய்தது.

    தற்போது பருவ மழையானது கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், வடக்கு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நின்று போனது. அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகம், மற்றும் அரபிக்கடல் பகுதியிலும் பருவ மழை முடிவுக்கு வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது

    இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் இன்று காலை முதல் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain
    கேரளாவில் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    இலங்கை கடற்குதி அருகேயுள்ள அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதன் எதிரொலியாக கேரளாவின் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தகுந்த காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை தள்ளி வைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
    கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என தோன்றவில்லை என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் நிலையில், 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து முதல்மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தேவசம் போர்டு தலைவர், பெண்களின் உபயோகத்துக்காக நிலக்கல் பகுதியில் கழிவறைகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். குறைந்த அளவே நேரம் இருப்பதால், அதிகமான வசதிகளை இப்போது செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என தாம் நினைக்கவில்லை எனவும், அக்டோபர் 3-ம் தேதி மறுஆய்வு மனு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரள அணி கொல்கத்தாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கியஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

    நாளை பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. #ISL2018 #ATKvKBFC
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரளாவும், கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் தற்போது ஆட்டம் துவங்கி இருக்கும் நிலையில், இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். #ISL2018 #ATKvKBFC
    ×