search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா"

    உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், விழா நிகழ்ச்சியில் உ.பி. தலைவர்கள் வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
    உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் களம் இறங்கியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பக்க பலமாக உள்ளார்.

    அதேவேளையில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார்.

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் தினத்தன்று, அகிலேஷ் யாதவ், முகமது அலி ஜின்னாவை பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்திய தலைவர்களான காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் தலைவர்களோடு இணைத்து ஜின்னாவை புகழ்ந்ததாக அகிலேஷ் யாதவ் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

    தற்போது பா.ஜனதா கட்சி இதை கையில் எடுத்துள்ளது. எங்கு சென்றாலும் அகிலேஷ் யாதவ் ஜின்னா குறித்து பேசியதை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்கிறது.

    நேற்று அசாம்காரில் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அமித் ஷா சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் JAM அல்லது யோகி ஆதித்யநாத்தின் JAM ஆகிய இரண்டில் எதை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தார்.

    மேலும், அகிலேஷ் யாதவ் சொல்லும் JAM: M (முகமது அலி ஜின்னா), A- அசாம் கான் (சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்), M- (முக்தார்- ஜெயில் மாஃபியா கும்பல் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. முக்தார் அன்சாரி) என அமித் ஷா விளக்கம் அளித்தார்.

    அத்துடன், யோகி ஆதித்ய நாத்தின் JAM- J (ஜன் தன் வங்கி கணக்கு), A (ஆதார் கார்டு), M (Mobile- ஊழலை வேரோடு அழிக்க ஒவ்வொருவருக்கும் செல்போன்) என விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையல் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பா.ஜனதா JAM-க்கு விளக்கம் அளித்துள்ளார்.

    பா.ஜனதா JAM-ல் J (jhooth) பொய், A (ahankaar)- ஆணவம் M (mehengai)- பணவீக்கம் என்பதுதான். தனது சொந்த ஜாம் மீது பா.ஜனதா பதில் அளிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இமாச்சல பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மூன்று தொதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
    இந்தியா முழுவதும் காலியாக இருந்த 3 பாராளுமன்ற தொகுதிகள், 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இமாச்சல பிரதேசத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளுங்கட்சியான பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மூன்று சட்டசபை தொகுதிகள், ஒரு பாராளுமன்ற தொகுதியில் முன்னணி பெற்று வந்தது.

    ஆர்கி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் முன்னணி பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். அதேபோல் ஃபத்தேஹ்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் முன்னணி பெற்றுள்ளார்.

    ஜுப்பால்-கோதை  தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 27 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னணி உள்ளார். இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது. அதேபோல் மந்தி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி முகத்தில் உள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது 68 இடங்களில் பா.ஜனதா 43 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்தன. தற்போது இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சறுக்கல் எனக் கருதப்படுகிறது.
    மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இம்பால்:

    நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

    நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.
    பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த சித்து அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பிரதேச பா.ஜனதா மகளிர் அணி தலைவி இந்து கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
    சிம்லா:

    பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்கு பெயர் போனவர். கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    நேற்று முன்தினம் இந்தூரில் பேட்டி அளித்த சித்து, ‘ திருமணம் முடிந்த மணப்பெண் மற்றவர்கள் தன்னை உற்றுநோக்க வேண்டும் என்பதற்காக கை வளையலை குலுக்கி சைகை செய்வார். இதேபோல் பிரதமர் மோடியும் மற்றவர்கள் தன்னை கவனிக்கும்படி பேசி வருகிறார்’ என்றார்.

    சித்துவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த சித்து அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பிரதேச பா.ஜனதா மகளிர் அணி தலைவி இந்து கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ இந்திய பெண்கள் தற்போது எல்லா துறைகளிலும் கால்பதித்து சாதித்து வருகின்றனர். ஆனால் சித்துவோ இதுபற்றி கவனத்தில் கொள்ளாமல் பெண்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளார். இந்த கருத்து தொடர்பாக சித்துவும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். 
    ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP
    கொல்கத்தா:

    ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா. தற்போது இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் இங்கு வந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது.

    அதில், “தி கிரேட் காளி அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார். அவரது பிரபலத்தை பயன்படுத்தி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இந்தியாவில் யார் ஒரு பொருத்தமான எம்.பி.யாக இருக்க முடியும் என்பது பற்றி முழுமையாக தெரியாத ஒருவர் இந்திய வாக்காளர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துதற்கு அனுமதிக்க கூடாது” என கூறப்பட்டுள்ளது.

