search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • கும்பாபிஷேகம் அன்று வாலைகுருசுவாமி கோவில் ஆவணி பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையில் வாலைகுருசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொங்கணர் சித்தர் குறிப்பிட்டுள்ள வாலை என்னும் சித்தர்கள் வழிபட்ட பாலாதேவி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பாலா என்றால் பத்து வயதுள்ள தேவி ஆவார்.

    இங்கு வாலைகுருசுவாமியும், அவரது சீடர் காசியானந்தரும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஆவணி பெருவிழா நடக்க உள்ளது.

    இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி உள்ளன. வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகமும், மறுநாள் (30-ந் தேதி) ராஜகோபுர கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலையில் 6-ம் கால யாகபூஜை உள்ளிட்ட வேள்வி பூஜைகளும், காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஜகோபுரம், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

    அன்று காலை 9 மணிக்கு வாலைகுருசுவாமி கோவில் ஆவணி பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதைதொடர்ந்து இரவு விநாயகர், வாலாம்பிகை சிறிய சப்பரத்திலும், பாலா திரிபுரசுந்தரி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர், மனோன்மணி அம்பாள் ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். இந்த திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூைஜ, சாயரட்சை பூஜை, அலங்கார தீபாராதனை நடந்து, இரவில் அம்மன் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை வாலைகுருசுவாமி கோவில் பக்த குழுவினர் செய்துள்ளனர்.

    • யாக வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
    • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆனந்தபுரி ஆதினம் பழனிசாமி அடிகளார் தலைமையில், வாலை பரமேஸ்வரி சித்தர் பீடம் சிவசாமி சிவம் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் சதீஸ்சிவம், சதீஸ்குமார்சிவம் ஆகியோர் யாக வேள்வி நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் காவி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சென்றாய பெருமாளை வழிபட்டனர்.

    • நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
    • கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :-

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

    இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகேஸ்வர சுவாமி, உண்ணாமலை அம்மன், மற்றும் கரிய காளியம்மனுக்கு 9 யாக குண்டம், இதர தெய்வங்களுக்கு 37 யாக குண்டங்கள் என மொத்தம், 46 யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கும்பாபிசேக் பணிகளை விழா கமிட்டியினரும், ஊர் பிரமுகர்களும், நேரில் பார்வையிட்டு ஆலோசனை கூறி வருகின்றனர்.

    • 17ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    உடுமலை :

    உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் சர்தார் வீதியில் கட்டப்பட்டுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. கடந்த 17ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை 4 மணிக்கு குருபூஜை ,4:30 மணிக்கு கோபுர கலசம் ஸ்தாபிதம், ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 .15 மணிக்கு சக்தி கொடியேற்றுதல், 11:30 மணிக்கு முதல் கால வேள்வி பூைஜ, தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5:30 மணிக்கு 3ம் கால வேள்வி பூஜை ,காலை 9 .15 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கோபுர கலசங்களுக்கு பங்காரு அடிகளார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க உடுமலை தலைவர் ருக்மணி அம்மாள், செயலாளர் கிருஷ்ணசாமி ,பொருளாளர் சிவகாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி ,உடுமலை நகர்மன்ற தலைவர் மத்தின் ,மடத்துக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உடுமலை டி.எஸ்.பி.,தேன்மொழி வேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் செய்திருந்தனர். 

    • இஞ்சிமேடு கிராமத்தில் நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள இஞ்சிமேடு, கிராமத்தில் உள்ள ஆனந்தவிநாயகர், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து.விநாயகர் பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், அங்குூர் பணம், ஆகிய மூன்று கால யாகபூஜைகள், ஆனந்தன், ஐயர் குழுவினரால் பல்வேறு மூலிகைகள் மூலம் செய்தனர்.பின்னர் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர் முன்னதாக மூலவர் ஆனந்த விநாயகருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து. பல்வேறு அபிஷேகங்கள் செய்து. புனித நீரை ஆனந்த விநாயகருக்கு, ஊற்றினார்கள்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இஞ்சிமேடு கிராம பொதுமக்கள், பெரியவர்கள், செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • அன்னதானமும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தில் பட்டவன் சுவாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அந்த கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கணபதி ஓமம் லட்சுமி ஓமம் நவ கிரக ஓமம் பின்னர் யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான விழா நடைபெற்றது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • அருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றி பாடியுள்ளார்.
    • முருகம்மையார் என்ற பக்தர்களுக்கு முருகபெருமான் காட்சி கொடுத்த தலமாகும்.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இங்கு பாலசுப்ரமணிய சாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றி பாடியுள்ளார். முருகம்மையார் என்ற பக்தர்களுக்கு முருக பெருமான் காட்சி கொடுத்த தலமாகும்.

    சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள் பிரகாரத்தில் கம்பீரமான ராஜ கணபதி, அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேசுவரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள், கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் மற்றும் அருணாசலேசுவரர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இங்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து கடந்த 17-ந்தேதி கோவில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன், கோ பூஜை, நவக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் யாகசாலை பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் குடங்களில் புனித நீரை மேளதாளங்கள் முழங்க எடுத்து கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் விமான கோபுரங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல், வீரவேல்" என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில், மத்திய இணை-மந்திரி எல்.முருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டி.ஜே.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், துரை சந்திரசேகர், அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதுதவிர, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 17-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா தொடங்கியது.
    • கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஏ.எம்.சி. மருத்துவமனை அருகில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ராகுகேது தலமான ஸ்ரீமாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தது.இதையடுத்து கோவில் புனரமைக்கப்–பட்டு கடந்த 17-ந் தேதி சிறப்பு பூஜை–கள் நடத்–தப்–பட்டு விழா தொடங்–கி–யது.

    கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடத்தப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாக வேள்வி, கணபதி வழிபாடு, சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வி வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு , காலை 7 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சோழாபுரி அம்மன், மாதேஸ்வரர் , பரிவார மூர்த்திகள் , கோவில் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான க.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , வாக்கு சித்தர் தம்புரான் ரிசபானந்த சுவாமிகள் மற்றும் கும்பாபிஷேக விழாக்குழுவினர்களான சிவநாதன், பாலசுப்பிரமணியம், வரதராஜன், பழனிச்சாமி, வெங்கடாச்சலம், பாலாஜி, பிரபு சங்கர், தனபால் உள்பட அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு தரிசித்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு 5 வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அன்னதானத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செ.திலகராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக காலை 9 மணிக்கு மகா அபி–ஷே–கம் நடைபெற்றது.  

    • கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் பாரதிநகர், கரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் புண்மை யாக வாசனம், மகாகணபதி ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை பிரவேசபலி ஜைன வாசம், பூர்ணாகுதி,யந்திர ஸ்தாபனம்,விக்கிரக பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது.

    இன்று காலை4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம் நிகழ்ச்சிக்குப் பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் கருமாரியம்மன், பத்ரகாளி யம்மன், முத்தா ரம்மன், துர்க்கையம்மன், முக்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ நாகராஜா, நாககன்னி ஆகிய தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர 56-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுயம்பு, ஓட்டப்பிடாரம் தொகுதி சண்முகையா எம்.எல்.ஏ.மற்றும் சுற்று வட்டார பிரமுகர்கள், பாரதிநகர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, ஜப பாராயணம் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மேயர்கோவில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர்( ராகு கேது ஸ்தலம்) கோவிலில் நாளை 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, மூல மந்திர ஹோமம், ஜப பாராயணம் நடைபெற்றது.

    காலை 8. 45 மணிக்கு விசேஷசந்தி, 11 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம், விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, வேத ஜப பாராயணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், இரவு 7.30 மணிக்கு தேவி ஸ்ரீயின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, 8 மணிக்கு திருப்பூர் ரஜினி செந்தில் வழங்கும் கொங்கு புகழ் மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை 21ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், திரவியாஹூதி, காலை 5.45 மணிக்கு நாடி சந்தானம், காலை 6.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 7 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 7.31 மணிக்கு ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஷ்வரர் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 7.40 மணிக்கு ஸ்ரீ சோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கு செல்வராஜ் எம். எல்.ஏ., தலைமை தாங்குகிறார். பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர். 

    • ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.
    • அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமத்தில் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதில் ஊர் மக்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இன்று வாழவும் அம்மனை வழிபடுவார்கள். கும்பாபிஷே–கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    செங்குன்றம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதற்கிடையே ரூ.1 கோடி மதிப்பில் கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், பூர்ணா ஹூதி, தீப ஆராதனை மற்றும் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று காலை சாந்தி ஹோமம், யாகசாலை நிர்மாணம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கும்பஅலங்காரம், முதல்கால ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.

    நாளை(19-ந்தேதி) காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் காலயாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், விசேஷ திரவிய ஹோமம் நடக்கிறது. 20-ந்தேதி 4,5-ம் கால யாக பூஜை, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அஷ்ட பந்தனம் சாத்துதல் நடக்கிறது. வருகிற 21-ந்தேதி காலை 9.45 மணி முதல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தரிசனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    ×