search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள்"

    மழைவிட்டு 4 நாட்களாகியும் நீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. கடந்த 10-ந் தேதி காலை மழை விட்டது. நேற்றுடன் 4 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை.

    மாவட்டத்தில் பெருபாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நட்ட சம்பா நெற்பயிர்கள், நடவு செய்ய வேண்டிய பாய் நாற்றுகள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால், பட்டமங்கலம் வாய்க்கால்கள் தூர் வாராததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே வடிகால்களை தற்காலிகமாக தூர்வாரி மழைநீரை வடிகட்ட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெற்பயிர்களை 2-ம் போகமாக சாகுபடி செய்தனர்.

    அப்படி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வைகை அணையிலிருந்து வராத காரணத்தால் தற்போது நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    எனவே தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை பேரணை உதவி செயற்பொறியாளர் தளபதி கூறுகையில் அரசு தரப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாட்களில் விவசாய பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    தேவதானப்பட்டி பகுதியில் சாரல் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தலை சாய்ந்துள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் யூனியனுக்குட்பட்ட தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் இரு போக நெல் சாகுபடி நடைபெறும்.

    ஆனால் பருவ மழை பொய்த்துப் போனதால் முறை தவறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2-ம் போக அறுவடை பணி தொடங்கும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தரையில் சாய்ந்து உள்ளது.

    இதனால் நெல் மணிகள் மண்ணில் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சிரமப்பட்டு நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மழை காரணமாக நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து வருவது வேதனையாக உள்ளது என்றனர்.

    ×