    இந்த புகார், மேற்கு வங்காள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 26-ந் தேதி, ஜாதவ்பூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுடன் தி கிரேட் காளியும் சேர்ந்து பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தி கிரேட் காளி அளித்த பேட்டியில், “என்னை எப்போது அழைத்தாலும் நான் வருவேன். அமெரிக்காவில் இருந்து என் தம்பிக்கு ஆதரவு தர வந்துள்ளேன். உங்கள் ஓட்டுகளை வீணடிக்காதீர்கள். அனுபம், படித்தவர். உங்கள் கஷ்டங்கள் தெரிந்தவர். மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்” என குறிப்பிட்டுள்ளார்.  #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP 
    பா.ஜனதாவின் அத்துமீறல்களை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது, மக்களை ஏமாற்றி விட்டது என்று ப.சிதம்பரம் கூறினார். #PChidambaram #ElectionCommission #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

    எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

    பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்?

    எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், “ஒவ்வொரு இந்தியனும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறானா?” என்பதுதான். என்னைக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு இந்தியரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைவரும் அச்சத்துடனே இருக்கிறார்கள்.

    பா.ஜனதா நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. பா.ஜனதா அல்லாத அரசே மத்தியில் அமையும். காங்கிரசும், அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் நிறைய தொகுதிகளை கைப்பற்றினால், 3-வது தடவையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நிலையான அரசு அமைய காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எல்லா மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்று சேரும்.

    இந்தியாவில், தேர்தல் சமயத்தில், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இதற்கு முன்பு இப்படி பட்டவர்த்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதே இல்லை. நாட்டில் 545 தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்தான் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறதா? எந்த பா.ஜனதா வேட்பாளரிடமும் கணக்கில் காட்டாத பணம் இல்லையா?

    துப்பு கிடைத்ததாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்குமா? பா.ஜனதா வேட்பாளர்கள் பற்றி துப்பு கிடைக்காதா? பிரதமர் மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இப்பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு யார் செலவிடுகிறார்கள்? அதற்கு என்ன கணக்கு?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.  #PChidambaram #ElectionCommission #Congress
    பா.ஜனதா சார்பில் போட்டியிட மகனுக்கு ‘சீட்’ கிடைத்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய மந்திரி பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார். #BirenderSingh #Cabinet #RajyaSabha
    புதுடெல்லி:

    மத்திய உருக்குத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பிரேந்தர் சிங். அரியானாவை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மத்திய மந்திரி சபையில் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது.

    பின்னர் இவர் 2016-ம் ஆண்டு அரியானாவில் இருந்து பா.ஜனதா சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த மந்திரி சபை மாற்றத்தின் போது, இவருக்கு உருக்குத்துறை ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரேந்தர் சிங்கின் மகனான பிரிஜேந்திர சிங்குக்கு அரியானாவின் ஹிசார் தொகுதியை பா.ஜனதா ஒதுக்கி உள்ளது. இது பிரேந்தர் சிங்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எனினும் ஒரே குடும்பத்தில் தனக்கும், தனது மகனுக்கும் பதவி கிடைப்பதன் மூலம் வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும் என எண்ணிய அவர், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இது தொடர்பாக கட்சித்தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்கள் பா.ஜனதாவின் கொள்கை, வாரிசு அரசியலுக்கு எதிரானது. தற்போது எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருப்பதால் எனது எம்.பி. பதவியையும், மந்திரி பதவியையும் நான் ராஜினாமா செய்வதே சிறந்ததாக இருக் கும். எனவே இது தொடர்பாக கட்சியின் முடிவுக்கே விட்டுவிடும் வகையில் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். நான் எனது பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே பிரேந்தர் சிங்கின் மகனுடன் அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேலும் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது. இந்த பட்டியலை கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
    எனது குடும்பத்தில் இருந்த அரசியல் மாறுபாட்டை சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் தந்திரமாக எனது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் சதி செய்துள்ளனர் என பா.ஜனதா எம்.எல்.சி. தெரிவித்துள்ளார். #JaivirSingh #BJP
    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சி எம்.எல்.சி.யாக இருப்பவர் ஜெய்வீர் சிங். இவரது மகன் அரவிந்த்குமார் சிங். இவரை கவுதம புத்தர் நகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. பா.ஜனதா இன்னும் அங்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதுபற்றி ஜெய்வீர்சிங் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி ராஜ்குமார் சவுகான், 3 மகன்கள், மருமகன் என குடும்பமே பா.ஜனதாவுக்கு ஆதரவானவர்கள். ஆனால் எனது மகன் அரவிந்த்குமார் சிங் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதில் இருந்து அவரது கொள்கை வேறுவிதமாக உள்ளது. திருமணத்துக்கு பின் தனியாக வசித்துவருகிறார்.

    நான் 2017-ல் பா.ஜனதாவில் சேர்ந்தபோதே அரவிந்த் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக எங்களது பல்கலைக்கழகத்தில் வேந்தர் பதவியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டார். அவருடனான சமூக, அரசியல் உறவுகள் எல்லாம் முடிந்துவிட்டது. எனது குடும்பத்தில் இருந்த அரசியல் மாறுபாட்டை சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் தந்திரமாக எனது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் சதி செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இன்று நாங்கள் பா.ஜனதா அணியில் இருக்கிறோம், நாளை நீடிப்போமா என்று சொல்ல முடியாது என சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் பாராளுமன்ற மக்களவையில் கூறியுள்ளார். #ShivSena #AnandraoAdsul #BJP
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்தது. அதில், சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் பேசியதாவது:-

    மத்திய அரசு, பாராட்டத்தக்க பணிகளை செய்தபோதிலும், சில தவறுகளையும் செய்துள்ளது. பணமதிப்பு நீக்கம், பொருளாதாரத்துக்கு பலன் அளித்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அன்றாட தேவையை பூர்த்தி செய்ய யாரிடமும் பணம் இல்லை.

    வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே ஆகியோர் தலைமை பொறுப்பில் இருந்தபோது, சிவசேனா மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, பா.ஜனதா எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இன்று நாங்கள் பா.ஜனதா அணியில் இருக்கிறோம். நாளை நீடிப்போமா என்று சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ShivSena #AnandraoAdsul #BJP
    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அமித் ஷா கூறினார். #AmitShah #ParliamentElection
    அலிகார்:

    உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், வாக்குச்சாவடி பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் எத்தனையோ ஊழல் நடந்துள்ளது. மக்கள் பணம் சுரண்டப்படுகிறது. ஆனால், போலீஸ் அதிகாரியை பாதுகாக்க மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டது வேடிக்கையாக உள்ளது. பா.ஜனதாவினரை திரிணாமுல் காங்கிரசார் கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் வன்முறை மூலம் பதில் சொல்லப் போவதில்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘தாமரை’ பொத்தானை அழுத்துவதன் மூலம் பதில் அளிப்போம்.

    உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதை மம்தா பானர்ஜி தடுக்கிறார். பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு சிறிய மைதானத்தையே ஒதுக்குகிறார். மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறப்போகிறது. அதனால்தான், மம்தா இப்படியெல்லாம் செய்கிறார்.

    உத்தரபிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்திருக்கலாம். ராகுல் காந்தியையும் இழுக்கக்கூடும். ஆனால், இதையெல்லாம் மீறி, உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னபோது, அதை அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்தார். ஆனால், அதைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 2017-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, 325 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜனதா வேறுபட்டது. இங்கு வாக்குச்சாவடி நிர்வாகிகளால்தான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. எந்த தலைவராலும் அல்ல. இந்த தேர்தல், மோடிக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.

    பிரதமர் மோடி, இந்தியாவின் பெயரை உலக அரங்கில் நிலை நிறுத்தி உள்ளார். ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவ வீரர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். அதற்கு 10 நாட்களில் துல்லிய தாக்குதல் மூலம் மோடி அரசு பதிலடி கொடுத்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே இப்படி செய்து வந்தன. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பா.ஜனதா விரும்புகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார். #AmitShah #ParliamentElection 
    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #SitaramYechury #TMC #BJP
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எந்த மாநிலத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதை நிர்வாகத்துக்கு எதிரானதாகவோ, மாநில ஆட்சி அதிகாரத்துக்கு எதிரானதாகவோ கருதமுடியாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. தாமாகவே விசாரணை நடவடிக்கையை தொடங்கினால் தான் ஆட்சேபனைக்குரியது.

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளையும் சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். பா.ஜனதா ஏன் விசாரணைக்காக 5 வருடங்கள் காத்திருந்தது?

    இவ்வாறு அவர் கூறினார். #SitaramYechury #TMC #BJP 
    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு, வருகிற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். #RamVilasPaswan #GeneralCategoryQuota
    புதுடெல்லி:

    பொதுப்பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து சமீபத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவினர் வரவேற்ற அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நீண்டகால வளர்ச்சி திட்ட கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்படுத்தி வருகிறது. நாட்டில் நிலையான ஆட்சிக்கு திறமையான பிரதமரையும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில தேர்தல்களில் ஆட்சியை பாரதீய ஜனதா இழந்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி பாடம் கற்றுக்கொண்டு உள்ளது. இதன்அடிப்படையில் மக்கள் செல்வாக்கை பெறும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சி எடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிரதமர் யார்? என்பதை அறிவிக்க முடியவில்லை. பிரதமர் பதவி கனவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உள்ளனர்.

    அடுத்த தேர்தலில் நிரந்தரமான ஆட்சி மற்றும் திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். அதற்கு தகுதியானவர் பிரதமர் மோடி தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

    இந்த சட்டத்தின் மூலம் வருகிற தேர்தலில் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தினால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் 10 சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RamVilasPaswan #GeneralCategoryQuota
    ×