search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் விழா நடக்கிறது.
    • ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில். இத்தகைய சிறப்புபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27-ந்தேதி காலை கும்பாபிஷேகம் விழா நடக்கிறது.

    முன்னதாக நேற்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு பூர்ணாகுதி நிகழச்சி நடைபெற்றது. இன்று, நாளை காலை இரண்டாம் காலமும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 26-ந்தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27-ந்தேதி காலை 8.5 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் 11.50 மணிக்கு ஸ்வர் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 9 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடக்கிறது.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடை பெற்றவுள்ளதையொட்டி மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வலியுறுத்தி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    பிரசித்திப்பெற்ற சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேவார திருப்பதிகம் அருளிய திருஞானசம்பந்தர் அவதரித்த தலம், காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கோயில் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு களிலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகைபுரிய உள்ளதாக தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்கள் சந்திபின்போது தெரிவித்தார்.

    இதனிடையே சீர்காழி ெரயில் நிலையத்தில் பல ெரயில்கள் நின்று செல்வதில்லை என வணிகர்கள், ெரயில் யணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சீர்காழி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரன், செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் மத்திய ரெயில்வே தலைவர், தெற்கு ெரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், இயக்கவியல் மேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் விரைவு ெரயிலுக்கு சீர்காழி ெரயில் நிலையத்தில் நின்று செல்லவும், மயிலாடுதுறை-விழுப்புரம் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பல லட்சம் பக்தர்கள் பயனடைவர் என அதில் கூறியுள்ளனர்.

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோ ட்டை அருகே ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த பெரியகோடகுடி கிராமத்தில் மிகப்பழமை யான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் தர்ம முனீஸ்வரர், ஆகாச வீரன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 5:30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப சபா சுவாமிக்கு, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, ஆசிர்வாதம் தீபாரணை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், திருப்பட்டு சாற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 ஆயிர த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது.
    • இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 8 உப கோபுரங்களுடனும், 3 தளங்களுடனும், அஷாடங்க திவ்ய விமானம் அமையப்பெற்ற இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. இரவு பூர்ணாகுதி நிகழ்ச்சியும், நாளை காலை இரண்டாம் காலமும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் காலை யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 26-ம் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27-ந்தேதி காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் இரவு பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது.
    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றது.

    அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதும் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடியதுமான பல சிறப்புகள் பெற்றதாக விளங்குகிறது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி காலை 7 மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும்.

    இந்த கோவிலில் மந்திர பீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் தேதி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • காளையார்கோவில் அருகே, 27-ந் தேதி கொங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஆசிரமம் கிராமத்தில் கொங்கேசுவரர் கோவில் உள்ளது.

    பிரசித்திபெற்ற 300 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 2 ஆயிரம் பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்பது வழக்கம்.

    கொங்கேசுவரர், 7 முக காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

    இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது. 30ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், கொங்கேசுவரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • இந்த கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.
    • குழந்தை வேலாயுசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துதல் மற்றும் புதிய தேர் செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.

    பக்தர்களும் நாள்தோறும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோ விலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11 வருடங்கள் ஆகி விட்டதால் கும்பா பிஷேக விழா நடத்தவும், புதிய தேர் செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் குருந்தமலை குழந்தை வேலாயுசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துதல் மற்றும் புதிய தேர் செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. செயல் அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், கோவை சுகுணா குழும நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

    ஆலோசனை கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.மேலும், புதிய தேர் செய்வ தற்காக தோலம்பா ளையம் சாலையில் உள்ள பனப்பாளையம் புதூர் பகுதியில் இலுப்பை மரம் தேர்வு செய்யப்பட்டது.

    மேலும் கோவிலின் மேற்கு பகுதியில் படிக்கட்டு அமைக்கவும், படிக்கட்டு களை சீரமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் அ ர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.
    • நவகிரக சன்னதி அருகே பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சீர்காழியில் சட்டநாதர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு தற்போது அடுத்த மாதம் (மே) மாதம் 24-ந்தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தக்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

    இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேலதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. பின்னர் நவகிரக சன்னதி அருகே பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேல கோபுரவாசல் அருகே யாகசாலை அமைக்க பந்தக்கால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடப்பட்டது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, கோவில் கணக்கர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, ஜெயந்திபாபு, நாடார் உறவின்முறை சங்க நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் சார்பில் தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

    • இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.
    • நவகிரக சன்னதி அருகே பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சீர்காழியில் சட்டநாதர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு தற்போது அடுத்த மாதம் (மே) மாதம் 24-ந்தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தக்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

    இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேலதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. பின்னர் நவகிரக சன்னதி அருகே பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேல கோபுரவாசல் அருகே யாகசாலை அமைக்க பந்தக்கால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடப்பட்டது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, கோவில் கணக்கர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, ஜெயந்திபாபு, நாடார் உறவின்முறை சங்க நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் சார்பில் தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை கோட்டைமேடு பகுதியில் பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது.

    திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று காலை புதிய கொடிமர யந்திர ஸ்தாபனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, திக்பந்தனம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.

    14-ந் தேதி காலை 8.30 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவ ஹாமம், பூர்ணாகுதி பூஜைகளும், 10.40 மணிக்கு மேல் மூலவர் விமானம் மற்றும் சாளஹார விமான கலச பிரதிஷ்டையும் நடந்தது.

    15-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. 9.30 மணிக்கு மேல் மூலமூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.

    நேற்று காலை 8.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூ ஜையும், மாலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு 5-ம் கால யாக பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அனைத்து சன்னதிகள் மற்றும் சாளஹார கோபுரங்களில் மகா சம்ப்ரோக்ஷனம் எனப்படும் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்ன தானம் வழங்கப் பட்டது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய் யப்பட்டிருந்தது. பக் தர்கள் வாகனங்களை நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டி ருந்தது. மேலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டது.

    • காலை 11 மணிக்கு பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
    • 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி மதிப்பில் கட்டி உள்ளது. இந்த கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் தொடங்கியது.

    திருப்பதி செல்ல முடியாத பக்தர்களுக்காக சென்னை தி.நகரில் ஏற்கனவே ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஓமங்களும் நடந்து வருகிறது. அந்தவகையில் பத்மாவதி தாயார் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது. இந்த கோவிலுக்கு தேவையான சிலைகள், திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் பத்மாவதி தாயார் சிலை 3 நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலையில் 4½ அடி உயரம், 3½ அடி அகலத்திலான பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான சதுஸ்தனா அர்ச்சனா பூஜை, மூர்த்தி ஓமம், நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்தது. காலை 9 மணியில் இருந்து 9.30 மணிக்குள் தாயார் சிலை கருவறைக்கு கொண்டு சென்று அங்கு அஸ்தபந்தன பூஜைகள் செய்யப்பட்டு பத்மாவதி தாயார் பிரதிஷ்டை நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.

    விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா போன்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சீனிவாச பெருமாள் கோவிலை கட்டி உள்ளது. ஆனால் நாட்டிலேயே முதன் முறையாக ஆந்திர மாநிலத்தை விட்டு, பிற மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பத்மாவதி தாயாருக்கு தனி கோவிலை கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணிக்கு பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ×